📚மார்க்க விளக்க கேள்வி-பதில்
36. எந்த
இரண்டு விஷயங்களின் மூலம் உதவி தேடுமாறு அல்லாஹ் கூறுகிறான்?
✏பதில்: பொறுமை மற்றும் தொழுகை
📒ஆதாரம்: திருக்குர்ஆன் 2:45
37. முந்தைய
சமுதாயத்திற்கு நோன்பு கடமையாக்கப்பட்டதா?
✏பதில்: கடமையாக்கப்பட்டுள்ளது.
📒ஆதாரம்: திருக்குர்ஆன் 2:183
38. இப்றாஹிம்
நபி தன்னுடைய பிள்ளைகளுக்கு செய்த உபதேசம் என்ன?
✏பதில்: "என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக
இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது"
என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு
வலியுறுத்தினர்.
📒ஆதாரம்: திருக்குர்ஆன் 2:132
39. நம்முடைய
உள்ளத்தில் எந்த அளவு பெருமை இருந்தாலும் சுவனம் செல்ல முடியாது என நபிகள் நாயகம் கூறினார்கள்?
✏பதில்: கடுகளவு (அல்லது) அணுவளவு
📒ஆதாரம்: முஸ்லிம் 148,149
40. எது
சீர்ப்பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர்ப்பெற்று விடும் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்?
✏பதில்: இதயம்(உள்ளம்)
📒ஆதாரம்: முஸ்லிம் 52
No comments:
Post a Comment