அத்தியாயம் : 8
كتاب الصلاة
தொழுகை
(1)باب كَيْفَ فُرِضَتِ الصَّلاَةُ فِي الإِسْرَاءِ
பாடம்
: 1
விண்ணுலகப்பயணம் மிஅராஜ் நடந்தன இஸ்ரா இரவில் தொழுகை எவ்வாறு
கடமையாக்கப்பட்டது?
وَقَالَ ابْنُ عَبَّاسٍ حَدَّثَنِي أَبُو سُفْيَانَ فِي
حَدِيثِ هِرَقْلَ فَقَالَ يَأْمُرُنَا- يَعْنِي النَّبِيَّ- صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ بِالصَّلاَةِ وَالصِّدْقِ وَالْعَفَافِ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
(ரோம பைஸாந்தியப் பேரரசர்) ஹெராக்ளியஸ்
தொடர்பான ஹதீஸில் அபூசுஃப்யான் (ரலி) அவர்கள்,
தொழுகையை நிறைவேற்றும்படியும் தானதர்மம்
செய்யும் படியும் சுயக் கட்டுப்பாட்டுடன் வாழும் படியும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு
கட்டளையிடுகின்றார்கள் என்று தாம் (ஹெராக்ளியஸிடம்) கூறியதாக என்னிடம் கூறினார்கள்.
٣٤٩حَدَّثَنَا
يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ
شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ أَبُو ذَرٍّ يُحَدِّثُ أَنَّ
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " فُرِجَ عَنْ سَقْفِ بَيْتِي
وَأَنَا بِمَكَّةَ، فَنَزَلَ جِبْرِيلُ فَفَرَجَ صَدْرِي، ثُمَّ غَسَلَهُ بِمَاءِ
زَمْزَمَ، ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا،
فَأَفْرَغَهُ فِي صَدْرِي ثُمَّ أَطْبَقَهُ، ثُمَّ أَخَذَ بِيَدِي فَعَرَجَ بِي
إِلَى السَّمَاءِ الدُّنْيَا، فَلَمَّا جِئْتُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا قَالَ
جِبْرِيلُ لِخَازِنِ السَّمَاءِ افْتَحْ. قَالَ مَنْ هَذَا قَالَ هَذَا
جِبْرِيلُ. قَالَ هَلْ مَعَكَ أَحَدٌ قَالَ نَعَمْ مَعِي مُحَمَّدٌ صلى الله
عليه وسلم. فَقَالَ أُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ. فَلَمَّا فَتَحَ
عَلَوْنَا السَّمَاءَ الدُّنْيَا، فَإِذَا رَجُلٌ قَاعِدٌ عَلَى يَمِينِهِ
أَسْوِدَةٌ وَعَلَى يَسَارِهِ أَسْوِدَةٌ، إِذَا نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ،
وَإِذَا نَظَرَ قِبَلَ يَسَارِهِ بَكَى، فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ
الصَّالِحِ وَالاِبْنِ الصَّالِحِ. قُلْتُ لِجِبْرِيلَ مَنْ هَذَا قَالَ هَذَا
آدَمُ. وَهَذِهِ الأَسْوِدَةُ عَنْ يَمِينِهِ وَشِمَالِهِ نَسَمُ بَنِيهِ،
فَأَهْلُ الْيَمِينِ مِنْهُمْ أَهْلُ الْجَنَّةِ، وَالأَسْوِدَةُ الَّتِي عَنْ
شِمَالِهِ أَهْلُ النَّارِ، فَإِذَا نَظَرَ عَنْ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ
قِبَلَ شِمَالِهِ بَكَى، حَتَّى عَرَجَ بِي إِلَى السَّمَاءِ الثَّانِيَةِ فَقَالَ
لِخَازِنِهَا افْتَحْ. فَقَالَ لَهُ خَازِنُهَا مِثْلَ مَا قَالَ الأَوَّلُ
فَفَتَحَ ". قَالَ أَنَسٌ فَذَكَرَ أَنَّهُ وَجَدَ فِي السَّمَوَاتِ آدَمَ
وَإِدْرِيسَ وَمُوسَى وَعِيسَى وَإِبْرَاهِيمَ ـ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِمْ ـ
وَلَمْ يُثْبِتْ كَيْفَ مَنَازِلُهُمْ، غَيْرَ أَنَّهُ ذَكَرَ أَنَّهُ وَجَدَ
آدَمَ فِي السَّمَاءِ الدُّنْيَا، وَإِبْرَاهِيمَ فِي السَّمَاءِ السَّادِسَةِ.
قَالَ أَنَسٌ فَلَمَّا مَرَّ جِبْرِيلُ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم
بِإِدْرِيسَ قَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ.
فَقُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا إِدْرِيسُ. ثُمَّ مَرَرْتُ بِمُوسَى فَقَالَ
مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ. قُلْتُ مَنْ هَذَا
قَالَ هَذَا مُوسَى. ثُمَّ مَرَرْتُ بِعِيسَى فَقَالَ مَرْحَبًا بِالأَخِ
الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ. قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا عِيسَى.
ثُمَّ مَرَرْتُ بِإِبْرَاهِيمَ فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ
وَالاِبْنِ الصَّالِحِ. قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا إِبْرَاهِيمُ صلى الله
عليه وسلم ". قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي ابْنُ حَزْمٍ أَنَّ
ابْنَ عَبَّاسٍ وَأَبَا حَبَّةَ الأَنْصَارِيَّ كَانَا يَقُولاَنِ قَالَ
النَّبِيُّ صلى الله عليه وسلم " ثُمَّ عُرِجَ بِي حَتَّى ظَهَرْتُ
لِمُسْتَوًى أَسْمَعُ فِيهِ صَرِيفَ الأَقْلاَمِ ". قَالَ ابْنُ حَزْمٍ
وَأَنَسُ بْنُ مَالِكٍ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " فَفَرَضَ
اللَّهُ عَلَى أُمَّتِي خَمْسِينَ صَلاَةً، فَرَجَعْتُ بِذَلِكَ حَتَّى مَرَرْتُ
عَلَى مُوسَى فَقَالَ مَا فَرَضَ اللَّهُ لَكَ عَلَى أُمَّتِكَ قُلْتُ فَرَضَ
خَمْسِينَ صَلاَةً. قَالَ فَارْجِعْ إِلَى رَبِّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ
تُطِيقُ ذَلِكَ. فَرَاجَعْتُ فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَى مُوسَى
قُلْتُ وَضَعَ شَطْرَهَا. فَقَالَ رَاجِعْ رَبَّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ
تُطِيقُ، فَرَاجَعْتُ فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَيْهِ فَقَالَ ارْجِعْ
إِلَى رَبِّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ، فَرَاجَعْتُهُ. فَقَالَ
هِيَ خَمْسٌ وَهْىَ خَمْسُونَ، لاَ يُبَدَّلُ الْقَوْلُ لَدَىَّ. فَرَجَعْتُ
إِلَى مُوسَى فَقَالَ رَاجِعْ رَبَّكَ. فَقُلْتُ اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي.
