அத்தியாயம் : 9
كتاب مواقيت الصلاة
தொழுகை நேரங்கள்
பாடம் : 31
(அஸ்ர் தொழுகைக்குப் பின்) சூரியன் மறைவதற்கு முன்னுள்ள நேரத்தை
தொழுவதற்காகத் தேர்வு செய்யலாகாது.
٥٨٥حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ
ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ
يَتَحَرَّى أَحَدُكُمْ فَيُصَلِّي عِنْدَ طُلُوعِ الشَّمْسِ وَلاَ عِنْدَ
غُرُوبِهَا ".
585. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'சூரியன் உதிக்கும்
போதும் சூரியன் மறையும் போதும் உங்களில் ஒருவர் தொழுவதை (வேண்டுமென்றே) நாட வேண்டாம்!'
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
٥٨٦حَدَّثَنَا
عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ
سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءُ بْنُ
يَزِيدَ الْجُنْدَعِيُّ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ صَلاَةَ
بَعْدَ الصُّبْحِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ، وَلاَ صَلاَةَ بَعْدَ الْعَصْرِ
حَتَّى تَغِيبَ الشَّمْسُ ".
586. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'ஸுப்ஹுக்குப்
பிறகிலிருந்து சூரியன் உயரும் மறையும் வரை எந்தத் தொழுகையும் இல்லை.' அஸர்க்கு பிறகிலிருந்து சூரியன் மறையும்
வரை எந்தத் தொழுகையும் இல்லை.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
٥٨٧حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ أَبَانَ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ،
عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ سَمِعْتُ حُمْرَانَ بْنَ أَبَانَ، يُحَدِّثُ عَنْ
مُعَاوِيَةَ، قَالَ إِنَّكُمْ لَتُصَلُّونَ صَلاَةً، لَقَدْ صَحِبْنَا رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم فَمَا رَأَيْنَاهُ يُصَلِّيهَا، وَلَقَدْ نَهَى
عَنْهُمَا، يَعْنِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ.
587. முஆவியா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் தோழமை கொண்டிருந்தோம். அவர்கள் தொழுது நாங்கள் பார்க்காத
ஒரு தொழுகையை நீங்கள் தொழுகிறீர்கள். நபி(ஸல்) அவர்கள் அதைத் தடுத்துமிருக்கிறார்கள்.
அதுதான் அஸருக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.
٥٨٨حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ
خُبَيْبٍ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَلاَتَيْنِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ
الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ.
588. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஃபஜ்ருக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரை அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன்
மறையும் வரை ஆகிய இரண்டு தொழுகைகளைவிட்டும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
(32)باب مَنْ لَمْ يَكْرَهِ الصَّلاَةَ إِلاَّ بَعْدَ
الْعَصْرِ وَالْفَجْرِ
பாடம் : 32
ஃபஜ்ர்,
அஸ்ர் ஆகிய தொழுகைகளுக்குப்
பின்பு தவிர மற்ற எந்த நேரத்திலும் தொழலாம்.
رَوَاهُ عُمَرُ وَابْنُ عُمَرَ وَأَبُو سَعِيدٍ وَأَبُو
هُرَيْرَةَ.
இது குறித்து உமர் (ரலி),
இப்னு உமர் (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) மற்றும் அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர்.
٥٨٩حَدَّثَنَا
أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ
نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ أُصَلِّي كَمَا رَأَيْتُ أَصْحَابِي
يُصَلُّونَ، لاَ أَنْهَى أَحَدًا يُصَلِّي بِلَيْلٍ وَلاَ نَهَارٍ مَا شَاءَ،
غَيْرَ أَنْ لاَ تَحَرَّوْا طُلُوعَ الشَّمْسِ وَلاَ غُرُوبَهَا.
589 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தோழர்களை எவ்வாறு (எந்நேரத்தில்) தொழக் கண்டேனோ அவ்வாறே நான் தொழு(து வரு)கின்றேன்.
இரவிலும் பகலிலும் தாம்
விரும்பியதைத் தொழும் எவரையும் நான் தடுக்க மாட்டேன். ஆயினும் (சரியாகச்) சூரியன் உதிக்கும்
நேரத்தையோ சூரியன் மறையும் நேரத்தையோ (தொழுவதற்காக) நீங்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது.
(33)باب مَا يُصَلَّى بَعْدَ الْعَصْرِ مِنَ الْفَوَائِتِ
وَنَحْوِهَا
பாடம் : 33
விடுபட்ட தொழுகைகள் போன்றவற்றை அஸ்ர் தொழுகைக்குப் பின்பு தொழுவது.
وَقَالَ كُرَيْبٌ عَنْ أُمِّ سَلَمَةَ صَلَّى النَّبِيُّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ الْعَصْرِ رَكْعَتَيْنِ وَقَالَ:
«شَغَلَنِي نَاسٌ مِنْ عَبْدِ الْقَيْسِ عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ».
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். லுஹ்ருக்குப்
பின்னுள்ள (சுன்னத்தான) தொழுகை இரண்டு ரக்அத்களைத் தொழ இடங்கொடுக்காமல் அப்துல் கைஸ்
(தூதுக்) குழுவினர் என் கவனத்தை ஈர்த்துவிட்டனர். (அதையே இப்போது நான் தொழுதேன்) என்றும்
கூறினார்கள்.
