Tuesday, July 11, 2017

அத்தியாயம்: 2 ஈமான் எனும் இறைநம்பிக்கை



                                                          அத்தியாயம்: 2

                                                                كتاب الإيمان
                        ஈமான் எனும் இறைநம்பிக்கை

(1) بَابُ الإِيمَانِ وَقَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ»

பாடம் : 1

இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது என்று நபி (ஸல்) கூறியது.

وَهُوَ قَوْلٌ وَفِعْلٌ، وَيَزِيدُ وَيَنْقُصُ. قَالَ اللَّهُ تَعَالَى: {لِيَزْدَادُوا إِيمَانًا مَعَ إِيمَانِهِمْ}، {وَزِدْنَاهُمْ هُدًى}، {وَيَزِيدُ اللَّهُ الَّذِينَ اهْتَدَوْا هُدًى}، {وَالَّذِينَ اهْتَدَوْا زَادَهُمْ هُدًى وَآتَاهُمْ تَقْوَاهُمْ}، {وَيَزْدَادَ الَّذِينَ آمَنُوا إِيمَانًا}، وَقَوْلُهُ: {أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا}. وَقَوْلُهُ جَلَّ ذِكْرُهُ: {فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا}. وَقَوْلُهُ تَعَالَى: {وَمَا زَادَهُمْ إِلاَّ إِيمَانًا وَتَسْلِيمًا}.
وَالْحُبُّ فِي اللَّهِ وَالْبُغْضُ فِي اللَّهِ مِنَ الإِيمَانِ.
وَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ إِلَى عَدِيِّ بْنِ عَدِيٍّ إِنَّ لِلإِيمَانِ فَرَائِضَ وَشَرَائِعَ وَحُدُودًا وَسُنَنًا، فَمَنِ اسْتَكْمَلَهَا اسْتَكْمَلَ الإِيمَانَ، وَمَنْ لَمْ يَسْتَكْمِلْهَا لَمْ يَسْتَكْمِلِ الإِيمَانَ، فَإِنْ أَعِشْ فَسَأُبَيِّنُهَا لَكُمْ حَتَّى تَعْمَلُوا بِهَا، وَإِنْ أَمُتْ فَمَا أَنَا عَلَى صُحْبَتِكُمْ بِحَرِيصٍ.
وَقَالَ إِبْرَاهِيمُ: {وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي}.
وَقَالَ مُعَاذٌ: اجْلِسْ بِنَا نُؤْمِنْ سَاعَةً.
وَقَالَ ابْنُ مَسْعُودٍ: الْيَقِينُ الإِيمَانُ كُلُّهُ.
وَقَالَ ابْنُ عُمَرَ: لاَ يَبْلُغُ الْعَبْدُ حَقِيقَةَ التَّقْوَى حَتَّى يَدَعَ مَا حَاكَ فِي الصَّدْرِ.
وَقَالَ مُجَاهِدٌ: {شَرَعَ لَكُمْ} أَوْصَيْنَاكَ يَا مُحَمَّدُ وَإِيَّاهُ دِينًا وَاحِدًا.
وَقَالَ ابْنُ عَبَّاسٍ: {شِرْعَةً وَمِنْهَاجًا} سَبِيلاً وَسُنَّةً.
நம்பிக்கை (ஈமான்) என்பது, சொல்லும் செயலும் இணைந்ததே ஆகும். அது கூடலாம்; குறையலாம். (இதற்கான ஆதாரங்கள் வருமாறு:)

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:

(1) தமது நம்பிக்கையுடன் அவர்கள் (மேலும்) நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்வதற்காக அவன்தான் இறை நம்பிக்கையாளர்களின் இதயங்களில் அமைதியை அருளினான். (48:4)

(2) நாம் அவர்களுக்கு (அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும்) நேர்வழியை அதிகமாக்கினோம். (18:13)

(3) (ஈமான் மூலம்) நேர்வழியைக் கடைப்பிடிப்போருக்கு நேர்வழியை (மேலும்) அல்லாஹ் அதிகமாக்குகின்றனான். (19:76)

(4) யார் (ஈமான் மூலம்) நேர்வழியைக் கடைப்பிடிக்கின்றாரோ அவருக்கு (அல்லாஹ் மேலும்) நேர்வழியை அதிகமாக்குகின்றான். மேலும், அவருக்கு இறையச்சத்தையும் வழங்குகிறான். (47:17)

(5) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்களுக்கு அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாவதற்காக (நரகத்தின் காவலர்களான வானவர்களின் எண்ணிக்கையை நாம் ஒரு சோதனையாக ஆக்கினோம்). (74:31)

(6) ஏதேனும் ஓர் அத்தியாயம் அருளப்பெற்றால் யாருக்கு இது ஈமானை அதிகமாக்கப்போகிறது? என்று (கேலியாகக்) கேட்பவர்களும் (நயவஞ்சகர்களான) அவர்களில் உண்டு. யார் ஈமான் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு அது ஈமானை அதிகமாக்கும். (9:124).

புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்:

(7) (உங்கள் பகைவர்களான) அவர்களுக்கு அஞ்சுங்கள் என்று மக்கள் யாரிடம் கூறினார்களோ அவர்களுக்கு ஈமானை அதிகமாக்கியது. (3:173)

(8) இந்நிகழ்ச்சி ஈமானையும் கீழ்ப்படிதலையும் அவர்களுக்கு அதிமாக்கியது (33:22).

அல்லாஹ்வுக்காக (ஒருவரை) நேசிப்பதும் அல்லாஹ்வுக்காக (ஒருவரை) கோபிப்பதும் இறை நம்பிக்கையில் அடங்கும் (என்கிறது ஒரு நபிமொழி).

உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் (தம் ஆளுநர்) அதீ பின் அதீ (ரஹ்) அவர்களுக்கு (பின்வருமாறு கடிதம்) எழுதினார்கள்:

ஈமானுக்குக் கடமைகள், கொள்கைகள், விலக்குகள், விரும்பத்தக்க (நபி)வழிகள் ஆகியன உள்ளன. எனவே, எவர் அவற்றை முழுமையாக நிறைவேற்றுகிறாரோ அவர் (தமது) ஈமானை முழுமைப்படுத்திக் கொண்டவராவார். எவர் அவற்றை முழுமையாக நிறைவேற்றவில்லையோ அவர் (தமது) ஈமானை முழுமைப்படுத்திக் கொள்ளவில்லை. நான் (இன்னும் சில காலம் இவ்வுலகில்) வாழ்வேனேயானால் நீங்கள் (அதன்படி) செயல்படுவதற்காக அவற்றை உங்களுக்கு விளக்குவேன். (ஒருவேளை) நான் அதற்குள் இறந்து விட்டால் (காலமெல்லாம்) நான் உங்களுடனேயே இருக்க வேண்டுமென்ற பேராசை பிடித்தவனல்லன்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள் (என அல்லாஹ் கூறுகின்றான்) :

...எனினும், என் நம்பிக்கை அதிகமாகி என் உள்ளம் நிம்மதி பெறுவதற்காகவே (இறந்தவர்களை உயிர்ப்பித்துக்காட்டுமாறு உன்னிடம் வேண்டினேன்). (2:260)

(அஸ்வத் பின் ஹிலால் (ரலி) அவர்களிடம்) முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், எம்முடன் நீங்களும் அமருங்கள்; நாம் சிறிது நேரம் இறை நம்பிக்கைகொள்வோம் என்று சொன்னார்கள்.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், உறுதியான நிலைதான் முழுநம்பிக்கை ஆகும் என்று கூறினார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உள்ளத்தில் (இது தவறாக இருக்குமோ என்ற) உறுத்தலைக் கூட கைவிடாத வரை உண்மையான இறையச்சத்தை ஓர் அடியார் அடைய முடியாது.

எந்த மார்க்கத்தை அவன் நூஹுக்கு வகுத்தளித்திருந்தானோ அதே மார்க்கத்தைத் தான் உங்களுக்கும் அவன் நிர்ணயித்திருக்கின்றான் எனும் (42:13ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

முஹம்மதே! உமக்கும் (நூஹ் நபியாகிய) அவருக்கும் நாம் ஒரே மார்க்கத்தையே அறிவுறுத்தியிருக்கின்றோம் என இறைவன் நபி(ஸல்) அவர்களிடம் கூறினான்.

உங்களில் ஒவ்வொருவருக்கும் நாம் ஒரு ஷிர்அத்(ஷரீஅத்)தையும் ஒரு மின்ஹாஜையும் ஏற்படுத்தியிருக்கிறோம் எனும் (5:48அவது) வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியையும் நடைமுறையையும் என்று விளக்கமளித்தார்கள்.


(2)باب دُعَاؤُكُمْ إِيمَانُكُمْ
பாடம் : 2

பிரார்த்தனை (துஆ) என்பது இறை நம்பிக்கையே (ஈமான்) ஆகும்.

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالْحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ ‏"‏‏.‏

8. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது.

1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது.

2. தொழுகையை நிலைநிறுத்துவது.

3. (கடமையானோர்) ஸகாத் வழங்குவது.

4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது.

5. ரமளானில் நோன்பு நோற்பது.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


(3)باب أُمُورِ الإِيمَانِ
பாடம் : 3

இறை நம்பிக்கைக்குரிய செயல்கள்.

وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ وَالْمَلاَئِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلاَةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ}. وَقَوْلِهِ: {قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ} الآيَةَ.

உயர்வுக்குரிய அல்லாஹ் கூறுகிறான்:

கிழக்கையோ மேற்கையோ நோக்கி உங்களுடைய முகங்களைத் திருப்புவது (மட்டும்) நற்பணி அன்று. ஆயினும், நற்செயல் புரிவோர் (இவர்களே: அவர்கள்) அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் உறுதியாக நம்புவர். (தமக்கு) விருப்பமாக இருப்பினும் பொருளை உறவினர்கள், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள், யாசகர்கள் ஆகியோருக்கும், (கடன் மற்றும் அடிமை விலங்கில்) சிக்குண்டவர்களி(ன் விஷயத்தி)லும் வழங்குவர். மேலும் அவர்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தையும் கொடுத்துவருவர். இன்னும் வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றுவர். கடும் வறுமையிலும் பிணியிலும் போர்க்காலத்திலும்கூடப் பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள். இத்தகையோரே உண்மையாளர்கள். அவர்கள்தான் இறையச்சமுடையோர். (2:177)

(அல்லாஹ் கூறுகிறான்:)

இறை நம்பிக்கையாளர்கள் வெற்றி அடைந்து விட்டனர். அவர்கள் தமது தொழுகையில் உள்ளச்சம் உடையவர்களாக இருப்பார்கள்; வீணானவற்றிலிருந்து விலகியிருப்பார்கள்... (23:1-11)


حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الإِيمَانُ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً، وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ ‏"‏‏.

9. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறை நம்பிக்கை (ஈமான்) அறுபதுக்கும் அதிமான கிளைகளைக் கொண்டதாகும். நாணமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளையே.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4)باب الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ
பாடம் : 4

எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவர்தான் முஸ்லிம்.

حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي السَّفَرِ، وَإِسْمَاعِيلَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ ‏"‏‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَ أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا دَاوُدُ عَنْ عَامِرٍ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏ وَقَالَ عَبْدُ الأَعْلَى عَنْ دَاوُدَ عَنْ عَامِرٍ عَنْ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.

10. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக் கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(5)باب أَىُّ الإِسْلاَمِ أَفْضَلُ
பாடம் : 5

இஸ்லாத்தில் சிறந்தது எது?


حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الْقُرَشِيِّ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَىُّ الإِسْلاَمِ أَفْضَلُ قَالَ ‏ "‏ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ ‏"‏‏.‏


11. அபூமூசா (அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள், இஸ்லாத்தில் சிறந்தது எது, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்; அவரது செயலே சிறந்தது) என்று பதிலளித்தார்கள்.


6)باب إِطْعَامُ الطَّعَامِ مِنَ الإِسْلاَمِ
பாடம் : 6

உணவளிப்பதும் இஸ்லாத்தின் ஓரம்சம்.

حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَىُّ الإِسْلاَمِ خَيْرٌ قَالَ ‏ "‏ تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ ‏"‏‏.‏

12. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும் என்று பதிலளித்தார்கள்.

7)باب مِنَ الإِيمَانِ أَنْ يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ

பாடம் : 7

ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்புவது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.

حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏
وَعَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ ‏"‏‏.‏

13. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதவரை (முழுமையான) இறை நம்பிக்கை கொண்டவர் ஆகமாட்டார்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

8)باب حُبُّ الرَّسُولِ صلى الله عليه وسلم مِنَ الإِيمَانِ
பாடம் : 8

இறைத்தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பதும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.


حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ ‏"‏‏.
14. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும் அவரது பிள்ளையையும் விட நான் மிக நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) ஈமான் உள்ளவராக மாட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ح وَحَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ ‏"‏‏.

15. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


9)باب حَلاَوَةِ الإِيمَانِ
பாடம் : 9

ஈமானின் சுவை.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَأَنْ يُحِبَّ الْمَرْءَ لاَ يُحِبُّهُ إِلاَّ لِلَّهِ، وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ ‏"‏‏.

16. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்த வராவார். (அவை:)

1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியோராவது.

2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.

3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


(10)باب عَلاَمَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ
பாடம் : 10

அன்சாரிகளை நேசிப்பது இறை நம்பிக்கையின் அடையாளமாகும்.

حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ آيَةُ الإِيمَانِ حُبُّ الأَنْصَارِ، وَآيَةُ النِّفَاقِ بُغْضُ الأَنْصَارِ ‏"‏‏.

17. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறை நம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும்; நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்.


இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment