3 . நோயை சபிக்கக் கூடாது
صحيح مسلم (4 / 1993):
جَابِرُ بْنُ عَبْدِ اللهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَلَى أُمِّ السَّائِبِ أَوْ أُمِّ الْمُسَيِّبِ فَقَالَ:
«مَا لَكِ؟ يَا أُمَّ السَّائِبِ أَوْ يَا أُمَّ الْمُسَيِّبِ تُزَفْزِفِينَ؟» قَالَتْ:
الْحُمَّى، لَا بَارَكَ اللهُ فِيهَا، فَقَالَ: «لَا تَسُبِّي الْحُمَّى، فَإِنَّهَا
تُذْهِبُ خَطَايَا بَنِي آدَمَ، كَمَا يُذْهِبُ الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ»
(ஒரு
முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (உடல்
நலிவுற்றிருந்த) உம்முஸ் ஸாயிப் அல்லது உம்முல் முசய்யப் எனும் பெண்மணியிடம் (உடல்
நலம் விசாரிக்கச்) சென்றார்கள். அப்போது "உம்முஸ் ஸாயிபே! அல்லது உம்முல்
முசய்யபே! உமக்கு என்ன நேர்ந்தது? ஏன் நடுங்கிக்
கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்,
"காய்ச்சல். அதில் அல்லாஹ் வளம் சேர்க்காமல் இருக்கட்டும்!'' என்று
கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "காய்ச்சலை
ஏசாதே! ஏனெனில் அது, கொல்லனின் உலை, இரும்பின்
துருவை அகற்றி விடுவதைப் போன்று, ஆதமின்
மக்களின் (மனிதர்களின்) தவறுகளை அகற்றி விடுகிறது'' என்று
கூறினார்கள்.
அறிவிப்பவர் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), முஸ்லிம்
5031
No comments:
Post a Comment