٥٩٠حَدَّثَنَا
أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ، قَالَ
حَدَّثَنِي أَبِي أَنَّهُ، سَمِعَ عَائِشَةَ، قَالَتْ وَالَّذِي ذَهَبَ بِهِ مَا
تَرَكَهُمَا حَتَّى لَقِيَ اللَّهَ، وَمَا لَقِيَ اللَّهَ تَعَالَى حَتَّى ثَقُلَ
عَنِ الصَّلاَةِ، وَكَانَ يُصَلِّي كَثِيرًا مِنْ صَلاَتِهِ قَاعِدًا ـ تَعْنِي
الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ ـ وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم
يُصَلِّيهِمَا، وَلاَ يُصَلِّيهِمَا فِي الْمَسْجِدِ مَخَافَةَ أَنْ يُثَقِّلَ
عَلَى أُمَّتِهِ، وَكَانَ يُحِبُّ مَا يُخَفَّفُ عَنْهُمْ.
590 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களை இறக்கச் செய்தவன் மீதாணையாக! (அஸ்ர் தொழுகைக்குப் பின்னுள்ள
அந்த) இரண்டு ரக்அத் தொழுகையை அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை நபி (ஸல்) அவர்கள் விட்டுவிடவில்லை.
தொழுவதற்குச் சிரமப்படும் நிலையை அடைந்த பிறகே நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைச் சந்தித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தாம் அஸ்ருக்குப் பின்னர் தொழும் அந்த-இரண்டு ரக்அத்களை
அமர்ந்து கொண்டே தொழுவார்கள்.நபி (ஸல்) அவர்கள் அந்த இரண்டு ரக்அத்களையும் தொழுவார்கள்; ஆனால் பள்ளிவாசலில்
அதைத் தொழ மாட்டார்கள். தம் சமுதாயத்தாருக்கு சிரமம் ஏற்படுத்துவதை அஞ்சியதே இதற்குக்
காரணம். தம் சமுதாயத்தாருக்கு இலேசாக்குவதையே விரும்புவார்கள்.
٥٩١حَدَّثَنَا
مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ
أَخْبَرَنِي أَبِي قَالَتْ، عَائِشَةُ ابْنَ أُخْتِي مَا تَرَكَ النَّبِيُّ صلى
الله عليه وسلم السَّجْدَتَيْنِ بَعْدَ الْعَصْرِ عِنْدِي قَطُّ.
591 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் (என்னிடம்), என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! அஸ்ர் தொழுகைக்குப்
பின் இரண்டு சஜ்தாக்கள் (ரக்அத்கள்)தொழுவதை என்னிடம் இருக்கும் போது நபி (ஸல்) அவர்கள்
ஒரு போதும் விட்டதில்லை.
٥٩٢حَدَّثَنَا
مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا
الشَّيْبَانِيُّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الأَسْوَدِ، عَنْ
أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ رَكْعَتَانِ لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم يَدَعُهُمَا سِرًّا وَلاَ عَلاَنِيَةً رَكْعَتَانِ قَبْلَ صَلاَةِ
الصُّبْحِ، وَرَكْعَتَانِ بَعْدَ الْعَصْرِ.
592 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரண்டு தொழுகைகளை இரகசியமாகவும் நபி (ஸல்) அவர்கள் விட்டுவிடவில்லை; பகிரங்கமாகவும் விட்டுவிடவில்லை.
(அவை:) சுப்ஹுத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள், அஸ்ர் தொழுகைக்குப்
பின் இரண்டு ரக்அத்கள்.
٥٩٣حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ،
قَالَ رَأَيْتُ الأَسْوَدَ وَمَسْرُوقًا شَهِدَا عَلَى عَائِشَةَ قَالَتْ مَا
كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَأْتِينِي فِي يَوْمٍ بَعْدَ الْعَصْرِ
إِلاَّ صَلَّى رَكْعَتَيْنِ.
593 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகைக்குப் பின் எந்த நாளில் என்னிடம் (என்வீட்டிற்கு)
வந்தாலும் அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்ததில்லை.
(34)باب التَّبْكِيرِ بِالصَّلاَةِ فِي يَوْمِ غَيْمٍ
பாடம் : 34
மேகமூட்டமுள்ள நாளில் தொழுகையை விரைவாக (ஆரம்ப நேரத்திலேயே)
நிறைவேற்றுவது.
٥٩٤حَدَّثَنَا
مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى ـ هُوَ ابْنُ
أَبِي كَثِيرٍ ـ عَنْ أَبِي قِلاَبَةَ، أَنَّ أَبَا الْمَلِيحِ، حَدَّثَهُ قَالَ
كُنَّا مَعَ بُرَيْدَةَ فِي يَوْمٍ ذِي غَيْمٍ فَقَالَ بَكِّرُوا بِالصَّلاَةِ
فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ تَرَكَ صَلاَةَ
الْعَصْرِ حَبِطَ عَمَلُهُ ".
594 அபுல் மலீஹ் (ஆமிர் பின் உசாமா-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மேகமூட்டமுடைய ஒரு நாளில் புரைதா பின் ஹஸீப் (ரலி) அவர்களுடன் (ஒரு போரில்) நாங்கள்
இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், அஸ்ர் தொழுகையை விரைவாக (அதன் ஆரம்ப நேரத்திலேயே)
நிறைவேற்றுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் யார் அஸ்ர் தொழுகையை
விட்டுவிடுகிறாரோ அவருடைய நற்செயல்கள் (அமல்கள்) அழிந்து விட்டன என்று கூறியுள்ளார்கள்
என்றார்கள்.
