Thursday, December 7, 2017

தஜ்ஜால் பற்றின தகவல் ( ஹதீஸ்கள் பார்வையில் )


தஜ்ஜால் பற்றின தகவல் ( ஹதீஸ்கள் பார்வையில் )

خُرُوجِ الدَّجَّال
   தஜ்ஜாலின் வருகை

                                                                           -   M.S.M.இம்தியாஸ் யூசுப் 

உலக அழிவுககு முன்னால் ஏற்படக்கூடிய மிகப் பெரும் நிகழ்வுகள் பற்றியும் குழப்பங்கள் பற்றியும் நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அதில் தஜ்ஜாலின் வருகையும் ஒன்றாகும்.

அல்லாஹ்வின் படைப்புக்களில் தஜ்ஜாலும் வித்தியாச மான ஒரு படைப்பு.இவனது தோற்றம் அங்கஅமைப்பு செயற்பாடுகள் அவன் வெளியாகும் சந்தர்ப்பம் மற்றும் அவனது இறுதி முடிவு என்பன  பற்றி தன்னுடைய இறுதித் தூதர் முஹம்மத(ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் அறிவித்துள்ளான்.

ஷைத்தான் மனித சமூகத்தின் எதிரியாக காண் பிக்கப்பட்டது போலவே  தஜ்ஜாலும் காட்டப்பட்டுள்ளான்.

தஜ்ஜாலின் படைப்பு எப்போது நிகழ்ந்தது என்பது பற்றி தெரியாது. ஆனால் உலகஅழிவின் அடையாளங்களில் ஒன்றாக அவன் வெளியாக்கப்படுவான். அவனது பித்னா குறித்து எல்லா இறைத்தூதர்களும் தங்களது சமூ கத்திற்கு எச்சரிக்கை செய்துள்ளார்கள். தஜ்ஜால் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய விபரங்களை இனி கவனிப்போம்.

الدَّجَّال தஜ்ஜால் என்பதன் பொருள்:

தஜல் எனும் அறபு வார்த்தையிலிருந்து வந்த பெயர்ச் சொல்லே தஜ்ஜால் என்பதாகும். தஜல் என்றால் மறைத் தல் எனப் பொருளாகும்.
தஜ்ஜால் என்றால் -பொய்யினால் உண்மையை மறைப்ப வன். பொய்க்கு உண்மை எனும் முலாம் பூசுபவன். உண் மையை மறைத்து பொய்யை சொல்பவன் என பல அர்த்தங்கள் உண்டு.
சத்தியத்தை மறைத்து அசத்தியத்தைச் சொல்லும் மகா பொய்யர்களுக்கும் தஜ்ஜால் எனக் கூறப்படும்

 . எனவே தஜ்ஜாலின் செயற்பாடுகளும்  பொய்யான வையாக  இருக்குமே தவிர அதில் எந்த உண்மை யும் ,ருக்கமாட்டாது. ஆகவே அவனது செயற்பாடு களைக் கண்டு ஈமானை பறிகொடுத்து விடக் கூடாது என்பதை;தான் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடு கிறார்கள்.

இவன் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறும்போது  المَسِيحِ الدَّجَّالِ அல்மஸீஹுத் தஜ்ஜால் எனக் குறிப்பிட்டார்கள்.

தஜ்ஜால் பற்றிய வர்ணனைகள்:

தஜ்ஜால் ஒரு இளைஞன்
சிகப்பானவன் பருமனானவன்.
தஜ்ஜாலின் வலது அல்லது இடக் கண் குருடாக இருக்கும்.
தஜ்ஜால் சுருட்டை தலைமுடியுடையவன்.
சந்ததியற்றவன்.
தஜ்ஜாலின் இரு கண்களுக்கிடையில் காபிர் என்று எழுதப்பட்டிருக்கும்.
பூமியில்; 40 நாட்கள் சுற்றித்திரிவான்.
தஜ்ஜாலுக்கு படைபிரிவும் இருக்கும்.

