Sunday, January 1, 2017

சமரசம்


42 . சமரசம்


أُمَّ كُلْثُومٍ بِنْتَ عُقْبَةَ أَخْبَرَتْهُ أَنَّهَا، سَمِعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ لَيْسَ الْكَذَّابُ الَّذِي يُصْلِحُ بَيْنَ النَّاسِ، فَيَنْمِي خَيْرًا، أَوْ يَقُولُ خَيْرًا ‏"‏‏.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பரஸ்பரம் பிணங்கிய இரண்டு தரப்பாரிடமும்) நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன்.

என உம்மு குல்தூம் பின்த்து உக்பா(ரலி) அறிவித்தார்.

நூல் : புஹாரி ( 2692 ) முஸ்லிம் ( 2605 ) திர்மிதீ ( 1938 ) அபூதாவூத் ( 4920 ) தப்ரானீ ( 170 )

விளக்கம் :


ஜந்து விரல்கள் எப்படி ஒன்றாக இருப்பதில்லையோ அது போல மனிதர்கள் அனைவரும் குணத்தில் ஒரே மாதிரி இருப்பதில்லை . எனவே அவர்களுக்கு மத்தியில் பிணக்குகள் சண்டைகள் ஏற்படுகின்றன.


இவ்வாறு பிணக்குகள் ஏற்படும் போது ` நன்றாகச் சண்டையிடட்டும் ` என்றிருக்காமல் பின்வரும் வசனத்தின் அடிப்படையில் அவர்களுக்கு மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

நம்பிக்கை கொண்டோர் சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள் ! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள் ( அல் குர் ஆன் 49 : 10 )



இவ்வாறு இணக்கத்தை ஏற்படுத்த பொய் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் பொய் கூட சொல்லிக் கொள்ளலாம் . இதனால் மறுமையில் தண்டனை கிடைக்காது. மாறாக நன்மையே கிடைக்கும் எனவே சண்டையிட்ட சகோதரர்களைப் பொய் சொல்லியாவது இணைத்து வைப்போம்.

No comments:

Post a Comment