அத்தியாயம் : 9
كتاب مواقيت الصلاة
தொழுகை நேரங்கள்
(1)باب
مَوَاقِيتِ الصَّلاَةِ وَفَضْلِهَا
பாடம் : 1
தொழுகையின் சிறப்பும்
அவற்றின் நேரங்களும்.
وَقَوْلِهِ:
{إِنَّ الصَّلاَةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا[1] } وَقَّتَهُ عَلَيْهِمْ.
அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை
நிறைவேற்றுவது நம்பிக்கையாளர்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது. (4:103)
٥٢١حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنِ ابْنِ
شِهَابٍ أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ العَزِيزِ أَخَّرَ الصَّلاَةَ يَوْمًا فَدَخَلَ
عَلَيْهِ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، فَأَخْبَرَهُ أَنَّ المُغِيرَةَ بْنَ
شُعْبَةَ أَخَّرَ الصَّلاَةَ يَوْمًا وَهُوَ بِالعِرَاقِ، فَدَخَلَ عَلَيْهِ أَبُو
مَسْعُودٍ الأَنْصَارِيُّ، فَقَالَ: مَا هَذَا يَا مُغِيرَةُ أَلَيْسَ قَدْ [ص:
111] عَلِمْتَ أَنَّ جِبْرِيلَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَزَلَ فَصَلَّى،
فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَلَّى،
فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَلَّى،
فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَلَّى،
فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَلَّى،
فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «بِهَذَا
أُمِرْتُ»، فَقَالَ عُمَرُ لِعُرْوَةَ: اعْلَمْ مَا تُحَدِّثُ، أَوَأَنَّ
جِبْرِيلَ هُوَ أَقَامَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقْتَ
الصَّلاَةِ؟ قَالَ عُرْوَةُ: كَذَلِكَ كَانَ بَشِيرُ بْنُ أَبِي مَسْعُودٍ
يُحَدِّثُ، عَنْ أَبِيهِ،
521 இப்னு ஷிஹாப் முஹம்மத் பின் முஸ்லிம்
அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள்
(ஒரு நாள் அஸ்ர் தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். அப்போது அவர்களிடம் வந்த உர்வா பின்
ஸுபைர் (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) தெரிவித்தார்கள்:
இராக் நாட்டில் (கூஃபாவில்) ஆளுநராயிருந்த
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் ஒரு நாள் (அஸ்ர்) தொழுகையைத் தாமதப்படுத்திவிட்டார்கள்.
அப்போது அவர்களிடம் அபூமஸ்ஊத் (உக்பா பின் அம்ர) அல்அன்சாரி (ரலி) அவர்கள் வந்து, ஏன் இவ்வாறு (தாமதப்படுத்தினீர்கள்), முஃகீராவே? (தொழுகை கடமையாக்கப்பட்ட இஸ்ரா' இரவுக்கு அடுத்த நாள்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்களும் (அவ்வாறே) தொழுதார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொழுதார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள்
தொழுதார்கள்.அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பிறகு ஜிப்ரீல்
(அலை) அவர்கள் தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள்.
பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும்
(அவ்வாறே) தொழுதார்கள். (ஐங்காலத் தொழுகையையும் முடித்த) பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவ்வாறே (ஒவ்வொரு நாளும் தொழவேண்டுமென) நீங்கள் பணிக்கப்பட்டுள்ளீர்கள் என்று
(கூறியதெல்லாம்) தாங்கள் அறிந்திருக்கவில்லையா, என்ன? என்று கேட்டார்கள்.
(இதைச் செவியுற்ற ஆளுநர்) உமர் பின்
அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், நீங்கள் அறிவிப்பதை சிந்தித்து
அறிவியுங்கள், உர்வா! ஜிப்ரீல் (அலை) அவர்கள்தாம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தொழுகையின் நேரத்தை தெளிவுபடுத்தினார்களா? என்று கேட்டார்கள். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், (ஆம்) இவ்வாறுதான் பஷீர் பின் அபீமஸ்உத் (ரஹ்) அவர்கள் தம் தந்தை அபூமஸ்ஊத் (ரலி)
அவர்களிடமிருந்து அறிவிப்புச் செய்வார்கள் என்று பதிலளித்தார்கள்.
