34 . நரகத்திலிருந்து பாதுகாப்பு
عن
عدي بن حاتم عن النبي - ص 75 - صلى الله عليه وسلم قال اتقوا النار ولو بشق تمرة
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம்) செய்து
நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.
நூல் : புஹாரி ( 1417 ) முஸ்லிம் ( 1016 ) நஸாயீ ( 2552 ) அஹ்மத்
( 17782 ) தாரமீ ( 1657 )
விளக்கம் :
மறுமை நாளில் வெற்றி பெறுவதற்கு
இஸ்லாம் பல வழிகளைக் காட்டியிருக்கிறது அதில் முக்கியமானதாக தர்மத்தை இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது
பெரு நாள் தினத்தன்று நபி ஸல் அவர்கள் அதிகம் வலியுறுத்தியது தர்மமாகும்.
“ பெண்கள் அதிகம் நரகத்தில்
இருப்பதை நான் கண்டேன் எனவே நீங்கள் உங்கள் ஆபரணத்திலிருந்தாவது தர்மம் செய்யுங்கள்
“ என்று நபிகளார் குறிப்பிட்டது நரகத்தை விட்டுப் பாதுகாக்கும் கவசமாக இந்த தர்மம்
இருப்பதைத் தெளிவுபடுத்துகிறது.
பெரியலவில் இருந்தால் தான் தர்மம்
செய்ய வேண்டும் என்பதில்லை குறைந்த அளவு தர்மம் கூட மறுமை நாளில் நரகத்திலிருந்து நம்மைப்
பாதுகாத்திடும் .
நாம் மனத் தூய்மையோடு செய்யும்
குறைந்தளவு தர்மம் மறுமை வெற்றிக்கு வித்திடும் என்பதால் தான் நபி ஸல் அவர்கள் பேரீச்சம்
பழத்தின் ஒர் துண்டையேனும் தர்மம் செய்து நரகை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று
குறிப்பிட்டுள்ளார்கள்.
No comments:
Post a Comment