37 . கோபம்
عَنْ أَبِي
هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ
" لَيْسَ
الشَّدِيدُ بِالصُّرَعَةِ، إِنَّمَا الشَّدِيدُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ
الْغَضَبِ "
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன்
வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக்
கொள்பவனே ஆவான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
நூல் ; புஹாரி
( 6114 ) முஸ்லிம் ( 2609 ) அஹ்மத் ( 7178 ) முத்தா மாலிக் ( 1681 )
விளக்கம்
:
ஆத்திரக்காரனுக்கு
புத்தி மட்டு என்று கூறுவார்கள் கட்டுப்பாட்டை இழந்து , கடும் கோபப்பட்டு தான் என்ன
செய்கிறோம் என்பதைப் புரியாமல் நடந்து கொள்பவர்கள் பேரிழப்பைச் சந்திப்பார்கள்.
சின்னச் சின்ன
விஷயங்களுக்குக் கோபப்பட்டு நியாயமற்ற முறையில் நடந்து கொள்பவர்கள் பின்னால் சிரமத்திற்கு
ஆளாவார்கள். அதிகம் கோபப்படும் ஒர் மனிதர் நபிகளாரிடம் வந்து `` எனக்கு என்ன அறிவுரை
கூறுகிறீர்கள் ? என்று பல தடவை கேட்ட போது நபி ஸல் அவர்கள் `` கோபப்படாதே ! கோபப்படாதே என்றே கூறினார்கள் ( புஹாரி 6116 )
அடிக்கடி தேவையில்லாமல்
கோபப்படுபவன் செய்ய வேண்டிய முதல் வேலை கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதே ! அடுத்தவரை
அடித்து வீழ்த்துவது பெரிய காரியமில்லை கோபம் வரும் போது கட்டுப்படுத்தி இருப்பதே சிறந்த
காரியமாகும்.
No comments:
Post a Comment