قَالَ عُرْوَةُ: وَلَقَدْ حَدَّثَتْنِي عَائِشَةُ:
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي العَصْرَ،
وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا قَبْلَ أَنْ تَظْهَرَ» ٥٢٢
522 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனது அறையிலிருந்து சூரிய வெளிச்சம் உயரா நிலையில் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்.
(2) بَابُ:
{مُنِيبِينَ إِلَيْهِ وَاتَّقُوهُ وَأَقِيمُوا الصَّلاَةَ وَلاَ تَكُونُوا مِنَ
الْمُشْرِكِينَ}
பாடம் : 2
நீங்கள் அவன் பக்கமே
(பாவமன்னிப்புக் கோரி) திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்துகொள்ளுங்கள்;
தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்;
இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகிவிடாதீர்கள் எனும் (30:31ஆவது) இறைவசனம்.
٥٢٣حَدَّثَنَا
قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا عَبَّادٌ ـ هُوَ ابْنُ عَبَّادٍ ـ عَنْ
أَبِي جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى
رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا إِنَّا مِنْ هَذَا الْحَىِّ مِنْ
رَبِيعَةَ، وَلَسْنَا نَصِلُ إِلَيْكَ إِلاَّ فِي الشَّهْرِ الْحَرَامِ، فَمُرْنَا
بِشَىْءٍ نَأْخُذْهُ عَنْكَ، وَنَدْعُو إِلَيْهِ مَنْ وَرَاءَنَا. فَقَالَ
" آمُرُكُمْ بِأَرْبَعٍ، وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ الإِيمَانِ بِاللَّهِ
ـ ثُمَّ فَسَّرَهَا لَهُمْ شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَنِّي
رَسُولُ اللَّهِ، وَإِقَامُ الصَّلاَةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ، وَأَنْ تُؤَدُّوا
إِلَىَّ خُمُسَ مَا غَنِمْتُمْ، وَأَنْهَى عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ
وَالْمُقَيَّرِ وَالنَّقِيرِ ".
523 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துல் கைஸ் குலத்தாரின்
தூதுக்குழு ஒன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தது. அக்குழுவினர், (அல்லாஹ்வின் தூதரே!) நாங்கள் (இன்ன
குலத்தாரில்) இந்தக் குடும்பத்தார் ஆவோம். (முளர் குலத்து இறைமறுப்பாளர்கள் நாம் ஒருவரையொருவர்
சந்திக்கத் தடையாக உள்ளனர்); (போர் நிறுத்தம் செய்யப்படுகின்ற) புனித மாதங்களிலே தவிர வேறு மாதங்களில் நாங்கள்
தங்களிடம் வந்து சேர முடியாத நிலையில் இருக்கிறோம். எனவே, (தெளிவான) ஆணையொன்றை எங்களுக்குப் பிறப்பியுங்கள்.அதை
உங்களிடமிருந்து நாங்கள் எடுத்துக்கொள்வோம்; எங்கள் பின்னணியில் (இங்கே வராமல் ஊரில்)
இருப்போருக்கு, அதன்பக்கம் அழைப்பு விடுப்போம் என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள், உங்களுக்கு நான்கு விஷயங்களைச் செய்யும்படி
கட்டளையிடு கிறேன்; நான்கு விஷயங்களைச் செய்ய வேண்டாமெனத் தடைவிதிக்கிறேன் என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது
- அதாவது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை.
நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று உறுதி கூறுவது, தொழுகையை நிரந்தமாகக் கடைபிடிப்பது, ஸகாத் கொடுப்பது, உங்களுக்குப் போரில் கிடைத்த செல்வத்திலிருந்து
ஐந்திலொருபங்கை (இறைவனுக்காக) என்னிடம் செலுத்துவது ஆகியனதாம் நான் கட்டளையிடும் அந்த
நான்கு விஷயங்கள்.
மேலும், (மது சேகரித்து வைக்கப் பயன்படுத்தப்பட்டுவரும்
பாத்திரங்களான) சுரைக்காய் குடுவை, மண்சாடி,தார் பூசப்பட்ட பாத்திரம், (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து
தயாரிக்கப்படும்) மரப்பீப்பாய் ஆகியவற்றை (குடிபானங்கள் ஊற்றி வைக்கப் புழங்க வேண்டாமென[2] ) நான் உங்களுக்குத் தடைவிதிக்கிறேன்
என்று கூறினார்கள்.
