அத்தியாயம்: 2 ( பகுதி 04 )
كتاب الإيمان
ஈமான் எனும் இறைநம்பிக்கை
(31)باب
الصَّلاَةُ مِنَ الإِيمَانِ
பாடம் : 31
தொழுகை இறை நம்பிக்கையின்
ஓர் அம்சமாகும்.
وَقَوْلُ اللَّهِ تَعَالَى: {وَمَا كَانَ اللَّهُ
لِيُضِيعَ إِيمَانَكُمْ} يَعْنِي صَلاَتَكُمْ عِنْدَ الْبَيْتِ.
உயர்ந்தோன் அல்லாஹ்
கூறுகின்றான்:
உங்கள் நம்பிக்கையை
அல்லாஹ் வீணாக்குபவன் அல்லன் (2:143).
பொருள்: இறையில்லம்
(கஅபாவின்) அருகில் இருந்தபடி (பைத்துல் மக்திஸ் பள்ளிவாசலை நோக்கி) நீங்கள் தொழுத
தொழுகையை அல்லாஹ் வீணாக்கி விடமாட்டான்.
حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا
زُهَيْرٌ، قَالَ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، أَنَّ النَّبِيَّ
صلى الله عليه وسلم كَانَ أَوَّلَ مَا قَدِمَ الْمَدِينَةَ نَزَلَ عَلَى
أَجْدَادِهِ ـ أَوْ قَالَ أَخْوَالِهِ ـ مِنَ الأَنْصَارِ، وَأَنَّهُ صَلَّى
قِبَلَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ شَهْرًا، أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا،
وَكَانَ يُعْجِبُهُ أَنْ تَكُونَ قِبْلَتُهُ قِبَلَ الْبَيْتِ، وَأَنَّهُ صَلَّى
أَوَّلَ صَلاَةٍ صَلاَّهَا صَلاَةَ الْعَصْرِ، وَصَلَّى مَعَهُ قَوْمٌ، فَخَرَجَ
رَجُلٌ مِمَّنْ صَلَّى مَعَهُ، فَمَرَّ عَلَى أَهْلِ مَسْجِدٍ، وَهُمْ رَاكِعُونَ
فَقَالَ أَشْهَدُ بِاللَّهِ لَقَدْ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه
وسلم قِبَلَ مَكَّةَ، فَدَارُوا كَمَا هُمْ قِبَلَ الْبَيْتِ، وَكَانَتِ
الْيَهُودُ قَدْ أَعْجَبَهُمْ إِذْ كَانَ يُصَلِّي قِبَلَ بَيْتِ الْمَقْدِسِ،
وَأَهْلُ الْكِتَابِ، فَلَمَّا وَلَّى وَجْهَهُ قِبَلَ الْبَيْتِ أَنْكَرُوا
ذَلِكَ. قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ عَنِ الْبَرَاءِ فِي
حَدِيثِهِ هَذَا أَنَّهُ مَاتَ عَلَى الْقِبْلَةِ قَبْلَ أَنْ تُحَوَّلَ رِجَالٌ
وَقُتِلُوا، فَلَمْ نَدْرِ مَا نَقُولُ فِيهِمْ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى
{وَمَا كَانَ اللَّهُ لِيُضِيعَ إِيمَانَكُمْ}
40. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு
வந்த ஆரம்பத்தில் தம் பாட்டனார்களி(ன் வம்சா வழியினரி)டத்தில் அல்லது அன்சாரிகளிலுள்ள
தம் மாமன்மார்களி(ன் வம்சா வழியினரி)டத்தில் தங்கியிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள்
(ஜெரூசலேமிலுள்ள) பைத்துல் மக்திஸ் நோக்கி பதினாறு மாதங்கள் அல்லது பதினேழு மாதங்கள்
தொழுதார்கள். (மக்காவிலுள்ள) இறையில்லம் கஅபாவே தொழுகையில் தாம் முன்னோக்கும் திசையாக
இருக்கவேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. (பிறகு கஅபாவை முன்னோக்கித்
தொழும்படி, இறைவனிடமிருந்து உத்தரவு வந்தது). (கஅபாவை முன்னோக்கி) நபி (ஸல்) அவர்கள் தொழுத
முதல்தொழுகை அஸ்ர் தொழுகையாகும். (அந்தத் தொழுகையை) நபி (ஸல்) அவர்களுடன் மற்ற சிலரும்
தொழுதனர். அவர்களில் ஒருவர் அங்கிருந்து புறப்பட்டு (மற்றொரு) பள்ளிவாசலில் (தொழுது
கொண்டு) இருந்தவர்களைக் கடந்துசென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் ருகூஉ செய்து கொண்டிருந்தனர்.
உடனே அவர், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து மக்கா(விலுள்ள
கஅபா)வை நோக்கித் தொழுதேன் என்று சொல்ல,
அவர்கள் (அனைவரும்) அப்படியே (ருகூஉவிலிருந்தபடியே
சுழன்று) கஅபாவை நோக்கித் திரும்பிக் கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் பைத்துல்
மக்திஸை நோக்கித் தொழுதுவந்தது (கண்டு) யூதர்களுக்கும் மற்ற வேதக்காரர்களுக்கும் மகிழ்ச்சியாகவே
இருந்துவந்தது. (தொழுகையில்) தமது முகத்தை நபி (ஸல்) அவர்கள் கஅபாவை நோக்கித் திருப்பிக்
கொண்டுவிட்டபோது அதை அவர்கள் வெறுத்தார்கள்.
மற்றோர் அறிவிப்பில், (புதிய கிப்லாவான கஅபாவை நோக்கி) கிப்லா மாற்றப்படுவதற்கு முன் (பழைய பைத்துல் மக்திஸ்)
கிப்லாவை நோக்கித் தொழுத காலத்திலேயே சிலர் இறந்து விட்டிருந்தனர்; சிலர் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்கள் விஷயத்தில் நாங்கள் என்ன கூறுவது என்று எங்களுக்குத்
தெரியவில்லை என்று கூறினர். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை (அதாவது தொழுகையை) வீணாக்குபவன் அல்லன் எனும் (2:143ஆவது) வசனத்தை அருளினான் என்று இடம்பெற்றுள்ளது.
(32)باب
حُسْنِ إِسْلاَمِ الْمَرْءِ
பாடம் : 32
ஒரு மனிதரின் இஸ்லாம் அழகு
பெறுவது.
