Saturday, August 19, 2017

அத்தியாயம் : 9 தொழுகை நேரங்கள் ஹதீஸ்கள் 540 முதல் 564 வரை



                                                                 அத்தியாயம் : 9
                                                              
                                                                     كتاب مواقيت الصلاة

                                                             தொழுகை நேரங்கள்




(11)باب وَقْتِ الظُّهْرِ عِنْدَ الزَّوَالِ
பாடம் : 11

சூரியன் சாய்ந்த பிறகே (நண்பகலுக்குப் பின்பே) லுஹ்ர் நேரம் ஆரம்பமாகிறது.

وَقَالَ جَابِرٌ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِالْهَاجِرَةِ.


நபி (ஸல்) அவர்கள் நண்பகல் நேரத்தில் (லுஹ்ர்) தொழுபவர்களாக இருந்தார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

٥٤٠حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ حِينَ زَاغَتِ الشَّمْسُ فَصَلَّى الظُّهْرَ، فَقَامَ عَلَى الْمِنْبَرِ، فَذَكَرَ السَّاعَةَ، فَذَكَرَ أَنَّ فِيهَا أُمُورًا عِظَامًا ثُمَّ قَالَ ‏"‏ مَنْ أَحَبَّ أَنْ يَسْأَلَ عَنْ شَىْءٍ فَلْيَسْأَلْ، فَلاَ تَسْأَلُونِي عَنْ شَىْءٍ إِلاَّ أَخْبَرْتُكُمْ مَا دُمْتُ فِي مَقَامِي هَذَا ‏"‏‏.‏ فَأَكْثَرَ النَّاسُ فِي الْبُكَاءِ، وَأَكْثَرَ أَنْ يَقُولَ ‏"‏ سَلُونِي ‏"‏‏.‏ فَقَامَ عَبْدُ اللَّهِ بْنُ حُذَافَةَ السَّهْمِيُّ فَقَالَ مَنْ أَبِي قَالَ ‏"‏ أَبُوكَ حُذَافَةُ ‏"‏‏.‏ ثُمَّ أَكْثَرَ أَنْ يَقُولَ ‏"‏ سَلُونِي ‏"‏‏.‏ فَبَرَكَ عُمَرُ عَلَى رُكْبَتَيْهِ فَقَالَ رَضِينَا بِاللَّهِ رَبًّا، وَبِالإِسْلاَمِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا‏.‏ فَسَكَتَ ثُمَّ قَالَ ‏"‏ عُرِضَتْ عَلَىَّ الْجَنَّةُ وَالنَّارُ آنِفًا فِي عُرْضِ هَذَا الْحَائِطِ فَلَمْ أَرَ كَالْخَيْرِ وَالشَّرِّ ‏"‏‏.‏


540 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் சாய்ந்த (நண்பகலின்) போது (தம் இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து லுஹ்ர் தொழு(வித்)தார்கள். பிறகு சொற்பொழிவுமேடை (மிம்பர்) மீதேறி நின்று மறுமை நாளை நினைவூட்டிப் பேசினார்கள். அந்நாளில் பயங்கரமான பல காரியங்கள் நிகழும் எனவும் குறிப்பிட்டார்கள். பிறகு (அவர்கள் விரும்பாத பல்வேறு கேள்விகளை மக்கள் வற்புறுத்திக் கேட்ட போது), (இன்று) யார் எது குறித்துக் கேட்கவிரும்பினாலும் கேட்கட்டும். இந்த இடத்தில் நான் இருக்கும் வரை எது குறித்து நீங்கள் என்னிடம் கேட்டாலும் அது குறித்து உங்களுக்கு நான் தெரிவிக்காமல் இருக்கமாட்டேன் என்று (கோபத்துடன்) கூறினார்கள். எனவே மக்கள் மிகுதியாக அழலாயினர். நபி (ஸல்) அவர்களோ, கேளுங்கள் என்னிடம் என்று அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்கள் எழுந்து, என் தந்தை யார்? என்று கேட்டார்கள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஹுதாஃபாதாம் உன் தந்தை என்று பதிலளித்து விட்டு மீண்டும், கேளுங்கள் என்னிடம் என்று அடிக்கடி கூறலானார்கள். (நபியவர்களின் முகக்குறியை அறிந்து கொண்ட) உமர் (ரலி) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து, அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாமை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் நாங்கள் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம் என்று கூறினார்கள். (இதைக்கேட்ட) நபி (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.

பிறகு, நபி (ஸல்) அவர்கள், சற்றுமுன் இதோ இந்த சுவரின் பரப்பில் சொர்க்கத்தையும் நரகத்தையும் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது. (இந்த இடத்தில் நான் கண்ட காட்சி போன்று) நன்மையிலும் தீமையிலும் வேறெந்த காட்சியையும் நான் (ஒரு போதும்) கண்டதில்லை என்று கூறினார்கள்.

٥٤١حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي الْمِنْهَالِ، عَنْ أَبِي بَرْزَةَ، كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي الصُّبْحَ وَأَحَدُنَا يَعْرِفُ جَلِيسَهُ، وَيَقْرَأُ فِيهَا مَا بَيْنَ السِّتِّينَ إِلَى الْمِائَةِ، وَيُصَلِّي الظُّهْرَ إِذَا زَالَتِ الشَّمْسُ، وَالْعَصْرَ وَأَحَدُنَا يَذْهَبُ إِلَى أَقْصَى الْمَدِينَةِ ثُمَّ يَرْجِعُ وَالشَّمْسُ حَيَّةٌ، وَنَسِيتُ مَا قَالَ فِي الْمَغْرِبِ، وَلاَ يُبَالِي بِتَأْخِيرِ الْعِشَاءِ إِلَى ثُلُثِ اللَّيْلِ‏.‏ ثُمَّ قَالَ إِلَى شَطْرِ اللَّيْلِ‏.‏ وَقَالَ مُعَاذٌ قَالَ شُعْبَةُ ثُمَّ لَقِيتُهُ مَرَّةً فَقَالَ أَوْ ثُلُثِ اللَّيْلِ‏.‏

541 அபூபர்ஸா நள்லா பின் உபைத் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களில் ஒருவர் தம் பக்கத்திலிருப்பவரை அறிந்துகொள்ளும் (அளவிற்கு வெளிச்சம் வந்துவிடும்) நேரத்தில் நபி (ஸல்) அவர்களை சுப்ஹுத் தொழுவிப்பவராக இருந்தார்கள். அறுபது (வசனங்கள்) முதல் நூறு (வசனங்கள்) வரை சுப்ஹுத் தொழுகையில் ஓதுவார்கள்.

சூரியன் சாயும் (நண்பகல் நேரத்தின்) போது லுஹ்ரைத் தொழுவிப்பார்கள்.

எங்களில் ஒருவர் (தொழுதுவிட்டு) மதீனாவின் கோடியிலுள்ள (தமது இல்லத்திற்குத் திரும்பிச்) சென்றுவிடுவார். அப்போதும் சூரியன் (வெப்பம் தணியாமல் வெளிச்சம் குன்றாமல்) தெளிவாக இருந்து கொண்டிருக்கும். (அந்த அளவிற்கு நேரம் இருக்கும் போது) அஸ்ர் தொழுவிப்பார்கள்.

-இதன் அறிவிப்பாளரான அபுல் மின்ஹால் (சய்யார் பின் சலாமா அல்பஸ்ரீ-ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

மஃக்ரிப் தொழுகை (யின் நேரம்) பற்றி அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறினார்கள். ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன். இஷாத் தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதி(யில் முதல் பகுதி) வரை தாமதப்படுத்துவதை நபி (ஸல்) அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்று அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்கள் குறிப்பிட் டார்கள்.

முஆத் பின் முஆத் (ரஹ்) கூறினார்கள்:

பிறகு ஒரு முறை அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்களை) நான் சந்தித்தேன். அப்போது அவர்கள், அல்லது இரவின் நடுப்பகுதி வரை (தாமதப்படுத்துவதை பொருட்படுத்த மாட்டார்கள் என்று சந்தேகம் தெரிவித்து) அறிவித்தார்கள் என ஷுஅபா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

٥٤٢حَدَّثَنَا مُحَمَّدٌ ـ يَعْنِي ابْنَ مُقَاتِلٍ ـ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنِي غَالِبٌ الْقَطَّانُ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالظَّهَائِرِ فَسَجَدْنَا عَلَى ثِيَابِنَا اتِّقَاءَ الْحَرِّ‏.‏


542 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நண்பகல் நேரங்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின் (லுஹ்ர்) தொழும் போது வெப்பத்தைத் தவிர்ப்பதற்காக எங்கள் ஆடையின் (ஒரு பகுதியின்) மீது சிரவணக்கம் (சஜ்தா) செய்பவர்களாக இருந்தோம்.

(12)باب تَأْخِيرِ الظُّهْرِ إِلَى الْعَصْرِ
பாடம் : 12

லுஹ்ர் தொழுகையை அஸ்ர் தொழுகை(யின் ஆரம்ப நேரம்) வரை தாமதப்படுத்துவது.

٥٤٣حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ ـ هُوَ ابْنُ زَيْدٍ ـ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِالْمَدِينَةِ سَبْعًا وَثَمَانِيًا الظُّهْرَ وَالْعَصْرَ، وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ‏.‏ فَقَالَ أَيُّوبُ لَعَلَّهُ فِي لَيْلَةٍ مَطِيرَةٍ‏.‏ قَالَ عَسَى‏.‏

543 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும் அஸ்ரையும் (சேர்த்து) எட்டு ரக்அத்களாகவும் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்து) ஏழு ரக்அத்களாகவும் தொழு(வித்)தார்கள்.

இதன் அறிவிப்பாளரான ஜாபர் பின் ஸைத் (ரஹ்) அவர்களிடம் அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்) அவர்கள், இ(வ்வாறு சேர்த்துத் தொழுத)து மழைக்காலத்தில் நடந்திருக்கலாமோ? என்று கேட்டார்கள். அதற்கு ஜாபிர் (ரஹ்) அவர்கள் இருக்கலாம்' என்று பதிலளித்தார்கள்.

(13)باب وَقْتِ الْعَصْرِ
பாடம் : 13

அஸ்ர் தொழுகையின் நேரம்.