(3)باب الْبَيْعَةِ عَلَى إِقَامَةِ الصَّلاَةِ
பாடம் : 3
தொழுகையை நிலைநிறுத்துவதாக ஒருவரிடம் மற்றவர் உறுதிமொழி அளிப்பது.
٥٢٤حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا
إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنَا قَيْسٌ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ
بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى إِقَامِ الصَّلاَةِ،
وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ.
524 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் தொழுகையை நிலைநாட்டுவதாகவும், ஸகாத் வழங்குவதாகவும்,
ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலம் நாடுவதாகவும் உறுதிமொழி அளித்தேன்
(4)باب الصَّلاَةُ كَفَّارَةٌ
பாடம் : 4
தொழுகை பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
٥٢٥حَدَّثَنَا
مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنِ الأَعْمَشِ، قَالَ حَدَّثَنِي شَقِيقٌ،
قَالَ سَمِعْتُ حُذَيْفَةَ، قَالَ كُنَّا جُلُوسًا عِنْدَ عُمَرَ ـ رضى الله عنه ـ
فَقَالَ أَيُّكُمْ يَحْفَظُ قَوْلَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي
الْفِتْنَةِ قُلْتُ أَنَا، كَمَا قَالَهُ. قَالَ إِنَّكَ عَلَيْهِ ـ أَوْ
عَلَيْهَا ـ لَجَرِيءٌ. قُلْتُ " فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ
وَمَالِهِ وَوَلَدِهِ وَجَارِهِ تُكَفِّرُهَا الصَّلاَةُ وَالصَّوْمُ وَالصَّدَقَةُ
وَالأَمْرُ وَالنَّهْىُ ". قَالَ لَيْسَ هَذَا أُرِيدُ، وَلَكِنِ
الْفِتْنَةُ الَّتِي تَمُوجُ كَمَا يَمُوجُ الْبَحْرُ. قَالَ لَيْسَ عَلَيْكَ
مِنْهَا بَأْسٌ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، إِنَّ بَيْنَكَ وَبَيْنَهَا بَابًا
مُغْلَقًا. قَالَ أَيُكْسَرُ أَمْ يُفْتَحُ قَالَ يُكْسَرُ. قَالَ إِذًا لاَ
يُغْلَقَ أَبَدًا. قُلْنَا أَكَانَ عُمَرُ يَعْلَمُ الْبَابَ قَالَ نَعَمْ،
كَمَا أَنَّ دُونَ الْغَدِ اللَّيْلَةَ، إِنِّي حَدَّثْتُهُ بِحَدِيثٍ لَيْسَ
بِالأَغَالِيطِ. فَهِبْنَا أَنْ نَسْأَلَ حُذَيْفَةَ، فَأَمَرْنَا مَسْرُوقًا
فَسَأَلَهُ فَقَالَ الْبَابُ عُمَرُ.
525 ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது உமர் (ரலி)
அவர்கள், உங்களில் யார் (இனி
தலைதூக்கவிருக்கும்) ஃபித்னா (சோதனை/குழப்பம்) பற்றி அல்லஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
சொன்னதை நினைவில் வைத்திருக்கிறார்? என்று கேட்டார்கள். நான்,
நபி (ஸல்) அவர்கள் சொன்னதை நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்று சொன்னேன்.
உமர் (ரலி) அவர்கள், (அதைக்கூறுங்கள்)நீங்கள்தான் நபி (ஸல்) அவர்களிடம்'
அல்லது (நபி (ஸல்) அவர்களின்) அக்கூற்றின் மீது' துணிச்சலுடன் (கேள்வி கேட்டு விளக்கம் பெறக் கூடியவர்களாய்) இருந்தீர்கள் என்று
சொன்னார்கள்.
