Saturday, December 10, 2016

வினாடி வினா கேள்விகளும் & பதில்களும் 6 முதல் 10 வரை

வினாடி வினா கேள்விகளும் & பதில்களும் 6 முதல் 10 வரை 


 6 ) நபி ( ஸல் ) அவர்களிடம் மிருந்து ஹஸன் இப்னு அலீ எந்த வார்த்தைகளை மனனம் செய்தார்கள் ???




A ) நற்செயல் புரிவது நற்குணமாகும்


B ) சந்தேகமளிப்பதை விட்டு விடுவிராக


C ) நீர் உனது இயத்திடமே தீர்ப்பு கேள் !





இதற்கான விடை :

وعن الحسن بن على رضي الله عنهما، قال‏:‏ حفظت من رسول الله صلى الله عليه وسلم‏:‏ ‏ "‏دع ما يريبك إلى ما لا يريبك‏"‏ ‏(‏‏(‏رواه الترمذى وقال‏:‏ حديث حسن صحيح‏)‏‏)

 நபி ஸல் அவர்களிடமிருந்து உமக்கு சந்தேகமளிப்பதை விட்டு விடுவீராக ! உமக்கு சந்தேகம் ஏற்படுத்தாத செயலின் பக்கம் ( விரைவீராக ) “ என்ற வார்த்தையை மனனம் செய்து கொண்டேன்.

அறிவிப்பவர் : ஹஸன் இப்னு அலீ ( ரழி )

நூல் : திர்மிதீ ( 2518 )



 7 ) மூன்று நபர்களுடன் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான் அவர்களைத் தூய்மை படுத்தவும் மாட்டான் அவர்களை பார்க்கவும் மாட்டான் ,அவர்களுக்கு கடும் வேதனையும் உண்டு அவர்கள் யார் ??


A ) விபச்சாரம் செய்யும் வயோதிகள்


B ) பொய் கூறும் அரசன்


C ) பொருமை கொள்ளும் ஏழை


D ) A ,B மற்றும் C





இதற்கான விடை :

وعنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم‏:‏ “ثلاثة لا يكلمهم الله يوم القيامة، ولايزكيهم، ولا ينظر إليهم ، ولهم عذاب أليم‏:‏ شيخ زان وملك كذاب، وعائل مستكبر” ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)

மூன்று நபர்களுடன் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான் அவர்களைத் தூய்மை படுத்தவும் மாட்டான் அவர்களைப் பார்க்கவும் மாட்டான் அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு , விபச்சாரம் செய்யும் வயோதிகள் , பொய் கூறும் அரசன் மற்றும் பெருமை கொள்ளும் ஏழை என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி )

நூல் : ஸஹீஹ் முஸ்லிம் ( 107 )


8 ) “ மறுமை நாளில் மக்களில் மிகக் கடுமையாக வேதனை பெறுபவர்கள் யார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ???




A ) விபச்சாரம் செய்தவர்


B ) உருவம் வரைபவர்கள்


C ) வட்டி வாங்குபவர்கள்





இதற்கான விடை :

وعن ابن مسعود رضي الله عنه قال‏:‏ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول‏:‏ ‏ "‏إن أشد الناس عذابًا يوم القيامة المصورون‏"‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)

மறுமை நாளில் மக்களில் மிகக் கடுமையாக வேதனை பெறுபவர்கள் , உருவம் வரைபவர்களாவர் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ( ரழி )

நூல் : புகாரி ( 5950 ) முஸ்லிம் ( 2109 )

9 ) “ தேவையில்லாமல் கூடுதல் சிரமத்தை எடுப்பவர்கள் பற்று நபி ஸல் என்ன கூறினார்கள் ???


A )  நாசமடைவார்கள்

B ) வெற்றி பெறுவார்கள்

C ) சபித்தார்கள்



இதற்கான விடை :

وعن ابن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال‏:‏ ‏"‏هلك المتنطعون‏"‏ قالها ثلاثاً ‏"‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏

தேவையில்லாமல் கூடுதல் சிரமத்தை எடுப்பவர்கள் நாசமடைவார்கள் என்று நபி ஸல் அவர்கள் மூன்று தடவை கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ் ஊத் ( ரழி )

நூல் : முஸ்லிம் ( 2670 )



 10 ) “ தொழுகையில் மிகச் சிறந்தது எது ? என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் ???




A ) நடுத்தரமான கிரா அத்துடன் தொழுகை


B ) நீளமான கிரா அத்துத்துடைய தொழுகை


C ) லூஹா தொழுகை



இதற்கான விடை :

B )  நீளமான கிரா அத்துத்துடைய தொழுகை ஆகும்

وعن جابر رضي الله عنه قال‏:‏ سئل رسول الله صلى الله عليه وسلم ‏:‏ أي الصلاة أفضل‏؟‏ قال‏:‏ ‏ "‏طول القنوت‏"‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏

தொழுகையில் மிகச் சிறந்தது எது ?” என்று நபி ஸல் அவர்களிடம் கேட்கப்பட்டது,” நீளமான கிரா அத்துடைய தொழுகைதான் என்று பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் ( ரழி )

நூல் : முஸ்லிம் ( 756 )



No comments:

Post a Comment