39 . பிரார்த்தனை இறைவனிடம் மதிப்பு மிக்கது ?
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ العَظِيمِ العَنْبَرِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ القَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَى اللَّهِ تَعَالَى مِنَ الدُّعَاءِ (رواه الترمدي 3292)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிரார்த்தனையை விட இறைவனிடம் மதிப்பு மிக்கது வேறொன்றுமில்லை.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி (3292)
இந்தச் செய்தி பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இரண்டு பலவீனங்கள் உள்ளன.
முதலாவது இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ”கதாதா” என்பவர் ”முதல்லிஸ்” ஆவார். அதாவது தமது ஆசிரியரிடமிருந்து கேட்காத செய்தியையும் நேரடியாகக் கேட்டதைப் போன்று அறிவிப்பவர் ஆவார்.
இதுபோன்ற முதல்லிஸ் என்ற நிலையில் உள்ளவர்கள் ”ஸமிஃத்து” (நான் செவியேற்றேன்), ”ஹத்தஸனா” ”அஹ்பரனா” (எங்க்களுக்கு அறிவித்தார்) போன்ற சந்தேகமே இல்லாமல் நேரடியாகச் செவியுற்றதற்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால்தான் அதனை ஆதாரமாக்க் கொள்ள முடியும். மாறாக ”கால” (சொன்னார்), அல்லது ”அன்” (இன்னார் வழியாக) என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது.
تهذيب التهذيب ـ محقق (8 / 317) :وقال أبو داود الطيالسي عن شعبة كان قتادة إذا جاء ما سمع قال حدثنا وإذا جاء ما لم يسمع قال قال فلان
கதாதா அவர்கள் தான் நேரடியாகக் கேட்டதை அறிவித்தால் ”ஹத்தஸனா” (இன்னார் எங்களுக்கு அறிவித்தார்) என்று கூறுவார். தான் நேரடியாகக் கேட்காததை அறிவித்தால் ”கால ஃபுலான்” (இன்னார் சொன்னார்) என்று கூறுவார் என ”ஷுஃபா” அவர்களிடமிருந்து அபூதாவூத் தயாலிஸி அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 8, பக்கம் : 317
تهذيب التهذيب ـ محقق (8 / 318) :
وقال أبو حاتم اثبت اصحاب انس الزهري ثم قتادة قال وهو أحب إلي من أيوب ويزيد الرشك إذا ذكر الخبر يعني إذا صرح بالسماع
அனஸ் அவர்களின் மாணவர்களில் மிகவும் நம்பகமானவர்கள் ஷுஹ்ரி என்பாரும் பிறகு கதாதா அவர்களும் ஆவார்கள். கதாதா அவர்கள் தான் நேரடியாகக் கேட்டதை தெளிவுபடுத்தி செய்தியை அறிவித்தால் அய்யூப் மற்றும் யஸீத் ஆகியோரை விட எனக்கு நேசத்திற்குரியவர் ஆவார் என இமாம் அபூ ஹாத்திம் கூறியுள்ளார்கள்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 8 பக்கம் 318
سير أعلام النبلاء [ مشكول + موافق للمطبوع ] (9 / 325) :وَهُوَ حُجّةٌ بِالإِجْمَاعِ إِذَا بَيَّنَ السَّمَاعَ، فَإِنَّهُ مُدَلِّسٌ مَعْرُوْفٌ بِذَلِكَ، وَكَانَ يَرَى القَدَرَ - نَسْأَلُ اللهَ العَفْوَ
கதாதா அவர்கள் தான் நேரடியாகக் கேட்டதை தெளிவுபடுத்தி அறிவித்தால் ஏகோபித்த அடிப்படையில் அவர் ஆதாரத்திற்குரியவர் ஆவார். அவர் அறியப்பட்ட முதல்லிஸ் ஆவார். இன்னும் விதியை மறுக்கும் கொள்கையைச் கொண்டிருந்தார். அல்லாஹ்விடம் அவருக்கு மன்னிப்பைக் கோருவோம் என இமாம் தஹபி கூறுகிறார்.
நூல்:ஷியரு அஃலாமு அன் நுபலாவு பாகம்:9 பக்கம் : 325
இது வரை நாம் பார்த்த விமர்சனங்களிலிருந்து கதாதா அவர்கள் முதல்லிஸ் என்பது தெளிவாகிவிட்டது. அவர் நேரடியாகக் கேட்டதற்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால்தான் அதை ஆதாரமாகக் கொள்ள முடியும் என்பது தெளிவாகிறது.
ஆனால் மேற்கண்ட செய்தியின் எந்த அறிவிப்பிலும் கதாதா அவர்கள் தன்னுடைய ஆசிரியரான ”ஸயீது இப்னு அபில் ஹஸன்” என்பாரிடமிருந்து நேரடியாகக் கேட்டதற்குரிய வார்த்தையைப் பயன்படுத்தி அறிவிக்கவில்லை.
எனவே இந்தச் செய்தி பலவீனம் என்பது உறுதியாகிவிட்டது.
இரண்டாவது இந்தச் செய்தியின் மற்றொரு அறிவிப்பாளரான ”இம்ரான் அல்கத்தான்” என்பவர் பலவீனமானவர் ஆவார். இவருடைய முழுப் பெயர் ”இம்ரான் இப்னு தவார் அல்கத்தான் அபுல் அவ்வாம்” என்பதாகும்.
تهذيب التهذيب (8/ 131) وقال الدوري عن بن معين ليس بالقوي وقال مرة ليس بشيء لم يرو عنه يحيى بن سعيد ..وقال الآجري عن أبي داود هو من أصحاب الحسن وما سمعت إلا خيرا وقال مرة ضعيف ...وقال النسائي ضعيف ....وقال الترمذي قال البخاري صدوق بهم.... وقال الدارقطني كان كثير المخالفة والوهم
”இவர் உறுதியானவர் இல்லை” என்றும், இவர் ஒரு பொருட்டாகக் கொள்ளத் தக்கவரில்லை என்றும், யஹ்யா இப்னு ஸயீத் இவரிடமிருந்து அறிவிக்கவில்லை என்றும் இமாம் யஹ்யா இப்னு முயீன் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.
”இவர் பலவீனமானவர்” என்று இமாம் அபூதாவூத், மற்றும் இமாம் நஸாயீ விமர்சித்துள்ளார்கள்.
”இவர் உண்மையாளர் தவறிழைக்கக்கூடியவர்” என்று இமாம் புகாரி விமர்சித்துள்ளதாக இமாம் திர்மிதி கூறுகிறார்.
இவர் அதிகம் முரண்படக்கூடியவர் மற்றும் தவறிழைப்பவர் என்று இமாம் தாரகுத்னீ விமர்சித்துள்ளார்கள்.
((நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 8 பக்கம் 131)
No comments:
Post a Comment