நான், ஒரு மனிதன் தன் குடும்பத்தார்,
தனது சொத்து, தனது பிள்ளைகள் ஆகியோரின் விஷயத்தில்
(இறைவழிபாட்டிலிருந்து தனது கவனத்தைப் பறிகொடுக்கும் அளவுக்கு அளவு கடந்த நேசம் வைப்பதன்
மூலமும்), தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில்
குறைவைப்பதன் மூலமும்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும் போது தொழுகை,
நோன்பு, தர்மம், நன்மை (புரியும்படி
கட்டளையிட்டு) தீமை (யிலிருந்து தடுத்தல்) ஆகியன அதற்கான பரிகாரமாக அமையும் என அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகனச் சொன்னேன். உமர் (ரலி) அவர்கள், நான் (சோதனை' எனும் பொருள் கொண்ட ஃபித்னாவான) இதை (ப்பற்றி)க்
கேட்கவரவில்லை. கடல் அலையைப் போல அடுக்கடுக்காக ஏற்படக் கூடிய நபி (ஸல்) அவர்களால்
முன்னேறிவிப்புச் செய்யப்பட்ட குழப்பம்' எனும் பொருள் கொண்டன
ஃபித்னாவைப் பற்றியே கேட்கிறேன் என்று சொன்னார்கள். அதற்கு நான், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அதைப் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை.
(உங்கள் காலத்தில் அவற்றில் எதுவும் தலைதூக்கப் போவதில்லை). உங்களுக்கும் அவற்றுக்குமிடையே
மூடப்பட்ட கதவொன்று உள்ளது என்று கூறினேன். அந்தக் கதவு உடைக்கப்படுமா? அல்லது திறக்கப்படுமா என்று கேட்டார்கள்.நான், இல்லை,
அது உடைக்கப்படும் என்று பதிலளித்தேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள்,
அவ்வாறாயின் (அது உடைக்கப்பட்டுவிட்டால் பின்னர் மறுமை நாள் வரை) ஒரு
போதும் அது மூடவே படாது என்று சொன்னார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:)
நாங்கள் (ஹுதைஃபா ளரலின அவர்களிடம்) , உமர் (ரலி) அவர்கள் அந்தக் கதவு எது வென்று
அறிந்திருந்தார்களா? என்று கேட்டோம். ஹுதைஃபா (ரலி) அவர்கள்,
ஆம்; நாளைய தினத்தைவிட இன்றைய இரவு மிக நெருக்கமானது
என்பதை (அறிவதைப்) போன்று உமர் (ரலி) அவர்கள் அதை அறிந்திருந்தார்கள். (ஏனெனில்,)
நான் பொய்கள் கலவாத செய்தியையே அவருக்கு நான் அறிவித்திருந்தேன். அவை
(எனது) ஊகமோ ஆய்வோ அல்ல என்று பதிலளித்தார்கள். அந்தக் கதவு எதுவென அப்போது ஹுதைஃபா
(ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சினோம். எனவே மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்களை
ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் அது குறித்து கேட்குமாறுனப் பணித்தோம். மஸ்ரூக் அவர்கள் கேட்டதற்கு
(அந்தக் கதவு) உமர் (ரலி) அவர்கள்தாம் என்று ஹுதைஃபா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
٥٢٦حَدَّثَنَا
قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سُلَيْمَانَ
التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنِ ابْنِ مَسْعُودٍ، أَنَّ
رَجُلاً، أَصَابَ مِنَ امْرَأَةٍ قُبْلَةً، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم
فَأَخْبَرَهُ، فَأَنْزَلَ اللَّهُ {أَقِمِ الصَّلاَةَ طَرَفَىِ النَّهَارِ
وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ}.
فَقَالَ الرَّجُلُ يَا رَسُولَ اللَّهِ أَلِي هَذَا قَالَ " لِجَمِيعِ أُمَّتِي
كُلِّهِمْ ".
526 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் ஒரு(அந்நியப்) பெண்ணை முத்தமிட்டுவிட்டார். நபி (ஸல்) அவர்களிடம் அந்த
மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு), இந்த விவரத்தைச் சொன்னார். அப்போது அல்லாஹ், பகலின்
இரு ஓரங்களிலும் இரவின் நிலைகளிலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். திண்ணமாக, நன்மைகள் தீமைகளைக்
களைந்துவிடுகின்றன எனும் (11:114ஆவது) வசனத்தை அருளினான். அந்த
மனிதர், இது எனக்கு மட்டுமா (அல்லது அனைவருக்குமா)? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (இதன்படி
செயல்படும்) என் சமுதாயத்தார் அனைவருக்கும்தான் என்று பதிலளித்தார்கள்.