قَالَ مَالِكٌ أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، أَنَّ
عَطَاءَ بْنَ يَسَارٍ، أَخْبَرَهُ أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ أَخْبَرَهُ
أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا
أَسْلَمَ الْعَبْدُ فَحَسُنَ إِسْلاَمُهُ يُكَفِّرُ اللَّهُ عَنْهُ كُلَّ
سَيِّئَةٍ كَانَ زَلَفَهَا، وَكَانَ بَعْدَ ذَلِكَ الْقِصَاصُ، الْحَسَنَةُ
بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ، وَالسَّيِّئَةُ بِمِثْلِهَا
إِلاَّ أَنْ يَتَجَاوَزَ اللَّهُ عَنْهَا ".
41. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் இஸ்லாத்தைத்
தழுவி, அவரது இஸ்லாம் (அகத்திலும் புறத்திலும்) அழகு பெற்றுவிட்டால் அவர் அதற்கு முன்செய்த
அனைத்துத் தீமைகளையும் அல்லாஹ் மாய்த்து விடுகின்றான். அ(வருடைய இஸ்லாம் அழகு பெற்றுவிட்ட)தன்
பின்னரும் கிஸாஸ் (உலகில் சக மனிதனுக்கு அவர் இழைத்த குற்றங்களுக்குரிய தண்டனை) இருக்கவே
செய்யும். (அவர் செய்யும்) ஒவ்வொரு நல்லறத்திற்கும் அது போன்ற பத்து முதல் எழுநூறு
மடங்கு வரை நன்மைகள் பதியப்படும். (அவர் புரியும்) ஒவ்வொரு தீமைக்கும் அதைப் போன்று
(ஒரேயொரு தண்டனை)தான் உண்டு. அதையும் அல்லாஹ் மன்னித்து விட்டால் (எந்தத் தண்டனையும்)
கிடையாது.
இதை அபூசயீத் அல்குத்ரீ
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا
عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي
هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا
أَحْسَنَ أَحَدُكُمْ إِسْلاَمَهُ، فَكُلُّ حَسَنَةٍ يَعْمَلُهَا تُكْتَبُ لَهُ
بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ، وَكُلُّ سَيِّئَةٍ يَعْمَلُهَا
تُكْتَبُ لَهُ بِمِثْلِهَا ".
42. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமது
இஸ்லாமை (நம்பிக்கையாலும் நடத்தையாலும்) அழகாக்கிக் கொண்டால், அவர் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் பத்து மடங்கிலிருந்து எழுநூறு மடங்கு வரை (நன்மை)
பதிவுசெய்யப்படுகிறது. அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அது போன்றே (ஒரு தீமையே) பதிவு
செய்யப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(33)باب أَحَبُّ
الدِّينِ إِلَى اللَّهِ أَدْوَمُهُ
பாடம் : 33
நிரந்தரமாகச் செய்யப்படும்
நல்லறங்களே அல்லாஹ்விற்கு விருப்பமானவை.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا
يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، أَنَّ
النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا امْرَأَةٌ قَالَ
" مَنْ هَذِهِ ". قَالَتْ فُلاَنَةُ. تَذْكُرُ مِنْ
صَلاَتِهَا. قَالَ " مَهْ، عَلَيْكُمْ بِمَا تُطِيقُونَ، فَوَاللَّهِ لاَ
يَمَلُّ اللَّهُ حَتَّى تَمَلُّوا ". وَكَانَ أَحَبَّ الدِّينِ إِلَيْهِ
مَا دَامَ عَلَيْهِ صَاحِبُهُ.
43. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடத்தில் ஒரு பெண்மணி
அமர்ந்திருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் (வீட்டுக்கு) வந்தார்கள். யார் இவர்? என்று கேட்டார்கள். நான் இவர் இன்னவர்?
என்று கூறிவிட்டு அவரது தொழுகை பற்றி
(அவர் அதிகம் வணங்குபவர் என்று புகழ்ந்து) கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், போதும் நிறுத்து! (வணக்கவழிபாடுகள் உள்ளிட்ட) நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச்
செய்துவாருங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படையமாட்டான்.
மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள்தான் என்று கூறினார்கள்.
(34)باب
زِيَادَةِ الإِيمَانِ وَنُقْصَانِهِ
பாடம் : 34
இறை நம்பிக்கை (ஈமான்) கூடுவதும், குறைவதும்.
وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَزِدْنَاهُمْ هُدًى}،
{وَيَزْدَادَ الَّذِينَ آمَنُوا إِيمَانًا} وَقَالَ: {الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ
دِينَكُمْ} فَإِذَا تَرَكَ شَيْئًا مِنَ الْكَمَالِ فَهُوَ نَاقِصٌ.
உயர்ந்தோன் அல்லாஹ்
கூறுகிறான்:
அவர்களுக்கு நாம் நேர்வழியை
அதிகமாக்கினோம் (18:13).
இறை நம்பிக்கை (ஈமான்)
கொண்டவர்களுக்கு அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாவதற்காக (நரகத்தின் காவலர்களான
வானவர்களின் எண்ணிக்கையை நாம் ஒரு சோதனையாக ஆக்கினோம்). (74:31).
அல்லாஹ் கூறுகிறான்:
இன்றைய தினம் உங்கள்
மார்க்கத்தை உங்களுக்காக நான் நிறைவுபடுத்திவிட்டேன் (5:3).
அதாவது இந்த நிறைவான
(மார்க்கத்)தில் ஏதேனும் ஒன்றை ஒருவர் விட்டுவிட்டால் அவர் (மார்க்கத்தால்) குறைவுடையவராவார்.
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ
حَدَّثَنَا هِشَامٌ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ
صلى الله عليه وسلم قَالَ " يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ
إِلاَّ اللَّهُ، وَفِي قَلْبِهِ وَزْنُ شَعِيرَةٍ مِنْ خَيْرٍ، وَيَخْرُجُ مِنَ
النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَفِي قَلْبِهِ وَزْنُ بُرَّةٍ
مِنْ خَيْرٍ، وَيَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ،
وَفِي قَلْبِهِ وَزْنُ ذَرَّةٍ مِنْ خَيْرٍ ". قَالَ أَبُو عَبْدِ
اللَّهِ قَالَ أَبَانُ حَدَّثَنَا قَتَادَةُ حَدَّثَنَا أَنَسٌ عَنِ النَّبِيِّ
صلى الله عليه وسلم " مِنْ إِيمَانٍ ". مَكَانَ " مِنْ خَيْرٍ
".
44. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் தமது உள்ளத்தில்
ஒரு வாற்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத்
தவிர வேறு இறைவனில்லை) என்று சொன்னாரோ அவர் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர்
தமது இதயத்தில் ஒரு மணிக்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் லாஇலாஹ இல்லல்லாஹ்
சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவர் தமது உள்ளத்தில் ஓர் அணுவளவு
நன்மை இருக்கும் நிலையில் லாஇலாஹ இல்லல்லாஹ் சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்.