ثُمَّ انْطَلَقَ بِي حَتَّى انْتَهَى بِي إِلَى سِدْرَةِ الْمُنْتَهَى،
وَغَشِيَهَا أَلْوَانٌ لاَ أَدْرِي مَا هِيَ، ثُمَّ أُدْخِلْتُ الْجَنَّةَ،
فَإِذَا فِيهَا حَبَايِلُ اللُّؤْلُؤِ، وَإِذَا تُرَابُهَا الْمِسْكُ ".
349 அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்து வந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மக்காவில் இருந்த போது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (அதன் வழியாக வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி(வந்து), என்னுடைய நெஞ்சைப்
பிளந்தார்கள். பிறகு அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பிறகு நுண்ணறிவாலும் ஈமான்
எனும் இறை நம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத்தாலான கையலம்பும் பாத்திரம் ஒன்றைக் கொண்டுவந்து
என் நெஞ்சத்தினுள் அதை ஊற்றி (நிரப்பி)னார்கள். பிறகு (பழைய படியே நெஞ்சை) மூடிவிட்டார்கள்.
பிறகு என் கையைப் பிடித்து என்னை அழைத்துக் கொண்டு வானத்திற்கு ஏறிச் சென்றார்கள்.
(பூமிக்கு) அண்மையிலுள்ள வானத்திற்குச் சென்றபோது அந்த வானத்தின் காவலரிடம், திறங்கள் என்று ஜிப்ரீல்
(அலை) அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர், யார் இவர்? எனக் கேட்டார் ஜிப்ரீல் (அலை) அவர்கள், ஜிப்ரீல் என்று
பதிலளித்தார்கள். அதற்கு அவர், உங்களுடன் வேறெவரேனும் இருக்கின்றனரா?
எனக் கேட்டார். அவர்கள், ஆம்; என்னுடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் இருக்கிறார்கள் என்று பதிலளித்தார்கள். அதற்கு
அவர், (அவரை அழைத்துவரச் சொல்லி) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டதா?
என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஆம் என்று
கூறினார்கள்.
(முதல் வானத்தின் கதவை) அவர் திறந்து நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது
அங்கே ஒரு மனிதர் அமர்ந்து கொண்டிருந்தார். அவரது வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும்
மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும் போது சிரித்தார்; தமது இடப்பக்கம் பார்க்கும் போது அழுதார். (பிறகு, என்னைப்
பார்த்து,) நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக! என்று கூறினார்.
நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், இவர் யார்? எனக் கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவர் தாம் ஆதம்
(அலை) அவர்கள்; இவருடைய வலப் பக்கமும் இடப் பக்கமும் இருக்கும்
மக்கள் அன்னாரின் சந்ததிகள். அவர்களில் வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப்
பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான் இவர்கள் வலப் பக்கம் (சொர்க்க வாசிகளான
தம்மக்களைப்) பார்க்கும் போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்கள்; இடப் பக்கம் (நரகவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும் போது வேதனைப்பட்டு அழுகிறார்கள்
என்று பதிலளித்தார்கள்.
பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் (அலை) அவர்கள் (இன்னும் உயரத்திற்கு) ஏறிச்
சென்றார்கள். இரண்டாம் வானத்தை அடைந்ததும் அதன் காவலரிடம் திறங்கள் என்று கூறினார்கள்.
அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போன்றே ஜிப்ரீல்
அவர்கள் பதிலளித்தபின்) அவர் கதவைத் திறந்தார்.
அனஸ் (ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள், வானங்களில் ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை),
மூசா (அலை), ஈசா (அலை), இப்ராஹீம்
(அலை) ஆகியோரைக் கண்டதாக அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்களே தவிர அவர்கள் தங்கியிருந்த
இடங்கள் எங்கெங்கே அமைந்திருந்தன? என்பதுபற்றி அவர்கள் (என்னிடம்)
குறிப்பிட்டுக் கூறவில்லை. நபி (ஸல்) அவர்கள் ஆதம் (அலை) அவர்களை அண்மையிலுள்ள (முதல்)
வானத்தில் கண்டதாகவும் இப்ராஹீம் (அலை) அவர்களை ஆறாவது* வானத்தில் கண்டதாகவும் மட்டுமே
சொன்னார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
என்னுடன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கடந்து சென்றபோது நல்ல
இறைத்தூதரே வருக! நல்ல சகோதரரே வருக! என்று இத்ரீஸ் (அலை) அவர்கள் கூறினார்கள். நான், இவர் யார்?
என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவர் தாம் இத்ரீஸ் என்று பதிலளித்தார்கள்.
பிறகு மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்களும், நல்ல நபியே வருக! நல்ல
சகோதரரே வருக! என்று கூறினார்கள். நான், இவர்யார்? என்று (ஜீப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவர்கள்தாம் மூசா என்று பதிலளித்தார்கள்.
நான் (அந்தப் பயணத்தில்) ஈசா (அலை) அவர்களையும் கடந்து சென்றேன். அவர்களும் நல்ல
சகோதரரே வருக! நல்ல இறைத்தூதரே வருக! என்று கூறினார்கள். நான், இவர் யார்?
என்று (ஜீப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள்,
இவர்தாம் ஈசா என்று பதிலளித்தார்கள்.
பிறகு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், நல்ல நபியே வருக! நல்ல
மகனே வருக! என்று கூறினார்கள். நான், இவர் யார்? என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவர் தாம் இப்ராஹீம்
என்று கூறினார்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின்முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹப்பா அல்அன்சாரி (ரலி) ஆகியோர் கூறிவந்ததாக இப்னு ஹஸ்ம் (அபூபக்ர்
பின் முஹம்மத்- ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்ததாவது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்
கொண்டு (இன்னும்) மேலே ஏறிச் சென்றார்கள். நான் ஓர் உயரமான இடத்தில் ஏறிக் கொண்டிருந்த
போது (வானவர்கள் விதிகளை பதிவு செய்து கொண்டிருக்கும்) எழுது கோல்களின் ஓசையைச் செவியுற்றேன்.
இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்களும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களும் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அப்போது (நான் உட்பட) என் சமுதாயத்தார் அனைவர்
மீதும் (நாளொன்றுக்கு) ஐம்பது தொழுகைகளை அல்லாஹ் கடமையாக்கினான். அதைப் பெற்றுக் கொண்டு
நான் திரும்பிய போது மூசா (அலை) அவர்களை கடந்தேன். அப்போது மூசா (அலை) அவர்கள், உங்களிடம் உங்கள் சமுதாயத்தாருக்காக
அல்லாஹ் என்ன கடமையாக்கினான்? என்று கேட்டார்கள். நான்,
(என் சமுதாயத்தார் மீது) ஐம்பது தொழுகைகளை கடமையாக்கியுள்ளான் என்று
பதிலளித்தேன். அவர்கள், அப்படியானால் உங்கள் இறைவனிடம் திரும்பிச்
செ(ன்று சற்று குறைத்துக் கடமையாக்கும் படி சொ)ல்லுங்கள்! ஏனெனில் உங்கள் சமுதாயத்தாரால்
அதைத் தாங்க முடியாது என்று கூறினார்கள். உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்றேன்.
(தொழுகைகளின் எண்ணிக்கையை குறைத்துக் கேட்ட போது) இறைவன் ஐம்பதில் ஒரு பகுதியைக் குறைத்தான்.
மூசா (அலை) அவர்களிடம் நான் திரும்பிச்சென்று அதில் ஒரு பகுதியை இறைவன் குறைத்து விட்டான்
என்று சொன்ன போது மீண்டும் அவர்கள், உங்கள் இறைவனிடம் திரும்பிச்
செல்லுங்கள் (இன்னும் சிறிது குறைத்துத் தரும்படி கேளுங்கள்). ஏனெனில், இதையும் உங்கள் சமூதாயத்தாரால் தாங்க முடியாது என்று சொன்னார்கள். இவ்வாறாக
நான் திரும்பிச் சென்று (இறுதியில்) இவை ஐவேளைத் தொழுகைகள் ஆகும் (நற்பலனில்) ஐம்பது
(வேளைத் தொழுகைக்கு ஈடு) ஆகும். என்னிடம் இந்த சொல் (இனி) மாற்றப் படாது என்று கூறிவிட்டான்.
உடனே நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பிச் சென்றேன். அவர்கள், உங்கள் இறைவனிடம் திரும்பிச்
செல்லுங்கள் என்றார்கள். நான், என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர)
வெட்கப்படுகிறேன் என்று சொன்னேன். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு
(வானுலகின் எல்லையான) சித்ரத்துல் முன்தஹாவுக்குச் சென்றார்கள். இனம் புரியாத பலவண்ணங்கள்
அதைப் போர்த்தியிருந்தன. பிறகு என்னை சொர்க்கத்துக்குள் பிரவேசிக்கச் செய்யப்பட்டது.
அங்கே முத்தாலான கழுத்தணிகளைக் கண்டேன். அதன் மண் (நறுமணம் கமழும்) கஸ்தூரியாக இருந்தது.
٣٥٠حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ صَالِحِ بْنِ
كَيْسَانَ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ،
قَالَتْ " فَرَضَ اللَّهُ الصَّلاَةَ حِينَ فَرَضَهَا رَكْعَتَيْنِ
رَكْعَتَيْنِ فِي الْحَضَرِ وَالسَّفَرِ، فَأُقِرَّتْ صَلاَةُ السَّفَرِ، وَزِيدَ
فِي صَلاَةِ الْحَضَرِ ".
350 இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மிஅராஜ் இரவில்) அல்லாஹ் தொழுகையை கடமையாக்கிய போது சொந்த ஊரிலிருந்தாலும்
பயணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்களாகவே கடமையாக்கினான். பயணத் தொழுகை அவ்வாறே
(இரண்டு இரண்டு ரக்அத் களாகவே) நீடித்தது; சொந்த ஊரில் தொழும்
தொழுகையில் (லுஹ்ர், அஸ்ர், இஷா ஆகியவற்றில்)
தலா இரண்டு ரக்அத்கள் கூடுதலாக்கப்பட்டது.
(2)باب وُجُوبِ الصَّلاَةِ فِي الثِّيَابِ
பாடம் : 2
ஆடை அணிந்து தொழுவதன் அவசியமும்
وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {خُذُوا زِينَتَكُمْ عِنْدَ
كُلِّ مَسْجِدٍ}.
وَمَنْ صَلَّى مُلْتَحِفًا فِي ثَوْبٍ وَاحِدٍ،
وَيُذْكَرُ عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَزُرُّهُ وَلَوْ بِشَوْكَةٍ». فِي إِسْنَادِهِ
نَظَرٌ، وَمَنْ صَلَّى فِي الثَّوْبِ الَّذِي يُجَامِعُ فِيهِ مَا لَمْ يَرَ
أَذًى، وَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ لاَ يَطُوفَ
بِالْبَيْتِ عُرْيَانٌ.
ஆதமுடைய மக்களே! தொழும் இடந் தோறும் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்
எனும் (7:31ஆவது) இறைவசனமும்,
ஒரே ஒரு துணியை அணிந்து தொழுவதும்.
(ஒரே ஒரு துணி மட்டும் அணிந்து தொழும் ஒருவர்) ஒரு முள்ளினாலாவது அதை மூட்டிக்
கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சலமா பின் அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.
ஆனால், இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சர்ச்சைக்குரியதாக உள்ளது.
ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு மேற் கொண்ட ஆடையில் அசிங்கம் எதையும் காணாத
வரை அதை அணிந்து கொண்டு தொழலாம்.
நிர்வாணர்கள் எவரும் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரக் கூடாதென நபி (ஸல்)
அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.
٣٥١حَدَّثَنَا
مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ
مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ أُمِرْنَا أَنْ نُخْرِجَ، الْحُيَّضَ
يَوْمَ الْعِيدَيْنِ وَذَوَاتِ الْخُدُورِ، فَيَشْهَدْنَ جَمَاعَةَ الْمُسْلِمِينَ
وَدَعْوَتَهُمْ، وَيَعْتَزِلُ الْحُيَّضُ عَنْ مُصَلاَّهُنَّ. قَالَتِ امْرَأَةٌ
يَا رَسُولَ اللَّهِ، إِحْدَانَا لَيْسَ لَهَا جِلْبَابٌ. قَالَ "
لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا ". وَقَالَ عَبْدُ اللَّهِ
بْنُ رَجَاءٍ حَدَّثَنَا عِمْرَانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ،
حَدَّثَتْنَا أُمُّ عَطِيَّةَ، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِهَذَا.
351 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரு பெரு நாட்களில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த)
பெண்களையும் (தொழுகைத் திடலுக்கு) அனுப்பிவைக்குமாறு நாங்கள் (இறைத்தூதரால்) பணிக்கப்பட்டோம்.
