Monday, June 11, 2018

முஸ்னத் அஹ்மத் - தொடர் 14 [ 66 முதல் 70 ஹதீஸ் வரை ]


முஸ்னத் அஹ்மத் - தொடர் 14 [ 66 முதல் 70 ஹதீஸ் வரை ]



66-حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ أَبِي بَكْرٍ قَالَ: قَامَ أَبُو بَكْرٍ بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَامٍ، فَقَالَ: قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ أوَّلَ، فَقَالَ: «إِنَّ ابْنَ آدَمَ لَمْ يُعْطَ شَيْئًا أَفْضَلَ مِنَ الْعَافِيَةِ، 
فَاسْأَلُوا اللَّهَ الْعَافِيَةَ، وَعَلَيْكُمْ بِالصِّدْقِ وَالْبِرِّ فَإِنَّهُمَا فِي الْجَنَّةِ، وَإِيَّاكُمْ وَالْكَذِبَ وَالْفُجُورَ فَإِنَّهُمَا فِي النَّارِ»

حكم الحديث : صحيع لغيره

66.அபூஉபைதா ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் இறந்து ஒரு வருடத்திற்குப் பின் அபூபக்ர் ( ரலி ) அவர்கள் ( எங்களிடையே ) எழுந்து உரை நிகழ்த்தினார்கள். அப்போது,” அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் ( மதீனாவுக்கு வந்த ) முதலாம் ஆண்டில் எங்களிடையே நின்று உரையாற்றினார்கள். அதில்,’ ஆதமின் மகனுக்கு உடல் நலத்தைவிட மிகச் சிறந்த ஒன்று வழங்கப்படவில்லை.எனவே , நீங்கள் அல்லாஹ்விடம் உடல் நலத்தைக் கேளுங்கள் உண்மை பேசுவதையும் நன்மை புரிவதையும் கடைப்பிடியுங்கள், அவ்விரண்டும் சொர்க்கத்தில் சேர்க்கும் பொய் பேச வேண்டாமென்றும் தீமைகள் புரியவேண்டாமென்றும் உங்களை நான் எச்சரிக்கிறேன் ( பொய் , தீமை ஆகிய ) அவ்விரண்டும் நரகத்தில் தான் சேர்க்கும் என்று கூறினார்கள் .

தரம் : ஸஹீஹ் லி கைரிஹி

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 5,6,10,17,34,38,44,46,49 ) திர்மிதீ ( 3558)

67-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ، قَالَ أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ حُسَيْنٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ [ص: 229] ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِذَا قَالُوهَا عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّهَا، وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ قَالَ: فَلَمَّا كَانَتِ الرِّدَّةُ قَالَ عُمَرُ لِأَبِي بَكْرٍ تُقَاتِلُهُمْ، وَقَدْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كَذَا وَكَذَا؟ قَالَ: فَقَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: وَاللَّهِ لَا أُفَرِّقُ بَيْنَ الصَّلاةِ وَالزَّكَاةِ، وَلَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَهُمَا. قَالَ: فَقَاتَلْنَا مَعَهُ، فَرَأَيْنَا ذَلِكَ رَشَدًا

حكم الحديث : صحيع

67.அபூஹுரைரா( ரலி ) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை ( லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறும் வரை, இந்த ( இறைவனை மறுக்கும் ) மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். அவ்வாறு அவர்கள் கூறிவிட்டால் தகுந்த காரணம் இருந்தாலன்றி தமது உயிரையும் செல்வத்தையும் என்னிடமிருந்துகாத்துக்கொள்வார்.அவர்களது ( அந்தரங்கம் குறித்த ) விசாரணை உயர்ந்தோன் அல்லாஹ்வின் பொறுப்பாகும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

 [ நபி ஸல் அவர்களின் இறப்புக்கு பின் ] மக்கள் ( ஸகாத் வழங்க மறுத்து ) இஸ்லாத்தை விட்டு வெளியேறியபோது,[ அவர்களுடன் போர் தொடுக்க அபூபக்ர் ரலி அவர்கள் ஆயத்தமானார்கள் அப்போது] உமர் ( ரலி ) அவர்கள் அபூபக்ர் ( ரலி ) அவர்களிடம் ,” அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் இவ்வாறிவ்வாறு ( மேற்கண்டவாறு ) கூறியதை நீங்கள் செவியுற்றுள்ளீர்களே ?” என்றார்கள் அதற்கு அபூபக்ர் ( ரலி ) அவர்கள்,” அல்லாஹ்வின் மீதாணையாக ! நான் தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்து வேறுபடுத்திப் பார்க்க மாட்டேன் அந்த இரண்டையும் வேறுப்படுத்திப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன் என்று கூறினார்கள் ஆகவே நாங்கள் அபூபக்ர் ( ரலி ) அவர்களுடன் சேர்ந்து [ ஸகாத் வழங்க மறுத்தவர்களுடன் ] போரிட்டோம் அதையே நல்வழியாக நாங்கள் கண்டோம்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 117,239,335,8163,8544,8904,8990,9475,9661,10158,10254,10518,10822,10840) புஹாரி (1399,2946,6924,7284) முஸ்லிம் (20,21,2405)

