Monday, November 7, 2016

தியாகத் திருமகள் கதீஜா ( ரலி )

தியாகத் திருமகள் கதீஜா ( ரலி ) 

இஸ்லாத்தை ஏற்று தியாகங்கள் செய்தோர் ஏராளம் உள்ளனர்அவர்களில் பெண்களும் உண்டுஅதில் இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் தியாகம் செய்தோர் முக்கியத்துவம் பெற்றவர்களாவர்.இஸ்லாத்தை முதன் முதலில் ஏற்று , தன்னை முழுமையாகத் தியாகம் செய்த பெருமை அன்னை கதீஜா ( ரலி ) அவர்களையே சாரும்இஸ்லாத்தை முதன்முதலில்
ஏற்றதும் . அதற்காகத் தன்னையே அர்ப்பணித்ததும் அன்னை கதீஜா ( ரலி ) அவர்களே ! 

அறியாமைக் காலத்தில் தன் வாழ்வை அதிகமாகக் கழித்த அவர்கள் , மூட நம்பிக்கை , முன்னோர்கள் நடவடிக்கை இவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டு , உண்மையான ஒரிறைக்
கொள்கையை உணர்ந்து ஏற்றுக் கொண்டார்கள் . அந்த உன்னதப் பெண்மணியின் வரலாற்றைப் பார்ப்போம்.

பிறப்பு :

குவைலித் பின் அஸத் , ஃபாத்திமா பின்த் ஸாயிதா தம்பதியினரின் மகளாக கி.பி 556 ம் ஆண்டு கதீஜா ( ரலி ) பிறந்தார்கள்.

உடன்பிறப்புகள் :

ஹாலா பின் த் குவைலித் , ருகைய்யா பின் த் குவைலித் ஆகியோர் கதீஜா ( ரலி ) அவர்களின் சகோதரிகள் ஆவர்.

கதீஜா ( ரலி ) அவர்கள் நபி ( ஸல் ) அவர்களைத் திருமணம் முடிக்கும் முன்னர் அபூ ஹாலா பின் ஸுராரா என்பவரையும் , அவருக்குப் பின்னர் அத்தீக் பின் ஆயித் என்பவரையும்
மணமுடித்திருந்தார்கள் . அவர் இறந்த பிறகு விதவையாக இருந்த கதீஜா ( ரலி ) அவர்களை நபி ( ஸல் ) அவர்கள் மணமுடித்தார்கள் . அத்தீக் என்ற கணவர் மூலமாக ஹின் த் என்ற
பெண் குழந்தையும் , அபூ ஹாலா மூலமாக ஹின் த் , ஹாலா ஆகிய குழந்தைகளும் இருந்தன .

நபி ( ஸல் ) அவர்கள் மூலமாக காஸிம் , அப்துல்லாஹ் ( தாஹிர் , தய்யிப் ) ஜைனப்உம்மு குல்ஸும்ஃபாத்திமா , ருகைய்யா ஆகிய குழந்தைகள் பிறந்தன.

கதீஜா ( ரலி ) அவர்களின் முந்தைய கணவர் அத்தீக் என்பவருக்குப் பிறந்த ஹின் த் என்ற பெண் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாக இமாம் தாரகுத்னீ கூறுகின்றார்கள்மற்றொரு
கணவர் அபூ ஹாலாவிற்குப் பிறந்த ஹின் த் ஹாலா என்ற இரு குழந்தைகள் பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை.

நபி ( ஸல் ) அவர்களுக்குப் பிறந்த நாங்கு பெண் குழந்தைகள் ,மற்றும் காஸிம் என்ற ஆண் குழந்தை ஆகியோர் விஷயத்தில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு இல்லை.