(5)باب فَضْلِ الصَّلاَةِ لِوَقْتِهَا
பாடம் : 5
தொழுகையை உரிய நேரத்தில் தொழுவதன் சிறப்பு.
٥٢٧حَدَّثَنَا
أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ،
قَالَ الْوَلِيدُ بْنُ الْعَيْزَارِ أَخْبَرَنِي قَالَ سَمِعْتُ أَبَا عَمْرٍو
الشَّيْبَانِيَّ، يَقُولُ حَدَّثَنَا صَاحِبُ، هَذِهِ الدَّارِ وَأَشَارَ إِلَى
دَارِ عَبْدِ اللَّهِ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَىُّ
الْعَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ قَالَ " الصَّلاَةُ عَلَى وَقْتِهَا
". قَالَ ثُمَّ أَىُّ قَالَ " ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ
". قَالَ ثُمَّ أَىُّ قَالَ " الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ
". قَالَ حَدَّثَنِي بِهِنَّ وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي.
527 வலீத் பின் அல்அய்ஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் இல்லத்தை நோக்கி சைகை செய்தவாறு அபூஅம்ர்
அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதோ இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) என்னிடம்
தெரிவித்தார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது? என்று கேட்டேன். அவர்கள், உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது
என்றார்கள். பிறகு எது? என்று கேட்டேன். தாய் தந்தையருக்கு நன்மை
புரிவது என்றார்கள். பிறகு எது? என்றேன். அவர்கள், அல்லாஹ் வின் பாதையில் அறப்போர் புரிவது என்று பதிலளித்தார்கள். இ(ம் மூ)வற்றை
மட்டுமே என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக
(இது குறித்து) நான் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் அதிகமாக பதிலளித்திருப்பார்கள்.
(6)باب الصَّلَوَاتُ الْخَمْسُ كَفَّارَةٌ
பாடம் : 6
ஐவேளைத் தொழுகைகள் பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
٥٢٨حَدَّثَنَا
إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي حَازِمٍ،
وَالدَّرَاوَرْدِيُّ، عَنْ يَزِيدَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي
سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهَرًا
بِبَابِ أَحَدِكُمْ، يَغْتَسِلُ فِيهِ كُلَّ يَوْمٍ خَمْسًا، مَا تَقُولُ ذَلِكَ
يُبْقِي مِنْ دَرَنِهِ ". قَالُوا لاَ يُبْقِي مِنْ دَرَنِهِ شَيْئًا.
قَالَ " فَذَلِكَ مِثْلُ الصَّلَوَاتِ الْخَمْسِ، يَمْحُو اللَّهُ بِهَا
الْخَطَايَا ".
528 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உங்களில் ஒருவரது (வீட்டு) வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில்
அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அ(வ்வாறு நீராடுவ)து அவரது (மேனியிலுள்ள) அழுக்குகளில்
எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்? என்று
கேட்டார்கள். அவரது (மேனி யிலுள்ள) அழுக்குகளில் எதையும் தங்கவிடாது என்று மக்கள் பதிலளித்தார்கள்.
இது தான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்;
இ(வற்றை நிறைவேற்றுவ)தன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான் என்று
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(7)باب تَضْيِيعِ الصَّلاَةِ عَنْ وَقْتِهَا
பாடம் : 7
கால தாமதப்படுத்தித் தொழுது தொழுகையை வீணாக்குவது.
٥٢٩حَدَّثَنَا
مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا مَهْدِيٌّ، عَنْ غَيْلاَنَ، عَنْ
أَنَسٍ، قَالَ مَا أَعْرِفُ شَيْئًا مِمَّا كَانَ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى
الله عليه وسلم. قِيلَ الصَّلاَةُ. قَالَ أَلَيْسَ ضَيَّعْتُمْ مَا
ضَيَّعْتُمْ فِيهَا.
529 ஃகைலான் பின் ஜரீர் அல்மஅவலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தவற் றில் எதனையும் (இன்று) என்னால் காண முடியவில்லை
என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். தொழுகை இருக்கிறதே என்று அவர்களிடம்) கேட்கப்பட்டது.
அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், (கால தாமதப்படுத்தி) தொழுகை யைக்கூட நீங்கள் வீணாக்கிடவில்லையா?
என்று கேட்டார்கள்.
