புஹாரியில் இடம்பெற்ற ரத்தின சுருக்கமான நபிமொழிகள் ( பகுதி 02 )
06. தொழுகையைச் சுருக்கமாகவும் (அதே சமயம்) பூரணமாகவும் தொழுவிப்பது.
عَنْ أَنَسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى
الله عليه وسلم يُوجِزُ الصَّلاَةَ وَيُكْمِلُهَا.
அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தொழுகையைச் சுருக்கமாகவும் (எந்த ஒன்றும் விடுபடாமல்) பூரணமாகவும்
தொழுபவர்களாக இருந்தனர்.( புஹாரி 706 )
07. இகாமத்" கூறும் போதும் அதன் பின்னரும் தொழுகை வரிசைகளை
ஒழுங்குபடுத்துவது.
سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ قَالَ
النَّبِيُّ صلى الله عليه وسلم " لَتُسَوُّنَّ
صُفُوفَكُمْ أَوْ لَيُخَالِفَنَّ اللَّهُ بَيْنَ وُجُوهِكُمْ ".
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'உங்களின் வரிசைகளை நேராக அமைத்துக்
கொள்ளுங்கள்! இல்லையெனில் அல்லாஹ் உங்கள் முகங்களை மாற்றி விடுவான்.'
என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார். ( புஹாரி 717 )
08. அல்ஹம்து சூரா ஓதாதவருக்கு தொழுகை இல்லை
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ رَسُولَ اللَّهِ
صلى الله عليه وسلم قَالَ " لاَ صَلاَةَ
لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ ".
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து
சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது.' இதை உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.( புஹாரி 756 )
09. ஜுமுஆ நாளில் குளிப்பதன் சிறப்பும்,
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ
" إِذَا جَاءَ أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ ".
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால்
குளித்துக் கொள்ளட்டும்'
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.( புஹாரி 877 )
10. மழை பொழியும் போது கூற வேண்டியவை.
عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه
وسلم كَانَ إِذَا رَأَى الْمَطَرَ قَالَ "
صَيِّبًا نَافِعًا ".
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மழையைக் காணும்போது 'பயனுள்ள மழையாக (ஆக்குவாயாக!)' என்று கூறுவார்கள். ( புஹாரி 1032 )
No comments:
Post a Comment