அடையாளம் காணும் இலகு வழி


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ' بَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُنِي أَطُوفُ بِالكَعْبَةِ، فَإِذَا رَجُلٌ آدَمُ، سَبْطُ الشَّعَرِ، بَيْنَ رَجُلَيْنِ، يَنْطُفُ رَأْسُهُ مَاءً، فَقُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا: ابْنُ مَرْيَمَ، فَذَهَبْتُ أَلْتَفِتُ فَإِذَا رَجُلٌ أَحْمَرُ جَسِيمٌ، جَعْدُ الرَّأْسِ، أَعْوَرُ العَيْنِ اليُمْنَى، كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ طَافِيَةٌ، قُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا: هَذَا الدَّجَّالُ، أَقْرَبُ النَّاسِ بِهِ شَبَهًا ابْنُ قَطَنٍ ' وَابْنُ قَطَنٍ رَجُلٌ مِنْ 
بَنِي المُصْطَلِقِ مِنْ خُزَاعَةَ


(ஒரு நாள்) நான் உறங்கிக் கொண்டிருந்தபோது, நான் கஃபா வைச் சுற்ற (தவாப்) வந்து கொண்டிருப்தாகக் கண்டேன். அப்போது மாநிறமான படிந்த தலை முடியுடைய மனிதர் ஒருவரின் தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருக்க அல்லது சிந்திக் கொண்டிருக்கக் கண்டேன். இவர் யார்? என்று கேட்டேன். மர்யமின் மகன் (ஈஸா) என்று சொன்னார்.
பிறகு நான் திரும்பிப் பார்த்த படியே சென்றபோது (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று ஒரு கண் குருடான சுருட்டைத் தலையுடைய சிவப்பான பருமனான மனிதன் ஒருவன் அங்கிருந்தான். இவன்தான் தஜ்ஜால். மக்களில் இவனுக்கு உருவ அமைப்பில் ஒப்பானவன். இப்னு கத்ன் எனும் குஸாஆ குலத்து மனிதன் ஆவான் என்று நபி(ஸல்) சொன்னார்கள். (அறிவிப்பர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரழி), புகாரி-7128)

وَقَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّاسِ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ ذَكَرَ الدَّجَّالَ فَقَالَ: ' إِنِّي لَأُنْذِرُكُمُوهُ، وَمَا مِنْ نَبِيٍّ إِلَّا أَنْذَرَهُ قَوْمَهُ، لَقَدْ أَنْذَرَ نُوحٌ قَوْمَهُ، وَلَكِنِّي أَقُولُ لَكُمْ فِيهِ قَوْلًا لَمْ يَقُلْهُ نَبِيٌّ لِقَوْمِهِ: تَعْلَمُونَ أَنَّهُ أَعْوَرُ، وَأَنَّ اللَّهَ 
لَيْسَ بِأَعْوَرَ '


அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் மக்கள் மத்தியில் எழுந்து நின்று அல்லாஹ்வை அவனது தகுதிக்கு மேல் புகழ்ந்து விட்டு தஜ்ஜாலை குறித்து கூறனார்கள். அபபோது அல்லாஹ்வினால் அனுப்பி வைக்கப்பட்ட எந்தவொரு இறைத் தூதரும் தம் சமுதாயத்தாருக்கு தஜ்ஜாலைக்குறித்து எச்சரிக் காமல் இருந்த தில்லை. நூஹ் நபியும் தன்னுடைய சமூகத்தா ருக்கு தஜ்ஜால் குறித்து எச்சரிக்கை செய்தார்கள். எனினும் அந்த நபிமார்கள் தன்னுடைய சமூகத்தாருக்கு சொல்லாத விடயமொன்றை உங்க ளுக்கு கூறுகிறேன். அறிந்து கொள்ளுங்கள். அவன் ஒற்றைக் கண்ணன், நிச்சயமாக உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)  (ரழி), நூல்: புகாரி 7131)

 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الدَّجَّالُ مَمْسُوحُ الْعَيْنِ مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ كَافِرٌ، ثُمَّ تَهَجَّاهَا ك ف ر يَقْرَؤُهُ كُلُّ مُسْلِمٍ»

