அத்தியாயம்: 2 ( பகுதி 02 )
كتاب الإيمان
ஈமான் எனும் இறைநம்பிக்கை
(11)باب
பாடம்
: 11
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ
أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو إِدْرِيسَ،
عَائِذُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ عُبَادَةَ بْنَ الصَّامِتِ ـ رضى الله
عنه ـ وَكَانَ شَهِدَ بَدْرًا، وَهُوَ أَحَدُ النُّقَبَاءِ لَيْلَةَ الْعَقَبَةِ ـ
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَحَوْلَهُ عِصَابَةٌ مِنْ
أَصْحَابِهِ " بَايِعُونِي عَلَى أَنْ لاَ تُشْرِكُوا بِاللَّهِ
شَيْئًا، وَلاَ تَسْرِقُوا، وَلاَ تَزْنُوا، وَلاَ تَقْتُلُوا أَوْلاَدَكُمْ،
وَلاَ تَأْتُوا بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ،
وَلاَ تَعْصُوا فِي مَعْرُوفٍ، فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ،
وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ فِي الدُّنْيَا فَهُوَ كَفَّارَةٌ
لَهُ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا ثُمَّ سَتَرَهُ اللَّهُ، فَهُوَ إِلَى
اللَّهِ إِنْ شَاءَ عَفَا عَنْهُ، وَإِنْ شَاءَ عَاقَبَهُ ".
فَبَايَعْنَاهُ عَلَى ذَلِكَ.
18.
பத்ருப்போரில் கலந்து கொண்டவரும், இரவில் நடந்த அகபா உடன்பாட்டில்
கலந்து கொண்ட (பன்னிரண்டு) தலைவர்களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும்
தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, அல்லாஹ்வுக்கு எதையும்
(எவரையும்) இணையாக்கமாட்டீர்கள் என்றும், திருடமாட்டீர்கள் என்றும், விபச்சாரம் புரியமாட்டீர்கள்
என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும், நீங்களாக அவதூறு எதனையும்
புனைந்து கொண்டு வரமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத்திலும்
(எனக்கு) மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்! உங்களில் எவர்
(இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின்
பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே
தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை
ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலகவாழ்வில்) மறைத்து விட்டால் அவர் அல்லாஹ்வின்
பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்
என்று சொன்னார்கள்.
உடனே நாங்கள்
அவற்றுக்காக நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.
12)باب مِنَ الدِّينِ الْفِرَارُ مِنَ الْفِتَنِ
பாடம்
: 12 (மார்க்கத்தைக் காப்பாற்ற)
குழப்பங்களிலிருந்து வெருண்டோடுவது மார்க்கத்தின் ஓரம்சமாகும்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ،
عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ
الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ،
أَنَّهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يُوشِكُ
أَنْ يَكُونَ خَيْرَ مَالِ الْمُسْلِمِ غَنَمٌ يَتْبَعُ بِهَا شَعَفَ الْجِبَالِ
وَمَوَاقِعَ الْقَطْرِ، يَفِرُّ بِدِينِهِ مِنَ الْفِتَنِ ".
19. அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்:
(விரைவில்) ஒரு முஸ்லிம்
தனது மார்க்கத்தை (குழப்பங்களின் வடிவில் வரும்) சோதனைகளிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக
மலைகளின் உச்சிக்கும் மழைபொழியும் (கணவாய்கள், பள்ளத்தாக்குகள்
போன்ற) இடங்களுக்கும் தனது ஆடுகளை ஓட்டிக் கொண்டு வெருண்டோடுவார். அப்போது ஒரு முஸ்லிமின்
செல்வத்திலேயே சிறந்ததாக (அந்த) ஆடுகள்தான் இருக்கும்.
இதை அபூசயீத்
அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
13)باب قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم «أَنَا أَعْلَمُكُمْ بِاللَّهِ»
وَأَنَّ الْمَعْرِفَةَ فِعْلُ الْقَلْبِ
لِقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَلَكِنْ يُؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوبُكُمْ}
பாடம்
: 13 நான் உங்கள் அனைவரிலும்
இறைவனைப் பற்றி மிக அதிகமாக அறிந்தவன் ஆவேன் எனும் நபி (ஸல்) அவர்களின் கூற்று. (இறைவனையும்
இறைநெறியையும்) அறிதல்
என்பது உள்ளத்தின் செயலே. ஏனெனில்,
உயர்வுக்குரிய அல்லாஹ், உங்களுடைய வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்கமாட்டான்.