பெண்கள் அனைவரும் முஸ்லிம்களின் கூட்டுத் தொழுகையில் பங்குகொள்ள வேண்டும்; முஸ்லிம்களின் பிரசாரத்திலும்
கலந்து கொள்ள வேண்டும். மாதவிடாயுள்ள பெண்கள் மற்ற பெண்கள் தொழும் இடத்திலிருந்து விலகியிருக்க
வேண்டும் (என்று நபி (ஸல்) அவர்கள் கூற, இதைக் கேட்டுக் கொண்டிருந்த)
ஒரு பெண், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் சிலரிடம் அணிந்து கொள்ள
மேலங்கி இல்லையே (அவள் என்ன செய்வாள்?)! என்று கேட்டார். அதற்கு
நபி (ஸல்) அவர்கள் (ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகளில்
ஒன்றை அவளுக்கு (இரவலாக) அணியக் கொடுக்கட்டும்! என்றார்கள்.
இதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
(3)باب عَقْدِ الإِزَارِ عَلَى الْقَفَا فِي الصَّلاَةِ
பாடம் : 3
தொழும் போது வேஷ்டி (சிறியதாயிருந்தால் அதன் இரு முனை)யைப் பிடரியில்
முடிச்சிட்டுக் கொள்வது.
وَقَالَ أَبُو حَازِمٍ عَنْ سَهْلٍ صَلَّوْا مَعَ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَاقِدِي أُزْرِهِمْ عَلَى
عَوَاتِقِهِمْ.
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
(நபித்தோழர்கள்) சிலர் தங்களுடைய வேஷ்டிகளை
தமது தோள்களில் முடிச்சுப் போட்டுக் கொண்டவர்களாக நபி (ஸல்) அவர்களுடன் தொழுதனர்.
٣٥٢حَدَّثَنَا
أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، قَالَ
حَدَّثَنِي وَاقِدُ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، قَالَ
صَلَّى جَابِرٌ فِي إِزَارٍ قَدْ عَقَدَهُ مِنْ قِبَلِ قَفَاهُ، وَثِيَابُهُ
مَوْضُوعَةٌ عَلَى الْمِشْجَبِ قَالَ لَهُ قَائِلٌ تُصَلِّي فِي إِزَارٍ وَاحِدٍ
فَقَالَ إِنَّمَا صَنَعْتُ ذَلِكَ لِيَرَانِي أَحْمَقُ مِثْلُكَ، وَأَيُّنَا كَانَ
لَهُ ثَوْبَانِ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم
352 முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் (ரலி) அவர்கள் (ஒரு முறை) ஒரே வேஷ்டியை அணிந்து கொண்டு அதைத் தமது பிடரியின்
பாகத்தில் முடிச்சுப்போட்டுக் கொண்டவர்களாகத் தொழுவார்கள். அவர் களது இதர ஆடைகளோ துணி
மாட்டும் கொளுகியில் தொங்கவிடப்பட்டிருந்தன. அவர்களிடம் ஒருவர், ஒரே வேஷ்டியிலா தொழுகிறீர்கள்?
என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், உம்மைப் போன்ற விவரங்கெட்டவர்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு
நான் செய்தேன் என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்களது காலத்தில்
எங்களில் எவருக்குத் தான் இரு ஆடைகள் இருந்தன? என்று வினவினார்கள்.
٣٥٣حَدَّثَنَا
مُطَرِّفٌ أَبُو مُصْعَبٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي
الْمَوَالِي، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، قَالَ رَأَيْتُ جَابِرَ بْنَ
عَبْدِ اللَّهِ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ وَقَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله
عليه وسلم يُصَلِّي فِي ثَوْبٍ.
353 முஹம்மது பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழுவதை நான்
பார்த்தேன். மேலும் அவர்கள், நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழுவதை நான் கண்டேன்
என்றும் கூறினார்கள்.
(4)باب الصَّلاَةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ مُلْتَحِفًا
بِهِ
பாடம் : 4
(விசாலமான) ஒரே ஆடையில்
அதன் இரு ஓரங்களையும் வல-இடத்தோள்கள் மீது மாற்றிப் போட்டு, (நெஞ்சில் முடிந்து கொண்டு)
தொழுவது.
قَالَ الزُّهْرِيُّ فِي حَدِيثِهِ الْمُلْتَحِفُ
الْمُتَوَشِّحُ، وَهْوَ الْمُخَالِفُ بَيْنَ طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ، وَهْوَ
الاِشْتِمَالُ عَلَى مَنْكِبَيْهِ. قَالَ وَقَالَتْ أُمُّ هَانِئٍ الْتَحَفَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِثَوْبٍ، وَخَالَفَ بَيْنَ
طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ.
இது குறித்த தமது ஹதீஸில் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள்
முல்தஹிஃப் என்பதற்கு முத்தவஷ்ஷிஹ் என்று
பொருள் என்று கூறினார்கள். இதுவே முகாலிஃப் ஆகும்..
(அதாவது,) ஒருவர் தமது வேஷ்டியின் (வலப்பக்க ஓரத்தை இடது தோளின் மீதும்
இடப்பக்க ஓரத்தை வலது தோளின் மீதும் இருக்கும் அமைப்பில்) இரு ஓரங்களையும் தமது தோள்கள்
மீது போட்டுக் கொள்வது(ம், பிறகு வலத் தோள் மீது இட்ட ஓரத்தை இடக்கரத்திற்கு
கீழேயும், இடத் தோள் மீது இட்டட ஓரத்தை வலக்கரத்திற்கு கீழே கொண்டுவந்து
இரண்டையும் நெஞ்சின் மீது முடிந்து கொள்வது) ஆகும்.
இதற்கே அல்இஷ்திமாலு அலல் மன்கிபைனி எனப்படுகிறது.
உம்மு ஹானீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை சுற்றிக் கொண்டு அதன் இரு ஓரங்களையும் தமது (வல-இடத்)
தோள்கள் மீது மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்..
٣٥٤حَدَّثَنَا
عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ
أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم
صَلَّى فِي ثَوْبٍ وَاحِدٍ قَدْ خَالَفَ بَيْنَ طَرَفَيْهِ.
354 உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து கொண்டு, அதன் ஒரு ஓரங்களையும் தமது தோள்கள் மீது
மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுதார்கள்.
٣٥٥حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا هِشَامٌ،
قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، أَنَّهُ رَأَى
النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ فِي بَيْتِ أُمِّ
سَلَمَةَ، قَدْ أَلْقَى طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ.
355 உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உம்மு சலமா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஒரே ஆடையை அணிந்து அதன்
இரு ஓரங்களையும் தமது தோள்கள் மீது மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுததை நான் பார்த்தேன்.
٣٥٦حَدَّثَنَا
عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ،
عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ، أَخْبَرَهُ قَالَ رَأَيْتُ
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ مُشْتَمِلاً بِهِ
فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ، وَاضِعًا طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ.
356 உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு சலமா (ரலி) அவர்களின் இல்லத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை
அணிந்து கொண்டு, அதன் இரு ஓரங்களையும் தமது தோள்கள் மீது மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுவதை
நான் பார்த்தேன்.