٥٣٠حَدَّثَنَا
عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ وَاصِلٍ أَبُو
عُبَيْدَةَ الْحَدَّادُ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي رَوَّادٍ، أَخِي عَبْدِ
الْعَزِيزِ قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، يَقُولُ دَخَلْتُ عَلَى أَنَسِ بْنِ
مَالِكٍ بِدِمَشْقَ وَهُوَ يَبْكِي فَقُلْتُ مَا يُبْكِيكَ فَقَالَ لاَ أَعْرِفُ
شَيْئًا مِمَّا أَدْرَكْتُ إِلاَّ هَذِهِ الصَّلاَةَ، وَهَذِهِ الصَّلاَةُ قَدْ
ضُيِّعَتْ. وَقَالَ بَكْرٌ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ الْبُرْسَانِيُّ
أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ أَبِي رَوَّادٍ نَحْوَهُ.
530 முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
டமாஸ்கஸ் (திமஷ்க்) நகரிலிருந்த அனஸ் (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள்
அழுது கொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம், ஏன் அழுகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், (நபி (ஸல்) அவர்களின்
காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு) நான் கண்டவற்றில் இந்தத் தொழுகையைத் தவிர வேறெதையும்
(முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை இன்று) என்னால் காண முடியவில்லை இந்தத் தொழுகைகூட
(உரிய நேரத்தில் நிறைவேற்றப்படாமல்) வீணடிக்கப்பட்டுவிட்டது என்று கூறினார்கள்.
இதே கருத்தில் அமைந்த மற்றொரு ஹதீஸ் (சிறிது கூடுதலாக) உஸ்மான் பின் அபீ வர்ராத்
(ரஹ்) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(8)باب الْمُصَلِّي يُنَاجِي رَبَّهُ عَزَّ وَجَلَّ
பாடம் : 8
தொழுது கொண்டிருப்பவர் வலிவும் உயர்வும் உடைய தம் இறைவனிடமே
இரகசியமாக உரையாடுகிறார்.
٥٣١حَدَّثَنَا
مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ
أَنَسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ أَحَدَكُمْ
إِذَا صَلَّى يُنَاجِي رَبَّهُ فَلاَ يَتْفِلَنَّ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ تَحْتَ
قَدَمِهِ الْيُسْرَى ". وَقَالَ سَعِيدٌ عَنْ قَتَادَةَ لاَ يَتْفِلُ
قُدَّامَهُ أَوْ بَيْنَ يَدَيْهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ
قَدَمَيْهِ. وَقَالَ شُعْبَةُ لاَ يَبْزُقُ بَيْنَ يَدَيْهِ وَلاَ عَنْ
يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ. وَقَالَ حُمَيْدٌ
عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم " لاَ يَبْزُقْ فِي
الْقِبْلَةِ وَلاَ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ
".
531 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கையில் தம் இறைவனிடம் இரகசியமாக உரையாடுகிறார்.
எனவே (தொழுது கொண்டிருக்கும் போது எச்சில் வந்துவிட்டால்) அவர் தமது வலப் பக்கத்தில்
உமிழவேண்டாம். ஆயின், தமது இடப் பாதத்திற்குக் கீழே உமிழட்டும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்களிடமிருந்து சயீத் பின் அபீ அரூபா (ரஹ்) அவர்கள், தமக்கு முன்புறமாகத்
துப்பலாகாது. எனினும் தமது இடப் பக்கமோ அல்லது தமது பாதங்களுக்குக் கீழேயோ துப்புக
என்று (நபி ஸல் அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.
(கத்தாதா ரஹ் அவர்களிடமிருந்து) ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும்
அறிவிப்பில் தம் வலப் பக்கம் துப்பலாகாது. எனினும் தமது இடப் பக்கமோ அல்லது தமது பாதத்திற்குக்
கீழேயோ துப்புக! என்று (நபி ஸல் அவர்கள் கூறியதாக) காணப்படுகிறது.
அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஹுமைத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில், கிப்லா (கஅபா)த் திசையில்
அவர் துப்பலாகாது; தமது வலப் புறமாகவும் துப்பலாகாது. எனினும்
அவர் தமது இடப் பக்கமோ அல்லது தமது பாதத்திற்குக் கீழேயோ துப்புக! என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
٥٣٢حَدَّثَنَا
حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ
حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
" اعْتَدِلُوا فِي السُّجُودِ، وَلاَ يَبْسُطْ ذِرَاعَيْهِ كَالْكَلْبِ،
وَإِذَا بَزَقَ فَلاَ يَبْزُقَنَّ بَيْنَ يَدَيْهِ وَلاَ عَنْ يَمِينِهِ،
فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ ".
