மத்ஹபுகளை பின்பற்றாதீர்கள்; குர் ஆன் ஹதீஸை மட்டுமே பின்பற்றுங்கள்:
- இமாம் ஷாஃபியின் கூற்று!
وقد قال الشافعي إذا صح الحديث فهو مذهبي (المجموع - (1 / 92)
இமாம் ஷாஃபி அவர்கள் கூறினார்கள் : ஹதீஸ் ஸஹீஹாக இருக்குமென்றால் அதுவே என்னுடைய மத்ஹபாகும்.
(அல்மஜ்மூ பாகம் :1 பக்கம் : 92)
الشافعي يقول مثل الذي يطلب العلم بلا حجة كمثل حاطب ليل يحمل حزمة حطب وفيه أفعى تلدغه وهو لا يدري ( المدخل إلى السنن الكبرى ج: 1 ص: 211)
இமாம் ஷாஃபி அவர்கள் கூறுகிறார்கள். ஆதாரம் இல்லாமல் கல்வியைத் தேடுபவனின் உதாரணம் இரவில் விறகு சுமப்பவனின் உதாரணத்தைப் போன்றதாகும். அவன் ஒரு கட்டு விறகைச் சுமக்கின்றான். அதில் ஒரு கடும் விஷப்பாம்பு இருக்கிறது. அவன் அறியாத நேரத்தில் அவனைத் தீண்டிவிடும். (இது போன்றுதான் ஆதாரம் இல்லாமல் கல்வியைத் தேடுபவனை அக்கல்வி அவன் அறியாத விதத்தில் அவனை வழிதவறச் செய்துவிடும்)
(மத்ஹல் பாகம் : 1 பக்கம் : 211)
மேலும் இமாம் ஷாஃபி அவர்கள் ஸஹீஹான ஹதீஸ்களை மட்டும்தான் ஆதாரமாகக் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.
عن عبد الله عن النبي صلى الله عليه وسلم قلنا هذا مأخوذ مأخوذ حتى قدم علينا الشافعي فقال ما هذا إذا صح الحديث عن رسول الله صلى الله عليه وسلم فهو مأخوذ به لا يترك لقول غيره قال فنبهنا لشيء لم نعرفه يعني نبهنا لهذا ((مختصر المؤمل ج: 1 ص: 59)
ஷாஃபி இமாம் அவர்கள் எங்களிடம் வருகை தருகின்ற வரை நாங்கள் நபியவர்கள் சொன்னதாக எங்களுக்கு கூறப்படுமென்றால் ''இது எடுத்துக் கொள்ளப்படவேண்டியது'' ''இது எடுத்துக் கொள்ளப்படவேண்டியது'' என்று கூறுவோம். ஷாஃபி அவர்கள் '' என்ன இது? நபியவர்களிடமிருந்து வரக்கூடிய ஹதீஸ் ஸஹீஹாக இருக்குமென்றால் அதுதான் எடுத்துக் கொள்ளப்படவேண்டும். எவருடைய சொல்லிற்காகவும் அது விடப்படக் கூடாது'' என்று கூறினார்கள். நாங்கள் அறியாத ஒன்றை எங்களுக்கு உணர்த்தினார்கள்.
(முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 59)
وفي رواية روى حديثا فقال له قائل أتأخذ به فقال له أتراني مشركا أو ترى في وسطي زنارا أو تراني خارجا من كنيسة نعم آخذ به آخذ به آخذ به وذلك الفرض على كل مسلم (مختصر المؤمل ج: 1 ص: 58)
ஷாஃபி அவர்கள் ஒரு ஹதீஸை அறிவித்தார்கள். அப்போது ஒருவர் ஷாஃபி அவர்களிடம் நீங்கள் இதனை ஆதாரமாக எடுப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு இமாம் அவர்கள் '' நீ என்னை இணைவைப்பாளன் என்று நினைக்கிறாயா? அல்லது என்னுடைய இடுப்பில் (நெருப்பு வணங்கிகளுக்குரிய) இடுப்பு வாரைப் பார்க்கிறாயா? அல்லது தேவாலாயத்திலிருந்து வெளியேறிய (கிறிஸ்தவன்) என்று நினைக்கிறாயா? ஆம். நான் அதை பற்றிப் பிடிப்பேன். அதைப் பற்றிப் பிடிப்பேன். அதைப் பற்றிப் பிடிப்பேன். இது அனைத்து முஸ்லிம்களின் மீதும் கட்டாயக் கடமையாகும் என்று கூறினார்கள்.