தஜ்ஜால் ஒரு கண்தடவப்பட்டவன். அவனது கண்ணின் மீது கெட்டியான தோல் ஒன்று(மூடி) இருக்கும். அவனு டைய  இரு கண்களுக்கிடையில் காபிர் என்று எழுதப் பட்டிருக்கும் எழுத் தறிவுள்ள எழுத்தறிவற்ற ஒவ்வொரு நம்பிக்கை யாளர்களும்; அதை வாசிப்பார்கள். அல்லது ஒவ்வொரு இறை நம்பிக் கையாளரும் வாசிப்பார்கள் என நபி(ஸல்) கூறினார்கள்.  அறிவிப்பவர்: அனஸ்;(ரலி) நூல் :முஸ்லிம்

 أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ يَوْمَ حَذَّرَ النَّاسَ الدَّجَّالَ: «إِنَّهُ مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ كَافِرٌ، يَقْرَؤُهُ مَنْ كَرِهَ عَمَلَهُ، أَوْ يَقْرَؤُهُ 
كُلُّ مُؤْمِنٍ»، وَقَالَ: «تَعَلَّمُوا أَنَّهُ لَنْ يَرَى أَحَدٌ مِنْكُمْ رَبَّهُ عَزَّ وَجَلَّ حَتَّى يَمُوتَ»،

ஜ்ஜால் பற்றி மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள். (அதில்) அவனது இரு கண்களுக்கிடையில் காபிர் என்று எழுதப்பட்டிருக்கும் அவனது செயலை வெறுக்கினற ஒவ்வொருவரும் அதனை வாசிப்பர் அல்லது ஒவ்வொரு இறைவிசுவாசியும் அதனை வாசிப்பார். அறிந்து கொள்ளுங்கள். உங்களில் எவரும் இறப்பதற்கு முன் தம்ரப்பை பார்க்க முடி யாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல் முஸ்லிம்-5614)

தஜ்ஜாலைக் கண்ட நபித்தோழர்

 நபி(ஸல்) அவர்கள் தஜ்ஜால் சம்பந்தமாக விபரித்த வர்ணனைகளுக்கேற்ப தமீமுத்தாரி(ரலி) அவர்கள் ஒரு மனிதனைக் கண்டார்கள்.

30 பேருடன் கடற்பிரயானமொன்றில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் கடல் அலை மோதிய தால்  ஒரு தீவை தமீமுத்தாரி(ரலி) அடைகிறார்கள். அச்சந்தர்ப் பத்தில் அவர் கண்ட காட்சிகளையும் நடந்த சம்பவங்களையும்  நபி(ஸல்)அவர்களிடம் விபரித் தார்கள்.

தமீமுத்தாரி (ரலி) அவர்கள் கண்ட அம்மனிதர் தஜ்ஜால் என நபி(ஸல்) அவர்கள் சஹாபாக்கள் மத்தியில் வைத்து உறுதிப்படுத்தினார்கள். இதோ அவர்கள் கூறும் செய்திகளை கேளுங்கள்.

