Wednesday, November 16, 2016

இரவு நேரப் பேச்சி மூவருக்கு உரியது



19 . இரவு நேரப் பேச்சி மூவருக்கு உரியது



مسند أبي يعلى - (ج 8 / ص 289)
 4879 - قال معاوية : وحدثني أبو عبد الله الأنصاري : عن عائشة زوج النبي صلى الله عليه و سلم قالت : السمر لثلاثة : لعروس أومسافر أو متجهد بالليل
قال حسين سليم أسد : إسناده منقطع

 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்  இரவு நேரப் பேச்சு மூன்று வகையினருக்குரியதாகும். 1. புது மாப்பிள்ளை 2. பயணி 3. இரவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுபவர்
நூல்  முஸ்னத் அபீ யஃலா பாகம்  8 பக்கம் 289
இந்தச் செய்தி நபியவர்கள் கூறியது கிடையாது. இது ஆயிஷா (ரலி) அவர்களின் சொந்தக் கருத்தாகும்.
மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபு அப்தில்லாஹ் அல்அன்சாரி என்பவர் யாரென்றே அறியப்படாத மஜ்ஹூலான அறிவிப்பாளர் ஆவார்.
இவரைப் பற்றி அல்ஜரஹ் வத்தஃதீல் என்ற அறிவிப்பாளர் விமர்சன நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

الجرح والتعديل - (ج 9 / ص 400)
1912 - أبو عبد الله الأنصاري روى عن عائشة قالت السمر لثلاث لمتهجد بالقرآن من الليل أو مسافر أو لعروس روى عنه معاوية بن صالح سمعت أبى يقول ذلك

இவர் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து இரவு நேரப் பேச்சு தொடர்பான செய்தியை அறிவிக்கின்றார். இவரிடமிருந்து முஆவியா என்பவர் அறிவிக்கின்றார்.
அல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் 9 பக்கம் 400
 இவரைப் பற்றி எந்த நிறை குறையும் கூறப்படவில்லை.
எனவே இது ஆயிஷா (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாக இருப்பதினாலும், இதன் அறிவிப்பாளர் தொடரில் நம்பகத் தன்மை நிரூபிக்கப்படாத அறிவிப்பாளர் இடம் பெற்றிருப்பதினாலும் இது ஆதாரத்திற்கு ஏற்றது இல்லை என்பது மிகவும் தெளிவானதாகும்.

No comments:

Post a Comment