முஹ்தஸர் அல்முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 58)
قال وسمعت الشافعي يقول وروى حديثا قال له رجل تأخذ بهذا يا أبا عبد الله فقال ومتى رويت عن رسول الله صلى الله عليه وسلم حديثا صحيحا فلم آخذ به فأشهدكم أن عقلي قد ذهب وأشار بيده إلى رأسه (مختصر المؤمل ج: 1 ص: 57)
ஷாஃபி அவர்கள் ஒரு ஹதீஸை அறிவித்தார்கள். அப்போது ஒருவர் ஷாஃபி அவர்களிடம் நீங்கள் இதனை ஆதாரமாக எடுப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு இமாம் ஷாஃபி அவர்கள் ''எப்போது நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸ் அறிவிக்கப்பட்டு நான் அதை பற்றிப் பிடிக்க வில்லையோ (அப்போது) என்னுடைய அறிவு மழுங்கிவிட்டது என்று நான் உங்களிடம் சான்று பகர்கிறேன்'' என்று கூறி தன்னுடைய கரத்தால் தம்முடைய தலையை நோக்கி சுட்டிக் காட்டினார்கள்.
ஷாஃபி அவர்கள் ஒரு ஹதீஸை அறிவித்தார்கள். அப்போது ஒருவர் ஷாஃபி அவர்களிடம் நீங்கள் இதனை ஆதாரமாக எடுப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு இமாம் ஷாஃபி அவர்கள் ''எப்போது நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸ் அறிவிக்கப்பட்டு நான் அதை பற்றிப் பிடிக்க வில்லையோ (அப்போது) என்னுடைய அறிவு மழுங்கிவிட்டது என்று நான் உங்களிடம் சான்று பகர்கிறேன்'' என்று கூறி தன்னுடைய கரத்தால் தம்முடைய தலையை நோக்கி சுட்டிக் காட்டினார்கள்.
(முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 57)
إذا وجدتم عن رسول الله صلى الله عليه وسلم سنة خلاف قولي فخذوا السنة ودعوا قولي فإني أقول بها (مختصر المؤمل ج: 1 ص: 57)
''என்னுடைய சொல்லுக்கு மாற்றமாக நீங்கள் ஒரு நபியவர்கள் வழிகாட்டுதலை பெற்றுக் கொண்டால் நீங்கள் நபியவர்களின் வழிகாட்டுதலை எடுத்துக் கொள்ளுங்கள். என்னுடைய சொல்லை விட்டு விடுங்கள். நிச்சயமாக நான் நபியுடைய வழிகாட்டுதலைக் கொண்டு கூறுபவன்தான்.
(முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 57)
كل مسألة تكلمت فيها بخلاف السنة فأنا راجع عنها في حياتي وبعد مماتي (مختصر المؤمل ج: 1 ص: 57)
என்னுடைய வாழ்விலும், என்னுடைய மரணத்திற்கு பின்பும் எந்த மார்க்கச் சட்டங்களிலெல்லாம் அதிலே நான் நபி வழிக்கு மாற்றமாக பேசியுள்ளேனோ அத்தகைய மார்க்கச் சட்டத்தை விட்டும் நான் திரும்பக் கூடியவன்தான்.
(முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 57)
قال الشافعي كل ما قلت وكان قول رسول الله صلى الله عليه وسلم خلاف قولي مما يصح فحديث النبي صلى الله عليه وسلم أولى فلا تقلدوني (مختصر المؤمل ج: 1 ص: 58)
நான் கூறிய ஒவ்வொன்றும் நபியவர்களிடமிருந்து வரக்கூடிய ஸஹீஹான ஹதீஸிற்கு மாற்றமாக இருக்குமென்றால் நபியவர்களுடைய ஹதீஸதான் ஏற்றமானதாகும். என்னை கண்மூடிப் பின்பற்றாதீர்கள்.
(முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 58)
عن أبي ثور قال سمعت الشافعي يقول كل حديث عن النبي صلى الله عليه وسلم فهو قولي وإن لم تسمعوه مني (مختصر المؤمل ج: 1 ص: 58)
நபியவர்களிடமிருந்து வரக்கூடிய ஒவ்வொரு ஹதீஸýம்தான் என்னுடைய கருத்தாகுதம். அதை நீங்கள் என்னிடமிருந்து கேட்கவில்லையென்றாலும் சரியே (முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 58)
நபியவர்களிடமிருந்து வரக்கூடிய ஒவ்வொரு ஹதீஸýம்தான் என்னுடைய கருத்தாகுதம். அதை நீங்கள் என்னிடமிருந்து கேட்கவில்லையென்றாலும் சரியே (முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 58)
وقال الشافعي من تبع سنة رسول الله صلى الله عليه وسلم وافقته ومن غلط فتركها خالفته صاحبي اللازم الذي لا أفارقه الثابت عن رسول الله صلى الله عليه وسلم (مختصر المؤمل ج: 1 ص: 58)
யார் நபிவழியைப் பின்பற்றுகிறாரோ நான் அவரோடு ஒன்று படுகிறேன். எவன் தடுமாறி அதனை விட்டுகிறானோ அவனோடு நான் மாறுபடுகிறேன். நான் விட்டுப் பிரியாத என்னுடைய உறுதியான தோழன் நபியவர்களிடமிருந்து வருகின்ற உறுதியான நபிமொழிகள்தான்.
(முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 58)
وسمعت الشافعي يقول ما من أحد إلا وتذهب عليه سنة لرسول الله ( صلى الله عليه وسلم ) وتعزب عنه فمهما قلت من قول أو أصلت من أصل فيه عن رسول الله ( صلى الله عليه وسلم ) خلاف ما قلت فالقول ما قال رسول الله ( صلى الله عليه وسلم ) وهو قولي قال وجعل يردد هذا الكلام ( تاريخ دمشق - (51 / 389)
இமாம் ஷாஃபி அவர்கள் கூறினார்கள் : நபியவர்கள் வழிமுறை கிடைக்கும் போது அதைவிட்டும் தூரமாகுபவர் யாரும் இல்லை. நான் நபியவர்களின் கூற்றுக்கு மாற்றமாக ஏதாவது ஒரு கருத்தைக் கூறினால் அல்லது ஏதாவது ஒரு அடிப்படையை அமைத்தால் நபியவர்கள் கூறியதுதான் சட்டமாகும். அதுதான் என்னுடைய கருத்துமாகும். இதனை அவர்கள் திரும்பத்திரும்ப கூறிக் கொண்டிருந்தார்கள்.
(தாரீஹ் திமிஷ்க் பாகம் : 51 பக்கம் : 389)
سمعت الشافعي يقول كل حديث عن النبي ( صلى الله عليه وسلم ) فهو قولي وإن لم تسمعوه مني (تاريخ دمشق - (51 / 389)
நபியவர்களிடமிருந்து வரக்கூடிய ஒவ்வொரு ஹதீஸும் அதுதான் என்னுடைய கருத்தாகும். அதை நீங்கள் என்னிடமிருந்து செவியேற்காவிட்டாலும் சரியே
(தாரீஹ் திமிஷ்க் பாகம் : 51 பக்கம் : 389)
قال البويطي سمعت الشافعي يقول لقد ألفت هذه الكتب ولم آل جهدا ولا بد أن يوجد فيها الخطأ لأن الله تعالى يقول وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا فما وجدتم في كتبي هذه مما يخالف الكتاب والسنة فقد رجعت عنه (مختصر المؤمل ج: 1 ص: 60)
ஷாஃபி இமாம் அவர்கள் கூறினார்கள் '' நான் இந்த புத்தகங்களை தொகுத்துள்ளேன். நான் ஆய்வு செய்வதில் குறைவைக்கவில்லை. என்றாலும் இதில் கட்டாயம் தவறுகள் பெற்றுக் கொள்ளப்படும். ஏனென்றால் அல்லாஹ் அல்லாதவர்களிமிருந்து வருமென்றால் அதிலே அவர்கள் அதிகமான முரண்பாடுகளை பெற்றிருப்பார்கள் '' என்று தன் திருமறையில் கூறுகிறான். என்னுடைய இந்த புத்தகங்களிலே திருமறைக்குஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமாக நீங்கள் கண்டால் நிச்சயமாக நான் அதை விட்டும் திரும்பிவிட்டேன். (அதாவது என்னுடைய கருத்து தவறானது. நபிவழிதான் சரியானது என்பதாகும்).
