அத்தியாயம் : 4 ( பகுதி 03)
كتاب الوضوء
உளூ (அங்கசுத்தி)
(21)باب
لاَ يُسْتَنْجَى بِرَوْثٍ
பாடம் : 21
கெட்டிச் சாணத்தின் மூலம் துப்புரவு செய்யக்கூடாது.
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ،
عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ لَيْسَ أَبُو عُبَيْدَةَ ذَكَرَهُ وَلَكِنْ عَبْدُ
الرَّحْمَنِ بْنُ الأَسْوَدِ عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ،
يَقُولُ أَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم الْغَائِطَ، فَأَمَرَنِي أَنْ
آتِيَهُ بِثَلاَثَةِ أَحْجَارٍ، فَوَجَدْتُ حَجَرَيْنِ، وَالْتَمَسْتُ الثَّالِثَ
فَلَمْ أَجِدْهُ، فَأَخَذْتُ رَوْثَةً، فَأَتَيْتُهُ بِهَا، فَأَخَذَ
الْحَجَرَيْنِ وَأَلْقَى الرَّوْثَةَ وَقَالَ " هَذَا رِكْسٌ ".
وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي إِسْحَاقَ حَدَّثَنِي
عَبْدُ الرَّحْمَنِ.
156. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றபோது தமக்காக மூன்று கற்களைக் கொண்டு
வருமாறு என்னைப் பணித்தார்கள். (நான் தேடிப் பார்த்த போது) இரண்டு கற்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றேன்.
மூன்றாவது கல்லைத் தேடிப் பார்த்தேன்;
கிடைக்கவில்லை. (கழுதையின்) கெட்டிச்
சாணத்தை எடுத்துக் கொண்டு அவர்களிடம் வந்தேன். நபியவர்கள் கற்களைப் பெற்றுக் கொண்டு
சாணத்தை எறிந்துவிட்டு இது அசுத்தமானது எனக் கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
(22)باب
الْوُضُوءِ مَرَّةً مَرَّةً
பாடம் : 22
உளூவில் (ஒவ்வோர் உறுப்பையும்) ஒருமுறை கழுவுதல்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا
سُفْيَانُ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ
عَبَّاسٍ، قَالَ تَوَضَّأَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَرَّةً مَرَّةً.
157. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஒவ்வோர் உறுப்பையும்) தலா ஒருமுறைக் கழுவி உளூ செய்தார்கள்.
(23)باب
الْوُضُوءِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ
பாடம் : 23
உளூவில் (ஒவ்வோர் உறுப்பையும்) இருமுறை கழுவுதல்.
حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عِيسَى، قَالَ حَدَّثَنَا
يُونُسُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ
اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ،
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَوَضَّأَ
مَرَّتَيْنِ مَرَّتَيْنِ.
158. அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஒவ்வோர் உறுப்பையும்) தலா இரண்டுமுறைக் கழுவி உளூ செய்தார்கள்.
(24)باب
الْوُضُوءِ ثَلاَثًا ثَلاَثًا
பாடம் : 24
உளூவில் (ஒவ்வோர் உறுப்பையும்) மும்முறை கழுவுதல்.
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ
الأُوَيْسِيُّ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ،
أَنَّ عَطَاءَ بْنَ يَزِيدَ، أَخْبَرَهُ أَنَّ حُمْرَانَ مَوْلَى عُثْمَانَ
أَخْبَرَهُ أَنَّهُ، رَأَى عُثْمَانَ بْنَ عَفَّانَ دَعَا بِإِنَاءٍ، فَأَفْرَغَ
عَلَى كَفَّيْهِ ثَلاَثَ مِرَارٍ فَغَسَلَهُمَا، ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي
الإِنَاءِ فَمَضْمَضَ، وَاسْتَنْشَقَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، وَيَدَيْهِ
إِلَى الْمِرْفَقَيْنِ ثَلاَثَ مِرَارٍ، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ
رِجْلَيْهِ ثَلاَثَ مِرَارٍ إِلَى الْكَعْبَيْنِ، ثُمَّ قَالَ قَالَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا،
ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، لاَ يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غُفِرَ لَهُ مَا
تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ".
159. உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களால்
விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டு வரச்சொல்லி
(உளூ செய்தார்கள். ஆரம்பமாக) தமது இரு முன் கைகளில் மூன்றுமுறை (தண்ணீர்) ஊற்றிக் கழுவினார்கள்.
பிறகு தம் வலக்கரத்தைப் பாத்திரத்திற்குள் செலுத்தி, (தண்ணீர் அள்ளி) வாய்க்கொப்பளித்து,
(மூக்கிற்கு
நீர் செலுத்தி) மூக்குச்சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்றுமுறை கழுவினார்கள்.(பிறகு)
தமது இரு கைகளையும் மூட்டுவரை மூன்றுமுறை கழுவினார்கள். பிறகு தலையை ஈரக்கையால் தடவி
(மஸ்ஹுச் செய்திடலா)னார்கள். பின்னர் தமது இரு கால்களையும் கணுக்கால் வரை மூன்றுமுறை
கழுவினார்கள்.
பின்னர் யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச்செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகின்றாரோ
அவருக்கு அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக
உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
وَعَنْ إِبْرَاهِيمَ، قَالَ قَالَ صَالِحُ بْنُ
كَيْسَانَ قَالَ ابْنُ شِهَابٍ وَلَكِنْ عُرْوَةُ يُحَدِّثُ عَنْ حُمْرَانَ،،
فَلَمَّا تَوَضَّأَ عُثْمَانُ قَالَ أَلاَ أُحَدِّثُكُمْ حَدِيثًا لَوْلاَ آيَةٌ
مَا حَدَّثْتُكُمُوهُ، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "
لاَ يَتَوَضَّأُ رَجُلٌ فَيُحْسِنُ وُضُوءَهُ، وَيُصَلِّي الصَّلاَةَ إِلاَّ
غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الصَّلاَةِ حَتَّى يُصَلِّيَهَا ".
قَالَ عُرْوَةُ الآيَةُ {إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ
الْبَيِّنَاتِ}.
160. ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் (ரலி) அவர்கள், உளூ செய்யும்போது (எங்களைப் பார்த்து)
நான் ஒரு நபிமொழியை உங்களுக்குச் சொல்லட்டுமா?
(குர்ஆனின்)
ஒரு வசனம் மட்டும் இல்லையானால் அதை நான் உங்களுக்குச் சொல்லியிருக்க மாட்டேன் என்று
சொல்லிவிட்டு, ஒரு மனிதர் அழகிய முறையில் உளூச் செய்து, (கடமையான ஓர்) தொழுகையை நிறைவேற்றுவாராயின் அவர் (அடுத்த வேளைத்
தொழுகையை) தொழுது முடிக்கும்வரை அவருக்கும் அந்த (இரண்டாம் வேளைத்) தொழுகைக்கும் இடையில்
ஏற்பட்ட (சிறு) பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை
நான் கேட்டிருக்கிறேன் என்றார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நாம் தெளிவான வசனங்களையும் நேர்வழியையும் இறக்கிவைத்து அவற்றை மனிதர்களுக்கு வேதத்தில்
விளக்கிய பின்னரும் அவற்றை மறைக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சபிக்கின்றான்; மேலும் சபிப்போரும் அவர்களைச் சபிக்கிறார்கள் (2:159) எனும் வசனமே (உஸ்மான் (ரலி) அவர்கள் குறிப்பிட்ட) அந்த வசனமாகும்.
(25)باب
الاِسْتِنْثَارِ فِي الْوُضُوءِ
பாடம் : 25
உளூவின் போது மூக்கிற்கு நீர் செலுத்திச் சிந்துதல்.
حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ
اللَّهِ، قَالَ أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو
إِدْرِيسَ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم
أَنَّهُ قَالَ " مَنْ تَوَضَّأَ فَلْيَسْتَنْثِرْ، وَمَنِ اسْتَجْمَرَ
فَلْيُوتِرْ ".
161. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உளூ செய்பவர் மூக்கிற்கு நீர் செலுத்திச் சிந்தட்டும்; மலஜலம் கழித்துவிட்டு கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச்
செய்யட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(26)باب
الاِسْتِجْمَارِ وِتْرًا
பாடம் : 26
கற்களால் சுத்தம் செய்யும்போது ஒற்றைப் படையாகச் செய்தல்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ
أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي
هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا
تَوَضَّأَ أَحَدُكُمْ فَلْيَجْعَلْ فِي أَنْفِهِ ثُمَّ لِيَنْثُرْ، وَمَنِ
اسْتَجْمَرَ فَلْيُوتِرْ، وَإِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ
فَلْيَغْسِلْ يَدَهُ قَبْلَ أَنْ يُدْخِلَهَا فِي وَضُوئِهِ، فَإِنَّ أَحَدَكُمْ
لاَ يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ ".
162. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உளூச் செய்தால் தமது மூக்கிற்கு நீர் செலுத்தி (மூக்கை அசைத்து)ச்
சிந்தட்டும். மலஜலம் கழித்துவிட்டு கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப்படையாகச் செய்யட்டும்.
உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் தாம் உளூ செய்யப்போகும் பாத்திரத்திற்குள்
கையை நுழைப்பதற்கு முன்னால் கையை கழுவிக்கொள்ளட்டும். ஏனென்றால் உங்களில் எவரும் இரவில்
(உறங்கும் போது) தமது கை எங்கே கிடந்தது என்பதை அறிய மாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(27)باب غَسْلِ
الرِّجْلَيْنِ وَلاَ يَمْسَحُ عَلَى الْقَدَمَيْنِ
பாடம் : 27
உளூ செய்யும் போது கால்களைக் கழுவ வேண்டும்; தண்ணீர் தொட்டுத் தடவக் கூடாது.
حَدَّثَنَا مُوسَى، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ،
عَنْ أَبِي بِشْرٍ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو،
قَالَ تَخَلَّفَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنَّا فِي سَفْرَةٍ
سَافَرْنَاهَا، فَأَدْرَكَنَا وَقَدْ أَرْهَقْنَا الْعَصْرَ، فَجَعَلْنَا
نَتَوَضَّأُ وَنَمْسَحُ عَلَى أَرْجُلِنَا، فَنَادَى بِأَعْلَى صَوْتِهِ "
وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ ". مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا.
163. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள்
கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் செய்த)
ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். நாங்கள்
அஸ்ர் (தொழுகையின்) நேரத்தை அடைந்துவிட்ட நிலையில் எங்களிடம் அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.
அப்போது நாங்கள் உளூ செய்து கொண்டிருந்தோம். (கால்களைக் கழுவாமல்) கால்களை ஈரக்கையால்
தடவிக் கொண்டிருந்தோம். இதைக் கண்ணுற்ற நபி (ஸல்) அவர்கள் (உளூவில் கழுவப்படாத) இத்தகைய
குதிகால்களுக்கு நரகம்தான் என்று இரண்டு அல்லது மூன்று தடவைகள் உரத்த குரலில் கூறினார்கள்.
(28)باب
الْمَضْمَضَةِ فِي الْوُضُوءِ
பாடம் : 28
உளூ செய்யும் போது வாய் கொப்பளித்தல்.
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا
شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ، عَنْ
حُمْرَانَ، مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ أَنَّهُ رَأَى عُثْمَانَ دَعَا
بِوَضُوءٍ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ مِنْ إِنَائِهِ، فَغَسَلَهُمَا ثَلاَثَ مَرَّاتٍ،
ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الْوَضُوءِ، ثُمَّ تَمَضْمَضَ، وَاسْتَنْشَقَ،
وَاسْتَنْثَرَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ
ثَلاَثًا، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ كُلَّ رِجْلٍ ثَلاَثًا، ثُمَّ
قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ نَحْوَ وُضُوئِي هَذَا
وَقَالَ " مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا ثُمَّ صَلَّى
رَكْعَتَيْنِ، لاَ يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غَفَرَ اللَّهُ لَهُ مَا
تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ".
164. உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களால்
விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி, (தண்ணீர் வந்ததும்) தமது (முன்) கைகளில் மூன்றுமுறை ஊற்றிக் கழுவினார்கள்.