أَنَّهُ سَأَلَ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ، أُخْتَ الضَّحَّاكِ بْنِ قَيْسٍ - وَكَانَتْ مِنَ الْمُهَاجِرَاتِ الْأُوَلِ - فَقَالَ: حَدِّثِينِي حَدِيثًا سَمِعْتِيهِ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَا تُسْنِدِيهِ إِلَى أَحَدٍ غَيْرِهِ، فَقَالَتْ: لَئِنْ شِئْتَ لَأَفْعَلَنَّ، فَقَالَ لَهَا: أَجَلْ حَدِّثِينِي فَقَالَتْ: نَكَحْتُ ابْنَ الْمُغِيرَةِ، وَهُوَ مِنْ خِيَارِ شَبَابِ قُرَيْشٍ يَوْمَئِذٍ، فَأُصِيبَ فِي أَوَّلِ الْجِهَادِ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا تَأَيَّمْتُ خَطَبَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ فِي نَفَرٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَخَطَبَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَوْلَاهُ أُسَامَةَ بْنِ زَيْدٍ، وَكُنْتُ قَدْ حُدِّثْتُ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ أَحَبَّنِي فَلْيُحِبَّ أُسَامَةَ» فَلَمَّا كَلَّمَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ: أَمْرِي بِيَدِكَ، فَأَنْكِحْنِي مَنْ شِئْتَ، فَقَالَ: «انْتَقِلِي إِلَى أُمِّ شَرِيكٍ» وَأُمُّ شَرِيكٍ امْرَأَةٌ غَنِيَّةٌ، مِنَ الْأَنْصَارِ، عَظِيمَةُ النَّفَقَةِ فِي سَبِيلِ اللهِ، يَنْزِلُ عَلَيْهَا الضِّيفَانُ، فَقُلْتُ: سَأَفْعَلُ، فَقَالَ: «لَا تَفْعَلِي، إِنَّ أُمَّ شَرِيكٍ امْرَأَةٌ كَثِيرَةُ الضِّيفَانِ، فَإِنِّي أَكْرَهُ أَنْ يَسْقُطَ عَنْكِ خِمَارُكِ أَوْ يَنْكَشِفَ الثَّوْبُ عَنْ سَاقَيْكِ، فَيَرَى الْقَوْمُ مِنْكِ بَعْضَ مَا تَكْرَهِينَ وَلَكِنِ انْتَقِلِي إِلَى ابْنِ عَمِّكِ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو ابْنِ أُمِّ مَكْتُومٍ» - وَهُوَ رَجُلٌ مِنْ بَنِي فِهْرٍ ، فِهْرِ قُرَيْشٍ وَهُوَ مِنَ الْبَطْنِ الَّذِي هِيَ مِنْهُ - فَانْتَقَلْتُ إِلَيْهِ، فَلَمَّا انْقَضَتْ عِدَّتِي سَمِعْتُ نِدَاءَ الْمُنَادِي، مُنَادِي رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُنَادِي: الصَّلَاةَ جَامِعَةً، فَخَرَجْتُ إِلَى الْمَسْجِدِ، فَصَلَّيْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكُنْتُ فِي صَفِّ النِّسَاءِ الَّتِي تَلِي ظُهُورَ الْقَوْمِ
لَمَّا قَضَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ جَلَسَ عَلَى الْمِنْبَرِ، وَهُوَ يَضْحَكُ، فَقَالَ: «لِيَلْزَمْ كُلُّ إِنْسَانٍ مُصَلَّاهُ»، ثُمَّ قَالَ: «أَتَدْرُونَ لِمَ جَمَعْتُكُمْ؟» قَالُوا: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: ' إِنِّي وَاللهِ مَا جَمَعْتُكُمْ لِرَغْبَةٍ وَلَا لِرَهْبَةٍ، وَلَكِنْ جَمَعْتُكُمْ، لِأَنَّ تَمِيمًا الدَّارِيَّ كَانَ رَجُلًا نَصْرَانِيًّا، فَجَاءَ فَبَايَعَ وَأَسْلَمَ، وَحَدَّثَنِي حَدِيثًا وَافَقَ الَّذِي كُنْتُ أُحَدِّثُكُمْ عَنْ مَسِيحِ الدَّجَّالِ، حَدَّثَنِي أَنَّهُ رَكِبَ فِي سَفِينَةٍ بَحْرِيَّةٍ، مَعَ ثَلَاثِينَ رَجُلًا مِنْ لَخْمٍ وَجُذَامَ، فَلَعِبَ بِهِمِ الْمَوْجُ شَهْرًا فِي الْبَحْرِ، ثُمَّ أَرْفَئُوا إِلَى جَزِيرَةٍ فِي الْبَحْرِ حَتَّى مَغْرِبِ الشَّمْسِ، فَجَلَسُوا فِي أَقْرُبِ السَّفِينَةِ فَدَخَلُوا الْجَزِيرَةَ فَلَقِيَتْهُمْ دَابَّةٌ أَهْلَبُ كَثِيرُ الشَّعَرِ، لَا يَدْرُونَ مَا قُبُلُهُ مِنْ دُبُرِهِ، مِنْ كَثْرَةِ الشَّعَرِ، فَقَالُوا: وَيْلَكِ مَا أَنْتِ؟ فَقَالَتْ: أَنَا الْجَسَّاسَةُ، قَالُوا: وَمَا الْجَسَّاسَةُ؟ قَالَتْ ص:2263