அப்துல்லாஹ்தாஹிர் , தாயிப் ஆகியோர் விஷயத்தில் வரலாற்று அறிஞர்களிடம் கருத்து வேறுபடு நிலவுகின்றது மூன்று பேரும் நபி ( ஸல் ) அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள்
என்று சிலரும் , அப்துல்லாஹ் என்ற குழந்தயே தாஹிர் என்றும் தய்யிப் என்று அழைப்பட்டார் என சிலரும் , காஸிம் என்ற ஆண் குழந்தையைத் தவிர கதீஜா ( ரலி ) அவர்களுக்கு
வேறு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்று மற்றும் சிலரும் கூறுகின்றனர் ( அல்லாஹ் மிக அறிந்தவன் )

காஸிம்அப்துல்லாஹ் ( தாஹிர் , தய்யிப் ) ஆகியோர் நபி ( ஸல் ) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்பே இறந்து விட்டனர்.ஜைனப் ( ரலி ) , உம்மு குல்ஸும் ( ரலி ) ருகைய்யா
(ரலி ) ஆகியோர் கதீஜா ( ரலி ) அவர்கள் இறந்த பிறகு நபி ( ஸல் ) அவர்கள் நபியாக வாழ்ந்த காலகட்டத்தில் இறந்தார்கள்.

ருகைய்யா ( ரலி ) அவர்கள் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு மரணித்தார்கள் ( நூல் : அல் இஸாபா 5452 ) 

ஜைனப் ( ரலி ) அவர்கள் ஹிஜ்ரி 8ஆம் ஆண்டு மரணமடைந்தார்கள் ( நூல் : அல் இஸாபா 11 , 218 ) 

உம்மு குல்ஸும் ( ரலி ) அவர்கள் ஹிஜ்ரி 9ல் மரணமடைந்தார்கள் ( நூல் : அல் இஸாபா 12 , 222 ) 

ஃபாத்திமா ( ரலி ) அவர்கள் நபி ( ஸல் ) அவர்கள் இறந்த ஆறு மாதத்திற்குப் பின் இறந்தார்கள் ( நூல் : புகாரி 3093 ) 

அறியாமைக் காலத்தில் பிறந்த கதீஜா ( ரலி ) அவர்கள் நபி ( ஸல் ) அவர்களைப் போன்று அன்றைய மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள் . 

பெண்களிடம் அவசியம்
இருக்க வேண்டிய ஒழுக்கத்தை நிறைவாகப் பேணியதால் , " தாஹிரா " ( பரிசுத்தமானவள் ) என்று மக்களால் அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்தார்கள்ஒழுக்கத்தில் உயர்ந்திருந்த அவர்கள் செல்வத்திலும் கொடி கட்டிப் பறந்தார்கள் . மக்கா நகரிலிருந்து வெளி நாடுகளுக்கு சரக்குகளை ஏற்றி செல்லும் அனைவைன் ஒட்டகங்களுக்கும் ஈடாக அன்னை கதீஜா ( ரலி )
அவர்கள் ஒருவரின் சரக்கு ஒட்டகங்கள் மிகைத்திருக்கும் அவர்கள் அவ்வளவு பொருள்களுக்கு உரிமையுடைய செல்வ சீமாட்டியாக வாழ்ந்து வந்தார்கள்.

அந்தக் கால கட்டத்தில் நபி ( ஸல் ) அவர்கள் பல கூட்டத்தினரோடு வியாபாரம் செய்து வந்தனர்அதன் மூலம் அவர்களின் நற்குணங்கள் மக்களிடம் பரவியதுவியாபாரத்தில் அவர்களின் நேர்மையான நடைமுறைகள் மக்களைக் கவர்ந்தன . நபி ( ஸல் ) அவர்களை அம்மக்கள் ' அல் அமீன் ' ( நம்பிக்கைக்குரியவர் ) என்று அழைத்தனர்வியாபாரத்தில்
நம்பிக்கையுடனும் நேர்மையுடனும் நடந்த நபி ( ஸல் ) அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்ட கதீஜா ( ரலி ) அவர்கள் தமது சரக்குகளை விற்கும் பொறுப்பைப் கவனித்துக்
கொள்ளுமாறு நபியவர்களை அழைத்தார்கள் . அவ்வழைப்பை ஏற்ற நபி ( ஸல் ) அவர்கள் கதீஜா ( ரலி ) யின் சரக்குகளை விற்றுக் கொடுத்தார்கள் .