٥٤٤حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ لَمْ تَخْرُجْ مِنْ حُجْرَتِهَا‏.‏ وَقَالَ أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ مِنْ قَعْرِ حُجْرَتِهَا‏.‏


544 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனது அறையிலிருந்து சூரிய வெளிச்சம் விலகாத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்

٥٤٥حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا، لَمْ يَظْهَرِ الْفَىْءُ مِنْ حُجْرَتِهَا‏.‏


545 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

சூரியனின் வெளிச்சம் எனது அறையில் இருந்து கொண்டிருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்; அப்போது எனது அறையிலிருந்து (சூரிய வெளிச்சம் படும் இடத்தின்) நிழல் உயர்ந்திருக்காது.


٥٤٦حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي صَلاَةَ الْعَصْرِ وَالشَّمْسُ طَالِعَةٌ فِي حُجْرَتِي لَمْ يَظْهَرِ الْفَىْءُ بَعْدُ‏.‏ وَقَالَ مَالِكٌ وَيَحْيَى بْنُ سَعِيدٍ وَشُعَيْبٌ وَابْنُ أَبِي حَفْصَةَ وَالشَّمْسُ قَبْلَ أَنْ تَظْهَرَ‏.‏


546 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

சூரியன் எனது அறைக்குள் உதித்துக் கெண்டிருக்க நிழல் இன்னும் (எனது அறையிலிருந்து) உயராத நிலையில் நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்.

மாலிக் (ரஹ்), யஹ்யா பின் சயீத் (ரஹ்), ஷுஐப் பின் அபீஹம்ஸா (ரஹ்), இப்னு அபீஹஃப்ஸா (முஹம்மத் பின் மைஸரா அல்பஸரீ- ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில், சூரிய வெளிச்சம் உயராத நிலையில் என்று இடம் பெற்றுள்ளது.

٥٤٧حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا عَوْفٌ، عَنْ سَيَّارِ بْنِ سَلاَمَةَ، قَالَ دَخَلْتُ أَنَا وَأَبِي، عَلَى أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ، فَقَالَ لَهُ أَبِي كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْمَكْتُوبَةَ فَقَالَ كَانَ يُصَلِّي الْهَجِيرَ الَّتِي تَدْعُونَهَا الأُولَى حِينَ تَدْحَضُ الشَّمْسُ، وَيُصَلِّي الْعَصْرَ، ثُمَّ يَرْجِعُ أَحَدُنَا إِلَى رَحْلِهِ فِي أَقْصَى الْمَدِينَةِ وَالشَّمْسُ حَيَّةٌ ـ وَنَسِيتُ مَا قَالَ فِي الْمَغْرِبِ ـ وَكَانَ يَسْتَحِبُّ أَنْ يُؤَخِّرَ الْعِشَاءَ الَّتِي تَدْعُونَهَا الْعَتَمَةَ، وَكَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَهَا وَالْحَدِيثَ بَعْدَهَا، وَكَانَ يَنْفَتِلُ مِنْ صَلاَةِ الْغَدَاةِ حِينَ يَعْرِفُ الرَّجُلُ جَلِيسَهُ، وَيَقْرَأُ بِالسِّتِّينَ إِلَى الْمِائَةِ‏.

547 சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் என் தந்தையும் அபூபர்ஸா (நள்லா பின் உபைத்-ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களிடம் என் தந்தை, கடமை யான தொழுகையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அபூபர்ஸா (ரலி) அவர்கள், -நீங்கள் முதல் தொழுகை எனக் கூடிய - நண்பகல் (லுஹ்ர்) தொழுகையை சூரியன் (நடுவானிலிருந்து மேற்கு நோக்கி) சாயும் போது நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள். (பின்னர்) அஸ்ர் தொழுவார்கள். எங்களில் ஒருவர் (அஸ்ர் தொழுதுவிட்டு) மதீனாவின் கடைக்கோடியிலுள்ள தமது இல்லத்திற்குத் திரும்பி சென்றுவிடுவார். சூரியன் (வெளிச்சம் குன்றாமல்) தெளிவாக இருந்து கொண்டிருக்கும். என்று கூறினார்கள்.

-அறிவிப்பாளர் சய்யார் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

மஃக்ரிப் (தொழுகையின் நேரம்) பற்றி அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறினார்கள்; ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன்.

தொடர்ந்து அபூபர்ஸா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அத்தமா' என்று நீங்கள் அழைக்கக்கூடிய இஷாத் தொழுகையைப் பிற்படுத்துவதையே நபி (ஸல்) அவர்கள் விரும்புவார்கள். இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப் பின் பேசிக் கொண்டிருப்பதையும் நபி (ஸல்) அவர்கள் வெறுப்பார்கள்.

(எங்களில்) ஒருவர் தம் பக்கத்திலிருப்பவரை அறிந்துகொள்ளும் (அளவில் வெளிச்சம் வந்துவிடும்) நேரத்தில் வைகறை (சுப்ஹு)த் தொழுகையை முடித்துத் திரும்புவார்கள். (வைகறைத் தொழுகையில்) அறுபது (வசனங்கள்) முதல் நூறு (வசனங்கள்) வரை ஓதுவார்கள்.

٥٤٨حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنَّا نُصَلِّي الْعَصْرَ ثُمَّ يَخْرُجُ الإِنْسَانُ إِلَى بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ فَنَجِدُهُمْ يُصَلُّونَ الْعَصْرَ‏.‏


548 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டு (மதீனாவிலிருந்து 2மைல் தொலைவிலிருந்த குபா பகுதி வாழ்) பனூ அம்ர் பின் அவ்ஃப் குலத்தாரிடம் எங்களில் சிலர் சென்றால் அக்குலத்தார் அஸர் தொழுது கொண்டிருப்பதைக் காண்போம்.