: أَيُّهَا الْقَوْمُ انْطَلِقُوا إِلَى هَذَا الرَّجُلِ فِي الدَّيْرِ، فَإِنَّهُ إِلَى خَبَرِكُمْ بِالْأَشْوَاقِ، قَالَ: لَمَّا سَمَّتْ لَنَا رَجُلًا فَرِقْنَا مِنْهَا أَنْ تَكُونَ شَيْطَانَةً، قَالَ: فَانْطَلَقْنَا سِرَاعًا، حَتَّى دَخَلْنَا الدَّيْرَ، فَإِذَا فِيهِ أَعْظَمُ إِنْسَانٍ رَأَيْنَاهُ قَطُّ خَلْقًا، وَأَشَدُّهُ وِثَاقًا، مَجْمُوعَةٌ يَدَاهُ إِلَى عُنُقِهِ، مَا بَيْنَ رُكْبَتَيْهِ إِلَى كَعْبَيْهِ بِالْحَدِيدِ، قُلْنَا: وَيْلَكَ مَا أَنْتَ؟ قَالَ: قَدْ قَدَرْتُمْ عَلَى خَبَرِي، فَأَخْبِرُونِي مَا أَنْتُمْ؟ قَالُوا: نَحْنُ أُنَاسٌ مِنَ الْعَرَبِ رَكِبْنَا فِي سَفِينَةٍ بَحْرِيَّةٍ، فَصَادَفْنَا الْبَحْرَ حِينَ اغْتَلَمَ فَلَعِبَ بِنَا الْمَوْجُ شَهْرًا، ثُمَّ أَرْفَأْنَا إِلَى جَزِيرَتِكَ هَذِهِ، فَجَلَسْنَا فِي أَقْرُبِهَا، فَدَخَلْنَا الْجَزِيرَةَ، فَلَقِيَتْنَا دَابَّةٌ أَهْلَبُ كَثِيرُ الشَّعَرِ، لَا يُدْرَى مَا قُبُلُهُ مِنْ دُبُرِهِ مِنْ كَثْرَةِ الشَّعَرِ،
 فَقُلْنَا: وَيْلَكِ مَا أَنْتِ؟ فَقَالَتْ: أَنَا الْجَسَّاسَةُ، قُلْنَا: وَمَا الْجَسَّاسَةُ؟ قَالَتْ: اعْمِدُوا إِلَى هَذَا الرَّجُلِ فِي الدَّيْرِ، فَإِنَّهُ إِلَى خَبَرِكُمْ بِالْأَشْوَاقِ، فَأَقْبَلْنَا إِلَيْكَ سِرَاعًا، وَفَزِعْنَا مِنْهَا، وَلَمْ نَأْمَنْ أَنْ تَكُونَ شَيْطَانَةً، فَقَالَ: أَخْبِرُونِي عَنْ نَخْلِ بَيْسَانَ، قُلْنَا: عَنْ أَيِّ شَأْنِهَا تَسْتَخْبِرُ؟ قَالَ: أَسْأَلُكُمْ عَنْ نَخْلِهَا، هَلْ يُثْمِرُ؟ قُلْنَا لَهُ: نَعَمْ، قَالَ: أَمَا إِنَّهُ يُوشِكُ أَنْ لَا تُثْمِرَ، قَالَ: أَخْبِرُونِي عَنْ بُحَيْرَةِ الطَّبَرِيَّةِ، قُلْنَا: عَنْ أَيِّ شَأْنِهَا تَسْتَخْبِرُ؟ قَالَ: هَلْ فِيهَا مَاءٌ؟ قَالُوا: هِيَ كَثِيرَةُ الْمَاءِ، قَالَ: أَمَا إِنَّ مَاءَهَا يُوشِكُ أَنْ يَذْهَبَ، قَالَ: أَخْبِرُونِي عَنْ عَيْنِ زُغَرَ، قَالُوا: عَنْ أَيِّ شَأْنِهَا تَسْتَخْبِرُ؟ قَالَ: هَلْ فِي الْعَيْنِ مَاءٌ؟ وَهَلْ يَزْرَعُ أَهْلُهَا بِمَاءِ الْعَيْنِ؟ قُلْنَا لَهُ: نَعَمْ، هِيَ كَثِيرَةُ الْمَاءِ، وَأَهْلُهَا يَزْرَعُونَ مِنْ مَائِهَا، قَالَ: أَخْبِرُونِي عَنْ نَبِيِّ الْأُمِّيِّينَ مَا فَعَلَ؟ قَالُوا: قَدْ خَرَجَ مِنْ مَكَّةَ وَنَزَلَ يَثْرِبَ، قَالَ: أَقَاتَلَهُ الْعَرَبُ؟ قُلْنَا: نَعَمْ، قَالَ: كَيْفَ صَنَعَ بِهِمْ؟ فَأَخْبَرْنَاهُ أَنَّهُ قَدْ ظَهَرَ عَلَى مَنْ يَلِيهِ مِنَ الْعَرَبِ وَأَطَاعُوهُ، قَالَ لَهُمْ: قَدْ كَانَ ذَلِكَ؟ قُلْنَا: نَعَمْ، قَالَ: أَمَا إِنَّ ذَاكَ خَيْرٌ لَهُمْ أَنْ يُطِيعُوهُ،
 وَإِنِّي مُخْبِرُكُمْ عَنِّي، إِنِّي أَنَا الْمَسِيحُ، وَإِنِّي أُوشِكُ أَنْ يُؤْذَنَ لِي فِي الْخُرُوجِ، فَأَخْرُجَ فَأَسِيرَ فِي الْأَرْضِ فَلَا أَدَعَ قَرْيَةً إِلَّا هَبَطْتُهَا فِي أَرْبَعِينَ لَيْلَةً غَيْرَ مَكَّةَ وَطَيْبَةَ، فَهُمَا مُحَرَّمَتَانِ عَلَيَّ كِلْتَاهُمَا، كُلَّمَا أَرَدْتُ أَنْ أَدْخُلَ وَاحِدَةً - أَوْ وَاحِدًا - مِنْهُمَا اسْتَقْبَلَنِي مَلَكٌ بِيَدِهِ السَّيْفُ صَلْتًا، يَصُدُّنِي عَنْهَا، وَإِنَّ عَلَى كُلِّ نَقْبٍ مِنْهَا مَلَائِكَةً يَحْرُسُونَهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَطَعَنَ بِمِخْصَرَتِهِ فِي الْمِنْبَرِ: «هَذِهِ طَيْبَةُ، هَذِهِ طَيْبَةُ، هَذِهِ طَيْبَةُ» - يَعْنِي الْمَدِينَةَ - «أَلَا هَلْ كُنْتُ حَدَّثْتُكُمْ ذَلِكَ؟» فَقَالَ النَّاسُ: نَعَمْ، «فَإِنَّهُ أَعْجَبَنِي حَدِيثُ تَمِيمٍ، أَنَّهُ وَافَقَ الَّذِي كُنْتُ أُحَدِّثُكُمْ عَنْهُ، وَعَنِ الْمَدِينَةِ وَمَكَّةَ، أَلَا إِنَّهُ فِي بَحْرِ الشَّأْمِ، أَوْ بَحْرِ الْيَمَنِ، لَا بَلْ مِنْ قِبَلِ الْمَشْرِقِ مَا هُوَ، مِنْ قِبَلِ الْمَشْرِقِ مَا هُوَ مِنْ قِبَلِ الْمَشْرِقِ، مَا هُوَ» وَأَوْمَأَ بِيَدِهِ إِلَى الْمَشْرِقِ، قَالَتْ: فَحَفِظْتُ هَذَا مِنْ رَسُولِ اللهِ 
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،


