8 . இமாம் தொழுகையில் ருகூவில் இருக்கும் போது
சேருபவர் கைகளை கட்டி விட்டு ருகூவு செய்கிறார்கள். இது சரியா?
ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது
ஒருவர் தாமதமாக வந்தால் இமாம் எந்த நிலையில் இருக்கிறோரோ அந்த நிலையில் அல்லாஹு
அக்பர் என்று கூறி சேர்ந்து கொள்ள வேண்டும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم
قَالَ " إِذَا سَمِعْتُمُ الإِقَامَةَ فَامْشُوا إِلَى الصَّلاَةِ، وَعَلَيْكُمْ
بِالسَّكِينَةِ وَالْوَقَارِ وَلاَ تُسْرِعُوا، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا
فَاتَكُمْ فَأَتِمُّوا "
நீங்கள் இகாமத் சொல்வதைச் செவியுற்றால்
தொழுகைக்குச் செல்லுங்கள்; அப்போது நீங்கள் அமைதியாகவும், கண்ணியமாகவும் செல்லுங்கள்; அவசரமாகச் செல்லாதீர்கள்; உங்களுக்குக் கிடைத்ததைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள் என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 636, முஸ்லிம் 1053
தாமதமாக வந்தாலும் தொழுகையில் நுழைவதற்கு
அல்லாஹு அக்பர் என்று கூறிய பின்னரே சேர வேண்டும்.
عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
" مِفْتَاحُ الصَّلاَةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا
التَّسْلِيمُ "
தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். அதன்
துவக்கம் தக்பீர் (அல்லாஹு அக்பர்) ஆகும். அதன் முடிவு தஸ்லீம் (அஸ்ஸலாமு
அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்) ஆகும் என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: திர்மிதீ 3, அபூதாவூத் 56, இப்னுமாஜா 271, அஹ்மத் 957
( இந்த ஹதீஸ் ஹஸன் தரத்தில் அமைந்தது )
கைகளைக் கட்டிய பின்னர் தான் இமாம் இருக்கும்
நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்கு ஆதாரம் இல்லை.
No comments:
Post a Comment