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ
حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ
عُبَيْدِ اللَّهِ أَنَّ أَبَا مُرَّةَ، مَوْلَى أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي
طَالِبٍ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ، تَقُولُ
ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ، فَوَجَدْتُهُ
يَغْتَسِلُ، وَفَاطِمَةُ ابْنَتُهُ تَسْتُرُهُ قَالَتْ فَسَلَّمْتُ عَلَيْهِ
فَقَالَ " مَنْ هَذِهِ ". فَقُلْتُ أَنَا أُمُّ هَانِئٍ بِنْتُ
أَبِي طَالِبٍ. فَقَالَ " مَرْحَبًا بِأُمِّ هَانِئٍ ".
فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ، قَامَ فَصَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ، مُلْتَحِفًا
فِي ثَوْبٍ وَاحِدٍ، فَلَمَّا انْصَرَفَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، زَعَمَ ابْنُ
أُمِّي أَنَّهُ قَاتِلٌ رَجُلاً قَدْ أَجَرْتُهُ فُلاَنَ بْنَ هُبَيْرَةَ.
فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قَدْ أَجَرْنَا مَنْ أَجَرْتِ
يَا أُمَّ هَانِئٍ ". قَالَتْ أُمُّ هَانِئٍ وَذَاكَ ضُحًى.
357 உம்மு ஹானீ பின்த் அபீதா-ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் சென்றேன்.
(வெற்றி கிட்டிய அந்த நாளில்) நபி (ஸல்) அவர்களை, அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள்
திரையிட்டு மறைத்துக் கொண்டிருக்க, அவர்கள் குளித்துக் கொண்டி
ருப்பதைக் கண்டேன். அப்போது அவர்களுக்கு நான் சலாம் (முகமன்) சொன்னேன். (அதைக் கேட்ட)
அவர்கள், யாரம்மா இவர்? எனக் கேட்டார்கள்.
அதற்கு நான் உம்மு ஹானீ பின்த் அபீதா-ப் என்றேன்.உம்மு ஹானியே வருக! வருக! என்று சொன்னார்கள்.
அவர்கள் குளித்து முடித்ததும் ஒரே ஆடையை (வல-இடத் தோள்கள் மீது) மாற்றிப் போட்டுக்
கொண்டு எட்டு ரக்அத்கள் தொழுதார்கள், அவர்கள் தொழுது முடித்ததும்,
அல்லாஹ்வின் தூதரே! என் தாயாரின் மகன் (என் சகோதரர் அலீ,) நான் புகலிடம் அளித்திருக்கும்
ஒரு மனிதரை- ஹுபைராவின் மகன் இன்னாரை - தாம் கொல்லப் போவதாக கூறுகிறார் என்று சொன்னேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உம்மு ஹானியே! நீ அபயம் அளித்தவருக்கு நாமும்
அபயம் அளித்து விட்டோம் (ஆகவே கவலை வேண்டாம்) என்று கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம்
சென்றனஅந்த நேரம் முற்பகல் நேரமாக இருந்தது.
٣٥٧حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ،
عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ سَائِلاً، سَأَلَ
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الصَّلاَةِ فِي ثَوْبٍ وَاحِدٍ فَقَالَ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَوَلِكُلِّكُمْ ثَوْبَانِ
".
358 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழுவது
பற்றிக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களில் ஒவ்வொருவருக்கும்
இரண்டு ஆடைகள் உள்ளனவா? என்று கேட்டார்கள்.
(5)باب إِذَا صَلَّى فِي الثَّوْبِ الْوَاحِدِ فَلْيَجْعَلْ
عَلَى عَاتِقَيْهِ
பாடம் : 5
ஒரே ஆடையை அணிந்து தொழும் போது அதன் இரு ஓரங்களையும் தோள்கள்
மீது போட்டுக் கொள்ள வேண்டும்.
٣٥٩حَدَّثَنَا
أَبُو عَاصِمٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ
الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم
" لاَ يُصَلِّي أَحَدُكُمْ فِي الثَّوْبِ الْوَاحِدِ، لَيْسَ عَلَى
عَاتِقَيْهِ شَىْءٌ ".
359 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எவரும் ஒரே ஆடையை அணிந்து கொண்டு தமது தோள்கள் மீது (அதில்) ஒரு பகுதியேனும்
இல்லாதிருக்கத் தொழவேண்டாம்..
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
٣٦٠حَدَّثَنَا
أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ،
عَنْ عِكْرِمَةَ، قَالَ سَمِعْتُهُ ـ أَوْ، كُنْتُ سَأَلْتُهُ ـ قَالَ سَمِعْتُ
أَبَا هُرَيْرَةَ، يَقُولُ أَشْهَدُ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله
عليه وسلم يَقُولُ " مَنْ صَلَّى فِي ثَوْبٍ وَاحِدٍ، فَلْيُخَالِفْ
بَيْنَ طَرَفَيْهِ ".
360 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரே ஆடையை அணிந்து கொண்டு எவரேனும் தொழுதால்
அதன் இரு ஓரங்க ளையும் (வலப்புற ஓரத்தை இடது தோளிலும் இடப்புற ஓரத்தை வலது தோளிலுமாக)
மாற்றிப் போட்டுக் கொள்ளட்டும். என்று கூறியதை நான் கேட்டேன் என உறுதி அளிக்கிறேன்.
(6)باب إِذَا كَانَ الثَّوْبُ ضَيِّقًا
பாடம் : 6
ஆடை சிறியதாக இருந்தால் (என்ன செய்ய வேண்டும்?)
٣٦١حَدَّثَنَا
يَحْيَى بْنُ صَالِحٍ، قَالَ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ سَعِيدِ
بْنِ الْحَارِثِ، قَالَ سَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ عَنِ الصَّلاَةِ،
فِي الثَّوْبِ الْوَاحِدِ فَقَالَ خَرَجْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم
فِي بَعْضِ أَسْفَارِهِ، فَجِئْتُ لَيْلَةً لِبَعْضِ أَمْرِي، فَوَجَدْتُهُ
يُصَلِّي وَعَلَىَّ ثَوْبٌ وَاحِدٌ، فَاشْتَمَلْتُ بِهِ وَصَلَّيْتُ إِلَى
جَانِبِهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ " مَا السُّرَى يَا جَابِرُ
". فَأَخْبَرْتُهُ بِحَاجَتِي، فَلَمَّا فَرَغْتُ قَالَ " مَا
هَذَا الاِشْتِمَالُ الَّذِي رَأَيْتُ ". قُلْتُ كَانَ ثَوْبٌ. يَعْنِي
ضَاقَ. قَالَ " فَإِنْ كَانَ وَاسِعًا فَالْتَحِفْ بِهِ، وَإِنْ كَانَ
ضَيِّقًا فَاتَّزِرْ بِهِ ".