.....நான் ஆண்களின் தொழுகை வரிசைக்குப் பின்னால் உள்ள பெண்களின் தொழுகை வரிசையில் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துச் சொற்பொழிவு (மிம்பர்) மீது சிரித்த படியே அமர்ந்தார்கள். ஒவ்வொருவரும் தாம் தொழுத இடத்தில் அப்படியே இருங்கள் என்று கூறினார்கள். பிறகு, நான் உங்களை ஏன் ஒன்று கூட்டினேன் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். மக்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்| என்று பதில ளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு ஆர் மூட்டுவதற்கோ அச்சுறுத்துவதற்கோ நான் உங்களை ஒன்று கூட்ட வில்லை. மாறாக (ஒரு தகவலைச் சொல்வதற்காகவே) உங்களை ஒன்றுகூட்டினேன். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தமீமுத்தாரீ எனும் ஒரு மனிதர் (என்னிடம்) வந்து வாக்குறுதிப் பிர மாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
அவர் என்னிடம் ஒரு செய்தியைச் சொன்னார். அது (பெருங் குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜால் குறித்து நான் உங்களிடம் தெரிவித்திருந்த செய்திக்கு ஒத்திருந்தது.
அவர் என்னிடம் கூறியதாவது:


நான் ‘‘லக்ம்’’  ‘‘ஜுதாம்’’ ஆகிய குலங்களைச் சேர்ந்த முப்பது பேருடன் ஒரு கப்பலில் கடல் பயணம் மேற் கொண்டேன். அப்போது கடல் அலை ஒரு மாத காலம் எங்களைக் கடலில் அலைக்கழித்துவிட்டது. பிறகு நாங்கள் கடலில் சூரியன் அஸ்தமிக்கும் (மேற்குத்) திசை யில் ஒரு தீவில் ஒதுங்கினோம். பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து அங்கிருந்த தீவுக்குள் சென்றோம்.

