வினாடி வினா கேள்விகளும் & பதில்களும் 11 முதல் 15 வரை
11 )அல்லாஹுவிடம் மக்களில் மிக மேன்மையானவராகத் திகழ்பவர் யார்
என்று நபி ஸல் கூறினார்கள் ????
A ) ஸலாம் கூறுவதை முதலில் ஆரம்பித்தவர்கள்
B ) பசித்தவர்களுக்கு மறைமுகமாக உணவு அளித்தவர்கள்
C ) ரகசியமாக தர்மம் செய்பவர்கள்
இதற்கான விடை :
وعن أبي أمامة
صُدي بن عجلان الباهلي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: “إن
أولى الناس بالله من بدأهم بالسلام" ((رواه أبو داود ))
“ஸலாம் கூறுவதை அவர்களில் முதலில் ஆரம்பித்தவர்தான் , அல்லாஹ்விடம் மக்களில்
மிக மேன்மையானவராக திகழ்வார் “ என்று நபி ஸல் கூறினார்கள்
அறிவிப்பவர் : அபூ உமாமா சுதய் இப்னு
அஜ்லான் பாஹிலீ ( ரழி )
நூல் : அபூதாவூத் ( 5197 )
12 ) “ தர்மத்தில் மிகச் சிறந்த தர்மம் எது என்று அல்லாஹுவின்
தூதர் கூறினார்கள் ????
A ) யாசகம் கேட்காத நபர்க்கு கூடும் தர்மம்
B ) அல்லாஹுவின் வழியில் போர் புரிபவருக்கு செய்யும்
தர்மம்
C ) அனதைகளுக்கு செய்யும் தர்மம்
இதற்கான விடை :
وعن أبي أمامة
رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: "أفضل الصدقات ظل
فسطاط في سبيل الله، ومنيحة خادم في سبيل الله، أو طروقة فحل في سبيل الله"
((رواه الترمذي وقال: حديث حسن صحيح)
“தர்மத்தில் மிகச் சிறந்தது, அல்லாஹ்வின் வழியில் ( உள்ளவருக்கு ) நிழல் தரும் கூடாரம் வழங்குவதாகும். மேலும் அல்லாஹ்வின் வழியில் உள்ளவருக்கு ஒரு ஊழியரையோ அல்லது அல்லாஹ்வின்
வழியில் பெண் ஓட்டகை ஒன்றையோ வழங்குவதாகும் “ என்று நபி ஸல்
கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ உமாமா ( ரழி )
நூல் : திர்மிதீ ( 1627 )
13 ) மக்களில்
சிறந்தவர் யார் என்று நபி ஸல் கூறினார்கள் ??
A ) நற்குணம் கொண்டவர்
B ) உண்மையே கூறுபவர்
C ) குர் ஆனைக் கற்று அதை கற்றுக் கொடுப்பவர்
இதற்கான விடை :
وعن عثمان بن عفان
رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : "خيركم من تعلم
القرآن وعلمه" ((رواه البخاري)
குர் ஆனை கற்று அதை ( பிறருக்கும் ) கற்றுக் கொடுப்பவரே
உங்களில் சிறந்தவர் ஆவார் என்று நபி ஸல் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உஸ்மான் இப்னு அஃப்பான் ( ரழி )
நூல் : புகாரி (5027 )
14 )நபி ( ஸல் ) அவர்களும் , படையினரும் மேடுகளில் ஏறினால்
--------- கூறுபவர்களாகவும் பள்ளங்களில் இறங்கினால் ------------ கூறுபவர்களாகவும்
இருந்தனர் ???
A ) தக்பீர்
B ) தஸ்பீஹ்
C ) தக்பீர் மற்றும் தஸ்பீஹ்
இதற்கான விடை :
وعن ابن عمر رضي
الله عنهما قال: كان النبي صلى الله عليه وسلم وجيوشه إذا علو الثنايا كبروا، وإذا
هبطوا سبحوا. ((رواه أبو داود بإسناد صحيح((
நபி ( ஸல் ) அவர்களும் , படையினரும் மேடுகளில்
ஏறினால் “ தக்பீர்” கூறுபவர்களாகவும் பள்ளங்களில் இறங்கினால் “ தஸ்பீஹ் “ கூறுபவர்களாகவும் இருந்தனர்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ( ரழி )
நூல் : அபூதாவூத் ( 2599 )
15) நபி ஸல் அவர்கள் ------------ தொழுகையை
நான்கு ரக் அத்துகள் ( இரண்டு இரண்டாக தொழுவார்கள்.அல்லாஹ் நாடிய அளவுக்கு அதிகமாக்கிக்
கொள்வார்கள் ???
A
) லூஹா தொழுகை
B
) இரவு தொழுகை
C
) நஃபிலான தொழுகை
இதற்கான
விடை :
وعن
عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يصلي الضحى أربعًا ويزيد
ما شاء الله . ((رواه مسلم))
நபி ஸல் அவர்கள் , லூஹா தொழுகையை நான்கு ரக் அத்துகள் ( இரண்டு இரண்டாக தொழுவார்கள் , அல்லாஹ் நாடிய அளவுக்கு ( சில நேரம் ) அதிகமாக்கிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா ( ரழி )
நூல் : முஸ்லிம் 719
No comments:
Post a Comment