Monday, November 7, 2016

உறவைப் பேணி வாழ்

10. உறவைப் பேணி வாழ்


عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ وَقَالَ سُفْيَانُ لَمْ يَرْفَعْهُ الأَعْمَشُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَرَفَعَهُ حَسَنٌ وَفِطْرٌ ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ، وَلَكِنِ الْوَاصِلُ الَّذِي إِذَا قَطَعَتْ رَحِمُهُ وَصَلَهَا"

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார்.19
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

 நூல் : புஹாரி ( 5991 ) திர்மிதீ ( 1908 ) அபூதாவூத் ( 1697 ) அஹ்மத் (6488)

விளக்கம் :

ரத்த உறவைப் பேணி வாழ்வது முஸ்லிம்களின் கடமைகளில் ஒன்றாகும். உறவு முறையைப் பேணி , அவர்களின் நலன்களில் அக்கறை கொண்டு , அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருமாறு இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது.

இஸ்லாத்தின் இந்தக் கட்டளையைப் பேணும் சிலர் , தம்முடன் இணைந்து உறவாட விரும்புவோரிடம் மட்டுமே இணைந்திருக்கிறார்கள். 

ஒரு சண்டை வந்துவிட்டால் அல்லது அவர்கள் பேச விரும்பாவிட்டால் அவர்களிடம் நாம் ஏன் பேச வேண்டும் ? அவர்களுக்கு ஏன் உதவி செய்ய வேண்டும் ? என்று கூறி அவர்களின் உறவை நிரந்தரமாக வெட்டி விடுகின்றனர்.



ஆனால் இஸ்லாம் இந்த நிலையை ஏற்றுக் கொள்வதில்லை. உறவைப் பேணுதல் என்றால் அவர்கள் விரும்பாவிட்டாலும் அவர்களின் நலன் நாடுபவனே உண்மையில் உறவைப் பேணுபவன் என்று கூறுகிறது.

No comments:

Post a Comment