அத்தியாயம் : 5
كتاب الغسل
குளியல்
وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَإِنْ كُنْتُمْ جُنُبًا
فَاطَّهَّرُوا وَإِنْ كُنْتُمْ مَرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ
مِنْكُمْ مِنَ الغَائِطِ أَوْ لاَمَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً
فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ مِنْهُ
مَا يُرِيدُ اللَّهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِنْ حَرَجٍ وَلَكِنْ يُرِيدُ
لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ}
[المائدة: 6] وَقَوْلِهِ جَلَّ ذِكْرُهُ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ
تَقْرَبُوا الصَّلاَةَ وَأَنْتُمْ سُكَارَى حَتَّى تَعْلَمُوا مَا تَقُولُونَ
وَلاَ جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّى تَغْتَسِلُوا وَإِنْ كُنْتُمْ
مَرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الغَائِطِ أَوْ
لاَمَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا
فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ إِنَّ اللَّهَ كَانَ عَفُوًّا غَفُورًا}
[النساء: 43]
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்:
நீங்கள் பெருந்துடக்குடையோராக (குளியல் கடமையானோராக) இருந்தால் குளித்து(த் தேகம்
முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்; தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரேனும் மலஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (தாம்பத்தியஉறவு கொண்டிருந்தாலும்
(உங்கைளச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும்
செய்து கொள்ளுங்கள். (அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால்
உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள் ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை.
ஆனால் அவன் உங்களைத் தூய்மைப்படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தனது அருட்கொடையை உங்கள் மீது
முழுமையாக்கவும் விரும்புகிறான். (5:6)
புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்:
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு
நீங்கள் போதையில் இருக்கும் போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும் குளியல் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (பள்ளிக்குள்
செல்லாதீர்கள்; பள்ளியை பாதையாக கடந்து சென்றால் தவிர.
நீங்கள் நோயாளியாகவோ, பயணத்திலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்.ணீரைப் பெறாவிடின் சுத்தமான
மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி தயம்மும் செய்து கொள்ளுங்கள்; (இதன் பின் தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான். (4:43)
(1)باب
الْوُضُوءِ قَبْلَ الْغُسْلِ
பாடம் : 1
குளிப்பதற்கு முன் உளூ செய்தல்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ:
أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ،
زَوْجِ النَّبِيِّ صلّى الله عليه وسلم " أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ
عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الجَنَابَةِ، بَدَأَ فَغَسَلَ
يَدَيْهِ، ثُمَّ يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاَةِ، ثُمَّ يُدْخِلُ
أَصَابِعَهُ فِي المَاءِ، فَيُخَلِّلُ بِهَا أُصُولَ شَعَرِهِ، ثُمَّ يَصُبُّ
عَلَى رَأْسِهِ ثَلاَثَ غُرَفٍ بِيَدَيْهِ، ثُمَّ يُفِيضُ المَاءَ عَلَى جِلْدِهِ
كُلِّهِ "
248 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா
(ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக குளிக்க முற்பட்டால் முதலில் தம் (முன்) கைகள் இரண்டையும் கழுவுவார்கள்.
பிறகு தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்வார்கள். பிறகு தம் விரல்களைத் தண்ணீருக்குள்
நுழைத்து அதைக் கொண்டு தமது (தலையின்) ரோமக்கால் (பகுதி)களைக் கோதிவிடுவார்கள். பிறகு
தம் தலையின் மீது மூன்று முறை தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பிறகு தம்மேனி முழுவதும்
தண்ணீரை ஊற்றுவார்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا
سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ،
عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم
قَالَتْ تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وُضُوءَهُ لِلصَّلاَةِ
غَيْرَ رِجْلَيْهِ، وَغَسَلَ فَرْجَهُ، وَمَا أَصَابَهُ مِنَ الأَذَى، ثُمَّ
أَفَاضَ عَلَيْهِ الْمَاءَ، ثُمَّ نَحَّى رِجْلَيْهِ فَغَسَلَهُمَا، هَذِهِ
غُسْلُهُ مِنَ الْجَنَابَةِ.
249 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா
(ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (பெருந்துடக்கிற்காக குளிக்கும் போது) தம்மிரு கால்களை விட்டு
விட்டு (ஏனைய உறுப்புகளுக்கு) தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய் வார்கள். மேலும்
தம் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசிங்கத்தையும் கழுவுவார்கள். பிறகு தம்(முடல்)மீது
தண்ணீர் ஊற்று வார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று தமது கால்களைக் கழுவுவார்கள்.