68-حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، قَالَ أَخْبَرَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي زُهَيْرٍ، قَالَ [ص: 230] أُخْبِرْتُ أَنَّ أَبَا بَكْرٍ قَالَ: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ الصَّلاحُ بَعْدَ هَذِهِ الْآيَةِ: {لَيْسَ بِأَمَانِيِّكُمْ وَلا أَمَانِيِّ أَهْلِ الْكِتَابِ مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ} [النساء: 123] فَكُلَّ سُوءٍ عَمِلْنَا جُزِينَا بِهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «غَفَرَ اللَّهُ لَكَ يَا أَبَا بَكْرٍ أَلَسْتَ تَمْرَضُ؟ أَلَسْتَ تَنْصَبُ؟ أَلَسْتَ تَحْزَنُ؟ أَلَسْتَ تُصِيبُكَ اللَّأْوَاءُ؟» قَالَ: بَلَى. قَالَ: «فَهُوَ مَا تُجْزَوْنَ بِهِ»

حكم الحديث : حديث صحيع بطرقه وشواهده وهدا إسناد ضعيف لا نقطاعه

68.அபூபக்ர் பின் அபீஸுஹைர் ( ரஹ் ) கூறியதாவது :

பின்வருமாறு அபூபக்ர் ( ரலி ) அவர்கள் பற்றி எனக்கு செய்தி அறிவிக்கப்பட்டது : அபூபக்ர் ( ரலி ) அவர்கள் நபி ஸல் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே ! “ உங்களின் விருப்பப்படியோ, வேதக்காரர்களின் விருப்பப்படியோ ( எதுவும் ) இல்லை தீமை செய்பவர் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவார் “ எனும் இந்த ( 4:123 ஆவது ) இறைவசனம் அருளப்பெற்றதற்குப் பிறகு வெற்றி பெறுவது எவ்வாறு ? நாங்கள் செய்த ஒவ்வொரு தவற்றுக்கும் தண்டனை வழங்கப்படுவிடுமே ?” என்று கேட்டார்கள். அப்போது நபி ஸல் அவர்கள்,” அபூபக்ரே ! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக ! உங்களுக்கு நோய் வருவதில்லையா ? துன்பங்கள், துயரங்கள் ஏற்படுவதில்லையா ? வறுமை ஏற்படுவதில்லையா ?” என்று கேட்டார்கள் அதற்கு அபூபக்ர் ( ரலி ) அவர்கள்,” ஆம் என்றார்கள் அப்போது ,” இவையும் உங்கள் தவறுகளுக்கு அளிக்கப்படும் தண்டனை தான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

தரம் : ளயீப் இருப்பினும் இதில் சொல்லபட்ட செய்திகள் ஸஹீஹான ஹதீஸ்களில் இடம்பெற்று உள்ளது.

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 23,69,71) திர்மிதீ (3039) புஹாரி (5648) முஸ்லிம் ( 5024 )

69-حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي خَالِدٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي زُهَيْرٍ، أَظُنُّهُ، قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ الصَّلاحُ بَعْدَ هَذِهِ الْآيَةِ؟ قَالَ: «يَرْحَمُكَ اللَّهُ يَا أَبَا بَكْرٍ أَلَسْتَ تَمْرَضُ؟ أَلَسْتَ تَحْزَنُ؟ أَلَسْتَ تُصِيبُكَ اللَّأْوَاءُ؟ أَلَسْتَ. . .» قَالَ: بَلَى. قَالَ: «فَإِنَّ ذَاكَ بِذَاكَ»

حكم الحديث : صحيع وإسناده ضعيف

69.அபூபக்ர் பின் அபீ ஸுஹைர் ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதரே ! இந்த ( 4:123ஆவது ) இறைவசனம் அருளப்பெற்ற பிறகு வெற்றி பெறுவது எவ்வாறு ?” என்று அபூபக்ர் ( ரலி ) அவர்கள் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள்,” அபூபக்ரே! உங்களுக்கு அல்லாஹ் கருணை புரியட்டும் ! உங்களுக்கு நோய் வருவதில்லையா ? துயரங்கள் ஏற்படுவதில்லையா ? வறுமை ஏற்படுவதில்லையா ?” என்று கேட்டார்கள். அபூபக்ர் ( ரலி ) அவர்கள் “ ஆம் “ என்றார்கள் அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள், “ இவைதாம் அதற்கு பகரமாகும் என்று கூறினார்கள்.

தரம் : ளயீப் இருப்பினும் இதில் சொல்லபட்ட செய்திகள் ஸஹீஹான ஹதீஸ்களில் இடம்பெற்று உள்ளது.