(35)باب الأَذَانِ بَعْدَ ذَهَابِ الْوَقْتِ
பாடம் : 35
நேரம் சென்ற பிறகும் பாங்கு சொல்வது.
٥٩٥حَدَّثَنَا
عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، قَالَ
حَدَّثَنَا حُصَيْنٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ،
قَالَ سِرْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم لَيْلَةً فَقَالَ بَعْضُ
الْقَوْمِ لَوْ عَرَّسْتَ بِنَا يَا رَسُولَ اللَّهِ. قَالَ " أَخَافُ
أَنْ تَنَامُوا عَنِ الصَّلاَةِ ". قَالَ بِلاَلٌ أَنَا أُوقِظُكُمْ.
فَاضْطَجَعُوا وَأَسْنَدَ بِلاَلٌ ظَهْرَهُ إِلَى رَاحِلَتِهِ، فَغَلَبَتْهُ
عَيْنَاهُ فَنَامَ، فَاسْتَيْقَظَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَدْ طَلَعَ
حَاجِبُ الشَّمْسِ فَقَالَ " يَا بِلاَلُ أَيْنَ مَا قُلْتَ ".
قَالَ مَا أُلْقِيَتْ عَلَىَّ نَوْمَةٌ مِثْلُهَا قَطُّ. قَالَ " إِنَّ
اللَّهَ قَبَضَ أَرْوَاحَكُمْ حِينَ شَاءَ، وَرَدَّهَا عَلَيْكُمْ حِينَ شَاءَ،
يَا بِلاَلُ قُمْ فَأَذِّنْ بِالنَّاسِ بِالصَّلاَةِ ". فَتَوَضَّأَ
فَلَمَّا ارْتَفَعَتِ الشَّمْسُ وَابْيَاضَّتْ قَامَ فَصَلَّى.
595 அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ-ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் (பயணம்) சென்று கொண்டிருந்தோம். அப்போது
மக்களில் சிலர், அல்லாஹ்வின் தூதரே! (பயணத்தை சற்று நிறுத்தி) எங்களை இளைப்பாறச் செய்யலாமே!
என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் (ஃபஜ்ர்)
தொழாமல் உறங்கிவிடுவீர்களோ என நான் அஞ்சுகிறேன் என்றார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்கள்,
உங்களை நான் விழித்தெழச் செய்கிறேன் என்று கூறினார்கள். எனவே அனைவரும்
(பயனத்தை நிறுத்தி) படுத்துக் கொண்டனர். பிலால் (ரலி) அவர்கள் தமது முதுகைத் தமது வாகனத்தின்
மீது சாய்த்துக் கொண்டிருந்த போது தம்மையும் மீறி கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்கள். சூரிய
வட்டத்தின் ஒரு பகுதி உதித்துவிட்ட நிலையில் நபி (ஸல்) அவர்கள் (முதன் முதலில்) உறக்கத்திலிருந்து
விழித்தார்கள். உடனே, பிலால்! நீங்கள் சொன்னது என்ன ஆயிற்று?
என்று கேட்டார்கள். இது போன்று உறக்கம் எனக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை
என்று பிலால் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் தான் நாடும் போது உங்கள் உயிர்களை கைப்பற்றிக்கொள்கிறான்; தான் நாடும் போது உங்களிடம் திருப்பித் தருகின்றான் என்று கூறிவிட்டு,
பிலால்! எழுந்து, பாங்கு சொல்லி தொழுகைக்கு மக்களை
அழைப்பீராக! என்று கூறினார்கள். பின்னர் அங்கசுத்தி (உளூ) செய்து, சூரியன் உயர்ந்து தெளிவாகத் தென்பட்ட போது (ஃபஜ்ர்) தொழு(கையை முன்னின்று நடத்)திடலானார்கள்.
(36)باب مَنْ صَلَّى بِالنَّاسِ جَمَاعَةً بَعْدَ ذَهَابِ
الْوَقْتِ
பாடம் : 36
(தொழுகையின்) நேரம் சென்ற
பிறகு மக்களுக்கு ஒருவர் கூட்டுத் தொழுகை (ஜமாஅத்) நடத்துவது.
٥٩٦حَدَّثَنَا
مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي
سَلَمَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ،
جَاءَ يَوْمَ الْخَنْدَقِ بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ، فَجَعَلَ يَسُبُّ
كُفَّارَ قُرَيْشٍ قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا كِدْتُ أُصَلِّي الْعَصْرَ
حَتَّى كَادَتِ الشَّمْسُ تَغْرُبُ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم
" وَاللَّهِ مَا صَلَّيْتُهَا ". فَقُمْنَا إِلَى بُطْحَانَ،
فَتَوَضَّأَ لِلصَّلاَةِ، وَتَوَضَّأْنَا لَهَا فَصَلَّى الْعَصْرَ بَعْدَ مَا
غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى بَعْدَهَا الْمَغْرِبَ.
