10 . நோயாளியைச் சந்திக்கவில்லையென்றால் மறுமையின் நிலை
صحيح
مسلم (4 / 1990):
عَنْ أَبِي
هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "
إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: يَا ابْنَ آدَمَ مَرِضْتُ
فَلَمْ تَعُدْنِي، قَالَ: يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ؟ وَأَنْتَ رَبُّ
الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ،
أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِنْدَهُ؟ يَا ابْنَ آدَمَ
اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي، قَالَ: يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ؟
وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ
عَبْدِي فُلَانٌ، فَلَمْ تُطْعِمْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ
لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي، يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ، فَلَمْ تَسْقِنِي،
قَالَ: يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ؟ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ، قَالَ:
اسْتَسْقَاكَ عَبْدِي فُلَانٌ فَلَمْ تَسْقِهِ، أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ
وَجَدْتَ ذَلِكَ عِنْدِي "
நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு
மனிதரிடம்), "ஆதமின் மகனே! (மனிதா!) நான்
நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?'' என்று
கேட்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின்
அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?'' என்று
கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? என்
அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவனிடம் சென்று நீ நலம்
விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால்
அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்'' என்று
கூறுவான்.
மேலும்
அல்லாஹ், "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம்
உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை'' என்பான்.
அதற்கு மனிதன், "என் இறைவா! நீ அகிலத்தாரின்
அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?'' என்று
கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? உன்னிடம்
என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு
நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்தி ருந்தால் அ(தற்குரிய)தை
என்னிடம் நீ கண்டிருப்பாய்'' என்று கூறுவான்.
மேலும்
"ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு
நீ தண்ணீர் தரவில்லை'' என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன்,
"என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு
நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?'' என்று
கேட்பான். அதற்கு அல்லாஹ், "என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம்
குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு
நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர்
கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்'' என்று
கூறுவான்.
அறிவிப்பவர் :
அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 5021
No comments:
Post a Comment