இதுவே பெருந் துடக்கிற்காக நபி (ஸல்) அவர்களின் குளியல் (முறை) ஆகும்.
(2)باب
غُسْلِ الرَّجُلِ مَعَ امْرَأَتِهِ
பாடம் : 2
ஒருவர் தம் மனைவியுடன் குளிப்பது.
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا
ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ
كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ، صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ
مِنْ قَدَحٍ يُقَالُ لَهُ الْفَرَقُ.
250 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து குளித்தோம். அந்தப்பாத்திரத்திற்கு
ஃபரக் எனப்படுகிறது.
(குறிப்பு: ஃபரக் என்பது இரு கை கொள்ளளவு
தண்ணீரின் பன்னிரண்டு மடங்காகும்)
(3)باب
الْغُسْلِ بِالصَّاعِ وَنَحْوِهِ
பாடம் : 3
ஒரு ஸாஉ அளவுள்ள தண்ணீரில் அல்லது ஏறக்குறைய அந்த அளவுத் தண்ணீரில்
குளிப்பது.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ:
حَدَّثَنِي عَبْدُ الصَّمَدِ، قَالَ: حَدَّثَنِي شُعْبَةُ [ص: 60] ، قَالَ:
حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ حَفْصٍ، قَالَ: سَمِعْتُ أَبَا سَلَمَةَ، يَقُولُ:
دَخَلْتُ أَنَا وَأَخُو عَائِشَةَ عَلَى عَائِشَةَ، فَسَأَلَهَا أَخُوهَا عَنْ
غُسْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَدَعَتْ بِإِنَاءٍ نَحْوًا
مِنْ صَاعٍ، فَاغْتَسَلَتْ، وَأَفَاضَتْ عَلَى رَأْسِهَا، وَبَيْنَنَا وَبَيْنَهَا
حِجَابٌ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: قَالَ يَزِيدُ بْنُ هَارُونَ، وَبَهْزٌ،
وَالجُدِّيُّ، عَنْ شُعْبَةَ، «قَدْرِ صَاعٍ»
251 அபூசலமா (பின் அப்திர் ரஹ்மான் பின்
அவ்ஃப்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் ஆயிஷா (ரலி) அவர்களின் ஒரு சகோதரரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (அவர்களின்
இல்லத்திற்குச்) சென்றோம், அப்போது அவர்களுடைய சகோதரர் நபி (ஸல்)
அவர்களின் குளியல் பற்றி (அவர்கள் எப்படிக்குளிப்பார்கள்? என்று)க் கேட்டார். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் ஸாஉ போன்ற ஒரு
பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்லிக் குளித்துக்காட்டினார்கள். தமது தலை மீது தண்ணீரை
ஊற்றினார்கள். (அது மட்டும் தெரிந்தது) அப்போது அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில்
ஒரு திரை இருந்தது.
அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:
ஷுஅபா (பின் ஹஜ்ஜாஜ்-ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் (ஸாஉ போன்ற என்பதற்கு
பதிலாக) ஸாஉ அளவு என்று இடம் பெற்றுள்ளது
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ
حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ،
قَالَ حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ، أَنَّهُ كَانَ عِنْدَ جَابِرِ بْنِ عَبْدِ
اللَّهِ هُوَ وَأَبُوهُ، وَعِنْدَهُ قَوْمٌ فَسَأَلُوهُ عَنِ الْغُسْلِ،.
فَقَالَ يَكْفِيكَ صَاعٌ. فَقَالَ رَجُلٌ مَا يَكْفِينِي. فَقَالَ جَابِرٌ
كَانَ يَكْفِي مَنْ هُوَ أَوْفَى مِنْكَ شَعَرًا، وَخَيْرٌ مِنْكَ، ثُمَّ أَمَّنَا
فِي ثَوْبٍ.
252 அபூஜஅஃபர் (அல்பாக்கிர் முஹம்மத் பின்
அலீ-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அருகில் நானும் என் தந்தை (அலீ பின் ஹுசைன்)
அவர்களும் வேறு சிலரும் இருந்தோம். அப்போது ஜாபிர் (ரலி) அவர் களிடம் குளியல் பற்றிக்
கேட்டோம். ஒரு ஸாஉத் தண்ணீர் போதும் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது
ஒருவர், அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது என்றார். அதற்கு ஜாபிர் (ரலி)
அவர்கள், உன்னைவிட அதிக முடியுள்ள வரும் உன்னைவிடச் சிறந்தவரு(மான அல்லாஹ்வின்
தூதர் அவர்களு)க்கு அந்த அளவுத் தண்ணீர் போதுமானதாக இருந்தது எனக் கூறினார்கள். பிறகு
ஒரே ஆடை அணிந்தவர்களாக எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள்.
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ
عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ «أَنَّ
النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَيْمُونَةَ كَانَا يَغْتَسِلاَنِ
مِنْ إِنَاءٍ وَاحِدٍ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «كَانَ ابْنُ عُيَيْنَةَ،
يَقُولُ أَخِيرًا عَنْ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، وَالصَّحِيحُ مَا رَوَى
أَبُو نُعَيْمٍ»
253 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் (அவர்களின் துணைவியாரும் என் சிறிய தாயாருமான) மைமூனா (ரலி)
அவர்களும் சேர்ந்து ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்பது வழக்கம்.
ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ஸாஉ அளவு(ள்ள பாத்திரத்திலிருந்து)
என்று இடம் பெற்றுள்ளது.
அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் தமது அந்திமக் காலத்தில் மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்டு அறிவித்ததாகக் கூறுவது வழக்கம். (அவர்களை குளிக்கும்
போது பார்த்ததாக அறிவிக்கவில்லை.) ஆயினும்,
(என் ஆசிரியர்)
அபூநுஐம் (ரஹ்) அவர்களின் (மேற்கண்ட) அறிவிப்பே சரியானதாகும்.
4)باب مَنْ أَفَاضَ
عَلَى رَأْسِهِ ثَلاَثًا
பாடம் : 4
தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றுதல்.
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ،
عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ صُرَدٍ، قَالَ
حَدَّثَنِي جُبَيْرُ بْنُ مُطْعِمٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم " أَمَّا أَنَا فَأُفِيضُ عَلَى رَأْسِي ثَلاَثًا ".
وَأَشَارَ بِيَدَيْهِ كِلْتَيْهِمَا.
254 ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
நானோ (குளிக்கும் போது) மூன்று முறை
எனது தலையில் தண்ணீரை ஊற்றுவேன் என்று கூறியபடி தம்மிரு கைகளாலும் சைகை செய்து காட்டினார்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا
غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مِخْوَلِ بْنِ رَاشِدٍ، عَنْ مُحَمَّدِ
بْنِ عَلِيٍّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله
عليه وسلم يُفْرِغُ عَلَى رَأْسِهِ ثَلاَثًا.
255 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (குளிக்கும் போது தம்மிரு கைகளால்) மூன்று முறை தமது தலையில்
தண்ணீர் ஊற்றக்கூடியவர்களாக இருந்தார்கள்.
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا مَعْمَرُ
بْنُ يَحْيَى بْنِ سَامٍ، حَدَّثَنِي أَبُو جَعْفَرٍ، قَالَ قَالَ لِي جَابِرٌ
أَتَانِي ابْنُ عَمِّكَ يُعَرِّضُ بِالْحَسَنِ بْنِ مُحَمَّدٍ ابْنِ
الْحَنَفِيَّةِ قَالَ كَيْفَ الْغُسْلُ مِنَ الْجَنَابَةِ فَقُلْتُ كَانَ
النَّبِيُّ صلى الله عليه وسلم يَأْخُذُ ثَلاَثَةَ أَكُفٍّ وَيُفِيضُهَا عَلَى
رَأْسِهِ، ثُمَّ يُفِيضُ عَلَى سَائِرِ جَسَدِهِ. فَقَالَ لِي الْحَسَنُ إِنِّي
رَجُلٌ كَثِيرُ الشَّعَرِ. فَقُلْتُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَكْثَرَ
مِنْكَ شَعَرًا.
256 அபூஜஅஃபர் (அல்பாக்கிர் முஹம்மத் பின்
அலீ-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் ஜாபிர் (ரலி) கூறினார்கள்: உன் தந்தையின் சகோதரரின் புதல்வர் -ஹசன் பின்
முஹம்மத் பின் அல்ஹனஃபிய்யா (ரஹ்) அவர்களையே குறிப்பிடுகிறார்கள்- வந்து, பெருந்துடக்கிற்காக குளிப்பது எப்படி? என்று கேட்டார். அதற்கு நான், நபி (ஸல்) அவர்கள் மூன்று கை நிறையத் தண்ணீர் எடுத்து அதைத்
தமது தலையில் ஊற்று வார்கள்;
பின்னர் உடல் முழுவதும் ஊற்று வார்கள்
என்று சொன்னேன். அதற்கு ஹசன் அவர்கள் நான் அதிகமான முடியுடைய வனாக இருக்கின்றேனே (மூன்று
கைத் தண்ணீர் போதாதே)? என்று கேட்டார். அதற்கு நான், நபி (ஸல்) அவர்கள் உம்மை விட அதிக முடியுடையவர்களாக இருந்தார்கள்!
(அவர்களுக்கே அது போதுமான தாயிருந்ததே?) என்று கூறினேன்.
(5)باب
الْغُسْلِ مَرَّةً وَاحِدَةً
பாடம் : 5
குளிக்கும் போது ஒரு தடவை தண்ணீர் ஊற்றுதல்.
حَدَّثَنَا مُوسَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ،
عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ
عَبَّاسٍ، قَالَ قَالَتْ مَيْمُونَةُ وَضَعْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم
مَاءً لِلْغُسْلِ، فَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، ثُمَّ أَفْرَغَ
عَلَى شِمَالِهِ فَغَسَلَ مَذَاكِيرَهُ، ثُمَّ مَسَحَ يَدَهُ بِالأَرْضِ، ثُمَّ
مَضْمَضَ وَاسْتَنْشَقَ وَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، ثُمَّ أَفَاضَ عَلَى
جَسَدِهِ، ثُمَّ تَحَوَّلَ مِنْ مَكَانِهِ فَغَسَلَ قَدَمَيْهِ.
257 (நபி ஸல் அவர்களின் துணைவியார்) மைமூனா
(ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்தேன். அப்போது அவர்கள் இரண்டு
முறை அல்லது மூன்று முறை தமது (முன்)கைகளைக் கழுவினார்கள். பிறகு தமது இடக் கையில்
தண்ணீரை ஊற்றித் தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். பிறகு தமது (இடக்)கையை பூமியில்
தேய்த்(து சுத்தம் செய்)தார்கள். பிறகு வாய் கொப்பளித்து மூக்கிற்கு நீர் செலுத்தி
(ச் சிந்தி)னார்கள். தமது முகத்தையும் இரு கைகளையும் (மூட்டு வரை) கழுவினார்கள். பிறகு
அந்த இடத்திலிருந்து சிறிது நகர்ந்து நின்று இரு பாதங்களையும் கழுவினார்கள்.
(6)باب مَنْ بَدَأَ
بِالْحِلاَبِ أَوِ الطِّيبِ عِنْدَ الْغُسْلِ
பாடம் : 6
குளிக்கச் செல்லும் போது குவளை (ஹிலாப்) கேட்பதும் குளிப்பதற்கு
முன் நறுமணம் தேய்ப்பதும்.
(الحلاب) وعاء يلمؤه قدر حلب الناقة
(குறிப்பு: ஒட்டகத்தில் ஒருமுறை கறக்கப்படும்
பால் கொள்ளளவுள்ள குவளைக்கு ஹிலாப் என்பர்.)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ حَنْظَلَةَ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ،
قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ
دَعَا بِشَىْءٍ نَحْوَ الْحِلاَبِ، فَأَخَذَ بِكَفِّهِ، فَبَدَأَ بِشِقِّ رَأْسِهِ
الأَيْمَنِ ثُمَّ الأَيْسَرِ، فَقَالَ بِهِمَا عَلَى رَأْسِهِ.
258 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக (கடமையான குளியல்) குளிக்கும் போது ஹிலாப்
குவளை போன்ற ஒன்றை கொண்டு வரச்சொல்லி அதிலிருந்து (தமது கையில் அள்ளித்) தமது தலையின்
வலப் புறம் ஊற்றுவார்கள். பிறகு இடப் புறம் ஊற்றுவார்கள். பிறகு தமது இரு கைகளால் தலையைத்
தேய்ப்பார்கள்.
(7)باب
الْمَضْمَضَةِ وَالاِسْتِنْشَاقِ فِي الْجَنَابَةِ
பாடம் : 7
பெருந்துடக்கிற்கான குளியலின் போது வாய்கொப்பளித்து மூக்கில்
தண்ணீர் செலுத்(திச் சிந்)துதல்.