361 சயீத் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம், ஒரே ஆடை அணிந்து கொண்டு
தொழுவது பற்றிக் கேட்டோம். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் செய்த ஒரு பயணத்தில் நான் அவர்களுடன் சென்றேன். ஒரு (நாள்) இரவு
எனது தேவையொன்றிற்காக நான் வந்த போது நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கக் கண்டேன்.
அப்போது என் மீது ஒரே ஆடை மட்டுமே இருந்தது . அதை நான் என் உடல் முழுதும் போர்த்திக்
கொண்டு நபி (ஸல்) அவர்களின் அருகில் நின்று தொழுதேன். அவர்கள் தொழுது முடிந்ததும் என்ன, இரவு நேரத்தில் வந்திருக்கிறீர்,
ஜாபிரே? என்று கேட்டார்கள். அப்போது நான் எனது
நோக்கத்தை அவர்களிடம் தெரிவித்தேன். நான் சொல்லிமுடித்ததும், என்ன இப்படி (கைகள்கூட வெளியில் தெரியாமல்) போர்த்திக் கொண்டிருக்கிறீர்?
என்று கேட்டார்கள். நான் ஆடை சிறியது (அதனால் இப்படிப் போர்த்தியுள்ளேன்)
என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ஆடை விசாலமானதாக
இருந்தால் அதனை (கீழேயும் தோள்மீதும்) சுற்றிக் கொள்ளுங்கள்; ஆடை சிறியதாக இருந்தால் அதை இடுப்பில் (வேட்டியாக) அணிந்து கொள்ளுங்கள் என்று
கூறினார்கள்.
٣٦٢حَدَّثَنَا
مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي أَبُو
حَازِمٍ، عَنْ سَهْلٍ، قَالَ كَانَ رِجَالٌ يُصَلُّونَ مَعَ النَّبِيِّ صلى الله
عليه وسلم عَاقِدِي أُزْرِهِمْ عَلَى أَعْنَاقِهِمْ كَهَيْئَةِ الصِّبْيَانِ،
وَقَالَ لِلنِّسَاءِ لاَ تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَسْتَوِيَ الرِّجَالُ
جُلُوسًا.
362 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சில ஆண்கள் சிறுவர்களைப் போன்று தங்களது சிறிய வேஷ்டியை தங்கள் கழுத்தில் கட்டிக்
கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். (இதைக் கண்ட நபியவர்கள்) பெண்களிடம், ஆண்கள் (சஜ்தாவிலிருந்து
எழுந்து) உட்காரும்வரை நீங்கள் (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தாதீர்கள் என்று சொன்னார்கள்
(7)باب الصَّلاَةِ فِي الْجُبَّةِ الشَّأْمِيَّةِ
பாடம்
: 7
(இறைமறுப்பாளர்களின் நாடாயிருந்த) ஷாம் நாட்டு நீளங்கி
அணிந்து தொழுவது.
وَقَالَ الْحَسَنُ فِي الثِّيَابِ يَنْسُجُهَا
الْمَجُوسِيُّ لَمْ يَرَ بِهَا بَأْسًا.
وَقَالَ مَعْمَرٌ رَأَيْتُ الزُّهْرِيَّ يَلْبَسُ مِنْ
ثِيَابِ الْيَمَنِ مَا صُبِغَ بِالْبَوْلِ.
وَصَلَّى عَلِيٌّ فِي ثَوْبٍ غَيْرِ مَقْصُورٍ.
அக்னி ஆராதகர்கள்(மஜூசிகள்) நெய்யும் ஆடைகளை (கழுவப்படுவதற்கு முன்பே) அணிந்து
தொழுவது தவறன்று என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.
ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (ஆடு, மாடு, ஒட்டக) மூத்திரத்தில் நனைத்துச் சாயமேற் பட்ட யமன் நாட்டு ஆடையை
அணிந்து தொழுவதை நான் பார்த்தேன் என மஅமர் பின் ராஷித் (ரஹ்) கூறுகின்றார்கள்.
அலீ (ரலி) அவர்கள் அடர்த்தி குறைக்கப்படாத (உடலோடு அப்பிக் கொள்ளும்) ஆடையுடன்
தொழுதார்கள்.
٣٦٣حَدَّثَنَا
يَحْيَى، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ،
عَنْ مَسْرُوقٍ، عَنْ مُغِيرَةَ بْنِ شُعْبَةَ، قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى
الله عليه وسلم فِي سَفَرٍ فَقَالَ " يَا مُغِيرَةُ، خُذِ الإِدَاوَةَ
". فَأَخَذْتُهَا فَانْطَلَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى
تَوَارَى عَنِّي فَقَضَى حَاجَتَهُ، وَعَلَيْهِ جُبَّةٌ شَأْمِيَّةٌ، فَذَهَبَ
لِيُخْرِجَ يَدَهُ مِنْ كُمِّهَا فَضَاقَتْ، فَأَخْرَجَ يَدَهُ مِنْ أَسْفَلِهَا،
فَصَبَبْتُ عَلَيْهِ فَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ، وَمَسَحَ عَلَى
خُفَّيْهِ، ثُمَّ صَلَّى.
363 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் (தபூக் போர்) பயணத்தில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது
அவர்கள், முஃகீராவே! தண்ணீர்ப்
பாத்திரத்தை எடுங்கள்! என்றார்கள். நான் அதை எடுத்துக் கெண்டேன். நபி (ஸல்) அவர்கள்
நடந்து (கண்ணுக்கெட்டாத தூரத்திற்குச்) சென்று என்னைவிட்டு மறைந்து இயற்கைக் கடனை நிறைவேற்றினார்கள்.
அப்போது அவர்கள் (இறைமறுப்பாளர்கள் நெய்த) ஷாம் நாட்டு நீளங்கி (ஜுப்பா) அணிந்திருந்தார்கள்.
(உளூ செய்வதற்காக) அதன் கை பகுதியிலிருந்து தமது கையை வெளியே எடுக்க முயன்றார்கள்.
அதன் கைப் பகுதி குறுகலாக இருந்ததால் தமது கையை அதன் கீழ்ப்புறமாக வெளியே எடுத்தார்கள்.
நான் (அவர்கள் உளூ செய்வதற்காக) அவர்க(ளின் உறுப்புக்)கள் மீது தண்ணீர் ஊற்றினேன்.
அவர்கள் தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்தார்கள். (இறுதியில் கால்களைக் கழுவுவதற்கு
பதிலாக கால்களில் அணிந்திருந்த) தமது காலுறைகள் மீது ஈரக்கையால் தொட்டுத் தடவி (மஸ்ஹுச்
செய்திடலா)னார்கள். பிறகு தொழுதார்கள்.
(8)باب كَرَاهِيَةِ التَّعَرِّي فِي الصَّلاَةِ وَغَيْرِهَا
பாடம் : 8
தொழுகையின் போதும். மற்ற நேரங்களிலும் பிறந்த மேனியுடன் இருக்கலாகாது.