70-حَدَّثَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَبِي بَكْرٍ الثَّقَفِيِّ، قَالَ: قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ الصَّلاحُ بَعْدَ هَذِهِ الْآيَةِ؟ مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ، فَذَكَرَ الْحَدِيثَ

حكم الحديث : صحيع وإسناده ضعيف

70.யஅலா பின் உபைத் அத்தாஃபுசீ அவர்கள் வழியாக வந்துள்ள அறிவிப்பில்,” அபூபக்ர் ( ரலி ) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே ! தீமை செய்பவர் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவார் எனும் இந்த (4:123) இறைவசனம் அருளப்பெற்றதற்குப் பிறகு வெற்றி பெறுவது எவ்வாறு ? என்று கேட்டார்கள் என ஹதீஸ் ஆரம்பமாகிறது மற்ற விவரங்கள் மேற்கண்டவாறே தொடர்கின்றன.

தரம் : ளயீப் இருப்பினும் இதில் சொல்லபட்ட செய்திகள் ஸஹீஹான ஹதீஸ்களில் இடம்பெற்று உள்ளது.

Saturday, June 9, 2018

முஸ்னத் அஹ்மத் - தொடர் 13 [ 61 முதல் 65 ஹதீஸ் வரை ]


முஸ்னத் அஹ்மத் - தொடர் 13 [ 61 முதல் 65 ஹதீஸ் வரை ]




61-حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنْ حُمَيْدِ بْنِ هِلالٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُطَرِّفِ بْنِ الشِّخِّيرِ، أَنَّهُ حَدَّثَهُمْ عَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ، أَنَّهُ قَالَ: كُنَّا عِنْدَ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ فِي عَمَلِهِ، فَغَضِبَ عَلَى رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ، فَاشْتَدَّ غَضَبُهُ عَلَيْهِ جِدًّا، فَلَمَّا رَأَيْتُ ذَلِكَ قُلْتُ: يَا خَلِيفَةَ رَسُولِ اللَّهِ أَضْرِبُ عُنُقَهُ، فَلَمَّا ذَكَرْتُ الْقَتْلَ صَرَفَ عَنْ ذَلِكَ الْحَدِيثِ أَجْمَعَ إِلَى غَيْرِ ذَلِكَ مِنَ النَّحْوِ، فَلَمَّا تَفَرَّقْنَا أَرْسَلَ إِلَيَّ بَعْدَ ذَلِكَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ، فَقَالَ: يَا أَبَا بَرْزَةَ مَا قُلْتَ؟ قَالَ: وَنَسِيتُ الَّذِي قُلْتُ، قُلْتُ: ذَكِّرْنِيهِ، قَالَ: أَمَا تَذْكُرُ مَا قُلْتَ؟ قَالَ: قُلْتُ: لَا وَاللَّهِ. قَالَ: أَرَأَيْتَ حِينَ رَأَيْتَنِي غَضِبْتُ عَلَى الرَّجُلِ فَقُلْتَ: أَضْرِبُ عُنُقَهُ يَا خَلِيفَةَ رَسُولِ اللَّهِ؟ أَمَا تَذْكُرُ ذَاكَ؟ أَوَ كُنْتَ فَاعِلًا ذَاكَ؟ قَالَ: قُلْتُ: نَعَمْ وَاللَّهِ، وَالْآنَ إِنْ أَمَرْتَنِي فَعَلْتُ. قَالَ: «وَيْحَكَ أَوْ وَيْلَكَ إِنَّ تِلْكَ [ص: 227] وَاللَّهِ مَا هِيَ لِأَحَدٍ بَعْدَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

حكم الحديث :  إسنادة قوي

61. அபூபர்ஸா அல் அஸ்லமீ ( ரலி ) கூறியதாவது :

 நாங்கள் ( கலீஃபா ) அபூபக்ர் அஸ்ஸித்தீக் ( ரலி ) அவர்கள் அருகில் அவர்களின் பணி ஒன்றின் நிமித்தம் இருந்தோம். அப்போது அவர்கள் முஸ்லிம்களுன் ஒருவர்மீது சினமுற்றார்கள். அவர்களின் சினம் கடுமையானபோது நான்,” அல்லாஹ்வுடைய தூதூரின் பிரதி நிதியே ! என்று கேட்டேன் , அவரைக் கொன்று விடட்டுமா?” என்று கேட்டேன் அவரைக் கொன்று விடட்டுமா என்று நான் கேட்டதும் , அது குறித்துப் பேசுவதை விட்டுவிட்டு, வேறு பக்கம் கவனத்தைத் திருப்பினார்கள்.

