16. பாவ மன்னிப்பு
ابْنَ عُمَرَ قَالَ قَالَ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا أَيُّهَا النَّاسُ تُوبُوا إِلَى اللَّهِ فَإِنِّي
أَتُوبُ فِي الْيَوْمِ إِلَيْهِ مِائَةَ مَرَّةٍ "
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:
மக்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்
கோருங்கள். ஏனெனில், நான் ஒவ்வொரு நாளும் அவனிடம் நூறுமுறை பாவமன்னிப்புக் கோருகிறேன்.
இதை அப்துல்லாஹ் பின் உமர்
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் ( 5235 ) அபூதாவூத் ( 1515 ) அஹ்மத்
(17391 )
விளக்கம் :
இறைவனுக்கு அதிகம் பயந்து நடப்பவர்கள் இறைத் தூதர்கள். சிறப்பு
மிக்க இறைத்தூதர்களில் முதலிடம் பெறும் நபி ஸல் அவர்கள் இறைவனை அதிகமதிகம் பயந்து,
அவனது கட்டளைகளை நிறைவேற்றி வந்தார்கள்.
இருந்தாலும் அவர்களும் மனிதர்
என்ற அடிப்படையில் தவறுகள் ஏற்படலாம் , அதற்காக நாள் ஒன்றுக்கு நூறு தடவை இறைவனிடம்
பாவமன்னிப்புக் கேட்டுள்ளார்கள்.
நபி ஸல் அவர்களே இவ்வாறு செய்துள்ளார்கள்
என்றால் நாம் எம்மாத்திரம் ? பாவங்களிலேயே முழ்கி இருக்கும் நாம் தினமும் நூறுக்கும்
மேற்பட்ட தடவை அல்லாஹ்விடம் அழுது பாவமன்னிப்புக் கேட்டு, மறுமையில் இறைவனின் கருணைப்
பார்வைக்கு உர்த்தானவர்களாக ஆக வேண்டும்.
No comments:
Post a Comment