٥٤٩حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ عُثْمَانَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ، يَقُولُ صَلَّيْنَا مَعَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ الظُّهْرَ، ثُمَّ خَرَجْنَا حَتَّى دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَوَجَدْنَاهُ يُصَلِّي الْعَصْرَ فَقُلْتُ يَا عَمِّ، مَا هَذِهِ الصَّلاَةُ الَّتِي صَلَّيْتَ قَالَ الْعَصْرُ، وَهَذِهِ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الَّتِي كُنَّا نُصَلِّي مَعَهُ‏.‏


549 அபூஉமாமா (அஸ்அத் பின் சஹ்ல் பின் ஹுனைஃப்-ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களுடன் லுஹ்ர் தொழுகையைத் (அதன் இறுதி நேரத்தில்) தொழுதோம். பின்னர் (அங்கிருந்து) புறப்பட்டு (மதீனாவின் துனை ஆளுநராயிருந்த) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்கள் அஸ்ர் தொழுகையைத் (அதன் ஆரம்ப நேரத்தில்) தொழுது கொண்டிருப்பதைக் கண்டோம். அப்போது நான் (மரியாதை நிமித்தம்) என் தந்தையின் சகோதரரே! (என்று அழைத்து) இப்போது நீங்கள் தொழுதது எந்தத் தொழுகை (லுஹ்ரா? அல்லது அஸ்ரா?) என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், (இது) அஸ்ர் தொழுகை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இவ்வாறே (ஆரம்பநேரத்தில்) நாங்கள் தொழுபவர்களாக இருந்தோம் என்று பதிலளித்தார்கள்.

٥٥٠حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ حَيَّةٌ، فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي فَيَأْتِيهِمْ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ، وَبَعْضُ الْعَوَالِي مِنَ الْمَدِينَةِ عَلَى أَرْبَعَةِ أَمْيَالٍ أَوْ نَحْوِهِ‏.‏


550 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை தொழுவார்கள். அப்போது சூரியன் மேலேயே இருக்கும்; (அஸ்தமனத்தை நெருங்கும் போது ஏற்படும் நிறமாற்றம் நிகழாமல்) தெளிவாகவே இருக்கும். (நஜ்த் திசையிலிருந்த) மேட்டுப்பாங்கான (கிராமப்) பகுதிகளுக்குச் செல்பவர் அங்கே இருப்பவர்களிடம் சென்றடையும் போது சூரியன் மேலேயே இருக்கும். அந்த மேட்டுப் பாங்கான (கிராமப்) பகுதிகளில் சில மதீனாவிலிருந்து நான்கு மைல் அல்லது (கிட்டத்தட்ட) அந்த அளவு தொலைவில் அமைந்திருந்தன.

٥٥١حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنَّا نُصَلِّي الْعَصْرَ ثُمَّ يَذْهَبُ الذَّاهِبُ مِنَّا إِلَى قُبَاءٍ، فَيَأْتِيهِمْ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ‏.


551 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவோம். பிறகு எங்களில் (மேட்டுப்பாங்கான பகுதிகளில் ஒன்றான) குபா'விற்குச் செல்வோர் அங்கே சென்றடைவர். அப்போதும் சூரியன் மேலேயே இருக்கும்.

(14)باب إِثْمِ مَنْ فَاتَتْهُ الْعَصْرُ
பாடம் : 14

அஸ்ர் தொழுகை(யை அதன் உரிய நேரத்தைவிட்டு) தவறவிட்டவர் அடைந்துகொள்ளும் பாவம்.



٥٥٢حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الَّذِي تَفُوتُهُ صَلاَةُ الْعَصْرِ كَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ ‏"‏‏.‏


552 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உரிய நேரத்தில் தொழாமல்) யாருக்கு அஸ்ர் தொழுகை தவறிவிடுமோ அவர் தம் குடும்பமும் தமது செல்வமும் அழிக்கப்பட்(டு தன்னந் தனியாக விடப்பட்)டவரைப் போன்றவரே ஆவார்.

(15)باب مَنْ تَرَكَ الْعَصْرَ
பாடம் : 15

அஸ்ர் தொழுகையை ஒருவர் விட்டு விடுவது...

٥٥٣حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، قَالَ كُنَّا مَعَ بُرَيْدَةَ فِي غَزْوَةٍ فِي يَوْمٍ ذِي غَيْمٍ فَقَالَ بَكِّرُوا بِصَلاَةِ الْعَصْرِ فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ تَرَكَ صَلاَةَ الْعَصْرِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ ‏"‏‏.‏


553 அபுல்மலீஹ் (ஆமிர் பின் உசாமா-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மேகமூட்டமுடைய ஒரு நாளில் புரைதா பின் ஹஸீப் (ரலி) அவர்களுடன் ஒரு போரில் நாங்கள் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், அஸ்ர் தொழுகையை விரைவாக (அதன் ஆரம்பநேரத்தில்) நிறைவேற்றுங்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் யார் அஸ்ர் தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவருடைய நற்செயல்கள் (அமல்கள்) அழிந்துவிட்டன என்று கூறியுள்ளார்கள் என்றார்கள்.

(16)باب فَضْلِ صَلاَةِ الْعَصْرِ
பாடம் : 16

அஸ்ர் தொழுகையின் சிறப்பு.