532 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முறைப்படி சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள். நாயைப் போன்று கைகளைப் படுக்க வைக்கலாகாது.
(தொழும் போது எச்சில் வந்துவிட்டால்) தமக்கு முன்புறம் துப்பலாகாது; தம் வலப் புறம் துப்பலாகாது.
ஏனெனில் தொழுது கொண்டிருப்பவர், தம் இறைவனிடமே இரகசியமாக உரையாடிக்
கொண்டிருக்கிறார்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(9)باب الإِبْرَادِ بِالظُّهْرِ فِي شِدَّةِ الْحَرِّ
பாடம் : 9
கடுமையான வெயில் நேரத்தில் (வெப்பம் தணியும் வரை) லுஹ்ரைத் தாமதப்படுத்துவது.
٥٣٣,٥٣٤حَدَّثَنَا
أَيُّوبُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا أَبُو بَكْرٍ، عَنْ سُلَيْمَانَ،
قَالَ صَالِحُ بْنُ كَيْسَانَ حَدَّثَنَا الأَعْرَجُ عَبْدُ الرَّحْمَنِ،
وَغَيْرُهُ، عَنْ أَبِي هُرَيْرَةَ.وَنَافِعٌ مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ
عُمَرَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُمَا حَدَّثَاهُ عَنْ رَسُولِ
اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " إِذَا اشْتَدَّ الْحَرُّ
فَأَبْرِدُوا عَنِ الصَّلاَةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ
".
533, 534 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெப்பம் கடுமையாகும் போது வெப்பம் தணியும் வரை (லுஹ்ர்) தொழுகையைத் தாமதப்படுத்துங்கள்.
ஏனெனில், கடுமையான வெப்பம் நரக
நெருப்பின் பெருமூச்சின் காரணமாகவே உண்டாகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.
٥٣٥حَدَّثَنَا
ابْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ
الْمُهَاجِرِ أَبِي الْحَسَنِ، سَمِعَ زَيْدَ بْنَ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ،
قَالَ أَذَّنَ مُؤَذِّنُ النَّبِيِّ صلى الله عليه وسلم الظُّهْرَ فَقَالَ
" أَبْرِدْ أَبْرِدْ ـ أَوْ قَالَ ـ انْتَظِرِ انْتَظِرْ ". وَقَالَ
" شِدَّةُ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا اشْتَدَّ الْحَرُّ
فَأَبْرِدُوا عَنِ الصَّلاَةِ ". حَتَّى رَأَيْنَا فَىْءَ التُّلُولِ.
535 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை நாங்கள் பயணத்தில் இருந்தோம். அப்போது) நபி (ஸல்) அவர்களின் தொழுகை
அறிவிப்பாளர் (முஅத்தின் பிலால் ரலின அவர்கள்) லுஹ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்ல முற்பட்டார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், வெப்பம் தணியட்டும்; வெப்பம் தணியட்டும்;' என்று கூறிவிட்டு, கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சின் காரணமாகவே உண்டாகிறது. வெப்பம்
கடுமையாகும் போது (லுஹ்ர்) தொழுகையை வெப்பம் தணிந்த பின் தொழுங்கள் என்று கூறினார்கள்.
(எனவே நாங்கள் லுஹ்ர் தொழுகையை தாமதப்படுத்தினோம்). எந்த அளவிற்கென்றால் மேடுகளில்
சாய்ந்து விழும் நிழலை நாங்கள் பார்த்தோம்.
٥٣٦حَدَّثَنَا
عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ المَدِينِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ:
حَفِظْنَاهُ مِنَ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي
هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا
اشْتَدَّ الحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلاَةِ، فَإِنَّ شِدَّةَ الحَرِّ مِنْ فَيْحِ
جَهَنَّمَ»
536 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெப்பம் கடுமையாகிவிடும் போது (லுஹ்ர்) தொழுகையை வெப்பம் தணிந்தபின் தொழுங்கள்.