நாங்கள் ( பணி முடிந்து ) கலைந்து சென்றதும் , என்னிடம் அபூபக்ர் ( ரலி ) அவர்கள் ஆளனுப்பி ( என்னை வரவழைத்து ) , “ அபூ பர்ஸாவே , என்ன கூறினீர் ?” என்று கேட்டார்கள். “ நான் கூறியதை மறந்துவிட்டேன் அதை நீங்களே நினைவூட்டுங்களேன் “ என்று கூறினேன். “ நீர் என்ன கூறினீர் என்று நினைவில்லையா ?” என்றார்கள்.” அல்லாஹ்வின் மீதாணையாக ! இல்லை “ என்றேன்,” நான் ஒருவர் மீது கோபப்பட்டதை நீர் கண்டபோது “ அல்லாஹ்வுடயை தூதரின் பிரதி நிதியே ! அவருடைய கழுத்தை வெட்டிவிடட்டுமா ?” என்று நீர் கூறீரே, நினைவிருக்கிறதா ? அவ்வாறு நீர் ( கொலை ) செய்வீரா ?” என்று கேட்டார்கள். நான்,” அல்லாஹ்வின் மீதாணையாக ! ஆம் . இப்போது கூட நீங்கள் எனக்கு உத்தரவிட்டால் நான் செய்வேன் என்றேன் “ உமக்குக் கேடுதான் ! அல்லாஹ்வின் மீதாணையாக ! அ(ந்த உரிமையான)து முஹம்மது ( ஸல் ) அவர்களுக்குப் பின் வேறெவருக்கும் இல்லை “ என்று கூறினார்கள்.

தரம் : பலமான அறிவிப்பாளர் தொடரை கொண்ட செய்தி

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் (54) அபூதாவூத் ( 4363) நஸயீ (4071,4072,4073,4074,4075,4076,4077)

62-حَدَّثَنَا عَفَّانُ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي عَتِيقٍ، عَنْ أَبِيهِ، قَالَ: إِنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ»

حكم الحديث : صحيع لغيره

62.அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : பல் துலக்குவது,வாயைத் தூய்மைப்படுத்தும் இறைவனை திருப்திப்படுத்தும்.
இதை அபூபக்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ் லி கைரிஹி

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 7 ) யில் பதிவாகி உள்ளது

63-حَدَّثَنَا عَفَّانُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، قَالَ سَمِعْتُ عَمْرَو بْنَ عَاصِمِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ، قُلْ لِي شَيْئًا أَقُولُهُ إِذَا أَصْبَحْتُ وَإِذَا أَمْسَيْتُ، قَالَ: «قُلِ اللَّهُمَّ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، فَاطِرَ السَّمَاواتِ وَالْأَرْضِ، رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ» وَأَمَرَهُ أَنْ يَقُولَهُ إِذَا أَصْبَحَ وَإِذَا أَمْسَى، 
وَإِذَا أَخَذَ مَضْجَعَهُ

حكم الحديث : صحيع

63. அபூஹுரைரா ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

அபூபக்ர் ( ரலி ) ,” அல்லாஹ்வின் தூதரே ! நான் காலையிலும் மாலையிலும் ஓதிக்கொள்வதற்கேற்ற ( பிரார்த்தனை ) ஒன்றை எனக்குக் கூறுங்கள் “ என்று கேட்டார்கள் . அதற்கு நபி ஸல் அவர்கள் ,அல்லாஹும்ம ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாதத்தி ஃபாத்திரஸ் ஸமாவாத்தி வல் அர்ளி வரப்பி குல்லி ஷைஇன் வமலீ(க்)கஹு அஷ்ஹது அன்லா இலாஹ இல்லா அன்த்த அஊது  பின்ன மின் ஷர்ரி நஃப்சீ வமின் ஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி ” என்று கூறுங்கள் என்றார்கள்.

[ பொருள் : இறைவா ! மறைவானற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனே ! வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவனே ! அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கின்ற இறைவனே !அனைத்துக்கும் அரசனே ! உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை எனச் சாட்சியம் கூறுகின்றேன். என்னுடைய மனத்தின் தீமையிலிருந்தும் ஷைத்தானின் தீங்கிலிருந்தும் இறைவனுக்கு இணை வைக்கும் அவனது குழப்பத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் கோருகின்றேன் )
அபூபக்ர் ( ரலி ) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைக் காலையிலும் மாலையிலும் இரவில் படுக்கைக்குச் செல்லும் போதும் ஓதிக்கொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கட்ட்ளையிட்டார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 51,7961) அபூதாவூத் ( 5067) திர்மிதீ (3392) தாரமீ (2731)

64-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ الْجُمَحِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ: قِيلَ لِأَبِي بَكْرٍ يَا خَلِيفَةَ اللَّهِ. قال: فَقَالَ: «بَلْ خَلِيفَةُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا أَرْضَى بِهِ»

حكم الحديث :  إسناده ضعيف لانقطاعه

64.இப்னு அபீமுலைக்கா ( ரஹ்) அவர்கள் கூறியதாவது :

அபூபக்ர்( ரலி ) அவர்கள்,” அல்லாஹ்வின் பிரதி நிதியே !” என்று அழைக்கப்பட்டார்கள் . உடனே அவர்கள்,” இல்லை  நான் முஹம்மது ஸல் அவர்களுடைய ஆட்சிக்குத்தான் பிரதி நிதி ஆவேன் .இ(வ்வாறு கலீஃபத்து முஹம்மத் என என்னை அழைப்ப)தையே நான் விரும்புகிறேன்” என்று கூறினார்கள்.