இதை அனஸ் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் நன்மை
என்று கூறியதாக மேற்கண்ட நபிமொழியில் குறிப்பிட்டிருக்கும் இடங்களிலெல்லாம் இறை நம்பிக்கை
(ஈமான்) என்று குறிப்பிட்டதாக அனஸ் (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ، سَمِعَ جَعْفَرَ
بْنَ عَوْنٍ، حَدَّثَنَا أَبُو الْعُمَيْسِ، أَخْبَرَنَا قَيْسُ بْنُ مُسْلِمٍ،
عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّ رَجُلاً، مِنَ
الْيَهُودِ قَالَ لَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، آيَةٌ فِي كِتَابِكُمْ
تَقْرَءُونَهَا لَوْ عَلَيْنَا مَعْشَرَ الْيَهُودِ نَزَلَتْ لاَتَّخَذْنَا ذَلِكَ
الْيَوْمَ عِيدًا. قَالَ أَىُّ آيَةٍ قَالَ {الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ
دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ
دِينًا}. قَالَ عُمَرُ قَدْ عَرَفْنَا ذَلِكَ الْيَوْمَ وَالْمَكَانَ الَّذِي
نَزَلَتْ فِيهِ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ قَائِمٌ بِعَرَفَةَ
يَوْمَ جُمُعَةٍ.
45. தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் ஒருவர்
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே!
(அமீருல் முஃமினீன்!) நீங்கள் ஓதிக்கொண்டிருக்கும் உங்கள் வேதத்திலுள்ள ஒரு வசனம் யூதர்களாகிய
எங்கள் மீது அருளப்பெற்றிருக்குமானால்,
அந்நாளை நாங்கள் ஒரு பண்டிகை நாளாக்கிக்
கொண்டிருப்போம் என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் அது எந்த வசனம்? எனக்கேட்டார்கள். அதற்கு அந்த யூதர்,
இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை
உங்களுக்கு நிறைவு படுத்திவிட்டேன். உங்கள் மீது எனது அருள்கொடையை முழுமைப்படுத்திவிட்டேன்.
இஸ்லாமையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி(யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன் (5:3) (என்பதே அந்த வசனமாகும்) என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் இந்த வசனம் எந்த நாளில்
எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம்.
ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் அரஃபாப் பெருவெளியில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போது
தான் (இவ்வசனம் அருளப்பெற்றது; அந்த நாளே பண்டிகைநாள்தான்) என்றார்கள்.
(35)باب
الزَّكَاةُ مِنَ الإِسْلاَمِ
பாடம் : 35
ஸகாத் இஸ்லாத்தின் ஓர் அம்சமாகும்.
وَقَوْلُهُ: {وَمَا أُمِرُوا إِلاَّ لِيَعْبُدُوا
اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلاَةَ وَيُؤْتُوا
الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ}
அல்லாஹ் கூறுகின்றான்:
அசத்திய வழிகளிலிருந்து
விலகி சத்திய மார்க்கத்தில் சாய்ந்தவர்களாகவும் தமது எண்ணத்தை இறைவனுக்காகத் தூய்மையாக்கியவர்களாகவும்
அல்லாஹ்வை வணங்கவேண்டும்;
தொழுகையை அவர்கள் நிலைநிறுத்திவரவேண்டும்; ஸகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்று மட்டும் அவர்களுக்கு கட்டளையிடப்பட்டது.
மேலும் அதுவே நேரான மார்க்கமுமாகும். (98:5).
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكُ بْنُ
أَنَسٍ، عَنْ عَمِّهِ أَبِي سُهَيْلِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ
طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ، يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى
الله عليه وسلم مِنْ أَهْلِ نَجْدٍ، ثَائِرُ الرَّأْسِ، يُسْمَعُ دَوِيُّ
صَوْتِهِ، وَلاَ يُفْقَهُ مَا يَقُولُ حَتَّى دَنَا، فَإِذَا هُوَ يَسْأَلُ عَنِ
الإِسْلاَمِ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم " خَمْسُ
صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ ". فَقَالَ هَلْ عَلَىَّ
غَيْرُهَا قَالَ " لاَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ ". قَالَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم " وَصِيَامُ رَمَضَانَ ". قَالَ هَلْ
عَلَىَّ غَيْرُهُ قَالَ " لاَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ ". قَالَ
وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الزَّكَاةَ. قَالَ هَلْ
عَلَىَّ غَيْرُهَا قَالَ " لاَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ ". قَالَ
فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ وَاللَّهِ لاَ أَزِيدُ عَلَى هَذَا وَلاَ
أَنْقُصُ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَفْلَحَ إِنْ
صَدَقَ ".
46. தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
நஜ்த்வாசிகளில் ஒருவர்
தலைவிரிகோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்.
(தூரத்திலிருந்து) அவருடைய குரலின் எதிரொலி செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார்
என்று எங்களால் விளங்க முடியவில்லை. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில்
வந்ததும் இஸ்லாமைப் பற்றிக்கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள்(தான் இஸ்லாத்தில் கட்டாயக்கடமையான வணக்கம்)
என்றார்கள்.
அவர் இதைத் தவிர வேறு(தொழுகை)
ஏதாவது என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?
என்று கேட்க, இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர என்று அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்கவேண்டும் என்றும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா? எனக் கேட்க, இல்லை, நீ தானாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத்தவிர என்று அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், இதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) வேறு தர்மத்தை தவிர என்றார்கள்.
அந்த மனிதர், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவற்றைவிட கூட்டவுமாட்டேன்; குறைக்கவும் மாட்டேன் என்று கூறியவாறு திரும்பிச்சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால்
அவர் வெற்றியடைந்து விட்டார் என்று சொன்னார்கள்.
(36)باب
اتِّبَاعُ الْجَنَائِزِ مِنَ الإِيمَانِ
பாடம் : 36
இறந்தவர்களை (அடக்கம் செய்வதற்காகப்)
பின்தொடர்ந்து செல்வது இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَلِيٍّ
الْمَنْجُوفِيُّ، قَالَ حَدَّثَنَا رَوْحٌ، قَالَ حَدَّثَنَا عَوْفٌ، عَنِ
الْحَسَنِ، وَمُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله
عليه وسلم قَالَ " مَنِ اتَّبَعَ جَنَازَةَ مُسْلِمٍ إِيمَانًا
وَاحْتِسَابًا، وَكَانَ مَعَهُ حَتَّى يُصَلَّى عَلَيْهَا، وَيَفْرُغَ مِنْ
دَفْنِهَا، فَإِنَّهُ يَرْجِعُ مِنَ الأَجْرِ بِقِيرَاطَيْنِ، كُلُّ قِيرَاطٍ
مِثْلُ أُحُدٍ، وَمَنْ صَلَّى عَلَيْهَا ثُمَّ رَجَعَ قَبْلَ أَنْ تُدْفَنَ
فَإِنَّهُ يَرْجِعُ بِقِيرَاطٍ ". تَابَعَهُ عُثْمَانُ الْمُؤَذِّنُ
قَالَ حَدَّثَنَا عَوْفٌ عَنْ مُحَمَّدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ
صلى الله عليه وسلم نَحْوَهُ.
47. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் ஒருவர் நம்பிக்கை
கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ஒரு முஸ்லிமுடைய சடலத்தைப் பின்தொடர்ந்து
சென்று அதற்காக(ப் பிரார்த்தனைத்) தொழுகை நடத்தப்பட்டு, அது அடக்கம் செய்யப்படும்வரை அதனுடன் இருந்தாரோ நிச்சயமாக அவர் இரண்டு கீராத் நன்மையுடன்
திரும்புகிறார். ஒவ்வொரு கீராத்தும் உஹுத் மலை போன்றதாகும். எவர் அதற்காகப் (பிரார்த்தனைத்)
தொழுகையை மட்டும் முடித்து விட்டு அதனை அடக்கம் செய்யும் முன்னர் திரும்பிவிடுகிறாரோ
அவர் ஒரு கீராத் நன்மையுடன் திரும்புகிறார்.
இதை அபூஹுரைரா (ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(37)باب خَوْفِ
الْمُؤْمِنِ مِنْ أَنْ يَحْبَطَ عَمَلُهُ وَهُوَ لاَ يَشْعُرُ
பாடம் : 37
தாம் அறியாத விதத்தில் தமது
நல்லறங்கள் பாழ்பட்டுப் போய்விடுமோ என இறை நம்பிக்கையாளர் அஞ்சுவது.
وَقَالَ إِبْرَاهِيمُ التَّيْمِيُّ مَا عَرَضْتُ قَوْلِي
عَلَى عَمَلِي إِلاَّ خَشِيتُ أَنْ أَكُونَ مُكَذَّبًا.
وَقَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ أَدْرَكْتُ ثَلاَثِينَ
مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّهُمْ يَخَافُ
النِّفَاقَ عَلَى نَفْسِهِ، مَا مِنْهُمْ أَحَدٌ يَقُولُ إِنَّهُ عَلَى إِيمَانِ
جِبْرِيلَ وَمِيكَائِيلَ.
[تحفة
15613 ب].
وَيُذْكَرُ عَنِ الْحَسَنِ مَا خَافَهُ إِلاَّ مُؤْمِنٌ،
وَلاَ أَمِنَهُ إِلاَّ مُنَافِقٌ. وَمَا يُحْذَرُ مِنَ الإِصْرَارِ عَلَى
النِّفَاقِ وَالْعِصْيَانِ مِنْ غَيْرِ تَوْبَةٍ لِقَوْلِ اللَّهِ تَعَالَى:
{وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ}.
இப்ராஹீம் அத்தய்மீ
(ரஹ்) அவர்கள் எனது சொல்லை எனது செயலோடு ஒப்பிட்டபோதெல்லாம், நான் ஒரு பொய்யனாக இருப்பேனோ என்று நான் அஞ்சாமல் இருந்ததில்லை என்றார்கள்.
இப்னு அபீமுலைக்கா
(அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் அல்குறஷீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் நபித்தோழர்களில்
முப்பது பேரைச் சந்தித்திருக்கின்றேன். அவர்கள் ஒவ்வொருவரும் தமக்குள் நயவஞ்சகத்தனம்
ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுபவர்களாகவே இருந்தனர். அவர்களில் எவரும் தமக்கு ஜிப்ரீல், மீக்காயீல் (அலை) ஆகியோரின் ஈமான் தமக்கு இருப்பதாகக் கூறியதில்லை.
ஹஸன் அல்பஸரீ (ரஹ்)
அவர்கள், இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும்
நயவஞ்சகத்தன்மையை அஞ்சுவதில்லை. நயவஞ்சகனைத் தவிர வேறெவரும் அது விஷயத்தில் அச்சமற்று
(அலட்சியமாக) இருப்பதில்லை என்று கூறியதாக அறிவிக்கப்படுகிறது.
பாவமன்னிப்புக் கோராமல், நயவஞ்சகத்தனத்திலும் பாவத்திலும் நிலைத்து இருப்பதற்குக் கடும் எச்சரிக்கை.
அல்லாஹ் கூறுகிறான்:
தெரிந்துகொண்டே தாங்கள்
செய்த (தீமையான)வற்றில் நிலைத்திருக்க மாட்டார்கள். (3:135)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالَ حَدَّثَنَا
شُعْبَةُ، عَنْ زُبَيْدٍ، قَالَ سَأَلْتُ أَبَا وَائِلٍ عَنِ الْمُرْجِئَةِ،،
فَقَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ
" سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ، وَقِتَالُهُ كُفْرٌ ".
48.
நபி (ஸல்) அவர்கள் ஒரு
முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும்;
அவர்கள் இருவரும் போரிட்டுக்கொள்வது
(கொலை செய்வது) இறை நிராகரிப்பாகும் என்று கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا
إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ أَخْبَرَنِي
عُبَادَةُ بْنُ الصَّامِتِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ
يُخْبِرُ بِلَيْلَةِ الْقَدْرِ، فَتَلاَحَى رَجُلاَنِ مِنَ الْمُسْلِمِينَ فَقَالَ
" إِنِّي خَرَجْتُ لأُخْبِرَكُمْ بِلَيْلَةِ الْقَدْرِ، وَإِنَّهُ
تَلاَحَى فُلاَنٌ وَفُلاَنٌ فَرُفِعَتْ وَعَسَى أَنْ يَكُونَ خَيْرًا لَكُمُ
الْتَمِسُوهَا فِي السَّبْعِ وَالتِّسْعِ وَالْخَمْسِ ".
49. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் (கண்ணியமிக்க இரவு) பற்றி (அது ரமளான் மாதத்தில் எந்த
இரவு என்று) அறிவிப்பதற்காக (த் தமது வீட்டிலிருந்து) வெளியே வந்தார்கள். அப்போது இரு
முஸ்லிம்கள் தமக்கிடையே சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ணுற்ற) அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், லைலத்துல் கத்ர் இரவு பற்றி உங்களுக்கு
அறிவிப்பதற்காக நான் புறப்பட்டுவந்தேன். அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து
கொண்டிருந்தனர். எனவே, அது (பற்றிய விளக்கம் என் நினைவிலிருந்து)
நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு ஒரு நன்மையாக இருக்கலாம். (ரமளான் மாதத்தின்
இருபத்து) ஏழு, (இருபத்து) ஒன்பது, (இருபத்து) ஐந்து ஆகிய (ஒற்றை எண்ணிக்கையிலான) இரவுகளில் அதனைத் தேடுங்கள் என்றார்கள்.
