41. துன்பம் நீங்கும் வரை பிரார்த்தித்தல் வணக்கங்களில் சிறந்தது என்ற செய்தி
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ الْبَصْرِيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ وَاقِدٍ عَنْ إِسْرَائِيلَ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُحِبُّ أَنْ يُسْأَلَ وَأَفْضَلُ الْعِبَادَةِ انْتِظَارُ الْفَرَجِ قَالَ أَبُو عِيسَى هَكَذَا رَوَى حَمَّادُ بْنُ وَاقِدٍ هَذَا الْحَدِيثَ وَقَدْ خُولِفَ فِي رِوَايَتِهِ وَحَمَّادُ بْنُ وَاقِدٍ هَذَا هُوَ الصَّفَّارُ لَيْسَ بِالْحَافِظِ وَهُوَ عِنْدَنَا شَيْخٌ بَصْرِيٌّ وَرَوَى أَبُو نُعَيْمٍ هَذَا الْحَدِيثَ عَنْ إِسْرَائِيلَ عَنْ حَكِيمِ بْنِ جُبَيْرٍ عَنْ رَجُلٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا وَحَدِيثُ أَبِي نُعَيْمٍ أَشْبَهُ أَنْ يَكُونَ أَصَحَّ
அல்லாஹ்வின் அருட்கொடையை அவனிடம் நீங்கள் கேளுங்கள்! ஏனெனில் தன்னிடம் கேட்கப்படுவதை அல்லாஹ் பெரிதும் விரும்புகிறான். (இறைவன் அல்லாதவர்களிடம் கையேந்திவிடாமல்) துன்பம் நீங்கும் வரை (பிரார்த்தித்தவனாக இறையருளை) எதிர்பார்ப்பதுதான் வணக்கங்களில் மிகச் சிறந்ததாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: திர்மிதீ 3494
இந்தச் செய்தியும் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக ”ஹம்மாத் இப்னு வாகித்” என்பார் இடம் பெற்றுள்ளார்.
இந்தச் செய்தியை பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்களே ”இவர் (ஹதீஸ்களை) மனனம் செய்தவராக இல்லை” என்று விமர்சித்துள்ளார்கள்.
تهذيب التهذيب (3/ 21) 23- "ت - حماد" بن واقد2 العيشي أبو عمرو والصفار البصري ....قال عمرو بن علي كثير الخطاء كثير الوهم ليس ممن يروي عنه وقال ابن معين ضعيف وقال البخاري منكر الحديث وقال الترمذي ليس بالحافظ عندهم وقال أبو زرعة لين الحديث وقال أبو حاتم ليس بقوي لين الحديث يكتب حديثه على الاعتبار وبابه عثمان بن مطر ويوسف بن عطية وقال ابن عدي عامة ما يرويه مما لا يتابعه عليه الثقات له عند الترمذي حديث واحد وهو في انتظار الفرج وأعله قلت وقال الحاكم أبو أحمد ليس بالقوي عندهم وقال ابن حبان لا يجوز الاحتجاج بخبره إذا انفرد وقال العقيلي يخالف في حديثه.
இவர் அதிகம் தவறிழைப்பவர், பிழை விடுபவர், இவரிடம் இருந்து அறிவிப்பதற்கு தகுதியானவர் கிடையாது என்று அம்ருப்னு அலி என்பார் கூறியுள்ளார்.
இவர் பலவீனமானவர் என்று இமாம் இப்னு மயீன் அவர்களும், ”ஹதீஸ்களில் நிராகரிக்கத் தகுந்தவர்” என்று இமாம் புகாரி அவர்களும் கூறியுள்ளனர்.
இவர் ஹாஃபிளாக (ஹதீஸ்களில் தேர்ந்தவராக) இல்லை என்று இமாம் திர்மிதி கூறியுள்ளார்.
இவர் ஹதீஸ்களில் பலவீனமானவர் என்று இமாம் அபூ சுர்ஆ அவர்களும், இவர் உறுதியானவர் கிடையாது ஹதீஸ்களில் பலவீனமானவர் என்று இமாம் அபூ ஹாதிம் அவர்களும் கூறியுள்ளனர்.
இவர் அறிவிக்கும் பெரும்பான்மையான அறிவிப்புகள் நம்பகமானவர் வழியாக வருவதில்லை என்று இப்னு அதீ விமர்சித்துள்ளார்.
இவர் உறுதியானவர் இல்லை என்று இமாம் ஹாகிம் அவர்களும், இவர் தனித்து வரும் போது இவரைக் ஆதாரமாக எடுப்பது கூடாது என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும் கூறியுள்ளனர். இவர் தான் அறிவிக்கும் செய்தியில் முரண்படுபவர் என்று இமாம் இஜ்லீ விமர்சித்துள்ளார்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 3 பக்கம் : 21)
No comments:
Post a Comment