٣٦٤حَدَّثَنَا
مَطَرُ بْنُ الْفَضْلِ، قَالَ حَدَّثَنَا رَوْحٌ، قَالَ حَدَّثَنَا زَكَرِيَّاءُ
بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ
عَبْدِ اللَّهِ، يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ
يَنْقُلُ مَعَهُمُ الْحِجَارَةَ لِلْكَعْبَةِ وَعَلَيْهِ إِزَارُهُ. فَقَالَ
لَهُ الْعَبَّاسُ عَمُّهُ يَا ابْنَ أَخِي، لَوْ حَلَلْتَ إِزَارَكَ فَجَعَلْتَ
عَلَى مَنْكِبَيْكَ دُونَ الْحِجَارَةِ. قَالَ فَحَلَّهُ فَجَعَلَهُ عَلَى
مَنْكِبَيْهِ، فَسَقَطَ مَغْشِيًّا عَلَيْهِ، فَمَا رُئِيَ بَعْدَ ذَلِكَ
عُرْيَانًا صلى الله عليه وسلم.
364 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபியவர்களின் காலத்தில் குறைஷியரால் இறையில்லம் கஅபா புதுப்பித்துக் கட்டப்பட்ட
போது) அவர்களுடன் (சிறுவராயிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் கஅபாவிற்காக
கற்களை(ச் சுமந்து) எடுத்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது நபியவர்கள் மீது வேட்டி
(மட்டுமே) இருந்தது. அவர்களுடைய பெரிய தந்தை அப்பாஸ் அவர்கள் (சிறுவராயிருந்த) நபி
(ஸல்) அவர் களிடம், என் சகோதரரின் மகனே! நீங்கள் உங்கள் வேட்டியை
அவிழ்த்துத் தோள் மீது (வைத்துள்ள) கல்லுக்கு கீழே வைத்து (கற்களைச் சுமந்து) கொண்டு
வரலாமே! என்று கூறினார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் தமது வேட்டியை அவிழ்த்து தமது
தோள்கள் மீது வைத்தார்கள். (வைத்த) உடன் மூர்ச்சையடைந்து கீழே விழுந்து விட்டார்கள்.
அதற்குப் பின் நபி (ஸல்) அவர்கள் (ஒரு போதும்) பிறந்த மேனியுடன் (ஒரு போதும்) காணப்பட்டதில்லை.
(9)باب الصَّلاَةِ فِي الْقَمِيصِ وَالسَّرَاوِيلِ
وَالتُّبَّانِ وَالْقَبَاءِ
பாடம் : 9
(முழுநீளச்) சட்டை, முழுக்கால் சட்டை, அரைக்கால் சட்டை, வெளிப்புற மேலங்கி ஆகியவற்றை அணிந்து
தொழுவது.
٣٦٥حَدَّثَنَا
سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ،
عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَامَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى
الله عليه وسلم فَسَأَلَهُ عَنِ الصَّلاَةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ فَقَالَ
" أَوَكُلُّكُمْ يَجِدُ ثَوْبَيْنِ ". ثُمَّ سَأَلَ رَجُلٌ عُمَرَ
فَقَالَ إِذَا وَسَّعَ اللَّهُ فَأَوْسِعُوا، جَمَعَ رَجُلٌ عَلَيْهِ ثِيَابَهُ،
صَلَّى رَجُلٌ فِي إِزَارٍ وَرِدَاءٍ، فِي إِزَارٍ وَقَمِيصٍ، فِي إِزَارٍ وَقَبَاءٍ،
فِي سَرَاوِيلَ وَرِدَاءٍ، فِي سَرَاوِيلَ وَقَمِيصٍ، فِي سَرَاوِيلَ وَقَبَاءٍ،
فِي تُبَّانٍ وَقَبَاءٍ، فِي تُبَّانٍ وَقَمِيصٍ ـ قَالَ وَأَحْسِبُهُ قَالَ ـ فِي
تُبَّانٍ وَرِدَاءٍ.
365 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களை நோக்கி எழுந்து, ஓரே ஆடையை அணிந்து கொண்டு தொழுவது பற்றிக்
கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், உங்களில் ஒவ்வொருவரும்
இரு ஆடைகள் வைத்துள்ளனரா? என்று கேட்டார்கள்.
பின்னர் ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களது ஆட்சிக் காலத்தில் இது பற்றிக்)
கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ் உங்களுக்கு (ஆடைகளை) தாராளமாகத் தந்திருந்தால்
நீங்களும் தாராளமாக அணிந்து கொள்ளுங்கள். (அதாவது:)
- ஒருவர் தமது ஆடை (வகை)கள் அனைத்தையும் அணிந்து தொழட்டும்..
- மற்றொருவர் கீழங்கியும் மேல்துண்டும் அணிந்து தொழட்டும்..
- மற்றொருவர் கீழங்கியும் (முழுநீளச்) சட்டையும் அணிந்து தொழட்டும்..
- மற்றொருவர் கீழங்கியும் வெளிப்புற மேலங்கியும் அணிந்து தொழட்டும்..
- மற்றொருவர் முழுக்கால் சட்டையும் மேல்துண்டும் அணிந்து தொழட்டும்.
- மற்றொருவர் முழுக்கால் சட்டையும் (முழுநீளச்) சட்டையும் அணிந்து தொழட்டும்..
- மற்றொருவர் முழுக்கால் சட்டையும் வெளிப்புற மேலங்கியும் அணிந்து தொழட்டும்..
- மற்றொருவர் அரைக்கால் சட்டையும் வெளிப்புற மேலங்கியும் அணிந்து தொழட்டும்.
- மற்றொருவர் அரைக்கால் சட்டையும் (முழு நீளச்) சட்டையும் அணிந்து தொழட்டும்..
(இறுதியாகக் குறிப்பிட்ட அரைக்கால் சட்டையும் (முழுநீளச்) சட்டையும் என்பதற்கு
பதிலாக) உமர் (ரலி) அவர்கள் அரைக்கால் சட்டையும் (விசாலமான) மேல்துண்டும் அணிந்து தொழட்டும்
என்று கூறியதாக நான் எண்ணுகிறேன்.
٣٦٦حَدَّثَنَا
عَاصِمُ بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ،
عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صلى الله
عليه وسلم فَقَالَ مَا يَلْبَسُ الْمُحْرِمُ فَقَالَ " لاَ يَلْبَسُ
الْقَمِيصَ وَلاَ السَّرَاوِيلَ وَلاَ الْبُرْنُسَ وَلاَ ثَوْبًا مَسَّهُ
الزَّعْفَرَانُ وَلاَ وَرْسٌ، فَمَنْ لَمْ يَجِدِ النَّعْلَيْنِ فَلْيَلْبَسِ
الْخُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا حَتَّى يَكُونَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ
". وَعَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم
مِثْلَهُ.
