Wednesday, December 21, 2016

வரம்பு மீறாதே !



39 . வரம்பு மீறாதே !


عَنِ ابْنِ عَبَّاسٍ، سَمِعَ عُمَرَ ـ رضى الله عنه ـ يَقُولُ عَلَى الْمِنْبَرِ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ لاَ تُطْرُونِي كَمَا أَطْرَتِ النَّصَارَى ابْنَ مَرْيَمَ، فَإِنَّمَا أَنَا عَبْدُهُ، فَقُولُوا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ ‏"
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

'நபி(ஸல்) அவர்கள், 'கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்திவிட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) 'அல்லாஹ்வின் அடியார்' என்றும் 'இறைத்தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள்' என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர்(ரலி) சொல்ல கேட்டிருக்கிறேன்.

 நூல் : புஹாரி ( 3445 ) தாரமீ ( 2784 ) அஹ்மத் ( 333 ) இப்னு ஹிப்பான் ( 414 ) பைஹகீ (535 )

விளக்கம் :‏‏

இவ்வுலகில் இறைவனுக்கு நன்றியுள்ள அடியார்களாக வாழ்பவர்களை அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர்களை அளவு கடந்து புகழ்ந்து. இறுதியில் கடவுள் தன்மையை வழங்கி கடவுளாக்கி வணங்க ஆரம்பித்து விடுகின்றனர்.

முந்தைய காலத்திலும் இது போன்று நல்லவர்கள் இறந்த பின்னர் அவர்களின் அடக்கத்தலங்களில் கட்டடங்களை எழுப்பி அதில் அவர்களின் உருவங்களைப் பொறித்து வழிபாடு செய்து வந்தவர்களைப் பற்றி ` இவர்கள் அல்லாஹ்விடம் மிகவும் மோசமானவர்கள் ` என்று நபி ஸல் அவர்கள் எச்சரித்தார்கள்.( பார்க்க புஹாரி 427 )

தம் வாழ் நாளுக்குப் பிறகு இது போன்ற நிலை வந்து விடக் கூடாது என்பதற்காக முந்தைய காலத்தில் எப்படி இறைத் தூதர் ஈஸா ( அலை ) அவர்களை வரம்பு மீறப் புகழ்ந்து கடவுளாக்கினார்களோ அது போன்று தம்மை ஆக்கி விடக் கூடாது என்று எச்சரித்தார்கள்.

இன்று மவ்லித் பாடலில் நபிஅவர்களை நோக்கி , 

 (كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ  ) 

என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!

சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே! 

என்று படிப்பவர்கள் இந்த நபிமொழியைக் கவனத்தில் கொள்ளட்டும்.



No comments:

Post a Comment