٥٥٤حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، قَالَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ، قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَنَظَرَ إِلَى الْقَمَرِ لَيْلَةً ـ يَعْنِي الْبَدْرَ ـ فَقَالَ ‏"‏ إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا الْقَمَرَ لاَ تُضَامُّونَ فِي رُؤْيَتِهِ، فَإِنِ اسْتَطَعْتُمْ أَنْ لاَ تُغْلَبُوا عَلَى صَلاَةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا فَافْعَلُوا ‏"‏‏.‏ ثُمَّ قَرَأَ ‏{‏وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوبِ‏}‏‏.‏ قَالَ إِسْمَاعِيلُ افْعَلُوا لاَ تَفُوتَنَّكُمْ‏.


554 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(முழு நிலவுள்ள ஓர் இரவில்) நபி (ஸல்) அவர்களுடன் (அமர்ந்து கொண்டு) இருந்தோம். அப்போது அவர்கள் முழுநிலவைக் கூர்ந்து பார்த்தபடி, இந்த நிலவை நீங்கள் நெரிசல் இல்லாமல் காண்பது போன்று உங்கள் இறைவனையும் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் வெளிவேலைகள் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப் படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள் என்று கூறிவிட்டு சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள் எனும் (50:39ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

(இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கையில்) இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இஸ்மாயீல் பின் அபீகாலித் (ரஹ்) அவர்கள், (இந்தத் தொழுகைகளை) நீங்கள் தவறாமல் தொழுங்கள் என்று கூறினார்கள்.

٥٥٥حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلاَئِكَةٌ بِاللَّيْلِ وَمَلاَئِكَةٌ بِالنَّهَارِ، وَيَجْتَمِعُونَ فِي صَلاَةِ الْفَجْرِ وَصَلاَةِ الْعَصْرِ، ثُمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ، فَيَسْأَلُهُمْ وَهْوَ أَعْلَمُ بِهِمْ كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي فَيَقُولُونَ تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ، وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ ‏"‏‏.


555 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக உங்களிடையே வருகின்றனர். ஃபஜ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகையிலும் ஒன்று கூடுகின்றார்கள். பிறகு, உங்களிடையே இரவு தங்கியவர்கள் மேலேறி (இறைவனிடம்) செல்கின்றனர். அப்போது மக்களைப் பற்றி மிகவும் அறிந்தவனான அல்லாஹ் அ(வ்வான)வர்களிடம், (பூமியிலுள்ள) என் அடியார்களை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்? என்று கேட்பான். அதற்கு அ(வ்வான)வர்கள், அவர்களை உன்னைத் தொழுகின்ற நிலையில் விட்டுவந்தோம்; அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம் என்று பதிலளிப்பார்கள்.


(17)باب مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْعَصْرِ قَبْلَ الْغُرُوبِ
பாடம் : 17

சூரியன் மறைவதற்கு முன் அஸ்ர் தொழுகையில் ஒரு ரக்அத்தை ஒருவர் அடைந்து கொண்டால் (அவர் தமது தொழுகையை முழுமைப்படுத்திக்கொள் ளட்டும்).

٥٥٦حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا أَدْرَكَ أَحَدُكُمْ سَجْدَةً مِنْ صَلاَةِ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَلْيُتِمَّ صَلاَتَهُ، وَإِذَا أَدْرَكَ سَجْدَةً مِنْ صَلاَةِ الصُّبْحِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَلْيُتِمَّ صَلاَتَهُ ‏"‏‏.‏


556 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யாரேனும் சூரியன் மறைவதற்கு முன் அஸ்ர் தொழுகையில் ஒரு சிரவணக்கத்தை (ஒரு ரக்அத்தை) அடைந்து கொண்டால் அவர் தமது தொழுகையை முழுமைப்படுத்தட்டும்! சூரியன் உதிப்பதற்கு முன் சுப்ஹுத் தொழுகையில் ஒரு சிரவணக்கத்தை (ஒரு ரக்அத்தை) அடைந்து கொண்டால் அவரும் தமது தொழுகையை முழுமைப்படுத்தட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

٥٥٧حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِنَّمَا بَقَاؤُكُمْ فِيمَا سَلَفَ قَبْلَكُمْ مِنَ الأُمَمِ كَمَا بَيْنَ صَلاَةِ الْعَصْرِ إِلَى غُرُوبِ الشَّمْسِ، أُوتِيَ أَهْلُ التَّوْرَاةِ التَّوْرَاةَ فَعَمِلُوا حَتَّى إِذَا انْتَصَفَ النَّهَارُ عَجَزُوا، فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا، ثُمَّ أُوتِيَ أَهْلُ الإِنْجِيلِ الإِنْجِيلَ فَعَمِلُوا إِلَى صَلاَةِ الْعَصْرِ، ثُمَّ عَجَزُوا، فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا، ثُمَّ أُوتِينَا الْقُرْآنَ فَعَمِلْنَا إِلَى غُرُوبِ الشَّمْسِ، فَأُعْطِينَا قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ، فَقَالَ أَهْلُ الْكِتَابَيْنِ أَىْ رَبَّنَا أَعْطَيْتَ هَؤُلاَءِ قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ، وَأَعْطَيْتَنَا قِيرَاطًا قِيرَاطًا، وَنَحْنُ كُنَّا أَكْثَرَ عَمَلاً، قَالَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ هَلْ ظَلَمْتُكُمْ مِنْ أَجْرِكُمْ مِنْ شَىْءٍ قَالُوا لاَ، قَالَ فَهْوَ فَضْلِي أُوتِيهِ مَنْ أَشَاءُ ‏"‏‏.‏


557 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களுடன் நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடுகையில் நீங்கள் (இவ்வுலகில்) வாழும் காலம் அஸ்ரிலிருந்து சூரியன் மறையும் வரை உள்ள நேரம் போன்றதேயாகும்.