596 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போரின் போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குறைஷிக் குல இறைமறுப்பாளர்
களை ஏசிக் கொண்டே வந்து, சூரியன் மறையத் தொடங்கும் வரை என்னால் அஸ்ர் தொழுகையை தொழ முடியாமல்
போய்விட்டது என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் (இதுவரை)
அஸ்ர் தொழவில்லை என்று கூறினார்கள். பின்னர் புத்ஹான் எனும் பள்ளத்தாக்கை நோக்கி நாங்கள்
சென்றோம். அங்கே தொழுகைக்காக நபி (ஸல்) அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். நாங்களும்
தொழுகைக்காக அங்கசுத்தி (உளூச்) செய்தோம். சூரியன் மறைந்த பிறகு அஸ்ர் தொழுதார்கள்.
அதன் பின்னர் மஃக்ரிப் தொழுதார்கள். (அவர்களுக்குப் பின் நின்று நாங்களும் தொழுதோம்).
(37)باب مَنْ نَسِيَ صَلاَةً فَلْيُصَلِّ إِذَا ذَكَرَهَا
وَلاَ يُعِيدُ إِلاَّ تِلْكَ الصَّلاَةَ
பாடம் : 37
ஒரு தொழுகையை ஒருவர் தொழ மறந்துவிட்டால் நினைவு வந்ததும் அதை
அவர் தொழ வேண்டும். அந்தத் தொழுகையைத் தவிர (கூடுதலாக) வேறு எதையும் தொழ வேண்டியதில்லை.
وَقَالَ إِبْرَاهِيمُ مَنْ تَرَكَ صَلاَةً وَاحِدَةً
عِشْرِينَ سَنَةً لَمْ يُعِدْ إِلاَّ تِلْكَ الصَّلاَةَ الْوَاحِدَةَ.
ஒருவர் ஒரு தொழுகையைத் தொழாமல் இருபது ஆண்டு இருந்துவிட்டாலும் (விடுபட்ட) அந்தத்
தொழுகையைத் தவிர வேறு எதையும் அவர் திரும்பத் தொழ வேண்டியதில்லை என இப்ராஹீம் (பின்
யஸீத் அந்நகஈ-ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
٥٩٧حَدَّثَنَا
أَبُو نُعَيْمٍ، وَمُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ
قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ
نَسِيَ صَلاَةً فَلْيُصَلِّ إِذَا ذَكَرَهَا، لاَ كَفَّارَةَ لَهَا إِلاَّ ذَلِكَ
". {وَأَقِمِ الصَّلاَةَ لِذِكْرِي} قَالَ مُوسَى قَالَ هَمَّامٌ
سَمِعْتُهُ يَقُولُ بَعْدُ {وَأَقِمِ الصَّلاَةَ لِذِكْرِي}.وَقَالَ
حَبَّانُ حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسٌ، عَنِ
النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ.
597 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரேனும் ஒரு தொழுகையை(த் தொழ) மறந்துவிட்டால் அதன் நினைவு வந்ததும் அவர் அதைத்
தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் ஏதுமில்லை. (அல்லாஹ் கூறுகின்றான்:) என்னை
தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துவீராக. (20:14)
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள வஅகிமிஸ் ஸலாத்த -திக்ரீ'
எனும் வாக்கியத்தை) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் மற்றொரு சந்தர்ப்பத்தில்
வ அகிமிஸ் ஸலாத்த -த் திக்ரீ என்று ஓதக்கேட்டேன்.
இந்த ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமி ருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும்
வந்துள்ளது.
(38)باب قَضَاءِ الصَّلَوَاتِ الأُولَى فَالأُولَى
பாடம் : 38
தவறிய தொழுகைகளை முந்தையது அதற்கடுத்தது என (ஒன்றன் பின் ஒன்றாகத்)
தொழுவது.
٥٩٨حَدَّثَنَا
مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى ـ
هُوَ ابْنُ أَبِي كَثِيرٍ ـ عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ، قَالَ جَعَلَ
عُمَرُ يَوْمَ الْخَنْدَقِ يَسُبُّ كُفَّارَهُمْ وَقَالَ مَا كِدْتُ أُصَلِّي
الْعَصْرَ حَتَّى غَرَبَتْ. قَالَ فَنَزَلْنَا بُطْحَانَ، فَصَلَّى بَعْدَ مَا
غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى الْمَغْرِبَ.
598 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப் போரின் போது உமர் (ரலி) அவர்கள் (தங்களுடன் போரிட்ட குறைஷி) இறை மறுப்பாளர்களை
ஏசிக் கொண்டே (வந்து), சூரியன் மறையத் தொடங்கும் வரை என்னால் அஸ்ர் தொழுகையைத் தொழமுடியாமல்
போய்விட்டது என்று கூறினார்கள். எனவே, நாங்கள் புத்ஹான் எனும்
பள்ளத்தாக்கில் இறங்கினோம். சூரியன் மறைந்த பின்னர் (எங்களுக்கு இமாமாக நின்று) நபி
(ஸல்) அவர்கள் (முதலில் அஸ்ர் தொழுகையைத்) தொழுதார்கள். பின்னர் மஃக்ரிப் தொழுகையைத்
தொழுதார்கள்.
(39)باب مَا يُكْرَهُ مِنَ السَّمَرِ بَعْدَ الْعِشَاءِ
பாடம் : 39
இஷாத் தொழுகைக்குப் பிறகு (உறங்காமல்) பேசிக் கொண்டிருப்பது
வெறுக்கத்தக்க செயலாகும்.
