புஹாரியில் இடம்பெற்ற ரத்தின சுருக்கமான நபிமொழிகள் ( பகுதி 04 )
16. (நோன்புப் பெருநாள்) தர்மத்தைப்
பெருநாளு(டைய தொழுகை)க்கு முன்பே கொடுத்தல்.
عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ
النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ بِزَكَاةِ
الْفِطْرِ قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ.
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நோன்புப் பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்னால் கொடுத்து
விடும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். ( புஹாரி 1509 )
17. புனித பூமி மதீனா
عَنْ أَنَسٍ ـ رضى
الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
" اللَّهُمَّ اجْعَلْ بِالْمَدِينَةِ ضِعْفَىْ مَا جَعَلْتَ بِمَكَّةَ مِنَ
الْبَرَكَةِ "
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய பரக்கத்தைப்
போல் இரண்டு மடங்கை மதீனாவில் ஏற்படுத்துவாயாக!'
என அனஸ்(ரலி) அறிவித்தார்.( புஹாரி
1885 )
18. சுவனத்தின் வாசல் திறக்கப்படும் மாதம்
عَنْ أَبِي
هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا جَاءَ رَمَضَانُ فُتِحَتْ أَبْوَابُ الْجَنَّةِ
".
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ரமலான் வந்துவிட்டால் சொர்க்கத்தின்
வாசல்கள் திறக்கப்படுகின்றன.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.(
புஹாரி 1898 )
19. ரமலான் 10 இரவுகளில் இஃதிகாஃப் இருந்தல்
أَخْبَرَهُ عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ
رَمَضَانَ
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
'நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்
பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்!'( புஹாரி
2025 )
20. அநீதம் மறுமையில் இருள்போன்று காட்சி தரும்
عَنْ عَبْدِ اللَّهِ
بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الظُّلْمُ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ ".
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.(
புஹாரி 2447)
No comments:
Post a Comment