ஆனால், நீங்கள் (நன்கு அறிந்து) உளப்பூர்வமாகச் செய்தவற்றுக்காகவே
உங்களை அவன் தண்டிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மிக்க நிதானமானவனுமாவான் (2:225) என்று கூறுகின்றான்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ
أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَمَرَهُمْ أَمَرَهُمْ مِنَ الأَعْمَالِ
بِمَا يُطِيقُونَ قَالُوا إِنَّا لَسْنَا كَهَيْئَتِكَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ
اللَّهَ قَدْ غَفَرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ.
فَيَغْضَبُ حَتَّى يُعْرَفَ الْغَضَبُ فِي وَجْهِهِ ثُمَّ يَقُولُ "
إِنَّ أَتْقَاكُمْ وَأَعْلَمَكُمْ بِاللَّهِ أَنَا ".
20. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் நல்லவற்றை(ச் செய்யுமாறு) மக்களுக்குக் கட்டளையிட்டால், அவர்களால் இயன்ற செயல்களையே கட்டளையிடுவார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்கள் முன் பின் பாவங்களை
மன்னித்துவிட்டான். (ஆனால்,) எங்கள் நிலையோ உங்கள் நிலையைப்
போன்றதன்று (நாங்கள் குறைந்த அளவில் நல்லறங்கள் புரிந்தால் போதாது; அதிகமாகச் செய்யவேண்டிய நிலையிலுள்ளோம்) என்று கூறினார்கள்.
(இதைக் கேட்ட) உடன் நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவிற்கென்றால் கோபத்தின்
அறிகுறி அவர்களது முகத்தில் காணப்பட்டது. பிறகு உங்கள் அனைவரைவிடவும் நான் (அல்லாஹ்வை)
நன்கு அஞ்சி நடப்பவனும் அல்லாஹ்வைப் பற்றி அறிந்தவனும் ஆவேன் என்று கூறினார்கள்.
(14)باب مَنْ كَرِهَ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُلْقَى
فِي النَّارِ مِنَ الإِيمَانِ
பாடம்
: 14 நெருப்பில் எறியப்படுவதை
வெறுப்பது போன்று ஒருவர் இறைமறுப்பிற்குத் தாம் திரும்புவதை வெறுப்பது இறை நம்பிக்கையின்
ஓர் அம்சமாகும்.
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ
حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ
النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ
وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ مَنْ كَانَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ
مِمَّا سِوَاهُمَا، وَمَنْ أَحَبَّ عَبْدًا لاَ يُحِبُّهُ إِلاَّ لِلَّهِ، وَمَنْ
يَكْرَهُ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ بَعْدَ إِذْ أَنْقَذَهُ اللَّهُ، كَمَا
يَكْرَهُ أَنْ يُلْقَى فِي النَّارِ ".
21. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரிடம்
மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் இறை நம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார்.
(அவை:)
1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்
ஒருவருக்கு மற்ற அனைத்தையும் விட அதிக நேரத்திற்குரியோராவது.
2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே
நேசிப்பது.
3. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ்
தம்மை விடுவித்த பின், அந்த இறைமறுப்பிற்கேத்
திரும்பிச் செல்வதை ஒருவர் நெருப்பில் விசப்படுவதைப் போன்று வெறுப்பது.
இதை அனஸ்
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
15)باب تَفَاضُلِ أَهْلِ الإِيمَانِ فِي الأَعْمَالِ
பாடம்
: 15 இறை நம்பிக்கையாளர்களிடையே
செயல்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள்.
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي
مَالِكٌ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي
سَعِيدٍ الْخُدْرِيِّ، رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
" يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ، وَأَهْلُ النَّارِ النَّارَ،
ثُمَّ يَقُولُ اللَّهُ تَعَالَى أَخْرِجُوا مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ
حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ. فَيُخْرَجُونَ مِنْهَا قَدِ اسْوَدُّوا
فَيُلْقَوْنَ فِي نَهَرِ الْحَيَا ـ أَوِ الْحَيَاةِ، شَكَّ مَالِكٌ ـ
فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي جَانِبِ السَّيْلِ، أَلَمْ تَرَ
أَنَّهَا تَخْرُجُ صَفْرَاءَ مُلْتَوِيَةً ". قَالَ وُهَيْبٌ حَدَّثَنَا
عَمْرٌو " الْحَيَاةِ ". وَقَالَ " خَرْدَلٍ مِنْ خَيْرٍ
".
22. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமையில் விசாரணைகள் முடிந்தபின்)
சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்து விடுவார்கள். பிறகு
உள்ளத்தில் கடுகளவேனும் இறை நம்பிக்கை (ஈமான்) இருந்தோரை (நரகத்திலிருந்து) வெளியேற்றிவிடுங்கள்
என்று அல்லாஹ் கட்டளையிடுவான். உடனே அவர்கள் (கருகிக்) கறுத்துவிட்ட நிலையில் நரகத்திலிருந்து
அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். பின்னர் மழை நதியில் (நஹ்ருல் ஹயா) அல்லது ஜீவநதியில்
(நஹ்ருல் ஹயாத்) அவர்கள் இடப்படுவார்கள். இந்த இடத்தில் அறிவிப்பாளர்களில் ஒருவரான
மாலிக் (ரஹ்) அவர்கள் ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.(அவ்வாறு அவர்கள் அந்த நதியில்
போடப்பட்டதும்) ஓடைக்கரையில் விதைப்பயிர் முளைப்பது போல (நிறம்) மாறிவிடுவார்கள். அவை
வளைந்து நெளிந்து மஞ்சள் நிறத்தில் (பொலிவுடன்) இருப்பதை நீர் கண்டதில்லையா?
இதை அபூசயீத்
அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதே ஹதீஸை
வுஹைப் பின் காலித் (ரலி) அவர்கள் (மழைநதி அல்லது ஜீவநதி என்று சந்தேகத்தோடு அறிவிக்காமல்)
ஜீவநதி என்று (உறுதியுடன்) அறவிக்கிறார்கள். ஆயினும் (கடுகளவு இறை நம்பிக்கை என்பதற்குப்
பதிலாக) கடுகளவு நன்மை என்று அறிவித்தார்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ
اللَّهِ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ
شِهَابٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ
الْخُدْرِيَّ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " بَيْنَا
أَنَا نَائِمٌ رَأَيْتُ النَّاسَ يُعْرَضُونَ عَلَىَّ، وَعَلَيْهِمْ قُمُصٌ
مِنْهَا مَا يَبْلُغُ الثُّدِيَّ، وَمِنْهَا مَا دُونَ ذَلِكَ، وَعُرِضَ عَلَىَّ
عُمَرُ بْنُ الْخَطَّابِ وَعَلَيْهِ قَمِيصٌ يَجُرُّهُ ". قَالُوا فَمَا
أَوَّلْتَ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " الدِّينَ ".
23. அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள், நான் உறங்கிக் கொண்டிருக்கும்
போது (கனவில்) மக்கள் (பலவிதமான) சட்டைகளை அணிந்தவர்களாக எனக்கு எடுத்துக்காட்டப்பட்டார்கள்.
அவற்றில் (அவர்களுடைய) மார்பை எட்டக்கூடியவையும், மார்பை எட்டாதவையும் இருந்தன. உமர் பின் அல்கத்தாப் அவர்கள்
(தரையில்) இழுபடும் அளவுக்கு (நீளமான) சட்டையொன்றை அணிந்தவராக எனக்குக் காட்டப்பட்டார்கள்
என்று கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! இதற்கு
நீங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள்?
என்று கேட்டார்கள். அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், (அந்தச் சட்டைகள் அவர்களுடைய)
மார்க்கத்தை (மார்க்க உணர்வையும் செயல்பாடுகளையும்) குறிக்கும் என்று பதிலளித்தார்கள்.
