அத்தியாயம் : 4 ( பகுதி 02)
كتاب الوضوء
உளூ (அங்கசுத்தி)
(11)باب لاَ
تُسْتَقْبَلُ الْقِبْلَةُ بِغَائِطٍ أَوْ بَوْلٍ إِلاَّ عِنْدَ الْبِنَاءِ جِدَارٍ
أَوْ نَحْوِهِ
பாடம் : 11
மலஜலம் கழிக்கும் போது கிப்லா(கஅபா)திசையை முன்னோக்கக் கூடாது.
மதில் முதலிய கட்டடம் இருந்தால் தவறில்லை.
حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ،
قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ
أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
" إِذَا أَتَى أَحَدُكُمُ الْغَائِطَ فَلاَ يَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلاَ
يُوَلِّهَا ظَهْرَهُ، شَرِّقُوا أَوْ غَرِّبُوا ".
144. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் அவர் கிப்லாவை முன்னோக்க வேண்டாம். (அதன்
திசையில்) தமது முதுகுப் புறத்தால் பின்னோக்கவும் வேண்டாம். (மாறாக) கிழக்கு நோக்கியோ
மேற்கு நோக்கியோ திரும்பிக்கொள்ளுங்கள்.
இதை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இந்த ஹதீஸ், கிப்லா தெற்கு வடக்காக அமைந்த மதீனா, யமன், சிரியா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கே
பொருந்தும். நமது நாட்டைப் பொறுத்தவரையில் கிப்லா மேற்குத் திசையில் அமைந்துள்ளதால்
வடக்கு தெற்காக அமர வேண்டும்.)
(12)باب
مَنْ تَبَرَّزَ عَلَى لَبِنَتَيْنِ
பாடம் : 12
இரண்டு செங்கற்களின் மீது அமர்ந்து மலம் கழித்தல்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ
أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى
بْنِ حَبَّانَ، عَنْ عَمِّهِ، وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ
عُمَرَ، أَنَّهُ كَانَ يَقُولُ إِنَّ نَاسًا يَقُولُونَ إِذَا قَعَدْتَ عَلَى
حَاجَتِكَ، فَلاَ تَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلاَ بَيْتَ الْمَقْدِسِ. فَقَالَ
عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ لَقَدِ ارْتَقَيْتُ يَوْمًا عَلَى ظَهْرِ بَيْتٍ
لَنَا، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى لَبِنَتَيْنِ
مُسْتَقْبِلاً بَيْتَ الْمَقْدِسِ لِحَاجَتِهِ. وَقَالَ لَعَلَّكَ مِنَ
الَّذِينَ يُصَلُّونَ عَلَى أَوْرَاكِهِمْ، فَقُلْتُ لاَ أَدْرِي وَاللَّهِ.
قَالَ مَالِكٌ يَعْنِي الَّذِي يُصَلِّي وَلاَ
يَرْتَفِعُ عَنِ الأَرْضِ، يَسْجُدُ وَهُوَ لاَصِقٌ بِالأَرْضِ.
145. வாஸிஉ பின் ஹப்பான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இயற்றைக் கடனை நிறைவேற்ற அமர்ந்தால் கிப்லாவையோ, பைத்துல் மக்திஸையோ முன்னோக்கக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான்
ஒரு நாள் எங்கள் வீட்டின் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன். தற்செயலாக அல்லாஹ்வின்
தூதர்(ஸல்) அவர்கள் இரு செங்கற்களின் மீது பைத்துல் மக்திஸின் திசையை முன்னோக்கியபடி
இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்திருக்கக் கண்டேன் என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
அவர்கள் கூறினார்கள். பிறகு என்னிடம் புட்டங்களில் தொழுபவர்களில் நீங்களும் ஒருவரோ!
என்று கேட்டார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் அவ்வாறு
தொழுதேனா என்று) எனக்குத் தெரியாது என்றேன்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
தரையுடன் (தம் புட்டத்தை) அப்பிக் கொண்டவராகவும் புட்டத்தைத் தரையிலிருந்து உயர்த்தாமலும்
சஜ்தா செய்(து தொழு)பவரைத் தான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (இடித்துக்) கூறினார்கள்.
(13)باب
خُرُوجِ النِّسَاءِ إِلَى الْبَرَازِ
பாடம் : 13
பெண்கள் (ஆள் நடமாட்டமில்லாத) வெட்டவெளிகளுக்கு இயற்றைக் கடனை
நிறைவேற்றச் செல்லுதல்.
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا
اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ
عَائِشَةَ، أَنَّ أَزْوَاجَ النَّبِيِّ، صلى الله عليه وسلم كُنَّ يَخْرُجْنَ
بِاللَّيْلِ إِذَا تَبَرَّزْنَ إِلَى الْمَنَاصِعِ ـ وَهُوَ صَعِيدٌ أَفْيَحُ ـ
فَكَانَ عُمَرُ يَقُولُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم احْجُبْ نِسَاءَكَ.
فَلَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَفْعَلُ، فَخَرَجَتْ سَوْدَةُ
بِنْتُ زَمْعَةَ زَوْجُ النَّبِيِّ صلى الله عليه وسلم لَيْلَةً مِنَ اللَّيَالِي
عِشَاءً، وَكَانَتِ امْرَأَةً طَوِيلَةً، فَنَادَاهَا عُمَرُ أَلاَ قَدْ
عَرَفْنَاكِ يَا سَوْدَةُ. حِرْصًا عَلَى أَنْ يَنْزِلَ الْحِجَابُ، فَأَنْزَلَ
اللَّهُ آيَةَ الْحِجَابِ.
146. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியர் இயற்கைக் கடனை நிறைவேற்ற இரவு நேரத்தில் மனாஸிஉகளுக்கு
(வீட்டை விட்டு) வெளியே செல்லும் வழக்கமுடையவர்களாய் இருந்தார்கள். மனாஸிஉ என்பது
(மதீனாவின் புறநகரிலிருந்த) விசாலமான திறந்த வெளிகளாகும். இதையொட்டி உமர் (ரலி) அவர்கள்
நபி (ஸல்) அவர்களிடம், உங்கள் துணைவியரை (வெளியே செல்லும்
போது) பர்தா இட்டுமறைத்துக் கொள்ளச்சொல்லுங்கள் என்று உமர் (ரலி) அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
ஆயினும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைச் செயல்படுத்தவில்லை. (இப்படியிருக்க)
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான சவ்தா (ரலி) அவர்கள் ஓர் இரவு இஷா நேரத்தில் (இயற்கை
கடனை நிறைவேற்ற) வெளியே சென்றார்கள். நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் சவ்தா (ரலி)
அவர்களே உயரமான பெண்மணியாக இருந்தார்கள். அவர்களைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள், சவ்தா! உங்களைக் கண்டு கொண்டோம் என ஹிஜாப் (பர்தா பற்றிய வசனம்)
அருளப்படாதா என்ற பேராவலில் சவ்தா (ரலி) அவர்களை அழைத்துக் கூறினார்கள். அப்போது அல்லாஹ், ஹிஜாப் பற்றிய வசனத்தை அருளினான்.
حَدَّثَنَا زَكَرِيَّاءُ، قَالَ حَدَّثَنَا أَبُو
أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، عَنِ
النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " قَدْ أُذِنَ أَنْ تَخْرُجْنَ فِي
حَاجَتِكُنَّ ". قَالَ هِشَامٌ يَعْنِي الْبَرَازَ.
147. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், (என் துணைவியரே!) நீங்கள் உங்கள் தேவைக்காக
வெளியே செல்ல உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டே உள்ளது என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் வெளியே செல்லல்
என்பதற்கு இயற்கைக் கடனை நிறைவேற்ற திறந்தவெளிகளுக்குச் செல்லுதல் என்பதே நபி (ஸல்)
அவர்களின் கருத்தாகும் என்று கூறினார்கள்.
(14)باب التَّبَرُّزِ
فِي الْبُيُوتِ
பாடம் : 14
வீடுகளில் கழிப்பறைகள் அமைத்துப் பயன்படுத்துதல்.
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ
حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ مُحَمَّدِ بْنِ
يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ
عُمَرَ، قَالَ ارْتَقَيْتُ فَوْقَ ظَهْرِ بَيْتِ حَفْصَةَ لِبَعْضِ حَاجَتِي،
فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقْضِي حَاجَتَهُ مُسْتَدْبِرَ
الْقِبْلَةِ مُسْتَقْبِلَ الشَّأْمِ.
148. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
நான் என் தேவையொன்றிற்காக (என் சகோதரி) ஹப்ஸா (ரலி) அவர்களின் வீட்டுக் கூரை மீது
ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிப்லாவின் திசையைப் பின்னோக்கியும்
(பைத்துல் மக்திஸிருக்கும்) ஷாம் (சிரியா) திசையை முன்னோக்கியும் அமர்ந்தவர்களாகத்
(தமது வீட்டிலிருந்த கழிவறையில்) இயற்கைக் கடனை நிறைவேற்றிக் கொண்டிருப்பதை நான் (தற்செயலாகக்)
கண்டேன்.
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ
حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ أَخْبَرَنَا يَحْيَى، عَنْ مُحَمَّدِ
بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، أَنَّ عَمَّهُ، وَاسِعَ بْنَ حَبَّانَ، أَخْبَرَهُ
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ أَخْبَرَهُ قَالَ لَقَدْ ظَهَرْتُ ذَاتَ يَوْمٍ
عَلَى ظَهْرِ بَيْتِنَا، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَاعِدًا
عَلَى لَبِنَتَيْنِ مُسْتَقْبِلَ بَيْتِ الْمَقْدِسِ.
149. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
ஒரு நாள் நான் (ஒரு தேவை நிமித்தம்) எங்கள் வீட்டுக் கூரை மீது ஏறினேன். அப்போது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு செங்கற்கள் மீதமர்ந்தவர்களாக பைத்துல் மக்திஸிருக்கும்
திசையை முன்னோக்கியபடி (இயற்கைக் கடனை நிறைவேற்றிக் கொண்டிருப்பதைக்) கண்டேன்.
(15)باب
الاِسْتِنْجَاءِ بِالْمَاءِ
பாடம் : 15
இயற்கைக் கடனை நிறைவேற்றிவிட்டு தண்ணீரால் துப்புரவு செய்தல்.
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ
الْمَلِكِ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي مُعَاذٍ ـ وَاسْمُهُ عَطَاءُ
بْنُ أَبِي مَيْمُونَةَ ـ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ
النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا خَرَجَ لِحَاجَتِهِ أَجِيءُ أَنَا وَغُلاَمٌ
مَعَنَا إِدَاوَةٌ مِنْ مَاءٍ. يَعْنِي يَسْتَنْجِي بِهِ.
150. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற வீட்டைவிட்டுப் புறப்பட்டால், நானும் இன்னொரு சிறுவனும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரம்
ஒன்றை எங்களுடன் எடுத்துக் கொண்டு செல்வோம்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுல்வலீத்
ஹிஷாம் பின் அப்தில் மலிக் அவர்கள் கூறுகிறார்கள்:)
அந்தத் தண்ணீரால் நபி (ஸல்) அவர்கள் துப்புரவு செய்து கொள்வதற்காக (எடுத்துச் சென்றோம்)
என்ற கருத்தில் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(16)باب مَنْ حُمِلَ
مَعَهُ الْمَاءُ لِطُهُورِهِ
பாடம் : 16
ஒருவர் துப்புரவு செய்திட மற்றவர் தண்ணீர் எடுத்துச் செல்லுதல்.
وَقَالَ أَبُو الدَّرْدَاءِ: أَلَيْسَ فِيكُمْ صَاحِبُ
النَّعْلَيْنِ وَالطَّهُورِ وَالْوِسَادِ.
ஏன் (உங்கள் கூஃபா நகரில்) நபி (ஸல்) அவர்களின் காலணிகள், அவர்கள் சுத்தம் செய்வதற்குரிய தண்ணீர், மற்றும் தலையணையை சுமந்து (சேவகம் புரிந்து) கொண்டிருந்தவர்
(இப்னுமஸ்ஊத் (ரலி) உங்களிடையே இல்லையா? என்று அபுத்தர்தா(ரலி) அவர்கள் அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்களிடம் கேட்டார்கள்.
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ،
عَنْ أَبِي مُعَاذٍ ـ هُوَ عَطَاءُ بْنُ أَبِي مَيْمُونَةَ ـ قَالَ سَمِعْتُ
أَنَسًا، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا خَرَجَ
لِحَاجَتِهِ تَبِعْتُهُ أَنَا وَغُلاَمٌ مِنَّا مَعَنَا إِدَاوَةٌ مِنْ مَاءٍ.
151. அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற வெளியே சென்றால், நானும் எங்க(ள் அன்சாரிக)ளில் ஒரு சிறுவனும் தண்ணீர் நிரம்பிய
சிறிய தோல் பாத்திரம் ஒன்றுடன் அவர்களைப் பின்தொடர்ந்து செல்வோம். (அந்தத் தண்ணீரால்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துப்புரவு செய்து கொள்வார்கள்.)
(17)باب حَمْلِ
الْعَنَزَةِ مَعَ الْمَاءِ فِي الاِسْتِنْجَاءِ
பாடம் : 17
(கழிப்பிடம் செல்லும்
போது) துப்புரவு செய்யத் தண்ணீருடன் கைத்தடியையும் எடுத்துச் செல்லல்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي
مَيْمُونَةَ، سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله
عليه وسلم يَدْخُلُ الْخَلاَءَ، فَأَحْمِلُ أَنَا وَغُلاَمٌ إِدَاوَةً مِنْ مَاءٍ،
وَعَنَزَةً، يَسْتَنْجِي بِالْمَاءِ. تَابَعَهُ النَّضْرُ وَشَاذَانُ عَنْ
شُعْبَةَ. الْعَنَزَةُ عَصًا عَلَيْهِ زُجٌّ.
152. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (புறநகர்ப் பகுதியிலுள்ள) கழிப்பிடத்திற்குச் செல்லும்போது நானும்
ஒரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய தோல் பாத்திரத்தையும் ஒரு கைத்தடியையும் (அனஸா) எடுத்துச்
செல்வோம். (தம் தேவையை முடித்துவிட்டு) தண்ணீரால் அவர்கள் துப்புரவு செய்து கொள்வார்கள்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்தள்ளது. அதன் அறிவிப்பாளர்களில்
ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் அனஸா என்பது மேற்புறத்தில் பூண் இடப்பட்டுள்ள கைத்தடியாகும்
என்று குறிப்பிடுகிறார்கள்.
(18)باب
النَّهْىِ عَنْ الاِسْتِنْجَاءِ، بِالْيَمِينِ
பாடம் : 18
வலக்கரத்தால் சுத்தம் செய்வது விலக்கப்பட்டுள்ளது.
حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ حَدَّثَنَا
هِشَامٌ ـ هُوَ الدَّسْتَوَائِيُّ ـ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ
اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم " إِذَا شَرِبَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَفَّسْ فِي
الإِنَاءِ، وَإِذَا أَتَى الْخَلاَءَ فَلاَ يَمَسَّ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَلاَ
يَتَمَسَّحْ بِيَمِينِهِ ".
153. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் (எதையும்) பருகும் போது பாத்திரத்திற்குள் மூச்சுவிட வேண்டாம்; கழிப்பிடம் சென்றால் பிறவி உறுப்பை வலக்கரத்தால் தொட வேண்டாம்; வலக்கரத்தால் சுத்தம் செய்யவேண்டாம்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(19)باب لاَ يُمْسِكُ
ذَكَرَهُ بِيَمِينِهِ إِذَا بَالَ
பாடம் : 19
சிறுநீர் கழிக்கும்போது வலக்கரத்தால் பிறவி உறுப்பைப் பிடிக்கக்கூடாது.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا
الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي
قَتَادَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "
إِذَا بَالَ أَحَدُكُمْ فَلاَ يَأْخُذَنَّ ذَكَرَهُ بِيَمِينِهِ، وَلاَ
يَسْتَنْجِي بِيَمِينِهِ، وَلاَ يَتَنَفَّسْ فِي الإِنَاءِ ".
154. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது பிறவி உறுப்பைத் தமது வலக்கரத்தால் தொடவேண்டாம்; வலக்கரத்தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். (ஏதேனும் ஒன்றைப்
பருகும் போது) பாத்திரத்திற்குள் மூச்சு விடவும் வேண்டாம்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(20)باب
الاِسْتِنْجَاءِ بِالْحِجَارَةِ
பாடம் : 20
கற்களால் (துடைத்து) சுத்தம் செய்தல்.
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَكِّيُّ، قَالَ
حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ سَعِيدِ بْنِ عَمْرٍو الْمَكِّيُّ، عَنْ
جَدِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ اتَّبَعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم
وَخَرَجَ لِحَاجَتِهِ، فَكَانَ لاَ يَلْتَفِتُ فَدَنَوْتُ مِنْهُ فَقَالَ
" ابْغِنِي أَحْجَارًا أَسْتَنْفِضْ بِهَا ـ أَوْ نَحْوَهُ ـ وَلاَ
تَأْتِنِي بِعَظْمٍ وَلاَ رَوْثٍ ". فَأَتَيْتُهُ بِأَحْجَارٍ بِطَرَفِ
ثِيَابِي فَوَضَعْتُهَا إِلَى جَنْبِهِ وَأَعْرَضْتُ عَنْهُ، فَلَمَّا قَضَى
أَتْبَعَهُ بِهِنَّ.
155. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்றபோது அவர்களைப்
பின்தொடர்ந்து நானும் சென்றேன். அவர்கள் திரும்பிப் பார்க்காமலேயே சென்றார்கள். அவர்கள்
அருகில் நான் சென்றபோது, நான் (இயற்கைக் கடனை முடித்தபின்) சுத்தம்
செய்வதற்காக எனக்காகச் சில கற்களை(த் தேடி எடுத்து) வா! எலும்புகளையோ கெட்டிச் சாணங்களையோ
கொண்டு வந்து விடாதே! என்று சொன்னார்கள். நான் (கற்களைப் பொறுக்கியெடுத்து) எனது ஆடையின்
ஓரத்தில் இட்டுக் கொண்டு வந்து நபி(ஸல்) அவர்கள் பக்கத்தில் வைத்துவிட்டு அங்கிருந்து
திரும்பிவிட்டேன். நபி (ஸல்) அவர்கள் (இயற்கைக் கடனை முடித்து விட்டு) அக்கற்களால்
சுத்தம் செய்துகொண்டார்கள். பிறகு அவர்களைப் பின்தொடர்ந்து நானும் சென்றேன்.
No comments:
Post a Comment