366 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், இஹ்ராம் கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?
என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இஹ்ராம்
கட்டியவர் (முழுநீளச்) சட்டை அணிய மாட்டார்; முழுக்கால் சட்டை
அணிய மாட்டார்; முக்காடுள்ள மேலங்கி அணிய மாட்டார்; குங்குமப் பூச் சாயம் மற்றும் வர்ஸ் எனும் வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட
ஆடை களையும் அணிய மாட்டார். (காலுறைகள் அணிய மாட்டார்) காலணிகள் கிடைக்காத வர்,
காலுறைகள் அணியட்டும்.; காலுறை களைக் கணுக்கால்களுக்கு
கீழே இருக்கும் படி கத்தரித்து அணிந்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள்.
இதை சாலிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதே ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து நாஃபிஉ (ரஹ்) அவர்கள் வழியாகவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
(10)باب مَا يَسْتُرُ مِنَ الْعَوْرَةِ
பாடம் : 10
அவசியம் மறைக்க வேண்டிய பகுதிகள்.
٣٦٧حَدَّثَنَا
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ
عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِي سَعِيدٍ
الْخُدْرِيِّ، أَنَّهُ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ
اشْتِمَالِ الصَّمَّاءِ وَأَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ، لَيْسَ
عَلَى فَرْجِهِ مِنْهُ شَىْءٌ.
367 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரே துணியை உடலில் சுற்றிக் கொண்டு அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக் கொண்டு
மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிடுவதற்கும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), மர்ம உறுப்பு வானுக்குத்
தெரியும்படி ஒருவர் ஒரே ஆடையை (முழங்காலில்) சுற்றிக் கொண்டு இரு முழங்கால்களையும்
நட்டுவைத்துக் கொண்டு (அவற்றைக் கைகளால்கட்டியபடி) உட்கார்ந்திருப்பதற்கும் (இஹ்திபா)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
٣٦٨حَدَّثَنَا
قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ،
عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه
وسلم عَنْ بَيْعَتَيْنِ عَنِ اللِّمَاسِ وَالنِّبَاذِ، وَأَنْ يَشْتَمِلَ
الصَّمَّاءَ، وَأَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ.
368 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் லிமாஸ்[ 1 ] (முலாமஸா), நபாத் (முனாபஃதா) எனும்
இரு வியாபார முறைகளுக்குத் தடைவிதித்தார்கள். மேலும் ஒரே துணியை உடலில் சுற்றிக் கொண்டு
அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக் கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிடுவதற்
கும் (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), ஒருவர் ஒரே துணியால் (தம் முதுகையும்
முழங்கால்களையும்) போர்த்திக் கொண்டு அமர்ந்திருப்பதற்கும் (இஹ்திபா) தடை விதித்தார்கள்.
٣٦٩حَدَّثَنَا
إِسْحَاقُ، قَالَ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا ابْنُ
أَخِي ابْنِ شِهَابٍ، عَنْ عَمِّهِ، قَالَ أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ
الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ بَعَثَنِي أَبُو بَكْرٍ
فِي تِلْكَ الْحَجَّةِ فِي مُؤَذِّنِينَ يَوْمَ النَّحْرِ نُؤَذِّنُ بِمِنًى أَنْ
لاَ يَحُجَّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفَ بِالْبَيْتِ عُرْيَانٌ.
قَالَ حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ثُمَّ أَرْدَفَ رَسُولُ اللَّهِ صلى الله
عليه وسلم عَلِيًّا، فَأَمَرَهُ أَنْ يُؤَذِّنَ بِبَرَاءَةَ قَالَ أَبُو
هُرَيْرَةَ فَأَذَّنَ مَعَنَا عَلِيٌّ فِي أَهْلِ مِنًى يَوْمَ النَّحْرِ لاَ
يَحُجُّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفُ بِالْبَيْتِ عُرْيَانٌ.
369 அபூஹுரைரா (ரலி) அவர்கள்
கூறியதாவது:
அபூபக்ர் (ரலி) அவர்கள்
(தலைமையில் ஹஜ்ஜத்துல் வதாவிற்கு முந்தைய ஆண்டு நடந்த) அந்த ஹஜ்ஜின் போது இந்த ஆண்டிற்குப்
பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்ய (வர)க்கூடாது; நிர்வாணமானவர் எவரும் இறையில்லம் கஅபாவைச்
சுற்றி (தவாஃப்) வரக்கூடாது என்று மினாவில் பொது அறிவிப்புச் செய்யும்படி சிலரை அனுப்பிவைத்தார்கள்.
அவர்களுடன் என்னையும் அனுப்பினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில்
ஒருவரான) ஹுமைத் பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப்) பின்னால் அலீ (ரலி) அவர்களை அனுப்பி, (இணைவைப்பாளர்களிடமிருந்து அல்லாஹ்வும்
அவனுடைய தூதரும்) பொறுப்பு விலகிக் கொண்டது குறித்து பிரகடனம் செய்யும்படி(யும்) அலீ
(ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே எங்களுடன் அலீ (ரலி) அவர்களும் நஹ்ருடைய
(துல்ஹஜ் 10ஆம்) நாளில் மினாவாசிகளிடையே
(இணைவைப்போரிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் பொறுப்பு விலகிக் கொண்டது குறித்தும்,) இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர்
எவரும் ஹஜ் செய்ய மாட்டார் என்றும், இறையில்லம் கஅபாபவை நிர்வாணமானவர் எவரும் சுற்றி (தவாஃப்) வரக்கூடாது என்றும் அறிவிப்புச்
செய்தார்கள்.
[1] லிமாஸ் அல்லது முலாமஸா
என்பதற்குத் தொடுதல் என்று பொருள். ஒருவர் தாம் வாங்க விரும்பும் துணியைக் கையால் தொட்டுப்
பார்த்து விட்டாலே வியாபார ஒப்பந்தம் நிறைவேறியதாகக் கருதப்பட்டு, விரித்துப் பார்க்கும்
போது குறையிருந்தாலும் வியாபாரத்தை ரத்துச் செய்யமுடியாத வணிக முறைக்கே முலாமஸா என்று
பெயர். நபாத் அல்லது முனாபஃதா என்பதற்கு எறிதல் என்று பொருள். வாங்கவந்தவர் மீது துணியைத்
தூக்கி எறிந்து விட்டாலே அதை அவர் வாங்கிவிட்டதாகக் கருதப்பட்டு, விரித்துப் பார்த்த
பின் குறைதென்பட்டாலும் அதைத் திருப்பிக் கொடுக்க முடியாத வியாபார முறைக்கே முனாபஃதா
என்பர். இந்த இரு முறைகளாலும் நுகர்வோர் பாதிக்கப்பட இடமுண்டு என்பதால் இவற்றுக்கு
நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
No comments:
Post a Comment