பிறகு தமது வலக்கரத்தைப் பாத்திரத்திற்குள் செலுத்தி (தண்ணீர் அள்ளி) வாய்க்கொப்பளித்து, மூக்கிற்கு நீர் செலுத்தி மூக்கைச் சிந்தினார்கள். பிறகு தமது
முகத்தை மூன்றுமுறை கழுவினார்கள். தமது இரு கைகளையும் மூட்டுவரை மூன்றுமுறை கழுவினார்கள்.
பிறகு தலையை ஈரக்கையால் தடவி(மஸ்ஹுச் செய்திடலா)னார்கள். பிறகு ஒவ்வொரு காலையும் மூன்றுமுறை
கழுவினார்கள்.
பிறகு (இதோ!) நான் செய்த இந்த உளூவைப் போன்றே நபி (ஸல்) அவர்கள் உளூ செய்யக் கண்டேன்
என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), யார் என்னுடைய இந்த உளூவைப் போன்று உளூ செய்து, பின்னர் வேறு எந்த எண்ணங்களுக்கும் தம் உள்ளத்தில் இடந்தராமல்
இரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்கு அவரது முன்பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான் என்று
கூறினார்கள் என்றார்கள்.
(29)باب
غَسْلِ الأَعْقَابِ
பாடம் : 29
குதிகால்களைக் கழுவுதல்.
وَكَانَ ابْنُ سِيرِينَ يَغْسِلُ مَوْضِعَ الْخَاتَمِ
إِذَا تَوَضَّأَ.
இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் உளூ செய்யும்போது (விரலில்) மோதிரம் அணிந்த பகுதியையும்
கழுவக் கூடியவராக இருந்தார்கள்.
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا
شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ سَمِعْتُ أَبَا
هُرَيْرَةَ ـ وَكَانَ يَمُرُّ بِنَا وَالنَّاسُ يَتَوَضَّئُونَ مِنَ الْمِطْهَرَةِ
ـ قَالَ أَسْبِغُوا الْوُضُوءَ فَإِنَّ أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم قَالَ
" وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ ".
165. முஹம்மத் பின் ஸியாத் (ரஹ்) கூறியதாவது:
நீர்குவளையில் (தண்ணீர் அள்ளி) மக்கள் உளூசெய்து கொண்டிருந்தபோது (அவ்வழியே) எங்களைக்
கடந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் சென்றார்கள். அப்போது (எங்களைப் பார்த்து) உளூவை முழுமையாகச்
செய்யுங்கள். ஏனெனில், அபுல்காசிம் (முஹம்மத் (ஸல்) அவர்கள்
(உளூவில்) சரியாகக் கழுவப்படாத குதிகால்களுக்கு நரகம்தான் என்று கூறினார்கள் என்றார்கள்.
(30)باب غَسْلِ
الرِّجْلَيْنِ فِي النَّعْلَيْنِ وَلاَ يَمْسَحُ عَلَى النَّعْلَيْنِ
பாடம் : 30
செருப்பு அணிந்திருந்தாலும் இரு கால்களையும் கழுவவே வேண்டும்; செருப்புகள் மீது தண்ணீர் தொட்டுத்
தடவக்கூடாது.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ
أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ عُبَيْدِ بْنِ جُرَيْجٍ،
أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ،
رَأَيْتُكَ تَصْنَعُ أَرْبَعًا لَمْ أَرَ أَحَدًا مِنْ أَصْحَابِكَ يَصْنَعُهَا.