٥٩٩حَدَّثَنَا
مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا عَوْفٌ، قَالَ حَدَّثَنَا
أَبُو الْمِنْهَالِ، قَالَ انْطَلَقْتُ مَعَ أَبِي إِلَى أَبِي بَرْزَةَ
الأَسْلَمِيِّ فَقَالَ لَهُ أَبِي حَدِّثْنَا كَيْفَ، كَانَ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم يُصَلِّي الْمَكْتُوبَةَ قَالَ كَانَ يُصَلِّي الْهَجِيرَ وَهْىَ
الَّتِي تَدْعُونَهَا الأُولَى حِينَ تَدْحَضُ الشَّمْسُ، وَيُصَلِّي الْعَصْرَ،
ثُمَّ يَرْجِعُ أَحَدُنَا إِلَى أَهْلِهِ فِي أَقْصَى الْمَدِينَةِ وَالشَّمْسُ
حَيَّةٌ، وَنَسِيتُ مَا قَالَ فِي الْمَغْرِبِ. قَالَ وَكَانَ يَسْتَحِبُّ أَنْ
يُؤَخِّرَ الْعِشَاءَ. قَالَ وَكَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَهَا وَالْحَدِيثَ
بَعْدَهَا، وَكَانَ يَنْفَتِلُ مِنْ صَلاَةِ الْغَدَاةِ حِينَ يَعْرِفُ أَحَدُنَا
جَلِيسَهُ، وَيَقْرَأُ مِنَ السِّتِّينَ إِلَى الْمِائَةِ.
599 அபுல் மின்ஹால் (சய்யார் பின் சலாமா-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் என் தந்தையும் அபூபர்ஸா அல்அஸ்லமீ (நள்லா பின் உபைத்-ரலி) அவர்களிடம் சென்றோம்.
அப்போது அவர்களிடம் என் தந்தை, கடமையான தொழுகைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு
(எந்நேரத்தில்) தொழுவார்கள்? என்று கேட்டார்கள்.அதற்கு அபூபர்ஸா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
-நீங்கள் முதல்
தொழுகை என்று அழைக்கக் கூடிய நண்பகல் (லுஹ்ர்) தொழுகையை சூரியன் (நடு வானிலிருந்து
மேற்கு நோக்கி) சாயும் போது நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள்.
(பின்னர்) அஸ்ர்
தொழுகையைத் தொழுவார்கள். எங்களில் ஒருவர் (அஸ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டு) மதீனாவின்
கடைக் கோடியிலுள்ள தமது இல்லத்திற்குத் திரும்பிச் சென்றுவிடுவார். சூரியன் (வெளிச்சமோ
வெப்பமோ குன்றாமல்) தெளிவாக இருந்து கொண்டிருக்கும்.
-மஃக்ரிப் தொழுகை(யின்
நேரம்) பற்றி அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறினார்கள்; ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன்.
இஷாத் தொழுகையைப் பிற்படுத்துவதையே நபி (ஸல்)
அவர்கள் விரும்புவார்கள். இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப்
பின் பேசிக் கொண்டிருப்பதையும் நபி (ஸல்) அவர்கள் வெறுப்பார்கள்.
எங்களில் ஒருவர் தம் அருகில் அமர்ந்திருப்பவரை அறிந்துகொள்ளும் (அளவிற்கு வெளிச்சம்
வந்துவிடும்) நேரத்தில் வைகறைத் தொழுகை (சுப்ஹுத் தொழுகை)யை முடித்துத் திரும்புவார்கள்.
(வைகறைத் தொழுகையில்) அறுபது (வசனங்கள்) முதல் நூறு (வசனங்கள்) வரை ஓதுவார்கள்
(40)باب السَّمَرِ فِي الْفِقْهِ وَالْخَيْرِ بَعْدَ
الْعِشَاءِ
பாடம் : 40
இஷாத் தொழுகைக்குப் பிறகு மார்க்கச் சட்டங்கள் நல்ல விஷயங்கள்
பற்றிப் பேசிக் கொண்டிருப்பது.
٦٠٠حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ الصَّبَّاحِ، قَالَ حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْحَنَفِيُّ،
حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، قَالَ انْتَظَرْنَا الْحَسَنَ وَرَاثَ عَلَيْنَا
حَتَّى قَرُبْنَا مِنْ وَقْتِ قِيَامِهِ، فَجَاءَ فَقَالَ دَعَانَا جِيرَانُنَا
هَؤُلاَءِ. ثُمَّ قَالَ قَالَ أَنَسٌ نَظَرْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم
ذَاتَ لَيْلَةٍ حَتَّى كَانَ شَطْرُ اللَّيْلِ يَبْلُغُهُ، فَجَاءَ فَصَلَّى
لَنَا، ثُمَّ خَطَبَنَا فَقَالَ " أَلاَ إِنَّ النَّاسَ قَدْ صَلَّوْا
ثُمَّ رَقَدُوا، وَإِنَّكُمْ لَمْ تَزَالُوا فِي صَلاَةٍ مَا انْتَظَرْتُمُ الصَّلاَةَ
". قَالَ الْحَسَنُ وَإِنَّ الْقَوْمَ لاَ يَزَالُونَ بِخَيْرٍ مَا
انْتَظَرُوا الْخَيْرَ. قَالَ قُرَّةُ هُوَ مِنْ حَدِيثِ أَنَسٍ عَنِ النَّبِيِّ
صلى الله عليه وسلم.