தரம் : ளயீப் மேலும் இப்னு அபீமுலைக்கா ரஹ் அவர்கள் அபூபக்ர் ரலி அவர்களைச் சந்தித்தவர் அல்லர் எனவே இதுவும் இடைமுறிவுற்ற அறிவிப்பாளர் தொடரில் அமைந்த செய்தியாகும்

இதே கருத்து அங்கின ஹதீஸ் அஹ்மத் ( 59 ) யில் பதிவாகி உள்ளது.

65-حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُؤَمَّلِ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ: كَانَ رُبَّمَا سَقَطَ الْخِطَامُ مِنْ يَدِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: فَيَضْرِبُ بِذِرَاعِ نَاقَتِهِ فَيُنِيخُهَا، فَيَأْخُذُهُ قَالَ: فَقَالُوا لَهُ: أَفَلا أَمَرْتَنَا نُنَاوِلُكَهُ، فَقَالَ: إِنَّ حِبِّي رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَمَرَنِي أَنْ لَا أَسْأَلَ النَّاسَ شَيْئًا»

حكم الحديث :  إسناده حسن لغره وهدا إسناد ضعيف

65.இப்னுஅபீமுலைக்கா( ரஹ் ) அவர்கள் கூறியதாவது :

சில நேரங்களில் அபூபக்ர் ( ரலி ) ( ஒட்டகத்திலிருக்கும் போது ) அவர்களது கையிலிருக்கும் சாட்டை கீழே விழுந்துவிடும் உடனே அவர்கள் தமது ஒட்டகத்தின் முன்காலில் அடித்து ஒட்டகத்தை மண்டியிட்டுப் படுக்க வைத்துச் சாட்டையை எடுத்துகொள்வார்கள் அப்போது அவர்களிடம் “ அதை எடுத்து த் தரச் சொன்னால் , நாங்கள் எடுத்துத் தரமாட்டோமா ?” என்று மக்கள் கேட்பார்கள் அதற்கு அபூபக்ர் ( ரலி ) அவர்கள் ,” என் நேசர் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள்,” மக்களிடம் ( உதவி ) எதையும் கேட்க வேண்டாம் “ என எனக்கு உத்தவிட்டார்கள் என்று கூறுவார்கள்.

தரம் : ளயீப்

இந்த செய்தி அஹ்மதியில் மட்டுமே இடம்பெற்று உள்ளது.




Wednesday, May 16, 2018

முஸ்னத் அஹ்மத் - தொடர் 12 [ 56 முதல் 60 ஹதீஸ் வரை ]


முஸ்னத் அஹ்மத் - தொடர் 12 [ 56 முதல் 60 ஹதீஸ் வரை ]



56-حَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي زُرْعَةَ، عَنْ عَلِيِّ بْنِ رَبِيعَةَ، عَنْ أَسْمَاءَ بْنِ الْحَكَمِ الْفَزَارِيِّ، قَالَ سَمِعْتُ عَلِيًّا، قَالَ: كُنْتُ إِذَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا نَفَعَنِي اللَّهُ بِمَا شَاءَ أَنْ يَنْفَعَنِي مِنْهُ، وَإِذَا حَدَّثَنِي غَيْرُي اسْتَحْلَفْتُهُ، فَإِذَا حَلَفَ لِي صَدَّقْتُهُ، وَحَدَّثَنِي أَبُو بَكْرٍ، وَصَدَقَ أَبُو بَكْرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ عَبْدٍ مُؤْمِنٍ يُذْنِبُ ذَنْبًا فَيَتَوَضَّأُ فَيُحْسِنُ الطُّهُورَ، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ فَيَسْتَغْفِرُ اللَّهَ إِلَّا غَفَرَ اللَّهُ لَهُ» ثُمَّ تَلا {وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ} [آل 
عمران: 135]

حكم الحديث : إسناده صحيع

56. அலீ ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

நான் அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களிடமிருந்து ( நேரடியாக ) எதையேனும் செவியுற்றால் அதன் மூலம் அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய அளவுக்குப் பயனளிப்பான்.அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களிடமிருந்து வேறு யாரேனும் எனக்கு அறிவித்தால் அவரை நான் சத்தியம் செய்யச் சொல்வேன் அவர் சத்தியம் செய்தால் அதை உண்மை என நான் ஏற்பேன். அபூபக்ர் ( ரலி ) அவர்கள் என்னிடம் பின்வருமாறு அறிவித்தார்கள் அபூ பக்ர் ( ரலி ) அவர்கள் உண்மையே உரைத்தார்கள் .
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள், “ இறை நம்பிக்கையாளர் ஒருவர் பாவம் ஒன்றைச் செய்துவிட்டு , அங்கத் தூய்மை ( உளூ) செய்து , அதையும் செம்மையாகச் செய்து , பிறகு இரண்டு “ ரக் அத்கள் “ தொழுது உயர்ந்தோன் அல்லாஹ் விடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை என்று கூறினார்கள்” என்றார்கள், பிறகு ,” யாரேனும் தீமையை செய்து, அல்லது தமக்குத் தாமே அ நீதயிழைத்துப் பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடினால் அவனை மன்னிப்பவனாகவும் , நிகரற்ற அன்புடையோனாகவும் அவர் காண்பார் எனும் ( 4:110 ஆவது ) இறைவசனத்தை ஒதிக்காட்டினார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 2,47 ) அபூதாவூத் ( 1521) திர்மிதீ ( 406,3006)  இப்னுமாஜா ( 1395 )