(16)باب الْحَيَاءُ مِنَ الإِيمَانِ
பாடம்
: 16
வெட்கம்
இறை நம்பிக்கையின் ஓர் அம்சம்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ،
قَالَ أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ
عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ
عَلَى رَجُلٍ مِنَ الأَنْصَارِ وَهُوَ يَعِظُ أَخَاهُ فِي الْحَيَاءِ، فَقَالَ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " دَعْهُ فَإِنَّ الْحَيَاءَ مِنَ
الإِيمَانِ ".
24. அப்துல்லாஹ் பின் உமர்
(ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது
குறித்து(க் கண்டித்து) தம் சகோதரருக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். (இதைக் கண்ட)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை(க் கண்டிக்காதீர்கள்;) விட்டுவிடுங்கள். ஏனெனில் வெட்கமும் இறை நம்பிக்கையின்
ஓர் அம்சமே என்று கூறினார்கள்.
(17)بَابُ: {فَإِنْ تَابُوا وَأَقَامُوا
الصَّلاَةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ}
பாடம்
: 17
(இறைவனுக்கு இணை கற்பிக்கும்)
அவர்கள் பாவமன்னிப்புக் கோரி, தொழுகையையும்
நிலைநிறுத்தி, ஸகாத்தையும் வழங்கிவந்தால்
அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் எனும் (9:5ஆவது) இறைவசனம்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ
الْمُسْنَدِيُّ، قَالَ حَدَّثَنَا أَبُو رَوْحٍ الْحَرَمِيُّ بْنُ عُمَارَةَ،
قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاقِدِ بْنِ مُحَمَّدٍ، قَالَ سَمِعْتُ أَبِي
يُحَدِّثُ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ
" أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ
إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَيُقِيمُوا الصَّلاَةَ،
وَيُؤْتُوا الزَّكَاةَ، فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ
وَأَمْوَالَهُمْ إِلاَّ بِحَقِّ الإِسْلاَمِ، وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ ".
25. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு
இறைவனில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என உறுதிமொழிந்து, (கடமையான) தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத் (எனும் ஏழைகளின் உரிமையை) வழங்காதவரை
(இணைவைக்கும்) மக்களுடன் போரிடும்படி நான் கட்டளையிடப்பட்டேன். இவற்றை அவர்கள் செய்து
விடுவார்களானால் தம் உயிரையும் உடைமைகளையும் என்னிடமிருந்து அவர்கள் பாதுகாத்துக்கொள்ள
முடியும். (மரண தண்டனைக்குரிய) இஸ்லாத்தின் இதர உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறினாலே)
தவிர! மேலும் (இரகசியமாக குற்றமிழைத்தால்) அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளது.
இதை அப்துல்லாஹ் பின்
உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(18)باب مَنْ قَالَ إِنَّ الإِيمَانَ هُوَ الْعَمَلُ
பாடம்
: 18
இறை நம்பிக்கை
(ஈமான்) என்றாலே அது நற்செயல்தான் என்று சிலர் வாதிடுகின்றனர்.
لِقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَتِلْكَ الْجَنَّةُ
الَّتِي أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ}.
وَقَالَ عِدَّةٌ مِنْ أَهْلِ الْعِلْمِ فِي قَوْلِهِ
تَعَالَى: {فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ عَمَّا كَانُوا
يَعْمَلُونَ} عَنْ قَوْلِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ.
وَقَالَ: {لِمِثْلِ هَذَا فَلْيَعْمَلِ الْعَامِلُونَ}.
ஏனெனில் உயர்ந்தோன்
அல்லாஹ், இது தான் நீங்கள் (உலகில்) செய்து கொண்டிருந்ததற்காக உங்களுக்கு வழங்கப்பட்ட சொர்க்கமாகும்
(43:72) என்று கூறுகின்றான்.
உம் இறைவன் மீதாணையாக!
அவர்கள் அனைவரிடமும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி விசாரிப்போம் எனும் (15:92ஆவது) இறைவசனத்திற்கு விளக்கமளிக்கையில் (அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி என்பதற்கு)
லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) எனும் நம்பிக்கை பற்றி விசாரிப்போம்
என்று இப்னு உமர் (ரலி), முஜாஹித் (ரஹ்) போன்ற மார்க்க அறிஞர்களில்
பலர் கூறியிருக்கிறார்கள்.