600 குர்ரா பின் காலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு நாள் இரவு)
ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) (அவர்களிடம் மார்க்கக் கல்வி பயில) அவர்களை எதிர்பார்த்துக் காத்துக்
கொண்டி ருந்தோம். அவர்கள் (வழக்கத்திற்கு மாறாக அன்று) எங்களிடம் தாமதமாக வந்தார்கள்.
எந்த அளவிற்கென்றால், (வழக்கமாக அவர்கள் எங்களிடம் அமர்ந்து விட்டு) எழுந்து செல்லும் நேரமும் நெருங்கியது.
அப்போது அவர்கள் வந்து, எம் இந்த அண்டை வீட்டர் எம்மை அழைத்தனர் (அதனால் தாமதம் ஏற்பட்டுவிட்டது) என்று
கூறிவிட்டு (பின்வருமாறு) சொன்னார்கள்:
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் ஓர் (நாள்) இரவில்
(இஷாத் தொழுகைகைக்காக) நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தோம்.
நள்ளிரவு நேரம் ஆகும் போது நபி (ஸல்) அவர்கள் வந்து எங்களுக்கு இஷாத் தொழுகை நடத்தினார்கள்.
பின்னர் எங்களிடம் உரையாற்றினார்கள் அப்போது அவர்கள் அறிந்து கொள்ளுங்கள்: (உங்களைத்
தவிர மற்ற) மக்கள் அனைவரும் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். தொழுகையை எதிர்பார்த்துக்
காத்துக் கொண்டிருக்கும் நீங்கள் ஓர் தொழுகையில் உள்ளீர்கள் (என்றே கருதப்படும்) என்று
கூறினார்கள்.
தொடர்ந்து ஹஸன் அல்பஸ்ரீ
(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நன்மையை எதிர்பார்த்துக்
காத்துக் கொண்டிருக்கும் போதும் மக்கள் ஓர் நன்மையிலேயே இருக்கிறார்கள்.
அறிவிப்பாளர் குர்ரா பின்
காலித் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இது நபி (ஸல்) அவர்களிடமிருந்து
அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்களில் உள்ளதாகும்.
٦٠١حَدَّثَنَا
أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ
حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي
حَثْمَةَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ صَلَّى النَّبِيُّ صلى الله
عليه وسلم صَلاَةَ الْعِشَاءِ فِي آخِرِ حَيَاتِهِ، فَلَمَّا سَلَّمَ قَامَ
النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " أَرَأَيْتَكُمْ لَيْلَتَكُمْ
هَذِهِ فَإِنَّ رَأْسَ مِائَةٍ لاَ يَبْقَى مِمَّنْ هُوَ الْيَوْمَ عَلَى ظَهْرِ
الأَرْضِ أَحَدٌ ". فَوَهِلَ النَّاسُ فِي مَقَالَةِ رَسُولِ اللَّهِ ـ
عَلَيْهِ السَّلاَمُ ـ إِلَى مَا يَتَحَدَّثُونَ مِنْ هَذِهِ الأَحَادِيثِ عَنْ
مِائَةِ سَنَةٍ، وَإِنَّمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ
يَبْقَى مِمَّنْ هُوَ الْيَوْمَ عَلَى ظَهْرِ الأَرْضِ " يُرِيدُ بِذَلِكَ
أَنَّهَا تَخْرِمُ ذَلِكَ الْقَرْنَ.
601 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளின் அந்திமக் காலத்தில் (ஒரு நாள்) இஷாத் தொழுகை
நடத்தினார்கள். சலாம் கொடுத்(து தொழுகையை முடித்)ததும் எழுந்து நின்று, இந்த இரவைப் பற்றி
உங்களுக்குத் தெரியுமா? இன்றிலிருந்து (சரியாக) ஒரு நூற்றாண்டின்
ஆரம்பத்தில் இப்போது பூமியின் மேல் இருக்கக்கூடியவர்களில் யாரும் அப்போது எஞ்சியிருக்கமாட்டார்கள்
என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்றை மக்கள் தவறாக விளங்கிக்
கொண்டு, நூறு ஆண்டுகளுக்குப் பின் உலகம் அழிந்துவிடும் எனப் பேசிக்
கொண்டனர். ஆனால், இன்று பூமி மேல் இருக்கக் கூடியவர்களில் (யாரும்)
எஞ்சியிருக்க மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதன் நோக்கம், அந்தத் தலைமுறை (நூறு ஆண்டுகளுக்குப் பின்) முடிவு பெற்றுவிடும் என்பது தான்
.
(41)باب السَّمَرِ مَعَ الضَّيْفِ وَالأَهْلِ
பாடம் : 41
விருந்தினருடனும் குடும்பத்தாருடனும் இரவில் பேசிக் கொண்டிருப்பது.