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، قَالَ
حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ، عَنْ
كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ حَدَّثَتْنَا مَيْمُونَةُ، قَالَتْ صَبَبْتُ
لِلنَّبِيِّ صلى الله عليه وسلم غُسْلاً، فَأَفْرَغَ بِيَمِينِهِ عَلَى يَسَارِهِ
فَغَسَلَهُمَا، ثُمَّ غَسَلَ فَرْجَهُ، ثُمَّ قَالَ بِيَدِهِ الأَرْضَ فَمَسَحَهَا
بِالتُّرَابِ، ثُمَّ غَسَلَهَا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، ثُمَّ غَسَلَ
وَجْهَهُ، وَأَفَاضَ عَلَى رَأْسِهِ، ثُمَّ تَنَحَّى فَغَسَلَ قَدَمَيْهِ، ثُمَّ
أُتِيَ بِمِنْدِيلٍ، فَلَمْ يَنْفُضْ بِهَا.
259 மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தமது வலக் கரத்தால்
நீர் அள்ளி இடக்கையின் மீது ஊற்றி இருகைகளையும் கழுவினார்கள்; பிறகு தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். பிறகு தமது கையைப்
பூமியில் மண் கொண்டு தேய்த்து பிறகு அதை (நீரால்) கழுவினார்கள். பிறகு வாய் கொப்பளித்து
மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி (ச் சிந்தி)னார்கள். பிறகு தம் முகத்தைக் கழுவி, தலையில் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து தம்மிரு
பாதங்களையும் கழுவினார்கள். பிறகு (துடைத்துக் கொள்ள) துண்டு கொடுக்கப்பட்டது. ஆனால்
அதன் மூலம் அவர்கள் துடைத்துக் கொள்ளவில்லை.
(8)باب مَسْحِ الْيَدِ
بِالتُّرَابِ لِيَكُونَ أَنْقَى
பாடம் : 8
கை நன்றாகச் சுத்தமாவதற்காகக் கையை மண்ணில் தேய்த்துக் கழுவுதல்.
حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ،
قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ،
عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم
اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ، فَغَسَلَ فَرْجَهُ بِيَدِهِ، ثُمَّ دَلَكَ بِهَا
الْحَائِطَ ثُمَّ غَسَلَهَا، ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ، فَلَمَّا فَرَغَ
مِنْ غُسْلِهِ غَسَلَ رِجْلَيْهِ.
260 மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக (கடமையானக் குளியலைக்) குளிக்கும் போது
(முதலில்) தமது மர்மஸ்தலத்தை கையினால் கழுவினார்கள். பிறகு கையைத் தேய்த்து கழுவினார்கள்.
பிறகு தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்தார்கள். குளித்து முடித்து (இறுதியில்)
தம்மிரு கால்களையும் கழுவினார்கள்.
(9)باب هَلْ يُدْخِلُ
الْجُنُبُ يَدَهُ فِي الإِنَاءِ قَبْلَ أَنْ يَغْسِلَهَا إِذَا لَمْ يَكُنْ عَلَى
يَدِهِ قَذَرٌ غَيْرُ الْجَنَابَةِ
பாடம் : 9
பெருந்துடக்குடையவர் கையில் எவ்வித அசிங்கமும் இல்லாத போது கையைக்
கழுவுவதற்கு முன்னர் கையைத் தண்ணீர் பாத்திரத்தில் நுழைக்கலாமா?
وَأَدْخَلَ ابْنُ عُمَرَ، وَالبَرَاءُ بْنُ عَازِبٍ
يَدَهُ فِي الطَّهُورِ وَلَمْ يَغْسِلْهَا، ثُمَّ تَوَضَّأَ وَلَمْ يَرَ ابْنُ
عُمَرَ، وَابْنُ عَبَّاسٍ بَأْسًا بِمَا يَنْتَضِحُ مِنْ غُسْلِ الجَنَابَةِ
இப்னு உமர் (ரலி), பராஉ பின் ஆஸிப் (ரலி) ஆகியோர் தங்கள்
கையைக் கழுவுவதற்கு முன்னர் தண்ணீர் பாத்திரத்தில் கையை நுழைத்துள்ளனர். பின்னர் உளூ
செய்தனர். கடமையான குளியலை நிறைவேற்றும் போது அதிலிருந்து தெறிக்கும் தண்ணீரால் எவ்விதப்
பாதிப்புமில்லை என இப்னு உமர் (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கருதுகிறார்கள்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، أَخْبَرَنَا
أَفْلَحُ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا
وَالنَّبِيُّ، صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ تَخْتَلِفُ أَيْدِينَا
فِيهِ.