(சொர்க்க வாழ்வு பற்றி பேசிவிட்டு) அல்லாஹ்
இது போன்றவற்றுக்காகவே (உலகில்) செயல்படுபவர்கள் செயல்படட்டும் (37:61) என்று கூறுகிறான்.
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، وَمُوسَى بْنُ
إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، قَالَ حَدَّثَنَا
ابْنُ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ أَىُّ الْعَمَلِ أَفْضَلُ فَقَالَ "
إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ ". قِيلَ ثُمَّ مَاذَا قَالَ "
الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ ". قِيلَ ثُمَّ مَاذَا قَالَ "
حَجٌّ مَبْرُورٌ ".
26. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களிடம் எந்த நற்செயல் சிறந்தது? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்
அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை (ஈமான்) கொள்வது என்று பதிலளித்தார்கள்.
பிறகு எது? என்று கேட்கப்பட்ட போது, இறைவழியில் அறப்போர் புரிவது என்றார்கள்.
பிறகு எது? என்று கேட்கப்பட்ட போது, ஏற்றுக் கொள்ளப்பட்ட (பாவச்செயல் கலவாத)
ஹஜ் என்று சொன்னார்கள்.
(19) بَابُ إِذَا لَمْ يَكُنِ الإِسْلاَمُ عَلَى الْحَقِيقَةِ
وَكَانَ عَلَى الاِسْتِسْلاَمِ أَوِ الْخَوْفِ مِنَ الْقَتْلِ
பாடம்
: 19
மனப்பூர்வமாக
அன்றி, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவோ, உயிருக்குப்பயந்தோ இஸ்லாத்தை ஏற்றால் (அது அல்லாஹ்விடத்தில்
அங்கீகரிக்கப்படாது).
لِقَوْلِهِ تَعَالَى: {قَالَتِ الأَعْرَابُ آمَنَّا قُلْ
لَمْ تُؤْمِنُوا وَلَكِنْ قُولُوا أَسْلَمْنَا}. فَإِذَا كَانَ عَلَى الْحَقِيقَةِ
فَهُوَ عَلَى قَوْلِهِ جَلَّ ذِكْرُهُ: {إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ
الإِسْلاَمُ}، {وَمَنْ يَبْتَغِ غَيْرَ الإِسْلاَمِ دِينًا فَلَنْ يُقْبَلَ
مِنْهُ}
ஏனெனில் உயர்ந்தோனாகிய
அல்லாஹ், (நபியே!) நாங்களும் ஈமான் கொண்டுவிட்டோம் என்று கிராமவாசிகளில் சிலர் (உம்மிடம்)
கூறினார்கள். நீர் கூறும்: நீங்கள் உண்மையில் ஈமான் கொள்ளவில்லை; ஆயினும் நாங்கள் (இஸ்லாத்தை ஏற்காவிட்டால் ஏற்படும் இழிவிலிருந்து) தப்பித்துக்
கொண்டோம் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள்! என்று (49:14) கூறுகின்றான்.
மனப்பூர்வமாக இஸ்லாத்தை
ஏற்றுக் கொண்டால் அது அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படும். ஏனெனில் புகழோங்கிய அல்லாஹ், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட ஒரே) மார்க்கம் இஸ்லாம் தான்(3:19) என்று கூறுகின்றான்.
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا
شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عَامِرُ بْنُ سَعْدِ بْنِ أَبِي
وَقَّاصٍ، عَنْ سَعْدٍ، رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم
أَعْطَى رَهْطًا وَسَعْدٌ جَالِسٌ، فَتَرَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
رَجُلاً هُوَ أَعْجَبُهُمْ إِلَىَّ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا لَكَ عَنْ
فُلاَنٍ فَوَاللَّهِ إِنِّي لأَرَاهُ مُؤْمِنًا. فَقَالَ " أَوْ
مُسْلِمًا ". فَسَكَتُّ قَلِيلاً، ثُمَّ غَلَبَنِي مَا أَعْلَمُ مِنْهُ
فَعُدْتُ لِمَقَالَتِي فَقُلْتُ مَا لَكَ عَنْ فُلاَنٍ فَوَاللَّهِ إِنِّي
لأَرَاهُ مُؤْمِنًا فَقَالَ " أَوْ مُسْلِمًا ". ثُمَّ غَلَبَنِي
مَا أَعْلَمُ مِنْهُ فَعُدْتُ لِمَقَالَتِي وَعَادَ رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم ثُمَّ قَالَ " يَا سَعْدُ، إِنِّي لأُعْطِي الرَّجُلَ وَغَيْرُهُ
أَحَبُّ إِلَىَّ مِنْهُ، خَشْيَةَ أَنْ يَكُبَّهُ اللَّهُ فِي النَّارِ
". وَرَوَاهُ يُونُسُ وَصَالِحٌ وَمَعْمَرٌ وَابْنُ أَخِي الزُّهْرِيِّ
عَنِ الزُّهْرِيِّ.