٦٠٢حَدَّثَنَا
أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ
حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا أَبُو عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ
أَبِي بَكْرٍ، أَنَّ أَصْحَابَ الصُّفَّةِ، كَانُوا أُنَاسًا فُقَرَاءَ، وَأَنَّ
النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ كَانَ عِنْدَهُ طَعَامُ
اثْنَيْنِ فَلْيَذْهَبْ بِثَالِثٍ، وَإِنْ أَرْبَعٌ فَخَامِسٌ أَوْ سَادِسٌ
". وَأَنَّ أَبَا بَكْرٍ جَاءَ بِثَلاَثَةٍ فَانْطَلَقَ النَّبِيُّ صلى
الله عليه وسلم بِعَشَرَةٍ، قَالَ فَهْوَ أَنَا وَأَبِي وَأُمِّي، فَلاَ أَدْرِي
قَالَ وَامْرَأَتِي وَخَادِمٌ بَيْنَنَا وَبَيْنَ بَيْتِ أَبِي بَكْرٍ. وَإِنَّ
أَبَا بَكْرٍ تَعَشَّى عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ لَبِثَ حَيْثُ
صُلِّيَتِ الْعِشَاءُ، ثُمَّ رَجَعَ فَلَبِثَ حَتَّى تَعَشَّى النَّبِيُّ صلى الله
عليه وسلم فَجَاءَ بَعْدَ مَا مَضَى مِنَ اللَّيْلِ مَا شَاءَ اللَّهُ، قَالَتْ
لَهُ امْرَأَتُهُ وَمَا حَبَسَكَ عَنْ أَضْيَافِكَ ـ أَوْ قَالَتْ ضَيْفِكَ ـ
قَالَ أَوَمَا عَشَّيْتِيهِمْ قَالَتْ أَبَوْا حَتَّى تَجِيءَ، قَدْ عُرِضُوا
فَأَبَوْا. قَالَ فَذَهَبْتُ أَنَا فَاخْتَبَأْتُ فَقَالَ يَا غُنْثَرُ،
فَجَدَّعَ وَسَبَّ، وَقَالَ كُلُوا لاَ هَنِيئًا. فَقَالَ وَاللَّهِ لاَ
أَطْعَمُهُ أَبَدًا، وَايْمُ اللَّهِ مَا كُنَّا نَأْخُذُ مِنْ لُقْمَةٍ إِلاَّ
رَبَا مِنْ أَسْفَلِهَا أَكْثَرُ مِنْهَا. قَالَ يَعْنِي حَتَّى شَبِعُوا
وَصَارَتْ أَكْثَرَ مِمَّا كَانَتْ قَبْلَ ذَلِكَ، فَنَظَرَ إِلَيْهَا أَبُو
بَكْرٍ فَإِذَا هِيَ كَمَا هِيَ أَوْ أَكْثَرُ مِنْهَا. فَقَالَ لاِمْرَأَتِهِ
يَا أُخْتَ بَنِي فِرَاسٍ مَا هَذَا قَالَتْ لاَ وَقُرَّةِ عَيْنِي لَهِيَ الآنَ
أَكْثَرُ مِنْهَا قَبْلَ ذَلِكَ بِثَلاَثِ مَرَّاتٍ. فَأَكَلَ مِنْهَا أَبُو
بَكْرٍ وَقَالَ إِنَّمَا كَانَ ذَلِكَ مِنَ الشَّيْطَانِ ـ يَعْنِي يَمِينَهُ ـ
ثُمَّ أَكَلَ مِنْهَا لُقْمَةً، ثُمَّ حَمَلَهَا إِلَى النَّبِيِّ صلى الله عليه
وسلم فَأَصْبَحَتْ عِنْدَهُ، وَكَانَ بَيْنَنَا وَبَيْنَ قَوْمٍ عَقْدٌ، فَمَضَى
الأَجَلُ، فَفَرَّقَنَا اثْنَا عَشَرَ رَجُلاً، مَعَ كُلِّ رَجُلٍ مِنْهُمْ
أُنَاسٌ، اللَّهُ أَعْلَمُ كَمْ مَعَ كُلِّ رَجُلٍ فَأَكَلُوا مِنْهَا
أَجْمَعُونَ، أَوْ كَمَا قَالَ.
602 அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
திண்ணைத் தோழர்கள் வறிய மக்களாக இருந்தார்கள். (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் எவரிடம்
இரண்டு பேருக்கான உணவு உள்ளதோ, அவர் மூன்றாமவ(ராக திண்ணைத் தோழர் ஒருவ)ரை(த் தம்முடன்) அழைத்துச்
செல்லட்டும். நான்கு பேருக்குரிய உணவு (யாராவது ஒருவரிடம்) இருந்தால் (அவர் தம்முடன்)
ஐந்தாமவரையும் (ஐந்து பேருக்குரிய உணவு இருந்தால்) ஆறாமவரையும் அழைத்துச் செல்லட்டும்
என்று கூறினார்கள்.
(என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (திண்ணைத் தோழர்கள்) மூவருடன் (இல்லத்திற்கு)
வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பத்துப்பேருடன் (தம் இல்லம் நோக்கி) நடந்தார்கள்.
(என் தந்தை வீட்டிற்கு வந்த போது வீட்டில்) நானும் (அப்துர்ரஹ்மான்),
என் தந்தையும் (அபூபக்ர்), என் தாயும் (உம்மு ரூமான்),
எங்கள் வீட்டிற்கும் (என் தந்தை) அபூ பக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்கும்
கூட்டாகப் பணிபுரிந்து வந்த பணியாளரும்தாம் இருந்தோம்.
-இதன் அறிவிப்பாளரான அபூஉஸ்மான் (அப்துர்ரஹ்மான் பின் மல்) அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள்
கூறுகின்றார்கள்:
என் மனைவியும்... (இருந்தார்) என அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர்
(ரலி) அவர்கள் கூறினார்களா என்று எனக்கு (உறுதியாகத்) தெரியவில்லை (சந்தேகமாகவே இருக்கிறது).
