புஹாரியில் இடம்பெற்ற ரத்தின சுருக்கமான நபிமொழிகள் ( பகுதி 03 )
11 . பல் துலக்கவேண்டும்
عَنْ حُذَيْفَةَ ـ
رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَامَ لِلتَّهَجُّدِ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ
بِالسِّوَاكِ.
ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழும்போது பல் துலக்குவார்கள்.
( புஹாரி 1136 )
12. ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்) தொழுத பின் வலப்புறம்
சாய்ந்து படுத்துக் கொள்வது.
عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ
النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا صَلَّى
رَكْعَتَىِ الْفَجْرِ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الأَيْمَنِ.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் தொழுததும் வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள்.
( புஹாரி 1160 )
13. உபரியான தொழுகைகளை வீட்டில் தொழுவது
عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "
اجْعَلُوا فى بُيُوتِكُمْ مِنْ صَلاَتِكُمْ وَلاَ تَتَّخِذُوهَا قُبُورًا
".
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'உங்களின் இல்லங்களிலும் சில தொழுகைகளைத்
தொழுங்கள். அவற்றைக் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள்.'
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ( புஹாரி 1187 )
14. நபி (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்திற்கும் மிம்பருக்கும்
இடைப்பட்ட பகுதியின் சிறப்பு
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الْمَازِنِيِّ ـ رضى
الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ
رِيَاضِ الْجَنَّةِ ".
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'என்னுடைய வீட்டிற்கும் என்னுடைய மிம்பருக்கும்
இடைப்பட்ட பகுதி சுவர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்.'
என அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.( புஹாரி 1195 )
15. பொறுமை என்பது எப்போது !
قَالَ سَمِعْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ عَنِ
النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "
الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى ".
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட உடன் (கைக் கொள்வதே)'
அனஸ்(ரலி) அறிவித்தார். ( புஹாரி 1302 )
No comments:
Post a Comment