தவ்ராத்திற்குரிய (யூத)ர்களுக்கு தவ்ராத் வேதம் அருளப்பெற்றது. நண்பகல் வரை அவர்கள் வேலை செய்து ஓய்ந்தனர். அவர்களில் (ஒவ்வொருவரும்) ஒவ்வொரு கீராத் (கூலி) வழங்கப்பட்டனர். பின்னர் இன்ஜீலுக்குரிய (கிறிஸ்த)வர்களுக்கு இன்ஜீல் வேதம் அருளப்பெற்றது. (நண்பகலிருந்து) அஸ்ர் வரை வேலை செய்து அவர்களும் ஓய்ந்தனர். அவர்களில் (ஒவ்வொருவரும்) ஒவ்வொரு கீராத்' (கூலி) வழங்கப்பட்டனர். பிறகு நாம் குர்ஆன் அருளப்பெற்றோம். (அஸ்ரிலிருந்து) சூரியன் மறையும் வரை நாம் வேலை செய்தோம் .இரண்டிரண்டு கீராத் நாம் வழங்கப்பெற்றோம். எனவே வேதம் அருளப்பெற்ற அவ்விரு சமுதாயத்தாரும், எங்கள் இறைவா! இவர்களுக்கு இரண்டிரண்டு கீராத்'கள் வழங்கியுள்ளாய். எங்களுக்கோ ஒவ்வொரு கீராத் வழங்கியுள்ளாயே?! நாங்கள் (இவர்களைவிட) அதிக வேலைசெய்திருந்தோமே? என்று வினவினர். அதற்கு வல்லமையும் மாண்பும் உடையோனாகிய அல்லாஹ், உங்களின் கூலியில் ஏதேனும் நான் (குறைத்து) உங்களுக்கு அநீதி இழைத்திருக்கிறேனா? என்று கேட்டான். அவர்கள் இல்லை என்று கூறினர். அதற்கு அல்லாஹ், இது எனது அருட்கொடை; நான் நாடியவர்களுக்கு அதை வழங்குகிறேன் என்று கூறினான்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

٥٥٨حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏ "‏ مَثَلُ الْمُسْلِمِينَ وَالْيَهُودِ وَالنَّصَارَى كَمَثَلِ رَجُلٍ اسْتَأْجَرَ قَوْمًا يَعْمَلُونَ لَهُ عَمَلاً إِلَى اللَّيْلِ، فَعَمِلُوا إِلَى نِصْفِ النَّهَارِ، فَقَالُوا لاَ حَاجَةَ لَنَا إِلَى أَجْرِكَ، فَاسْتَأْجَرَ آخَرِينَ فَقَالَ أَكْمِلُوا بَقِيَّةَ يَوْمِكُمْ، وَلَكُمُ الَّذِي شَرَطْتُ، فَعَمِلُوا حَتَّى إِذَا كَانَ حِينَ صَلاَةِ الْعَصْرِ قَالُوا لَكَ مَا عَمِلْنَا‏.‏ فَاسْتَأْجَرَ قَوْمًا فَعَمِلُوا بَقِيَّةَ يَوْمِهِمْ حَتَّى غَابَتِ الشَّمْسُ، وَاسْتَكْمَلُوا أَجْرَ الْفَرِيقَيْنِ ‏"‏‏.‏


558 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரின் நிலை, (குறிப்பிட்ட தொகைக் கூலிக்கு காலையிலிருந்து) இரவு வரை, தமக்காக வேலை செய்யும்படி ஒரு மனிதரால் அமர்த்தப்பட்ட கூட்டத்தாரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. (அவர் முதலில் ஒரு பிரிவினரை கூலிக்கு அமர்த்தினார்;) அவர்கள் நண்பகல் வரை வேலை செய்துவிட்டு, எங்களுக்கு உமது கூலி தேவையில்லை என்று கூறிவிட்டனர். பிறகு அந்த மனிதர் இன்னொரு பிரிவினரைக் கூலிக்கு அமர்த்தி, இன்று எஞ்சியுள்ள நேரத்தைப் பூர்த்தியாக்குங்கள்! (முதலாவது பிரிவினருக்கு நான் தருவதாகப் பேசியக் கூலியை உங்களுக்குத் தருகிறேன்) என்றார். அதன்படி அவர்கள் வேலை செய்ய(த் தொடங்கி) அஸ்ர் தொழுகையின் நேரம் வந்த போது, உமக்காக நாங்கள் செய்த வேலை (வீணாகட்டும்) என்றனர். எனவே அந்த மனிதர் மற்றொரு பிரிவினரை வேலைக்கு அமர்த்தினார். அவர்கள் அன்று (அஸ்ரிலிருந்து) சூரியன் மறையும் வரை உள்ள எஞ்சிய நேரத்தில் வேலை செய்தனர். இதனால் அவர்கள் முதலிரண்டு பிரிவினரின் கூலியையும் (சேர்த்து) முழுமையாகப் பெற்றுக் கொண்டனர்.