261 (நபி ஸல் அவர்களின் துணைவியார்) ஆயிஷா
(ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் நபி (ஸல்) அவர்களும் (சேர்ந்து) ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். அப்போது
எங்கள் இருவரின் கைகளும் அந்தப் பாத்திரத்தினுள் போட்டியிட்டுச் செல்லும்.
حَدَّثَنَا
مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ
عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اغْتَسَلَ
مِنَ الْجَنَابَةِ غَسَلَ يَدَهُ.
262 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக (கடமையான குளியல்) குளிக்கும்
போது (முதலில்) கைகளைக் கழுவிக் கொள்வார்கள்.
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا
شُعْبَةُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ
كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ، صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ
مِنْ جَنَابَةٍ. وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ
عَائِشَةَ مِثْلَهُ.
263 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது :
நானும் நபி (ஸல்) அவர்களும் பெருந் துடக்கிற்கான (கடமையான) குளியலை ஒரே பாத்திரத்திலிருந்து
(ஒன்றாக நீரள்ளி) நிறைவேற்றினோம்..
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا
شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، قَالَ سَمِعْتُ
أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَالْمَرْأَةُ
مِنْ نِسَائِهِ يَغْتَسِلاَنِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ. زَادَ مُسْلِمٌ وَوَهْبٌ
عَنْ شُعْبَةَ مِنَ الْجَنَابَةِ.
264 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் அவர்களின் துணைவியரில் ஒருவரும் (சேர்ந்து) ஒரே பாத்திரத்திலிருந்து
(நீரள்ளிக்) குளிப்பார்கள்.
[ ش
(مسلم) هو ابن إبراهيم الأزدي الحافظ الثقة المأمون أحد شيوخ البخاري رحمه الله
تعالى]
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா
(ரஹ்) அவர்களிடமிருந்து முஸ்லிம் (பின் இப்றாஹீம் - ரஹ்), வஹ்ப் (பின் ஜரீர் - ரஹ்) ஆகியோர் அறிவிக்கும் அறிவிப்பில் பெருந்துடக்கிற்காக
(குளிப்பார்கள்) என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
(10)باب
تَفْرِيقِ الْغُسْلِ وَالْوُضُوءِ
பாடம் : 10
உளூவிலும் குளியலிலும் சிறிது நேரம் இடைவெளி விடுதல்.
وَيُذْكَرُ عَنْ ابْنِ عُمَرَ: «أَنَّهُ غَسَلَ
قَدَمَيْهِ بَعْدَ مَا جَفَّ وَضُوءُهُ»
உளூ செய்த தண்ணீர் (உறுப்புகளில்) காய்ந்த பின்னர் தம்மிரு கால்களையும் இப்னு உமர்
(ரலி) அவர்கள் கழுவியதாக அறிவிக்கப்படுகிறது.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ، قَالَ حَدَّثَنَا
عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي
الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ
قَالَتْ مَيْمُونَةُ وَضَعْتُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَاءً
يَغْتَسِلُ بِهِ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ، فَغَسَلَهُمَا مَرَّتَيْنِ
مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، ثُمَّ أَفْرَغَ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ، فَغَسَلَ
مَذَاكِيرَهُ، ثُمَّ دَلَكَ يَدَهُ بِالأَرْضِ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ،
ثُمَّ غَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ ثُمَّ غَسَلَ رَأْسَهُ ثَلاَثًا، ثُمَّ أَفْرَغَ
عَلَى جَسَدِهِ، ثُمَّ تَنَحَّى مِنْ مَقَامِهِ فَغَسَلَ قَدَمَيْهِ.
265 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா
பின்த் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்தேன். அவர்கள்
(முதலில்) தம்மிரு முன் கைகள் மீது தண்ணீர் ஊற்றி அவ்விரண்டையும் இரண்டு முறை அல்லது
மூன்று முறை கழுவினார்கள். பிறகு தம் வலக்கையால் (நீரள்ளி) இடக்கையின் மீது தண்ணீர்
ஊற்றி தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். பிறகு தமது கையை தரையில் தேய்த் (துச் சுத்தம்
செய்)தார்கள். பிறகு வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி (சிந்தி)னார்கள்.
பிறகு தம் முகத்தையும் இரண்டு கைகளையும் (முழங்கை வரைக்) கழுவினார்கள்; தலையை மூன்று முறை (தண்ணீர் ஊற்றிக்) கழுவினார்கள். பிறகு உடம்பிற்கு
தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு அந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளி நின்று தமது பாதங்கள்
இரண்டையும் கழுவினார்கள்.
No comments:
Post a Comment