33. வேண்டாத நிபந்தனைகள்
عائشة
رضي الله عنها دخل علي رسول الله صلى الله
عليه وسلم فذكرت له فقال رسول الله صلى الله عليه وسلم اشتري وأعتقي فإنما الولاء لمن
أعتق ثم قام النبي صلى الله عليه وسلم من العشي فأثنى على الله بما هو أهله ثم قال ما بال أناس يشترطون
شروطا ليس في كتاب الله من اشترط شرطا ليس في كتاب الله فهو باطل وإن اشترط مائة شرط
شرط الله أحق وأوثق
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள்
என்னிடம் வந்தார்கள்: (பரீரா என்ற அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்வது
சம்பந்தமான) விஷயத்தை அவர்களிடம் சொன்னேன்.
நபி(ஸல்) அவர்கள் 'நீ விலைக்கு வாங்கி விடுதலை செய்! (அந்த அடிமை மரணித்த பின்)
அவருக்கு வாரிசாகும் உரிமை, விடுதலை செய்தவருக்குத் தான்!'
என்று கூறினார்கள்.
பிறகு,
மாலை நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் எழுந்து அல்லாஹ்வை அவனுடைய
தகுதிக்கேற்பப் புகழ்ந்து, 'அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளைக் கூறுபவர்களுக்கு
என்ன நேர்ந்தது? யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களோ
அவர்களின் அந்த நிபந்தனை வீணானது; (செல்லாதது;) அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனைதான்
நிறைவேற்றத் தக்கதும் உறுதியானதும் (கட்டுப்படுத்தும் வலிமையுடையதும்) ஆகும்!'
எனக் கூறினார்கள்.
நூல் : புஹாரி
( 2155 ) முஸ்லிம் ( 1504 ) திர்மிதீ ( 1256 ) அபூதாவூத் ( 3929 ) முஅத்தா மாலிக்
( 1519 )
விளக்கம் :
இஸ்லாமிய மார்க்கத்தைத் தந்தவன்
அல்லாஹ் ! அவன் தான் இந்த மார்க்கம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் முடிவு செய்ய வேண்டும்.
குறிப்பாக வணக்க வழிபாடு முறைகள் , தடை செய்யப்பட்டவை, அனுமதிக்கப்பட்டவை இவற்றை அவனே
குறிப்பிட வேண்டும்.
அல்லாஹ் குறிப்பிடாத விதிகளைப்
புதிதாக யாரேனும் உருவாக்கினால் அவை எக்காலத்திலும் செல்லாது . இவ்வாறு செய்வது மாபெரும்
குற்றமாகும். இறைவன் நமக்குத் தந்து இருக்கும் திருமறை குர் ஆன் வேதத்தில் இல்லாத அல்லது
அவனது தூதரான முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் கூறாத நிபந்தனைகளை விதிப்பது இஸ்லாமியச்
சட்டப்படி குற்றமாகும்.
(உ + த )
தொழுகைக்கு வருபவர்கள் இப்படி
தான் தொழுகைக்கு வரவேண்டும் என்று பள்ளிவாசல்களின் முகப்பில் எழுதப்படிருக்கிறது “
நான்கு மத் ஹபைப் பின்பற்ற வேண்டும் , தலையில் தொப்பி அணிந்து வரவேண்டும் , சப்தமிட்டு
ஆமீன் கூறக் கூடாது , இரண்டாவது ஜமா அத் வைக்க கூடாது விரலசைத்துத் தொழுக் கூடாது என்ற
நிபந்தனைகள் பள்ளிக்கு வருபவர்களுக்கு விதிக்கப்படுகிறது.
இந்த நிபந்தனைகளில் எந்த ஒன்றையும்
திருக்குர் ஆனோ அதன் விளக்கவுரையாக உள்ள நபிமொழிகளோ கூறவில்லை. இவ்வாறு இஸ்லாத்தின்
அடிப்படை நூல்கள் விதிக்காத எந்த நிபந்தனைகளை யார் விதித்தாலும் அது நிராகரிக்கப்படும்
, நிராகரிக்க வேண்டும்.
No comments:
Post a Comment