(38) بَابُ سُؤَالِ
جِبْرِيلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الإِيمَانِ
وَالإِسْلاَمِ وَالإِحْسَانِ وَعِلْمِ السَّاعَةِ
பாடம் : 38
ஈமான், இஸ்லாம், இஹ்ஸான், மறுமை நாளைப் பற்றிய அறிவு
ஆகியவற்றைக் குறித்து ஜிப்ரீல் (அலை) கேட்டதும் அதற்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த விளக்கமும்.
وَبَيَانِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
لَهُ ثُمَّ قَالَ: «جَاءَ جِبْرِيلُ- عَلَيْهِ السَّلاَمُ- يُعَلِّمُكُمْ
دِينَكُمْ». فَجَعَلَ ذَلِكَ كُلَّهُ دِينًا، وَمَا بَيَّنَ النَّبِيُّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِوَفْدِ عَبْدِ الْقَيْسِ مِنَ الإِيمَانِ،
وَقَوْلِهِ تَعَالَى: {وَمَنْ يَبْتَغِ غَيْرَ الإِسْلاَمِ دِينًا فَلَنْ يُقْبَلَ
مِنْهُ}.
பின்னர் உங்களின் மார்க்கத்தை
உங்களுக்குக் கற்றுத்தருவதற்காக ஜிப்ரீல் வந்திருந்தார்கள் என்று நபி (ஸல்) அவர்கள்
கூறியதும்.
நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல்
(அலை) அவர்களுக்கு அளித்த பதில் அனைத்தையும் மார்க்கமாகவே கருதியிருக்கிறார்கள் என்பதும்.
அப்துல்கைஸ் தூதுக்குழுவினருக்கு
நபி (ஸல்) அவர்கள் கூறியவை (யாவும்) இறை நம்பிக்கையின் அம்சங்களேயாம் என்பதும்.
எவர் இஸ்லாம் அல்லாத
வேறொரு வழியைத் தமது மார்க்கமாகத் தேடிக்கொண்டாரோ அவரிடமிருந்து அது அங்கீகரிக்கப்படமாட்டாது
எனும் (3:85ஆவது) இறைவசனமும்.
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ
بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، عَنْ أَبِي
زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم
بَارِزًا يَوْمًا لِلنَّاسِ، فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ مَا الإِيمَانُ قَالَ
" الإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلاَئِكَتِهِ وَبِلِقَائِهِ
وَرُسُلِهِ، وَتُؤْمِنَ بِالْبَعْثِ ". قَالَ مَا الإِسْلاَمُ قَالَ
" الإِسْلاَمُ أَنْ تَعْبُدَ اللَّهَ وَلاَ تُشْرِكَ بِهِ، وَتُقِيمَ الصَّلاَةَ،
وَتُؤَدِّيَ الزَّكَاةَ الْمَفْرُوضَةَ، وَتَصُومَ رَمَضَانَ ". قَالَ
مَا الإِحْسَانُ قَالَ " أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ
لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ ". قَالَ مَتَى السَّاعَةُ قَالَ
" مَا الْمَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنَ السَّائِلِ، وَسَأُخْبِرُكَ
عَنْ أَشْرَاطِهَا إِذَا وَلَدَتِ الأَمَةُ رَبَّهَا، وَإِذَا تَطَاوَلَ رُعَاةُ
الإِبِلِ الْبُهْمُ فِي الْبُنْيَانِ، فِي خَمْسٍ لاَ يَعْلَمُهُنَّ إِلاَّ
اللَّهُ ". ثُمَّ تَلاَ النَّبِيُّ صلى الله عليه وسلم {إِنَّ اللَّهَ
عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ} الآيَةَ. ثُمَّ أَدْبَرَ فَقَالَ "
رُدُّوهُ ". فَلَمْ يَرَوْا شَيْئًا. فَقَالَ " هَذَا جِبْرِيلُ
جَاءَ يُعَلِّمُ النَّاسَ دِينَهُمْ ". قَالَ أَبُو عَبْدِ اللَّهِ
جَعَلَ ذَلِكَ كُلَّهُ مِنَ الإِيمَانِ.
50. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு
நாள் மக்களுக்குத் தென்படும் விதத்தில் (அமர்ந்து) இருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர்
வந்து ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்
ஈமான் என்பது, அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும்
அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவதும், (மறுமையில்) உயிர்ப்பித்து எழுப்பப்படுவதை நீர் நம்புவதுமாகும் என்று பதிலளித்தார்கள்.
அடுத்து அவர், இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீர் வணங்குவதும், அவனுக்கு (எதனையும்
எவரையும்) இணையாக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையாக்கப்பட்ட (வறியோர் உரிமையான) ஸகாத்தைக் கொடுத்துவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதுமாகும் என்றார்கள்.
அடுத்து இஹ்ஸான் என்றால்
என்ன? என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப்
போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உம்மைப் பார்த்துக்
கொண்டிருக்கிறான் (என்ற உணர்வுடன் வணங்குவதாகும்) என்றார்கள்.
அடுத்து அவர் மறுமை
நாள் எப்போது? என்று கேட்க, அதற்கு நபி (ஸல்) அவர்கள் இதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்), (அதைப் பற்றிக்) கேட்கின்றவரை (உம்மை விட) மிக அறிந்தவரல்லர். (அது பற்றி எனக்கும்
தெரியாது; உமக்கும் தெரியாது. வேண்டுமானால்,)
அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச்
சொல்கிறேன். (அவை:) ஓர் அடிமைப் பெண் தன் எஜமானைப் பெற்றெடுத்தல்; மேலும் கறுப்புநிற (அடிமட்ட) ஒட்டகங்களை மேய்ப்பவர்கள் உயரமான கட்டடங்கள் கட்டித்
தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். (மறுமைநாள் எபபோது வரவிருக்கிறது எனும் அறிவு) அல்லாஹ்வைத்
தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும் என்று கூறிவிட்டு, உலக இறுதி பற்றிய அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கின்றது... எனும் (31:34ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.
பிறகு அந்த மனிதர் திரும்பிச்
சென்றுவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை (என்னிடம்) திரும்ப அழைத்து வாருங்கள்
என்றார்கள். (அவரைத் தேடிச் சென்றவர்கள்) அவரை எங்கேயும் காணவில்லை. அப்போது நபி (ஸல்)
அவர்கள், இ(ப்போது வந்துபோன)வர்தாம் ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களது மார்க்கத்தைக் கற்றுத்தர
வந்திருந்தார் என்றார்கள்.
அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய
நான்) கூறுகின்றேன்:
ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு
தாம் அளித்த பதில்கள் அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் இறை நம்பிக்கையின் அம்சங்களாகவே
கருதினார்கள்.
(39)باب
பாடம் : 39
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، قَالَ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ
عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ،
أَخْبَرَهُ قَالَ أَخْبَرَنِي أَبُو سُفْيَانَ، أَنَّ هِرَقْلَ، قَالَ لَهُ
سَأَلْتُكَ هَلْ يَزِيدُونَ أَمْ يَنْقُصُونَ، فَزَعَمْتَ أَنَّهُمْ يَزِيدُونَ،
وَكَذَلِكَ الإِيمَانُ حَتَّى يَتِمَّ. وَسَأَلْتُكَ هَلْ يَرْتَدُّ أَحَدٌ
سَخْطَةً لِدِينِهِ بَعْدَ أَنْ يَدْخُلَ فِيهِ، فَزَعَمْتَ أَنْ لاَ، وَكَذَلِكَ
الإِيمَانُ حِينَ تُخَالِطُ بَشَاشَتُهُ الْقُلُوبَ، لاَ يَسْخَطُهُ أَحَدٌ.
51. (ரோமப் பேரரசர்) ஹெராக்ளியஸ் தம்மிடம்
கேட்டதாக அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் உம்மிடம் (தம்மை
இறைத்தூதர் என்று கூறும்) அவ(ரைப் பின்பற்றுப)வர்கள் (நாளுக்கு நாள்) அதிகரித்துவருகின்றனரா? அல்லது குறைந்து கொண்டே போகின்றார்களா?
என்று கேட்டேன். அதற்கு நீர் அவர்கள்
அதிகமாகிக் கொண்டே செல்கிறார்கள் என்று கூறினீர். இறை நம்பிக்கை அத்தகையதே. அது நிறைவடையும்வரை
(வளர்ந்து கொண்டேதான்) இருக்கும்.
நான் உம்மிடம் அவரது
மார்க்கத்தில் இணைந்தோரில் எவரேனும் தமது புதிய மார்க்கத்தின் மீது அதிருப்திகொண்டு
அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?
என்று கேட்டேன். அதற்கு நீர், இல்லை என்று பதிலளித்தீர். இறை நம்பிக்கை இத்தகையதே. அதன் மலர்ச்சி இதயங்களில்
கலந்துவிடும்போது அதைக் குறித்து எவருமே அதிருப்தியடைய மாட்டார்.
இதை அப்துல்லாஹ் பின்
அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(40)باب
فَضْلِ مَنِ اسْتَبْرَأَ لِدِينِهِ
பாடம் : 40
தமது மார்க்கத்தைக் காப்பவரின்
சிறப்பு.
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ،
عَنْ عَامِرٍ، قَالَ سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ سَمِعْتُ
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " الْحَلاَلُ بَيِّنٌ
وَالْحَرَامُ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لاَ يَعْلَمُهَا كَثِيرٌ مِنَ
النَّاسِ، فَمَنِ اتَّقَى الْمُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِيِنِهِ وَعِرْضِهِ،
وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ كَرَاعٍ يَرْعَى حَوْلَ الْحِمَى، يُوشِكُ أَنْ
يُوَاقِعَهُ. أَلاَ وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى، أَلاَ إِنَّ حِمَى اللَّهِ
فِي أَرْضِهِ مَحَارِمُهُ، أَلاَ وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ
صَلَحَ الْجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ. أَلاَ
وَهِيَ الْقَلْبُ ".
52. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அனுமதிக்கப்பட்டவையும்
மிகத் தெளிவானவை. மேலும் அனுதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும்
இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம்பேர் அறியமாட்டார்கள்.
எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும்
காப்பாற்றிக் கொள்கிறார்; மானத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார்.
எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவைகளில்
தலையிடுகிறார்.) வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை)
மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது அல்லாஹ்வின்
நாட்டில் அவனது எல்லை (வேலி) அவனால் தடைவிதிக்கப்பட்டவையே. அறிக: உடலில் ஒரு சதைத்துண்டு
இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்து
விட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும். அறிந்து கொள்ளுங்கள்: அது தான் உள்ளம்.
இதை நுஅமான் பின் பஷீர்
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(41)باب
أَدَاءُ الْخُمُسِ مِنَ الإِيمَانِ
பாடம் : 41
(போரில் கிடைத்த செல்வங்களில்)
ஐந்தில் ஒரு பங்கை (இறைத்தூதரிடம் நிதியாக) வழங்குதல் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ أَخْبَرَنَا
شُعْبَةُ، عَنْ أَبِي جَمْرَةَ، قَالَ كُنْتُ أَقْعُدُ مَعَ ابْنِ عَبَّاسٍ،
يُجْلِسُنِي عَلَى سَرِيرِهِ فَقَالَ أَقِمْ عِنْدِي حَتَّى أَجْعَلَ لَكَ سَهْمًا
مِنْ مَالِي، فَأَقَمْتُ مَعَهُ شَهْرَيْنِ، ثُمَّ قَالَ إِنَّ وَفْدَ عَبْدِ
الْقَيْسِ لَمَّا أَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنِ
الْقَوْمُ أَوْ مَنِ الْوَفْدُ ". قَالُوا رَبِيعَةُ. قَالَ "
مَرْحَبًا بِالْقَوْمِ ـ أَوْ بِالْوَفْدِ ـ غَيْرَ خَزَايَا وَلاَ نَدَامَى
". فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، إِنَّا لاَ نَسْتَطِيعُ أَنْ
نَأْتِيَكَ إِلاَّ فِي شَهْرِ الْحَرَامِ، وَبَيْنَنَا وَبَيْنَكَ هَذَا الْحَىُّ
مِنْ كُفَّارِ مُضَرَ، فَمُرْنَا بِأَمْرٍ فَصْلٍ، نُخْبِرْ بِهِ مَنْ وَرَاءَنَا،
وَنَدْخُلْ بِهِ الْجَنَّةَ. وَسَأَلُوهُ عَنِ الأَشْرِبَةِ. فَأَمَرَهُمْ
بِأَرْبَعٍ، وَنَهَاهُمْ عَنْ أَرْبَعٍ، أَمَرَهُمْ بِالإِيمَانِ بِاللَّهِ
وَحْدَهُ. قَالَ " أَتَدْرُونَ مَا الإِيمَانُ بِاللَّهِ وَحْدَهُ
". قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ " شَهَادَةُ
أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامُ
الصَّلاَةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ، وَصِيَامُ رَمَضَانَ، وَأَنْ تُعْطُوا مِنَ
الْمَغْنَمِ الْخُمُسَ ". وَنَهَاهُمْ عَنْ أَرْبَعٍ عَنِ الْحَنْتَمِ
وَالدُّبَّاءِ وَالنَّقِيرِ وَالْمُزَفَّتِ. وَرُبَّمَا قَالَ الْمُقَيَّرِ.