நூல் : இப்னு ஹிஷாம் , பாகம் 2 , பக்கம் 6 

தன்னிடம் பணியாளராக இருந்த நபி ( ஸல் ) அவர்களின் பழக்க வழக்கங்கள் , குணங்கள் அனைத்தும் அன்னை கதீஜா ( ரலி ) அவர்களைக் கவர்ந்தன இரண்டு கணவரை
இழந்திருந்த கதீஜா ( ரலி ) அவர்கள் , நபி ( ஸல் ) அவர்களைத் திருமணம் புரிய எண்ணினார்கள் . நபி ( ஸல் ) அவர்கள் சம்மதித்தவுடன் திருமணம் இனிதே நடைபெற்றது.

அப்போது கதீஜா ( ரலி ) அவர்களின் வயது நாற்பதுநபி ( ஸல் ) அவர்களின் வயது இருபத்தைந்து .கதீஜா ( ரலி ) அவர்களுக்கு வயது நாற்பதாக இருந்தாலும் அவர்களின் செல்வசெழிப்பின் காரணமாக , பெரும் செல்வந்தர்களை அவர்கள் திருமணம் முடித்திருக்க முடியும் . ஆனால் சாதாரண குடும்பத்தில் பிறந்த தனக்குக் கீழ் பணியாளராக வேலை செய்த
நபி ( ஸல் ) அவர்களைத் திருமணம் புரிந்து இவ்வுலகிற்கு அழகிய முன்மாதிரியை வழங்கினார்கள்.

ஒரு பெண்தனது வருங்காலக் கணவரை எப்படித் தேர்ந்தெடுப்பது ? என்பதில் மற்ற பெண்களுக்கு அன்னை கதீஜா ( ரலி ) அவர்கள் வழிகாட்டுகின்றார்கள்பொன்னும் பொருளும்
நிறைய இருக்கும் ஒருவனிடம் எவ்வளவு அதிக கெட்ட செயல்கள் இருந்தாலும் . அவனிடம் செல்வம் இருக்கின்றது என்பதால் அவனுக்குப் பெண் கொடுக்கப் பெரும் கூட்டம்
தயாராக இருக்கின்றதுஅன்னை கதீஜா ( ரலி ) அவர்கள் பொன்னையும் , பொருளையும் ஒதுக்கி வைத்து விட்டு , நற்குணமிக்க நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களைத் தேர்வு
செய்கிறார்கள்நல்லொழுக்கமுள்ள பெண்களின் தேர்வு இவ்வாறு தான் இருக்கும் .

நபி (ஸல் ) அவர்களோடு இவ்வாழ்க்கையைத் தொடங்கிய அன்னை கதீஜா ( ரலி ) அவர்கள் மகிழ்வோடு காலத்தை கழிக்கின்றார்கள் . நபி ( ஸல் ) அவர்கள் மூலம் பல
குழந்தைகளை ஈன்றெடுக்கின்றார்கள் ( இதன் விபரத்தை முன்னர் குறிப்பிட்டுள்ளோம் ) 

பதினைந்து வருடங்கள் கழிந்த பின்பு , நபி(ஸல் ) அவர்கள் ஹிரா குகைக்கு சென்று பல இரவுகள் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபட்ட வேளையில் அவர்களுக்குத் தேவைப்படும்
உணவைத் தாய்ர் செய்து கொடுக்கும் பணியை கனிவுடன் செய்து வந்தார்கள் . இதற்காக அன்னை கதீஜா ( ரலி ) அவர்கள் கொஞ்சமும் கோபப்படவோ , எரிச்சல் படவோ இல்லை.
கணவருக்கு செய்ய வேண்டிய சேவைகள் பற்றி கதீஜா ( ரலி ) அவர்கள் மூலம் இன்றைய இஸ்லாமியப் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டும் .

ஒரு நாள் ஹிரா குகையில் வானவர் ஜிப்ரீல் ( அலை ) அவர்கள் வந்து ' ஒதுவீராக ' என்று சொல்லி சூரத்துல் அலக்கின் ஜந்து வசனங்களை ஒதிக் காட்டினார்கள் . இதைக் கண்டு
பயந்து நடுங்கிய நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் கதீஜா ( ரலி ) அவர்களிடம் வந்து ' என்னைப் போர்த்துங்கள் ; என்னைப் போர்த்துங்கள் ' என்று கூறினார்கள்.

