11. மென்மை நன்மையே !
عَنْ جَرِيرٍ، عَنِ النَّبِيِّ
صلى الله عليه وسلم قَالَ " مَنْ يُحْرَمِ الرِّفْقَ يُحْرَمِ الْخَيْرَ " .
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நளினத்தை இழந்தவர் நன்மைகளை
இழந்தவர் ஆவார்.
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ்
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் ( 5052 ) அபூதாவூத் ( 4809) இப்னு மாஜா (3687) அஹ்மத் (27829)
விளக்கம் :
ஆதமின் பிள்ளைகளாக இவ்வுலகத்தில் இருக்கும் மனிதர்கள் தம்
சகோதர்களிடம் அன்போடு நடந்து கொண்டு சச்சரவு இல்லாமல் சகோதரப் பாசத்தோடு இருக்க
வேண்டும். ஆனால் இதைக் கவனத்தில் கொள்ளாத பலர் அடுத்தவர்களிடம் பேசும் போது
கடுமையான வார்த்தைகளைத் பயன்படுத்துவதையும் , அவர்களின் மனதைப் புண்படுத்தும்
வண்ணம் நடந்து கொள்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இப்படிப்பட்டவர்களைத்
திருத்தும் வன்ணம் இந்த நபிமொழி அமைந்துள்ளது.
மென்மையாக நடக்காமல் கடுமை
காட்டும் நபர்கள் எல்லா நன்மைகளை இழக்க நேரிடும் அடுத்தவர்களின் பிரார்த்தனைக்குப்
பதிலாக அவர்களின் சாபத்திற்கு ஆளாகி , இறைக் கோபத்திற்கும் ஆளாக நேரிடும். இன்னொரு
நபிமொழியில் “ அல்லாஹ் மென்மையானவன் மென்மையான போக்கையே அவன்
விரும்புகிறான். கடுமைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு
வழங்குகிறான்” ( முஸ்லிம் 5055 )
என்று இடம் பெற்றுள்ளது.
மென்மையாக நடக்கும் போது
இறையருளை நிறைய நாம் அடைய முடியும்.
No comments:
Post a Comment