وَقَالَ " احْفَظُوهُنَّ وَأَخْبِرُوا بِهِنَّ مَنْ وَرَاءَكُمْ
".
53. அபூஜம்ரா (நஸ்ர் பின் இம்ரான் அள்ளுபஈ
(ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(பஸ்ராவின் ஆளுநராயிருந்த) இப்னு அப்பாஸ்
(ரலி) அவர்கள் தமது கட்டிலில் அமருமாறு கூற,
அவ்வாறே நான் அமர்ந்து கொண்டிருந்தேன்.
அப்போது அவர்கள், என்னிடம் நீங்கள் (மொழிபெயர்ப்பாளராக
இங்கேயே) தங்கிவிடுங்கள். (அதற்காக) நான் எனது செல்வத்திலிருந்து ஒரு பங்கை உங்களுக்குத்
தருகிறேன் என்று கேட்டுக் கொண்டார்கள். அதன்படி அவர்களுடன் நான் இரண்டு மாதங்கள் (மக்காவில்)
தங்கிவிட்டேன். பின்னர் அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்:
அப்துல் கைஸ் குலத்தாரின்
தூதுக்குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது, இம்மக்கள் யார்? அல்லது இத்தூதுக் குழுவினர் யார்?
என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ரபீஆ (குடும்பத்தார்) என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், இழிநிலை காணாத, வருத்தத்திற்குள்ளாகாத சமுதாயமே அல்லது
தூதுக்குழுவே வருக! உங்கள் வரவு நல்வரவாகுக! என்று வரவேற்றார்கள்.
அத்தூதுக்குழுவினர், அல்லாஹ்வின் தூதரே! (போர் புரியக் கூடாதெனத் தடைவிதிக்கப்பட்டுள்ள) புனித மாதங்கள்
தவிர மற்ற மாதங்களில் எங்களால் தங்களிடம் வரமுடியவில்லை. (காரணம்) எங்களுக்கும் உங்களுக்குமிடையே
(எதிரிகளான) முளர் குலத்து இறைமறுப்பாளர்களின் இந்தக் குடும்பத்தார் (நாம் சந்திக்கமுடியாதபடி
தடையாக) உள்ளனர். ஆகவே, தெளிவான ஆணையொன்றைப் பிறப்பியுங்கள்!
அதை நாங்கள் எங்களுக்குப் பின்னணியில் (இங்கே வராமல்) இருப்பவர்களுக்குத் தெரிவிப்போம்.
அ(தைச் செயல்படுத்துவ)தன் மூலம் நாங்களும் சொர்க்கம் செல்வோம் என்றார்கள். அதையொட்டி
அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சிலவகை குடிபானங்களைப் பற்றியும் கேட்டார்கள். அப்போது
நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு நான்கை(ச் செய்யுமாறு) கட்டளையிட்டார்கள்; நான்கை அவர்களுக்குத் தடை செய்தார்கள்.
அல்லாஹ் ஒருவனையே நம்புமாறு
அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, அல்லாஹ் ஒருவனையே நம்புதல் என்றால்
என்ன(வென்று உங்களுக்குத் தெரியுமா)?
என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்றார்கள். நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுவது; தொழுகையை (உரியமுறையில்) நிலை நிறுத்துவது;
ஸகாத் கொடுப்பது; ரமளான் மாதம் நோன்பு நோற்பது; போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து
ஐந்தில் ஒரு பங்கை நீங்கள் வழங்குவது.
(மது சேகரித்து வைக்கப் பயன்படுத்தப்படும்)
நான்கு பாத்திரங்களை (பழரசம் முதலிய பானங்களை ஊற்றிவைக்கப் புழங்க வேண்டாமென) நான்
உங்களுக்குத் தடைவிதிக்கிறேன். (அவை:) மண்சாடி,
சுரைக்காய் குடுக்கை, (பேரீச்சமரத்தின் அடிபாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப்பீப்பாய், தார் பூசப்பட்ட பாத்திரம். (பின்னர் இத்தடை அகற்றப்பட்டது.) இவற்றை மனதில் பதியவைத்துக்
கொண்டு உங்கள் பின்னணியில் (இங்கே வராமல்) இருப்பவர்களுக்கு அறிவித்து விடுங்கள்!
(42)باب مَا جَاءَ أَنَّ الأَعْمَالَ بِالنِّيَّةِ
وَالْحِسْبَةِ وَلِكُلِّ امْرِئٍ مَا نَوَى
பாடம் : 42
செயல்கள் அனைத்தும் எண்ணத்தையும்
நோக்கத்தையும் பொறுத்ததாகும்.
فَدَخَلَ فِيهِ الإِيمَانُ وَالْوُضُوءُ وَالصَّلاَةُ
وَالزَّكَاةُ وَالْحَجُّ وَالصَّوْمُ وَالأَحْكَامُ.
وَقَالَ اللَّهُ تَعَالَى: {قُلْ كُلٌّ يَعْمَلُ عَلَى
شَاكِلَتِهِ} عَلَى نِيَّتِهِ.
«نَفَقَةُ
الرَّجُلِ عَلَى أَهْلِهِ يَحْتَسِبُهَا صَدَقَةٌ».
وَقَالَ: «وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ».
மேலும் ஒவ்வொரு மனிதருக்கும்
அவரவர் எண்ணியதே கிடைக்கும்.
எனவே, இதற்குள் இறை நம்பிக்கை (ஈமான்) அங்கத்தூய்மை (உளூ), தொழுகை, (ஏழைகளின் உரிமையான) ஸகாத், ஹஜ், நோன்பு மற்றும் (ஏனைய கொடுக்கல் வாங்கல்) சட்டங்களும் அடங்கும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே!) கூறுக: ஒவ்வொருவரும் தத்தமது
எண்ணங்களின்படியே செயல்படுகின்றனர். (17:84).
(நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) நன்மையை
எதிர்பார்த்து ஒருவர் தம் குடும்பத்தினருக்குச் செலவு செய்வதும் தர்மமாகும்.
(மக்கா வெற்றிக்குப் பின்னர் நாடுதுறத்தல்
ஹிஜ்ரத் கிடையாது) ஆயினும், அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற
நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும் உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، قَالَ
أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ
إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ، عَنْ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ
صلى الله عليه وسلم قَالَ " الأَعْمَالُ بِالنِّيَّةِ، وَلِكُلِّ امْرِئٍ
مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، فَهِجْرَتُهُ
إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لِدُنْيَا يُصِيبُهَا، أَوِ
امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ ".
54. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
செயல்கள் அனைத்தும்
எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது.
எனவே எவரது நாடுதுறத்தல் (ஹிஜ்ரத்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோக்கி அமையுமோ
அவருடைய (நோக்கப்படியே) அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே அவரது நாடுதுறத்தல்
அமையும். ஒருவருடைய நாடுதறத்தல் உலக(ஆதாய)த்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அல்லது
அவர் மணக்கவிருக்கும் ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டிருந்தால், அவரது நாடுதுறத்தல் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமைந்துவிடுகிறது.
இதை உமர் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، قَالَ حَدَّثَنَا
شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ
بْنَ يَزِيدَ، عَنْ أَبِي مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
" إِذَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى أَهْلِهِ يَحْتَسِبُهَا فَهُوَ لَهُ
صَدَقَةٌ ".
55. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் (இறைவனிடம்)
நன்மையை எதிர்பார்த்தவராகத் தம் குடும்பத்தினருக்குச் செலவு செய்தால் அது அவருக்குத்
தர்மமாகிவிடும்.
இதை அபூமஸ்ஊத் அல்அன்சாரி
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ قَالَ أَخْبَرَنَا
شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ حَدَّثَنِي عَامِرُ بْنُ سَعْدٍ عَنْ سَعْدِ
بْنِ أَبِي وَقَّاصٍ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ قَالَ "إِنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بِهَا
وَجْهَ اللَّهِ إِلَّا أُجِرْتَ عَلَيْهَا حَتَّى مَا تَجْعَلُ فِي فَمِ
امْرَأَتِكَ"
56. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் திருப்தியை
மட்டுமே நோக்கமாகக்கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி, அதற்காக உமக்கு நற்பலன் நல்கப்படும். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர்
ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட.
இதை சஅத் பின் அபீவக்காஸ்
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(43) بَابُ قَوْلِ
النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الدِّينُ النَّصِيحَةُ لِلَّهِ
وَلِرَسُولِهِ وَلأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ»
பாடம் : 43
அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும்
முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அவர்களில் பொதுமக்களுக்கும் நலம் நாடுவதுதான் மார்க்கம்
(தீன்) ஆகும் எனும் நபிமொழி.
وَقَوْلِهِ تَعَالَى: {لَـيْسَ عَلَى الضُّعَفَآءِ
وَلَا عَلَى الْمَرْضٰى وَلَا عَلَى الَّذِيْنَ لَا يَجِدُوْنَ مَا يُنْفِقُوْنَ
حَرَجٌ اِذَا نَصَحُوْا لِلّٰهِ وَ رَسُوْلِهٖؕ مَا عَلَى الْمُحْسِنِيْنَ مِنْ
سَبِيْلٍؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌۙ }
அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ்வுக்கும் அவனுடைய
தூதருக்கும் நலம் நாடுபவர்களாயிருந்தால் (இயலாதவர்கள், நோயாளிகள் ஜிஹாதில் கலந்து கொள்ளாமல்
இருப்பதில் குற்றமில்லை). (9:91).
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ
إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ جَرِيرِ بْنِ
عَبْدِ اللَّهِ، قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى
إِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ.
57.
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலைநாட்டுவதாகவும், ஸகாத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும்
நலம் நாடுவதாகவும் உறுதிமொழி (பைஅத்) அளித்தேன்.
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا أَبُو
عَوَانَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، قَالَ سَمِعْتُ جَرِيرَ بْنَ عَبْدِ
اللَّهِ، يَقُولُ يَوْمَ مَاتَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ قَامَ فَحَمِدَ اللَّهَ
وَأَثْنَى عَلَيْهِ وَقَالَ عَلَيْكُمْ بِاتِّقَاءِ اللَّهِ وَحْدَهُ لاَ شَرِيكَ
لَهُ، وَالْوَقَارِ وَالسَّكِينَةِ حَتَّى يَأْتِيَكُمْ أَمِيرٌ، فَإِنَّمَا
يَأْتِيكُمُ الآنَ، ثُمَّ قَالَ اسْتَعْفُوا لأَمِيرِكُمْ، فَإِنَّهُ كَانَ
يُحِبُّ الْعَفْوَ. ثُمَّ قَالَ أَمَّا بَعْدُ، فَإِنِّي أَتَيْتُ النَّبِيَّ
صلى الله عليه وسلم قُلْتُ أُبَايِعُكَ عَلَى الإِسْلاَمِ. فَشَرَطَ عَلَىَّ
وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ. فَبَايَعْتُهُ عَلَى هَذَا، وَرَبِّ هَذَا
الْمَسْجِدِ إِنِّي لَنَاصِحٌ لَكُمْ. ثُمَّ اسْتَغْفَرَ وَنَزَلَ.
58.
ஸியாத் பின் இலாக்கா (ரஹ்) அவர்கள்
கூறியதாவது:
(முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில்
கூஃபாவின் ஆளுநராக இருந்த) முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் இறந்த நாளில் ஜரீர் பின்
அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் (எழுந்து மேடையில்) நின்று இறைவனைப் போற்றிப் புகழ்ந்து
விட்டுக் கூறலானார்கள்:
(அடுத்த) தலைவர் வரும்வரையில் இணையற்ற
ஏக இறைவனுக்கு அஞ்சுவதையும் அடக்கத்தையும் அமைதியையும் கடமையாகக் கொள்ளுங்கள். கூடிய
சீக்கிரத்தில் உங்கள் (புதிய) தலைவர் வந்துவிடுவார்.
பின்னர் தொடர்ந்து கூறினார்கள்:
(இறந்துவிட்ட) உங்கள் தலைவருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்! ஏனெனில் அவர் தமது பாவம்
மன்னிக்கப்படுவதை விரும்பக்கூடியவராக இருந்தார். இறைவாழ்த்துக்குப் பின்! (விஷயம் என்னவென்றால்,) நான் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம்
சென்று இஸ்லாத்தைத் ஏற்று நடப்பதாகத் தங்களிடம் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வந்திருக்கிறேன்
என்றேன். அப்போது நபியவர்கள், முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாடவேண்டும் என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள்.
அதன்படி உறுதிமொழி கொடுத்தேன். (கூஃபா நகர மக்களே!) இந்த இறையில்லத்தின் அதிபதி மீது
ஆணையாக! நான் உங்களுக்கு நலம் நாடுபவனாக இருக்கிறேன்.
பிறகு பாவமன்னிப்புக்
கோரிவிட்டு (மேடையிலிருந்து) இறங்கினார்கள்.
No comments:
Post a Comment