42 . சமரசம்
أُمَّ كُلْثُومٍ بِنْتَ عُقْبَةَ أَخْبَرَتْهُ أَنَّهَا،
سَمِعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لَيْسَ الْكَذَّابُ الَّذِي يُصْلِحُ
بَيْنَ النَّاسِ، فَيَنْمِي خَيْرًا، أَوْ يَقُولُ خَيْرًا ".
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பரஸ்பரம் பிணங்கிய இரண்டு தரப்பாரிடமும்)
நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன்.
என உம்மு குல்தூம் பின்த்து உக்பா(ரலி) அறிவித்தார்.
நூல் : புஹாரி ( 2692 ) முஸ்லிம் ( 2605 ) திர்மிதீ ( 1938 ) அபூதாவூத் ( 4920 ) தப்ரானீ ( 170
)
விளக்கம் :
ஜந்து விரல்கள்
எப்படி ஒன்றாக இருப்பதில்லையோ அது போல மனிதர்கள் அனைவரும் குணத்தில் ஒரே மாதிரி இருப்பதில்லை
. எனவே அவர்களுக்கு மத்தியில் பிணக்குகள் சண்டைகள் ஏற்படுகின்றன.
இவ்வாறு பிணக்குகள்
ஏற்படும் போது ` நன்றாகச் சண்டையிடட்டும் ` என்றிருக்காமல் பின்வரும் வசனத்தின் அடிப்படையில்
அவர்களுக்கு மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
நம்பிக்கை கொண்டோர் சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை
ஏற்படுத்துங்கள் ! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள் ( அல் குர் ஆன்
49 : 10 )
இவ்வாறு இணக்கத்தை
ஏற்படுத்த பொய் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் பொய் கூட சொல்லிக் கொள்ளலாம் . இதனால்
மறுமையில் தண்டனை கிடைக்காது. மாறாக நன்மையே கிடைக்கும் எனவே சண்டையிட்ட சகோதரர்களைப்
பொய் சொல்லியாவது இணைத்து வைப்போம்.
No comments:
Post a Comment