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கின் றார்கள்.

(18)باب وَقْتِ الْمَغْرِبِ
பாடம் : 18

மஃக்ரிப் தொழுகையின் நேரம்.

وَقَالَ عَطَاءٌ يَجْمَعُ الْمَرِيضُ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ


நோயாளி, மஃக்ரிப் தொழுகையையும் இஷாத் தொழுகையையும் சேர்த்து (ஜம்உசெய்து) தொழுது கொள்ளலாம் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

٥٥٩حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ، قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنَا أَبُو النَّجَاشِيِّ، صُهَيْبٌ مَوْلَى رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ سَمِعْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ، يَقُولُ كُنَّا نُصَلِّي الْمَغْرِبَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَنْصَرِفُ أَحَدُنَا وَإِنَّهُ لَيُبْصِرُ مَوَاقِعَ نَبْلِهِ‏.‏


559 ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் மஃக்ரிப் தொழுகை தொழுவோம். பிறகு எங்களில் ஒருவர் (அம்பு எய்தால்) அவர் திரும்பிச் செல்லும் போது நிச்சயம் தனது அம்பு விழுமிடத்தை அவரால் பார்க்க முடியும். (அந்த அளவு வெளிச்சமிருக்க, ஆரம்பநேரத்திலேயே மஃக்ரிப் தொழுவோம்).

٥٦٠حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ، قَالَ قَدِمَ الْحَجَّاجُ فَسَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ فَقَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي الظُّهْرَ بِالْهَاجِرَةِ، وَالْعَصْرَ وَالشَّمْسُ نَقِيَّةٌ، وَالْمَغْرِبَ إِذَا وَجَبَتْ، وَالْعِشَاءَ أَحْيَانًا وَأَحْيَانًا، إِذَا رَآهُمُ اجْتَمَعُوا عَجَّلَ، وَإِذَا رَآهُمْ أَبْطَوْا أَخَّرَ، وَالصُّبْحَ كَانُوا ـ أَوْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّيهَا بِغَلَسٍ‏.


560 முஹம்மத் பின் அம்ர் பின் ஹசன் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் (மதீனாவின் ஆட்சியராக) வந்தார். (அவர் தொழுகைகளைத் தாமதப்படுத்தி தொழுவித்தார்) அப்போது நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் (தொழுகை நேரம் பற்றிக்) கேட்டோம். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் நண்பகலில் லுஹ்ர் தொழுவார்கள். சூரியன் (வெளிச்சமோ வெப்பமோ குன்றாமல்) தெளிவாக இருக்கும் போது அஸ்ர் தொழுவார்கள். இஷாவை சில நேரம் (பின்னேரத்திலும்) சில நேரம் (முன்னேரத்திலுமாக சூழ் நிலைக்குத் தக்கவாறு) தொழுவார்கள். மக்கள் முன்னேரத்திலேயே குழுமியிருக்கக் கண்டால் ஆரம்ப நேரத்திலேயே தொழுவார்கள். மக்கள் தாமதமாகக் கண்டால் பிற்படுத்துவார்கள். சுப்ஹுத் தொழுகையை மக்கள்' அல்லது நபி (ஸல்) அவர்கள்' இருளிருக்கவே (காலை வெளிச்சம் வருவதற்கு முன்பே) தொழுபவர்களாய் இருந்தார்கள்.

٥٦١حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ، قَالَ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الْمَغْرِبَ إِذَا تَوَارَتْ بِالْحِجَابِ‏.‏


561 சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

சூரியன் அடிவானில் மறைந்ததும் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மஃக்ரிப் தொழுகையைத் தொழுபவர்களாக இருந்தோம்.

٥٦٢حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله عليه وسلم سَبْعًا جَمِيعًا وَثَمَانِيًا جَمِيعًا‏.‏


562 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மஃக்ரிபையும் இஷாவையும்) ஏழு ரக்அத்களாக ஒரே நேரத்திலும், (லுஹ்ரையும் அஸ்ரையும்) எட்டு ரக்அத்களாக ஒரே நேரத்திலும் (ஜம்உ செய்து) தொழு(வித்)தார்கள்.

(19)باب مَنْ كَرِهَ أَنْ يُقَالَ لِلْمَغْرِبِ الْعِشَاءُ
பாடம் : 19

மஃக்ரிப் தொழுகையை இஷாத் தொழுகை எனக் கூறலாகாது.

٥٦٣حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ ـ هُوَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو ـ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنِ الْحُسَيْنِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ الْمُزَنِيُّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ تَغْلِبَنَّكُمُ الأَعْرَابُ عَلَى اسْمِ صَلاَتِكُمُ الْمَغْرِبِ ‏"‏‏.‏ قَالَ الأَعْرَابُ وَتَقُولُ هِيَ الْعِشَاءُ‏.‏


563 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களது மஃக்ரிப் தொழுகையின் பெயர் விஷயத்தில் உங்களை கிராமப்புற அரபியர் மிகைத்துவிடவேண்டாம். கிராமப்புற அரபியர் அதனை இஷா' என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

இதை அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் அல்முஸ்னீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

(20)باب ذِكْرِ الْعِشَاءِ وَالْعَتَمَةِ وَمَنْ رَآهُ وَاسِعًا
பாடம் : 20

இஷாத் தொழுகையை அத்தமா' எனவும் குறிப்பிடலாம்

قَالَ أَبُو هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَثْقَلُ الصَّلاَةِ عَلَى الْمُنَافِقِينَ الْعِشَاءُ وَالْفَجْرُ».