57-حَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ: أَرْسَلَ إِلَيَّ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ مَقْتَلَ أَهْلِ الْيَمَامَةِ، فَقَالَ أَبُو بَكْرٍ: «يَا زَيْدُ بْنَ ثَابِتٍ، إنْك غُلامٌ شَابٌّ عَاقِلٌ لَا نَتَّهِمُكَ، قَدْ كُنْتَ تَكْتُبُ الْوَحْيَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَتَبَّعِ الْقُرْآنَ فَاجْمَعْهُ»

حكم الحديث : إسناده صحيع رجاله ثقات


57. ஸைது பின் ஸாபித் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

யமாமா போருக்குச் சென்ற ( நபித்தோழர்களுள், குர் ஆனை மனன மிட்டிருந்த )வர்கள் கொல்லப்பட்ட கால கட்டத்தில் அபூபக்ர் ( ரலி ) அவர்கள் என்னிடம் ஆளனுப்பி ( என்னை வரவழைத்து ) “ ஸைது பின் ஸாபித்தே ! நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் ( எந்த விதத்திலும் ) சந்தேகப்பட மாட்டோம் . நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களுக்காக வேத வசனங்களை எழுதுபவராக இருந்தீர்கள் எனவே, நீங்கள் குர் ஆன் வசனங்களைக் கண்டறிந்து , ( ஒரே பிரதியில் ) ஒன்று திரட்டுங்கள் “ என்று கூறினார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 76,21644 ) புஹாரி ( 1456,4679,4986,4989 )

58-حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ أَنَّ فَاطِمَةَ، وَالْعَبَّاسَ أَتَيَا أَبَا بَكْرٍ يَلْتَمِسَانِ مِيرَاثَهُمَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُمَا حِينَئِذٍ يَطْلُبَانِ أَرْضَهُ مِنْ فَدَكَ، وَسَهْمَهُ مِنْ خَيْبَرَ، فَقَالَ لَهُمَا أَبُو بَكْرٍ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا نُورَثُ مَا تَرَكْنَا صَدَقَةٌ، وَإِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْمَالِ» وَإِنِّي وَاللَّهِ لَا أَدَعُ 
أَمْرًا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُهُ فِيهِ إِلَّا صَنَعْتُهُ

حكم الحديث : 

إسناده صحيح على شرط الشيخين

58. ஆயிஷா ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களின் மகள் ஃபாத்திமா ( ரலி ) அவர்களும் அப்பாஸ் ( ரலி ) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களுக்குரிய ஃப்தக் பகுதி நிலம், கைபர் பகுதியில் அவர்களுக்குக் கிடைத்த பங்கு ஆகியவற்றில் தமக்குச் சேர வேண்டிய வாரிசுரிமையைக் கோரியபடி, அபூபக்ர் ( ரலி ) அவர்களிடம் வந்தார்கள். அப்போது அபூபக்ர் ( ரலி ) அவர்கள்,” அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் , இறைத்தூதர்களான எங்களுக்கு யாரும் வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம், தர்மம் செய்யப்பட்ட வேண்டியவை ஆகும். இந்தச் செல்வத்திலிருந்தே முஹம்மதின் குடும்பத்தார் உண்பார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.( எனவே ) அல்லாஹ்வின் மீது ஆணையாக ! இ( ந்தச் சொத்துகள் விஷயத்)தில் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் எவ்வாறு செயல்பட்டதை நான் கண்டேனோ அதை நானும் செயல்படுத்தாமல் விட மாட்டேன் என்று கூறினார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 9,25,55,60,78,79,425,1781,1782 ) புஹாரி ( 3092,3094 ) முஸ்லிம் (1757 ) இன்னும் பிற நூல்களில் இடம்பெற்று உள்ளது.

59-حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ، حَدَّثَنَا نَافِعٌ يَعْنِي ابْنَ عُمَرَ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ: قِيلَ لِأَبِي بَكْرٍ: يَا خَلِيفَةَ اللَّهِ فَقَالَ: «أَنَا خَلِيفَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا رَاضٍ بِهِ»

حكم الحديث : 
إسناد ضعيف

59. இப்னு அபீமுலைக்கா ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது :

அபூபக்ர் ( ரலி ) அவர்கள் ,” அல்லாஹ்வின் பிரதி நிதியே ! “ என்று அழைக்கப்பட்டார்கள். உடனே அவர்கள்,” நான் அல்லாஹ்வின் தூதருடைய ஆட்சிக்குத்தான் பிரதி நிதி ஆவேன் (அவ்வாறு என்னை அழைப்பதையே நான் விரும்புகிறேன்) என்று கூறினார்கள்.

