Wednesday, November 23, 2016

நில மோசடி



35.  நில மோசடி


أَنَّ سَعِيدَ بْنَ زَيْدٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنْ ظَلَمَ مِنَ الأَرْضِ شَيْئًا طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ ‏"‏‏.



இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார்.

என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

நூல் : புஹாரி ( 2452 ) முஸ்லிம் ( 3121 ) திர்மிதீ ( 1402 ) அபூதாவூத் ( 4205 ) இப்னு மாஜா ( 2591 ) அஹ்மத் ( 1586 )



விளக்கம் :

பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள இன்று சிறந்த முதலீடாகக் கருதப்படுவது நிலத்தை வாங்கி விற்பதாகும் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பரவலாக இந்த வியாபாரம் நடைபெறுகிறது.


ஆனால் இந்த வியாபாரத்தில் பெரும்பாலும் உண்மையிருப்பதில்லை. அதிகமதிகம் மோசடிகள் நடைபெறுகின்றன. அடுத்தவனின் நிலத்தை தன் நிலமாகக் கூறி விற்பனை செய்வது. அடுத்தவனது நிலத்தின் சில  பகுதிகளை மட்டும் ஆக்கிரமித்து விற்பனை செய்வது அல்லது தனக்கு சொந்தமாக்கிக் கொள்வது என்று ஏராளமான நில மோசடிகள் நடைபெறுகின்றன.



அடுத்தவனின் நிலத்தில் சிறிய அளவு எடுத்துக் கொண்டாலும் அவனுக்கு மறுமை நாளில் கிடைக்கும் தண்டனை மிகப் பெரியதாகும். ஏழு நிலத்தைக் கழுத்தில் தொங்க விடப்பட்டு அவனுக்கு தண்டனை கொடுக்கப்படும் . மேலும் நபி ஸல் அவர்கள் கூறினார்கள். “ யாராவது வாதத் திறமையால் அடுத்தவனின் பொருளைத் தனக்குரியதாக்கிக் கொண்டால் அவன் நரக நெருப்பின் ஒரு துண்டை தனக்குரியதாக்கிக் கொள்கிறான் “ என்று எச்சரிக்கை செய்துள்ளார்கள் 

( பார்க்க புஹாரி 2458 )

No comments:

Post a Comment