(முஹ்தசர் முஅம்மல் பாகம் : 1 பக்கம் : 60)
وقال الشافعي: أجمع الناس على أن من استبانت له سنة عن رسول الله صلى الله عليه وسلم لم يكن له أن يدعها لقول أحد من الناس (إعلام الموقعين عن رب العالمين - (2 / 325)
யாருக்கு நபியவர்களின் சுன்னத் தெளிவாகிறதோ அவர் மக்களில் யாருடைய சொல்லிற்காகவும் அதனை விடுவது அவருக்கு தகுதியானதில்லை என்ற கருத்தில் மக்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்.
(இஃலாமுல் முவக்கிஈன் பாகம் : 2 பக்கம் : 325)
قال لنا الشافعي أنتم أعلم بالحديث والرجال مني فإذا كان الحديث الصحيح فأعلموني إن شاء يكون كوفيا أو بصريا أو شاميا حتى أذهب إليه إذا كان صحيحا (المدخل إلى السنن الكبرى - (1 / 172)
இமாம் ஷாஃபி அவர்கள் கூறினார்கள் : ஹதீஸைப் பற்றியும் அறிவிப்பாளர்களைப் பற்றியும் என்னை விட நீங்கள்தான் அறிந்தவர்கள். ஒரு ஸஹீஹான ஹதீஸை கூஃபா வாசி, பஸராவாசி, ஷாம்வாசி யாரிடமிருந்து எனக்கு நீங்கள் அறியச்செய்தாலும் அது ஸஹீஹாக இருக்குமென்றால் நான் அதன் பக்கம் சென்றுவிடுவேன்.
(அல்மத்ஹல் பாகம் : 1 பக்கம் : 172)
سمعت الشافعي يقول: "كل مسألة تكلمت فيها صح الخبر فيها عن النبي صلى الله عليه وسلم عند أهل النقل بخلاف ما قلت فأنا راجع عنها في حياتي وبعد موتي (إعلام الموقعين عن رب العالمين - (2 / 328)
".என்னுடைய வாழ்நாளிலும் என்னுடைய மரணத்திற்குப் பிறகும் எந்த ஒரு மார்க்கச்சட்டதிலும் நான்கூறியதற்கு மாற்றமாக ஹதீஸ்கலை வல்லுநர்களிடம் ஸஹீஹான ஒரு செய்தி நபியவர்களிடமிருந்து வருமென்றால் நான் என்னுடைய கருத்தை விட்டும் திரும்பக்கூடியவன் என இமாம் ஷாஃபி கூறியுள்ளார்கள்
(இஃலாமுல் முவக்கிஈன் பாகம் 2 பக்கம் : 328).
இந்த அளவிற்கு தெள்ளத்தெளிவாக குர் ஆன் ஹதீஸை பின்பற்றச் சொல்லி மத்ஹபு இமாம்கள் கூறிய கருத்துக்களையெல்லாம் இருட்டடிப்புச் செய்துவிட்டுத்தான் மத்ஹபு இமாம்கள் சொன்னது மார்க்கத்திற்கு முரணாக இருந்தாலும், குர் ஆன் ஹதீஸிற்கு எதிரானதாக இருந்தாலும் அவற்றை ஏற்க வேண்டும். குர் ஆன் ஹதீஸில் உள்ள போதனைகளை பின்பற்றக்கூடாது என்று போலி உலமாக்களால் மூளைச் சலவை செய்யப்படுகின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment