Wednesday, December 21, 2016

நபிகள் நாயகம் ஸல் நமக்காக பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறார்கள்



46 .  நபிகள் நாயகம் ஸல்  நமக்காக பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறார்கள்…,

1925حَدَّثَنَا يُوسُف ُبْنُ مُوسَى ،قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْمَجِيد ِبْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رَوَّادَ، عَنْ سُفْيَانَ، عَنْ عبْدِ اللهِ بْنِ السَّائِبِ، عَنْ زَاذَانَ، عَنْ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِنَّ لِلَّهِ مَلاَئِكَةً سَيَّاحِينَ يُبَلِّغُونِي عَنْ أُمَّتِي السَّلاَمَ قَالَ : وَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : حَيَاتِي خَيْرٌ لَكُمْ تُحَدِّثُونَ وَنُحَدِّثُ لَكُمْ، وَوَفَاتِي خَيْرٌ لَكُمْ تُعْرَضُ عَلَيَّ أَعْمَالُكُمْ، فَمَا رَأَيْتُ مِنَ خَيْرٍ حَمِدْتُ اللَّهَ عَلَيْهِ، وَمَا رَأَيْتُ مِنَ شَرٍّ اسْتَغْفَرْتُ اللَّهَ لَكُمْ. وَهَذَا الْحَدِيثُ آخِرُهُ لاَ نَعْلَمُهُ يُرْوَى عَنْ عَبْدِ اللهِ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ بِهَذَا الإِسْنَادِ.(مسند البزار)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

எனது வாழ்வு உங்களுக்கு நன்மையே. நீங்கள் உரையாடு கிறீர்கள். நானும் உங்களுடன் உரையாடுகிறேன். எனது மரணமும் உங்களுக்கு நன்மையே. உங்கள் செயல்பாடுகள் எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றன. அதில் நன்மையைக் கண்டால் அதற்காக அல்லாஹ்வைப் புகழ்கிறேன். தீமையைக் கண்டால் அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன்.

இச்செய்தி முஸ்னதுல் பஸ்ஸாரில் (1925) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியின் அறிவிப் பாளர்களில் ஒருவரான அப்துல் மஜீத் பின் அப்துல் அஸீஸ் என்பவர் பலவீனமானவராவார்.

وَقَال أبو حاتم (1) : ليس بالقوي، يكتب حديثه (2).وَقَال الدَّارَقُطنِيّ (3) : لا يحتج به، يعتبر به، (تهذيب الكمال 18/275)

இவர் பலமானவர் இல்லை என்று இமாம் அபூஹாதம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இவர் ஆதாரமாக எடுக்கத் தகுந்தவர் இல்லை என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

(தஹ்தீபுல் கமால் 18/275).

منكرالحديث جدا، يقلب الاخبار ويروي المناكير عن المشاهير فاستحق الترك، (المجروحين 2/160)

இவர் ஹதீஸில் மிகவும் மறுக்கப்படக்கூடியவர், செய்திகளை மாற்றியறிவிப்பவர். மேலும் பிரபலமானவர்கள் வழியாக மறுக்கப் படும் செய்திகளை அறிவிப்பார். இன்னும் இவர் விடப்படுவதற்குத் தகுதியானவர் என்று இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.

(மஜ்ரூஹீன் 2/160)

எனவே, இந்தச் செய்தி இந்த அப்துல் மஜீத் பின் அப்துல் அஸீஸ் என்பவரால் பலவீனமடைகிறது.

இவரை ஒரு சிலர் நம்பகமானவர் என்று கூறியிருந்தாலும். இவரின் மீதும் குறையும் அதிகமாக சொல்லப்பட்டிருப்பதால், நிறையை விட குறை முற்படுத்தப்படும் என்ற ஹதீஸ்கலை விதியின் படி இந்தச் செய்தி பலவீனமடைகிறது.

No comments:

Post a Comment