27. சஅத் பின் அபீவக்காஸ்
(ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்த போது, அவர்கள் மக்களில் ஒரு குழுவினருக்கு மட்டும் (தர்மப் பொருட்களை)
கொடுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு வேண்டிய ஒருவரை (அவருக்கு
கொடுக்காமல்) விட்டுவிட்டார்கள். ஆகவே நான், அல்லாஹ்வின்
தூதரே! (அவரை ஏன் விட்டுவிட்டீர்கள்?) அவர் மீது
உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீதாணையாக!
அவரை நான் நம்பிக்கையாளர் (முஃமின்) என்றே கருதுகின்றேன் என்றேன். அதற்கு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், அவரை முஸ்லிம் (இறைநெறியில்
நடப்பவர்) என்று சொல் என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். தொடர்ந்து
நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னையும் அறியாமல் (என் நாவில்) வந்தபோது
முன்பு சொன்னதையே திரும்பவும் சொன்னேன். அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி? அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக நான் அவரை ஒரு நம்பிக்கையாளர்
(முஃமின்) என்றே கருதுகிறேன் என்றேன். அதற்கு அலலாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை
முஸ்லிம் என்று சொல் என்றார்கள். அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விஷயத்தை என்னையும்
மீறி மீண்டும் மீண்டும் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பழைய பதிலையே
கூறிவிட்டு, சஅத்! (அன்பளிப்புகள் எதுவாகட்டும்)
நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்;
ஆனால் நான் யாருக்குக்
கொடுக்கவில்லையோ அவர் என் அன்புக்குப் பாத்திரமானவராய் இருக்கிறார். (அவருக்கு நான்
கொடுக்காதிருந்தால் இல்லாமையால் அவர் குற்றங்கள் எதும் இழைத்து அதனால்) அவரை இறைவன்
நரகில் முகம் குப்புறத் தள்ளிவிடுவானோ எனும் அச்சம்தான் என்றார்கள்.
(20)باب إِفْشَاءُ السَّلاَمِ مِنَ الإِسْلاَمِ
பாடம்
: 20
சலாமைப்
பரப்புவதும் இஸ்லாத்தின் ஓர் அம்சமே.
وَقَالَ عَمَّارٌ: ثَلاَثٌ مَنْ جَمَعَهُنَّ فَقَدْ
جَمَعَ الإِيمَانَ الإِنْصَافُ مِنْ نَفْسِكَ، وَبَذْلُ السَّلاَمِ لِلْعَالَمِ،
وَالإِنْفَاقُ مِنَ الإِقْتَارِ.
அம்மார் பின் யாசிர்
(ரலி) அவர்கள் கூறியதாவது:
தார்மீக நேர்மையுடன்
நடப்பது; உலகெங்கிலும் சலாமைப் பரப்புவது;
வறுமை வயப்பட்டிருக்க (நல்வழியில்)
செலவளிப்பது ஆகிய முப்பண்புகளை எவர் (தம்மிடம்) ஒருங்கே அமைத்துக் கொண்டாரோ அவர் நிச்சயமாக
ஈமானையே (தம்மிடம்) ஒருங்கே அமைத்துக் கொண்டவராவார்.
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ،
عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ
عَمْرٍو، أَنَّ رَجُلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَىُّ
الإِسْلاَمِ خَيْرٌ قَالَ " تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ
السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ ".
28. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களிடம் இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது? என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீர் உணவளிப்பதும், அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும்
சலாம் சொல்வதுமாகும் என்று பதிலளித்தார்கள்.
No comments:
Post a Comment