அபூபக்ர் (ரலி) அவர்கள் (விருந்தினருக்கு உணவளிக்குமாறு தம் வீட்டாரிடம் கூறிவிட்டு)
நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) இரவு உணவு அருந்தினார்கள். பிறகு இஷாத் தொழுகை நடைபெறும்
வரை அங்கேயே இருந்துவிட்டுப் பிறகு நபி (ஸல்) அவர்கள் இரவு உணவு அருந்தும் வரை காத்திருந்துவிட்டு
இரவில் அல்லாஹ் நாடிய ஒரு பகுதி கழிந்த பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் (தம் வீட்டுக்கு)
வந்தார்கள். அவர்களுடைய துணைவியார் (என் தாயார்) அபூபக்ர் (ரலி) அவர்களிடம், உங்கள் விருந்தாளிகளைஅல்லது உங்கள் விருந்தாளியை (உபசரிக்க
வராமல்) தாமதமானதற்கு என்ன காரணம்? என்று கேட்டார்கள். அபூபக்ர்
(ரலி) அவர்கள், விருந்தினருக்கு உணவளித்தாயா? என்று கேட்டார்கள்.
அதற்கு என் தாயார், நீங்கள் வரும்வரை உண்ணமாட்டோம் என்று அவர்கள் மறுத்துவிட்டார்கள்.
அவர்களிடம் எடுத்துச் சொல்லியும் அவர்கள் (உண்ண மறுத்து)விட்டார்கள் என்று பதிலளித்தார்கள்.
(என் தந்தை அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் விருந்தாளிகளைச் சரியாகக் கவனிக்கவில்லை
என்று என்னைக் கண்டிப்பார்கள் என்றஞ்சி) நான் சென்று ஒளிந்து கொண்டேன்.
அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், விவரங்கெட்டவனே!-(என்றழைத்து என்னை) உன்
காதறுந்து போக!என்று கூறி ஏசினார்கள்.
(அவர்கள் உணவருந்த தாமதமானதற்கு அவர்களே காரணம் என்று அறிந்து கொண்ட போது) நீங்கள்
தாராளமாக உண்ணுங்கள் என்று (தம் விருந்தினரிடம்) கூறிவிட்டு (தம் வீட்டாரை நோக்கி,
என்னை எதிர் பார்த்துத்தானே இவ்வளவு நேரம் தாமதம் செய்தீர்கள்!) அல்லாஹ்வின்
மீதாணையாக! நான் ஒரு போதும் இதை உண்ணப் போவதில்லை என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் (பாத்திரத்திலிருந்து) ஒரு கவளத்தை எடுக்கும்
போதெல்லாம் அதன் கீழ்ப்பகுதியிலிருந்து அதைவிட அதிகமாகப் பெருகிக் கொண்டே வந்தது. இறுதியில்
அவர்கள் அனைவரும் பசியாறினர். அப்போது அந்த உணவு முன்பிருந் ததைவிட கூடி இருந்தது.
அபூபக்ர் (ரலி) அவர்கள் அ(ந்த பாத்திரத்)தைப் பார்த்தார்கள். அப்போது அது முன்பிருந்த
அளவு, அல்லது அதைவிட அதிகமாகக்
காணப்பட்டது. உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (என் தாயாரிடம்), பனூ
ஃபிராஸ் குலத்தாரின் சகோதரியே! என்ன இது? என்று வினவ,
அதற்கு என் தாயார், எனது கண் குளிர்ச்சியின் மீதாணையாக!
இது இப்போது முன்பிருந்ததைவிட மூன்று மடங்கு அதிகமாகிவிட்டிருக்கிறது என்று சொன்னார்கள்.
அதிலிருந்து அபூபக்ர் (ரலி) அவர்களும் உண்டார்கள். மேலும், (நான் ஒரு போதும் இதை
உண்ண மாட்டேன் என்று என்னை சத்தியம் செய்யவைத்தது) ஷைத்தான்தான் என்று கூறிவிட்டு அதிலிருந்து
இன்னும் ஒரு கவளம் உண்டார்கள். பிறகு அ(ந்தப் பாத்திரத்)தை எடுத்துக் கொண்டு நபி (ஸல்)
அவர்களிடம் சென்றார்கள். பிறகு அது நபி (ஸல்) அவர்களிடம் இருக்கலாயிற்று.
எங்களுக்கும் ஒரு சமுதாயத்திற்குமிடையே சமாதான ஒப்பந்தம் இருந்து வந்தது. அந்த
ஒப்பந்த தவணை முடிவுற்றது. (இனி அவர்கள் போருக்கு வந்தால், அவர்களை எதிர் கொள்வதற்காக)
நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பனினிரண்டு பேராகப் பிரித்து ஒவ்வொருவரிடமும் சில படை வீரர்களை
ஒப்படைத்தார்கள். ஒவ்வொருவருடனும் எவ்வளவு பேர் இருந்தனர் என்பதை அல்லாஹ்வே அறிவான்.
(அவ்வளவு பெரிய படையினருடன் அந்த உணவுப் பாத்திரத்தையும் கொடுத்தனுப்பினார்கள்) அப்போது
அவர்கள் அனைவரும் அதில் உண்டனர். (இவ்வாறோ அல்லது) வேறொரு முறையிலோ இதை அப்துர் ரஹ்மான்
பின் அபீ பக்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என அறிவிப்பாளர் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள்
கூறினார்கள்.
No comments:
Post a Comment