ஏனெனில் கடுமையான வெப்பம், நரக நெருப்பின் பெருமூச்சின் காரணமாகவே உண்டாகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
٥٣٧وَاشْتَكَتِ
النَّارُ إِلَى رَبِّهَا، فَقَالَتْ: يَا رَبِّ أَكَلَ بَعْضِي بَعْضًا، فَأَذِنَ
لَهَا بِنَفَسَيْنِ، نَفَسٍ فِي الشِّتَاءِ وَنَفَسٍ فِي الصَّيْفِ، فَهُوَ
أَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الحَرِّ، وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الزَّمْهَرِيرِ "
537 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகம் தன் இறைவனிடம், இறைவா! என்னுடைய ஒரு பகுதி மறு பகுதியைத் தின்கிறதே என முறையிட்டது.
ஆகவே, அல்லாஹ் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒருமூச்சு குளிர்
காலத் திலும் மற்றொரு மூச்சு கோடைக் காலத்திலுமாக இருமூச்சுகள் விட்டுக்கொள்ள அனுமதியளித்தான்.
அவைதாம் நீங்கள் கோடைக் காலத்தில் அனு பவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில்
அனுபவிக்கும் கடுமையான குளிரும் ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
٥٣٨حَدَّثَنَا
عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا الأَعْمَشُ،
حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم " أَبْرِدُوا بِالظُّهْرِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ
فَيْحِ جَهَنَّمَ ". تَابَعَهُ سُفْيَانُ وَيَحْيَى وَأَبُو عَوَانَةَ
عَنِ الأَعْمَشِ.
538 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
லுஹ்ர் தொழுகையை வெப்பம் தணிந்த பின் தொழுங்கள். ஏனெனில் கடுமையான வெப்பம், நரகநெருப்பின் பெருமூச்சின்
காரணமாகவே உண்டாகிறது.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
(10)باب الإِبْرَادِ بِالظُّهْرِ فِي السَّفَرِ
பாடம் : 10
பயணத்தின் போது வெப்பம் தணிந்த பின் லுஹ்ரைத் தொழுவது.
٥٣٩حَدَّثَنَا
آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا مُهَاجِرٌ
أَبُو الْحَسَنِ، مَوْلًى لِبَنِي تَيْمِ اللَّهِ قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ
وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله
عليه وسلم فِي سَفَرٍ، فَأَرَادَ الْمُؤَذِّنُ أَنْ يُؤَذِّنَ لِلظُّهْرِ فَقَالَ
النَّبِيُّ صلى الله عليه وسلم " أَبْرِدْ ". ثُمَّ أَرَادَ أَنْ
يُؤَذِّنَ فَقَالَ لَهُ " أَبْرِدْ ". حَتَّى رَأَيْنَا فَىْءَ
التُّلُولِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ شِدَّةَ
الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا
بِالصَّلاَةِ ". وَقَالَ ابْنُ عَبَّاسٍ تَتَفَيَّأُ تَتَمَيَّلُ.
539 அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள்
கூறியதாவது:
நாங்கள் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். அப்போது பாங்கு
சொல்பவர் பிலால் (ரலி) அவர்கள்ன லுஹ்ர் தொழுகைக்காக பாங்கு சொல்ல முற்பட்ட போது நபி
(ஸல்) அவர்கள் (அவரிடம்), வெப்பம் தணியட்டும் பிறகு, தொழலாம் என்று கூறினார்கள். பிறகு (சிறிது நேரம் கழிந்து) மீண்டும்
அவர் பாங்கு சொல்லமுற்பட்ட போது அவரிடம்,
வெப்பம் தணியட்டும். பிறகு, தொழலாம் என்று மேடுகளின் சாய்ந்து விழும் நிழலை நாங்கள் பார்க்கும்
வரை - (இவ்வாறு) கூறினார்கள். பிறகு,
கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சின்
காரணமாகவே உண்டாகின்றது. எனவே வெப்பம் கடுமையாகும் போது (லுஹ்ர்) தொழுகையை வெப்பம்
தணிந்தபின் (அதன் ஆரம்ப நேரம் தாண்டிய பின்) தொழுங்கள் என்று சொன்னார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
(16:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யத்தஃபய்யஉ' எனும் சொற்றொடருக்கு சாய்கின்றன' என்று பொருள்.
No comments:
Post a Comment