கதீஜா ( ரலி ) அவர்கள் போர்த்தி விட்ட பின்னர் நபி ( ஸல் ) அவர்கள் நடந்த சம்பவத்தை விளக்கி விட்டு , தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என்று அஞ்சுவதாக கூறினார்கள் . இதை
செவியுற்ற அன்னை கதீஜா ( ரலி ) பின்வருமாறு கூறினார்கள் .

அவ்வாறு கூறாதீர்கள் . அல்லாஹ்வின் மீது ஆணையாக ! அல்லாஹ் ஒருபோதும் உங்களை இழிவு படுத்த மாட்டான் ; நீங்கள் உங்கள் உறவினர்களுடம் இணங்கி வாழ்கின்றீர்கள்;
சிரமப்படுவோரின் ) சுமைகளை சுமக்கிறீர்கள்ஏழைகளுக்காக உழைக்கிறீர்கள் ; விருந்தினரை உபசரிக்கிறீர்கள்சோதனைகளில் ( ஆட்பட்டோருக்கு ) உதவி புரிகின்றீர்கள் "
என்று கூறி பயந்திருந்த உள்ளத்திற்கு உண்மையான வார்த்தைகளைக் கொண்டு ஆறுதல் ஊட்டினார்கள் .

அதுமட்டுமல்ல ! அ ந் நிகழ்ச்சியின் உண்மையான விளக்கம் என்ன ? என்பதை அறிய வேண்டும் என்பதற்காகத் தமது தந்தையின் சகோதரர் 'வரகா ' அவர்களிடம் சென்று விளக்கம்
கேட்டார்கள் அவர் இஞ்சீல் வேதத்தை நன் கு அறிந்து வைத்திருந்த கிறித்தவராக இருந்தார்

முஹம்மதிடம் வந்தவர் நாமூஸ் ( ஜிப்ரீல் ) ஆவார் . முஹம்மதை அல்லாஹ் தன் தூதராகத் தேர்வு செய்துள்ளான் . உங்களை இம்மக்கள் ஊரை விட்டு வெளியேற்றுவார்கள் .
அப்போது நான் உயிரோடு இளைஞனாக இருந்தால் உங்களுக்கு உதவிடுவேன் " என்று கூறினார்.


இது பற்றிய விரிவான செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது பார்க்க ஹதீஸ் எண்கள் : 3 , 3392 , 4953 , 4955 , 4957 , 6982 )

பிரச்சனையில் மாட்டிக் கொண்டு குழுப்பத்தில் வரும் கணவனுக்கு அன்போடு நடந்து ஆறுதல் அளிக்கும் மனைவிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ? வீட்டுப் பிரச்சனையையும்
சேர்த்து எழுப்பி , புண் பட்ட மனதில் வேலைப் பாய்ச்சுபவர்கள் எத்தனை பேர் ? கணவனின் சூழ் நிலை அறியாமல் நடப்பவர்கள் எத்தனை பேர் இவர்களைப் போன்ற ஒருவராக
கதீஜா ( ரழி ) அவர்கள் இருக்கவில்லை.

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும் , இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும்.
சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன . ( அல்குர் ஆன் 30 : 21 ) 

மனைவி என்பவள் கணவன் அமைதி பெறும் இடம் என்ற அல்லாஹ்வின் கூற்றுப்படி நடந்தவர் அன்னை கதீஜா ( ரழி ) அவர்கள்கணவன் சிரமப்படுகின்ற நிலையில் மனைவி எப்படி
நடக்க வேண்டும் என்பதற்கு அன்னை கதீஜா ( ரலி ) அவர்கள் சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றார்கள்.