قَالَ وَمَا هِيَ يَا ابْنَ جُرَيْجٍ قَالَ رَأَيْتُكَ لاَ تَمَسُّ مِنَ الأَرْكَانِ
إِلاَّ الْيَمَانِيَيْنِ، وَرَأَيْتُكَ تَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ،
وَرَأَيْتُكَ تَصْبُغُ بِالصُّفْرَةِ، وَرَأَيْتُكَ إِذَا كُنْتَ بِمَكَّةَ
أَهَلَّ النَّاسُ إِذَا رَأَوُا الْهِلاَلَ وَلَمْ تُهِلَّ أَنْتَ حَتَّى كَانَ
يَوْمُ التَّرْوِيَةِ. قَالَ عَبْدُ اللَّهِ أَمَّا الأَرْكَانُ فَإِنِّي لَمْ
أَرَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَمَسُّ إِلاَّ الْيَمَانِيَيْنِ،
وَأَمَّا النِّعَالُ السِّبْتِيَّةُ فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله
عليه وسلم يَلْبَسُ النَّعْلَ الَّتِي لَيْسَ فِيهَا شَعَرٌ وَيَتَوَضَّأُ فِيهَا،
فَأَنَا أُحِبُّ أَنْ أَلْبَسَهَا، وَأَمَّا الصُّفْرَةُ فَإِنِّي رَأَيْتُ
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَصْبُغُ بِهَا، فَأَنَا أُحِبُّ أَنْ
أَصْبُغَ بِهَا، وَأَمَّا الإِهْلاَلُ فَإِنِّي لَمْ أَرَ رَسُولَ اللَّهِ صلى
الله عليه وسلم يُهِلُّ حَتَّى تَنْبَعِثَ بِهِ رَاحِلَتُهُ.
166. உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், அபூ அப்திர்ரஹ்மானே! நீங்கள் நான்கு காரியங்களைச் செய்வதை நான் பார்க்கிறேன். உங்கள்
நண்பர்க(ளான நபித்தோழர்க)ளில் வேறெவரும் அவற்றைச் செய்வதை நான் பார்க்கவில்லை என்றேன்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்,
இப்னு ஜுரைஜே, அவை எவை? என்று கேட்டார்கள். நான், (தவாஃபின் போது கஅபாவின் மூலைகளில்) ருக்னுல் யமானீ மற்றும் ருக்னுல்
இராக்கீ ஆகிய இரு மூலைகளை மட்டுமே நீங்கள் தொடுவதைக் கண்டேன்.(மற்ற மூலைகளை நீங்கள்
தொடுவதில்லை.) மேலும் முடி களையப்பட்ட தோல் செருப்பையே நீங்கள் அணிவதை நான் பார்க்கிறேன்.
நீங்கள் உங்கள் ஆடைக்கு மஞ்சள் நிறச் சாயம் பூசுவதையே நான் பார்க்கிறேன். மேலும் நீங்கள்
மக்காவில் இருக்கும்போது மக்கள் (துல்ஹஜ்) பிறை கண்டவுடன் இஹ்ராம் கட்டுவதைப் போன்று
இஹ்ராம் கட்டாமல் துல்ஹஜ் எட்டாம் நாள் (யவ்முத் தர்வியா) வரை இருப்பதைக் கண்டேன்
(இவைதாம் அந்த நான்கு காரியங்கள்) என்றேன்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:
கஅபாவின் மூலைகளைப் பொறுத்தவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருக்னுல் யமானீ, ருக்னுல் இராக்கீ ஆகிய இரு மூலைகளைத் தவிர வேறெதையும் தொடுவதை
நான் காணவில்லை (ஆகவே, நானும் அப்படிச் செய்கிறேன்). முடி
களையப்பட்ட செருப்புகளைப் பொறுத்தவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முடியில்லாத
செருப்புகளை அணிவதையும் அதனுடன் (காலைக் கழுவி) உளூ செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன்.
ஆகவே, நானும் அதை அணிவதை விரும்புகிறேன். மஞ்சள் நிறத்தைப் பொறுத்தவரை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் ஆடையில்) அதன் மூலம்தான் சாயமிடுவதை நான் பார்த்திருக்கிறேன்.
எனவே அதைக் கொண்டு சாயமிடுவதை நான் விரும்புகிறேன். இஹ்ராம் கட்டுவதைப் பொறுத்தவரையில்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனம் பயணத்திற்குத் தயாராகி நிற்கும் (துல்ஹஜ்
எட்டாம் நாள்) வரை இஹ்ராம் கட்டுவதை நான் பார்த்ததில்லை (எனவேதான் நானும் எட்டாம் நாள்
இஹ்ராம் கட்டுகிறேன்).
No comments:
Post a Comment