தரம் : ளயீப்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் ( 64 ) இப்னு அபீஷைபா (38203 ) பதிவாகி உள்ளது

60-حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ فَاطِمَةَ قَالَتْ لِأَبِي بَكْرٍ: مَنْ يَرِثُكَ إِذَا مِتَّ؟ قَالَ: وَلَدِي وَأَهْلِي. قَالَتْ: فَمَا لَنَا لَا نَرِثُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ النَّبِيَّ لَا يُورَثُ» ، وَلَكِنِّي أَعُولُ مَنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُولُ وَأُنْفِقُ عَلَى مَنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنْفِقُ

حكم الحديث : صحيع لغيره

60. அபூ சலமா ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது :

ஃபாத்திமா ( ரலி ) அவர்கள் அபூபக்ர் ( ரலி ) அவர்களிடம் ,” நீங்கள் இறந்துவிட்டால் , உங்களுடைய சொத்துக்கு யார் வாரிசாவார்கள் ? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் ( ரலி ) அவர்கள்,” என் பிள்ளைகளும் என் குடும்பத்தாரும் தான் என்று விடையளித்தார்கள்.’ அவ்வாறாயின் நபி ஸல் அவர்களின் சொத்துகளுக்கு நாங்கள் வாரிசாகாததற்கு என்ன காரணம் ? என்று ஃபாத்திமா ( ரலி ) அவர்கள் கேட்டார்கள்.
அதற்கு அபூபக்ர் ( ரலி ) அவர்கள்,’ அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள்,’ (இறைத்தூதர்களான) எங்களுடைய சொத்துக்கு யாரும் வாரிசாக முடியாது என்று கூறினார்கள். என்று கூறிவிட்டு ,” எனினும் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் யாரையெல்லாம் கவனித்துவந்தார்களோ அவர்களை நானும் கவனிப்பேன் . யாருக்கெல்லாம் அவர்கள் செலவுத் தொகை கொடுத்துவந்தார்களோ அவர்களுக்கு நானும் செலவுத் தொகை கொடுப்பேன் என்று கூறினார்கள்.

தரம் : ஸஹீஹ் லி கைரிஹி ( புறச்சான்றுகளால் ஆதாரபூர்வமானது )

இதே கருத்து அடங்கின ஹதீஸ் அஹ்மத் 9 9,25,55,58,78,79,425,1781,1782 ) புஹாரி (3092,3094) முஸ்லிம் (1757)

Wednesday, May 2, 2018

அத்தியாயம் -01 தூய்மை ( 1 முதல் 5 ஹதீஸ் வரை )





அத்தியாயம் -01
1 - كِتَابُ الطَّهَارَةِ

பாடம் : 1 தூய்மை பற்றியது

تَأْوِيلُ قَوْلِهِ عَزَّ وَجَلَّ: {إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ} [المائدة: 6]

நீங்கள் தொழுகைக்காக தயாராகும் போது உங்கள் முகங்களையும் கைகளையும் கழுகிக் கொள்ளுங்கள்.    (அல் குர்ஆன் அல்மாயிதா : 6)


1-أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُمَّ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ، فَلَا يَغْمِسْ يَدَهُ فِي وَضُوئِهِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا، فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ»

حكم الحديث : صحيع

1.“உங்களில் எவரேனும் உறங்கி எழுந்தால் மூன்று முறை கைகளை கழுகும்முன், ஒளூச் செய்யும் நீரில் கையைவிட வேண்டும்! ஏனெனில் இரவு நேரத்தில் அவனது கை எங்கெங்கே பட்டது என்பதை அவன் அறியமுடியாது என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் புஹாரி ( 162 )முஸ்லிம் ( 278) அபூதாவூத் ( 103,105) திர்மிதீ ( 24) இப்னுமாஜா (393) அஹ்மத் (7282,7438,7517,7600,7674)

بَابُ السِّوَاكِ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ(2)
பாடம் :02

இரவில் எழும்போது பல்துலக்குதல்

2-أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ جَرِيرٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ»

حكم الحديث : صحيع



2. நபி(ஸல்) இரவில் எழும்போது பல் துலக்கும் பொருளால் தம் வாயை (பற்களை) துலக்குவார்கள் என ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் புஹாரி (245,889,1136 ) முஸ்லிம் ( 255 ) அபூதாவூத் ( 55) அஹ்மத் ( 23242,23313,23366)

بَابُ كَيْفَ يَسْتَاكُ (3)

பாடம் : 03

எவ்வாறு பல் துலக்க வேண்டும்


3-أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ قَالَ: أَخْبَرَنَا غَيْلَانُ بْنُ جَرِيرٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ: " دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَسْتَنُّ وَطَرَفُ السِّوَاكِ عَلَى لِسَانِهِ وَهُوَ يَقُولُ: عَأْ عَأْ "

حكم الحديث : صحيع

3.நபி(ஸல்) அவர்கள் பல் துலக்கையில் நான் அவர்களிடம் சென்றேன். பல் துலக்கும் பொருளின் ஒரு பகுதி அவர்களின் நாவு மீது இருக்க ”அவ் அவ்” என்று சப்தம் செய்தார்கள் என அபூ மூஸா (ரலி) கூறுகிறார்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து  அடங்கின ஹதீஸ் புஹார்  (244) முஸ்லிம் ( 254 ) அபூதாவூத் ( 49 ) அஹ்மத் ( 19737 )

بَابُ هَلْ يَسْتَاكُ الْإِمَامُ بِحَضْرَةِ رَعِيَّتِهِ؟(4)
பாடம் :04

தலைவர், குடிமக்கள் முன்னிலையில் பல் துலக்கலாமா ?

4-أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى وَهُوَ ابْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ هِلَالٍ قَالَ: حَدَّثَنِي أَبُو بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ: أَقْبَلْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعِي رَجُلَانِ مِنَ الْأَشْعَرِيِّينَ: أَحَدُهُمَا عَنْ يَمِينِي، وَالْآخَرُ عَنْ يَسَارِي. وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَاكُ فَكِلَاهُمَا سَأَلَ الْعَمَلَ. قُلْتُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ نَبِيًّا مَا أَطْلَعَانِي عَلَى مَا فِي أَنْفُسِهِمَا، وَمَا شَعَرْتُ أَنَّهُمَا يَطْلُبَانِ الْعَمَلَ، فَكَأَنِّي أَنْظُرُ إِلَى سِوَاكِهِ تَحْتَ شَفَتِهِ قَلَصَتْ. فَقَالَ: «إِنَّا لَا - أَوْ لنْ - نَسْتَعِينَ عَلَى الْعَمَلِ مَنْ أَرَادَهُ، وَلَكِنِ اذْهَبْ أَنْتَ». فَبَعَثَهُ عَلَى الْيَمَنِ، ثُمَّ أَرْدَفَهُ مُعَاذُ بْنُ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

حكم الحديث : صحيع

4.நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது ”அஷ் அரி” கூட்டத்தினால் இருவரும் என்னுடன் வந்தனர் ஒருவர் என் வலப்புறமாகவும் இன்னொருவர் இடப்புறமாகவம் இருந்தனர் .ரஸுல்(ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருந்தனர். (என்னுடன் வந்த) அவ்விருவரும் பொறுப்பான பதவியைய் கோரினார்கள். ”உங்களை நபியாக அனுப்பிவைத்தவன் மீது ஆனையாக (என்னுடன் வந்த) அவ்விருவரும் தங்கள் உள்ளக்கிடக்கையை என்னிடம் திறந்து காட்டவில்லை , இவர்கள் பதவி நாடித்தான் வந்துள்ளனர் என்பதை நான் உணரவில்லை ” என்று நபி (ஸல்) அவர்களை நோக்கி நான் கூறினேன். (பதவி நாடி) இவ்விருவரும் உங்களைச் சந்திக்க வருவதை நான் அறிந்திருக்கமாட்டேன் என்ற கருத்தில் இதைக் கூறுகிறார்.)

  (பல் துலக்கும் பொருளை கீழ் உதட்டுக்கு உட்பறமாக நபி (ஸல்) அவர்கள் வைத்திருந்த தால் அவர்களின் (கீழ்) உதடு கொஞ்சம் மேடாகி விட்டது போல் இருந்தது பின்பு என்னை நோக்கி) ”நீர் செல்வீராக“ என்று கூறி எமன் நாட்டுக்கு அதிகாரியாக அனுப்பிவைத்தனர். பின்பு அவர்களை முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் தன் வாகனத்தின் பின்னால் ஏற்றிக் கொண்டனர் என “அபூ மூஸல் அஷ்அரி“ குறிப்பிடுகிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் புஹாரி ( 2261,6923,7149,7156) முஸ்லிம் ( 1733,1824) அபூதாவூத் ( 2930,3579,4354 ) அஹ்மத் ( 195508,19666,19687,19741 )

بَابُ التَّرْغِيبِ فِي السِّوَاكِ(5)
பாடம் : 5

பல் துலக்குவதில் ஆர்வமூட்டுதல்


5-أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، عَنْ يَزِيدَ وَهُوَ ابْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي عَتِيقٍ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: سَمِعْتُ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ»

حكم الحديث : صحيع

5.பல் துலக்குதல் என்பது வாயைச்சுத்தம் செய்வது, இறைவனின் பொருத்த திற்கு உறியதுமாகும் என நபி (ஸல்) கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் தாரமீ ( 711 ) அஹ்மத் ( 24203,24332,24925,25133,26014 )