4 .ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) யின் மன கட்டுபாடு
صحيح البخاري (2 / 123):
أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ، فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ، فَأَعْطَانِي ثُمَّ قَالَ: «يَا حَكِيمُ، إِنَّ هَذَا المَالَ خَضِرَةٌ حُلْوَةٌ، فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ، وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ، كَالَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ، اليَدُ العُلْيَا خَيْرٌ مِنَ اليَدِ السُّفْلَى» ، قَالَ حَكِيمٌ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ لاَ أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شَيْئًا حَتَّى أُفَارِقَ الدُّنْيَا، فَكَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَدْعُو حَكِيمًا إِلَى العَطَاءِ، فَيَأْبَى أَنْ يَقْبَلَهُ مِنْهُ، ثُمَّ إِنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ دَعَاهُ لِيُعْطِيَهُ فَأَبَى أَنْ يَقْبَلَ مِنْهُ شَيْئًا، فَقَالَ عُمَرُ: إِنِّي أُشْهِدُكُمْ يَا مَعْشَرَ المُسْلِمِينَ عَلَى حَكِيمٍ، أَنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ مِنْ هَذَا الفَيْءِ فَيَأْبَى أَنْ يَأْخُذَهُ، فَلَمْ يَرْزَأْ حَكِيمٌ أَحَدًا مِنَ النَّاسِ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تُوُفِّيَ
நான் நபி (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள்
எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, "ஹகீமே!
நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும்.
யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம்
ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக்கொள்கின்றாரோ அவருக்கு அதில் வளம்
ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை
தாழ்ந்த கையைவிடச் சிறந்தது'' என்று கூறினார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின்
தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப் பின்
உலகைப் பிரியும்வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன்'' எனக் கூறினேன்.
ஆபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை
அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். பிறகு உமர் (ரலி)
அவர்கள் (தமது ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள்
"முஸ்லிம் சமுதாயமே! தமது உரிமையைப் பெற்றுக்கொள்ளுமாறு நான் ஹகீமை
அழைக்கிறேன். அவரோ அதைப் பெற்றுக் கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!' எனக்
கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும்
தாம் மரணிக்கும்வரை எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல் முஸய்யப் (ரஹ்)
அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் : ஹகீம்
பின் ஹிஸாம் (ரலி),
நூல் : புகாரி (1472 ) முஸ்லிம் ( 1037 ) நஸாயீ ( 2531 ) தாரமீ ( 1650 ) அஹ்மத் ( 14897 ) இப்னு ஹிப்பான் ( 3220 )
படிப்பினை :
நபிகளாரின்
போதனைக்குக் கட்டுப்பட்டு வாழ்நாள் முழுவதும் யாசகம் கேட்காமலேயே வாழ்ந்தார்கள்
ஹகீம் (ரலி) அவர்கள்.
இன்றோ யாசகம் என்ற நிலையையும் மீறி, பிறரின் பொருளைத் தவறான முறையில் அபகரித்து அதன் வாயிலாக
ஆனந்தமான வாழ்வினை அமைத்துக் கொள்வதற்காக அலைபாய்பவர்கள் தான் அதிகமாக
இருக்கின்றார்கள். இத்தகையவர்கள் இச்சம்பவத்திலிருந்து படிப்பினை பெறுவார்களா? பொருளாதாரம் சம்பந்தமான போதனைகளை
பேணுபவர்களாக இருப்பார்களா?
No comments:
Post a Comment