وَقَالَ: «لَوْ يَعْلَمُونَ مَا فِي الْعَتَمَةِ وَالْفَجْرِ». قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَالاِخْتِيَارُ أَنْ يَقُولَ الْعِشَاءُ لِقَوْلِهِ تَعَالَى: {وَمِنْ بَعْدِ صَلاَةِ الْعِشَاءِ}. وَيُذْكَرُ 

عَنْ أَبِي مُوسَى قَالَ كُنَّا نَتَنَاوَبُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ صَلاَةِ الْعِشَاءِ فَأَعْتَمَ بِهَا.

وَقَالَ ابْنُ عَبَّاسٍ وَعَائِشَةُ أَعْتَمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْعِشَاءِ.

وَقَالَ بَعْضُهُمْ عَنْ عَائِشَةَ أَعْتَمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْعَتَمَةِ.

وَقَالَ جَابِرٌ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الْعِشَاءَ.

وَقَالَ أَبُو بَرْزَةَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤَخِّرُ الْعِشَاءَ.

وَقَالَ أَنَسٌ أَخَّرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِشَاءَ الآخِرَةَ.

وَقَالَ ابْنُ عُمَرَ وَأَبُو أَيُّوبَ وَابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَغْرِبَ وَالْعِشَاءَ

நயவஞ்சகர் (முனாஃபிக்)களுக்கு பெரும் சுமையான தொழுகை இஷாவும் ஃபஜ்ருமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அத்தமாவிலும்( இஷா) ஃபஜ்ரிலும் உள்ள (மகத்துவத்)தை மக்கள் அறிவார்களானால் (அவ்விரண்டுக்கும் தவழ்ந்தாவது வந்து சேர்ந்துவிடுவார்கள்) என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (காண்க : ஹதீஸ் எண்-615)

அபூஅப்தில்லாஹ் புகாரீ(யாகிய நான்) கூறுகின்றேன்:

(24:58ஆவது வசனத்தில்) அல்லாஹ், இஷாத் தொழுகைக்குப் பின்... என்று குறிப்பிடுவதால் இஷா' எனக் குறிப்பிடுவதே சிறப்பாகும்.

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகின்றது:

நாங்கள் இஷாத் தொழுகையின் போது நபி (ஸல்) அவர்களிடம் முறை வைத்துச் செல்பவர்களாக இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் இஷாவை அத்தமாவாக (அதாவது பிற்படுத்தித் தொழு(வித்)தார்கள். (காண்க : ஹதீஸ் எண்-567)

இப்னு அப்பாஸ் (ரலி), ஆயிஷா (ரலி), ஆகியோர் கூறுகின்றனர் :

நபி (ஸல்) அவர்கள் இஷாவை அத்தமாவாக (பிற்படுத்தி)த் தொழுதார்கள்.

அத்தமாதொழுகையை நபி (ஸல்) அவர்கள் பிற்படுத்தித் தொழுதார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இஷாவை (சிலநேரம் முன்னேரத்திலும்) தொழுபவர்களாக இருந்தார்கள். (காண்க: ஹதீஸ் எண்-560)

அபூபர்ஸா (நள்ரா பின் உபைத்-ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இஷாவைப் பிற்படுத்து (வதையே விரும்பு)வார்கள். (காண்க: ஹதீஸ் எண்-547)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இறுதி இஷாவை பிற்படுத்துபவர்களாக இருந்தார்கள்.

இப்னு உமர் (ரலி), அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கூறுகின் றார்கள்:

நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிபையும் இஷாவையும் தொழுதார்கள்.

(மேற்கண்ட அறிவிப்புகளிலிருந்து இஷாத் தொழுகையை அத்தமா தொழுகை எனவும் இஷாத் தொழுகை எனவும் கூறலாம் என்று தெரிகின்றது).

٥٦٤حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ سَالِمٌ أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ، قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةً صَلاَةَ الْعِشَاءِ ـ وَهْىَ الَّتِي يَدْعُو النَّاسُ الْعَتَمَةَ ـ ثُمَّ انْصَرَفَ فَأَقْبَلَ عَلَيْنَا فَقَالَ ‏ "‏ أَرَأَيْتُمْ لَيْلَتَكُمْ هَذِهِ فَإِنَّ رَأْسَ مِائَةِ سَنَةٍ مِنْهَا لاَ يَبْقَى مِمَّنْ هُوَ عَلَى ظَهْرِ الأَرْضِ أَحَدٌ ‏"‏‏.‏

564 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களால் அத்தமா' என்றழைக்கப்பட்டு வந்த இஷாத் தொழுகையை ஓர் (நாள்) இரவில் எங்களுக்கு (முன்னின்று) நடத்தினார்கள். தொழுது முடித்து எங்களை முன்னோக்கி (எழுந்து நின்று), இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இன்றிலிருந்து (சரியாக) ஒரு நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்போது பூமியின் மேல் இருக்கக் கூடியவர்களில் ஒருவர்கூட அப்போது எஞ்சியிருக்க மாட்டார்கள் என்று கூறினார்கள்.


No comments:

Post a Comment