Tuesday, January 3, 2017

ஹலாலா ? ஹராமா ?



45. ஹலாலா ? ஹராமா ?


عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لاَ يُبَالِي الْمَرْءُ بِمَا أَخَذَ الْمَالَ، أَمِنْ حَلاَلٍ أَمْ مِنْ حَرَامٍ "

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மனிதர்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் வரும்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நூல் : புஹாரி ( 2083 ) நஸாயீ ( 4454 ) தாரமீ ( 2536 ) அஹ்மத் ( 9337 ) ஸுனன் குப்ரா (10166 )

விளக்கம் :

விஞ்ஞான வளர்ச்சியின் உச்சியில் இருக்கும் இக்காலத்தில் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்பதற்காக , அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எல்லா வழிவகைகளையும் கையாளுகின்றனர்.

எந்தத் தொழிலில் அதிக லாபம் வருகிறது என்பதை மட்டும் பார்த்து அதில் முதலீடு செய்கின்றனர். அந்த வியாபாரம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா ? அல்லது தடை செய்யப்பட்டதா என்பதையெல்லாம் இந்த அவசர உலகத்தில் சிந்திப்பதில்லை.

பணம் ! பணம் என்பது மட்டுமே குறிக்கோள் என்பதால் மன்னிப்பே இல்லாத மாபெரும் பாவமான வட்டித் தொழியில் இஸ்லாமியர்கள் ஈடுபடுகின்றனர். லாட்டரி , மது என்று மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் வியாபாரத்தையும் சர்வ சாதாரணமாகச் செய்து வருகின்றனர்.


இவையெல்லாம் உலக அழிவுக்கு அறிகுறியாகும் . மறுமை வெற்றிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாம் எந்தத் தொழிலாக இருந்தாலும் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா ? இல்லையா ? என்பதை அறிந்து ஈடுபட வேண்டும்.

No comments:

Post a Comment