முஹம்மத் ( ஸல் ) அவர்களை நபி என்று முதன் முதலில் ஏற்றுக் கொண்ட பெண்மணி கதீஜா ( ரழி ) அவர்கள்சத்தியம் இது தான் என்று தெரிந்த பிறகுமுன்னோர்கள் , 
மூதாதையர்கள் , பழக்கவழக்கங்கள் என்று காரணம் கூறி புறக்கணிக்காமல் உண்மையை உணர்ந்து ஏற்றார்கள்.

நபி ( ஸல் ) அவர்களின் நபித்துவ வாழ்க்கையில் பத்து வருடங்கள் வாழ்ந்து தமது அறுபத்தைந்தாம் வயதில் கி.பி 621 ல் மரணித்தார்கள் . அவர்கள் தமது வாழ் நாளில் நபி ( ஸல் ) 
அவர்களுக்காக , பொருளாலும் , உடலாலும் செய்த சேவைகள் யாராலும் மறக்க முடியாதவைநபி ( ஸல் ) அவர்களுக்கு அன்னை கதீஜா ( ரழி ) அவர்கள் செய்த சேவைகளை
அறிய நபிமொழித் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள செய்திகளை இனி காண்போம்...

*** நபி ( ஸல் ) அவர்கள் கதீஜா ( ரழி ) அவர்களைப் பற்றி அதிகம் நினைவு கூர்ந்ததால் நபி ( ஸல் ) அவர்களின் வேறு எந்த மனைவியர் மீதும் பொறாமைப்படாத நான் கதீஜா ( ரழி )
அவர்கள் மீது பொறாமைப்படுவேன்அவர்கள் இறந்து மூன்று ஆண்டுகள் கழித்து என்னை நபி ( ஸல் ) அவர்கள் திருமணம் செய்தார்கள் .அல்லாஹ்வோ . ஜிப்ரீல் ( அலை ) அவர்களோ
, " கதீஜா ( ரழி ) அவர்களுக்கு சுவர்க்கத்தில் முத்து மாளிகை உண்டு என்ற நற்செய்தியை அவருக்குத் தெரிவுயுங்கள் " என்று கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா ( ரழி ) 
நூல்கள்  : புகாரி 3817 முஸ்லிம் 4820 

**** ஜிப்ரீல் ( அலை ) அவர்கள் நபி ( ஸல் ) அவர்களிடம் வந்து , " அல்லாஹ்வின் தூதரே ! இதோ கதீஜா ! அவர் தன்னுடன் குழம்பு , உணவு , பானம் ஆகியவை நிறைந்த பாத்திரத்தை
உங்களிடம் கொண்டு வந்துள்ளார்அவருக்கு என் சார்பாகவும் அவரின் இறைவன் சார்பாகவும் ஸலாமை எடுத்து சொல்லுங்கள் . சொர்க்கத்தில் அவருக்கு சச்சரவு , துன்பங்கள் இல்லாத
முத்தாலான மாளிகை உண்டு என்ற நற்செய்தியையும் அவருக்கு சொல்லுங்கள் " என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா ( ரழி ) 
நூல்கள்  : புகாரி 3820 , 7497 முஸ்லிம் 4817 


***** " அல்லாஹ் உங்களுக்கு வயது முதிர்ந்தவர்களையும் , சிறிய வயதினரையும் கொடுத்துள்ளான் " என்று நான் கூறிய போது " உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பியவன் மீது
ஆணையாக  ! இதன் பிறகு அவர்களைப் பற்றி நல்லதைத் தவிர வேறு எதையும் கூற மாட்டேன் ' என்று நான் கூறும் அளவிற்கு நபி ( ஸல் ) அவர்கள் ( கடும் ) கோபமுற்றார்கள்"
என்று ஆயிஷா ( ரழி ) கூறியதாக இடம் பெற்றுள்ளது.

நூல்கள் : தப்ரானீ , அஹ்மத் 24016 

**** " இவ்வுலகத்தில் சிறந்த பெண் மர்யம் ( அலை ) ஆவார்இவ்வுலகத்தில் சிறந்த ( மற்றொருபெண் கதீஜா ( ரழி ) ஆவார் " என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அலீ ( ரழி ) 
நூல்கள்  : புகாரி 3432 முஸ்லிம் 4815 

No comments:

Post a Comment