அங்கு (உடல் முழுவதும் அடர்ந்த) முடிகள் நிறைந்த ஒரு பிராணி எங்களைச் சந்தித்தது. அதன் முன்பகுதி எது, பின் பகுதி எது என்றே எங்களால் அறிய முடிய வில்லை. (உடல் முழுவதும்) முடிகள் நிறைந்தி ருந்ததே அதற்குக் காரணம்.

அப்போது நாங்கள், உனக்குக் கேடு தான். நீ யார்? என்று கேட்டோம். அதற்கு அந்தப் பிராணி ஷநான்தான் ஜஸ்ஸாஸா என்று சொன்னது. ஜஸ்ஸாஸா என்றால் என்ன? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அந்தப் பிராணி, கூட்டத்தாரே இந்த மண்டபத்திற்கு உள்ளே இருக்கும் மனிதரை நோக்கிச் செல்லுங்கள். அவர் உங்களைப் பற்றிய செய்தி அறிய ஆவலாக உள்ளார் என்று சொன்னது.

அந்தப் பிராணி ஒரு மனிதனைப் பற்றிக் குறிப் பிட்டதைக் கேட்டு அது ஷைத்தானாக இருக்குமோ என்று நாங்கள் பயந்துவிட் டோம். உடனே நாங்கள் அந்த மனிதனை நோக்கி விரைந்து நடந்தோம். நாங்கள் அந்த மண்ட பத்தைச் சென்றடைந்தோம். அங்கு மாபெரும் உருவ முடைய மனிதன் ஒருவன் இருந்தான். அவனைப் போன்ற ஒரு படைப்பை நாங்கள் ஒருபோதும் கண்ட தில்லை. அவன் சங்கிலியால் பிணைக்கப் பட்டிருந்தான். அவனுடைய கைகள் அவனது தோளோடு சேர்த்து வைத்து இறுகக் கட்டப்பட்டிருந்தன. அவனுடைய முழங் கால் கள் கணுக்கால்களோடு சேர்த்து சங்கிலி யால் பிணைக்கப்பட்டிருந்தன. அவனிடம் நாங்கள் உன க்குக் கேடுதான். நீ யார்? என்று கேட்டோம்.


என்னைப் பற்றிய தகவலை நிச்சயம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (முதலில்) நீங்கள் யார் என்று கூறுங்கள்? என்று கேட்டான். நாங்கள் அறபு மக்கள். நாங்கள் கப்ப லொன்றில் கடல் பயணம் மேற்கொண் டோம். கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ஒரு மாத கால மாகக் கடல் அலை எங்களை அலைக்கழித்து விட்டது. பிறகு நீயிருக்கும் இந்தத் தீவில் நாங்கள் கரை ஒதுங்கினோம். பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து இந்தத் தீவுக்குள் நுழைந்தோம்.


அப்போது உடல்முழுவதும் அடர்ந்த முடிகள் கொண்ட பிராணி ஒன்று எங்களைச் சந்தித்தது. உடல் முழுவதும் முடிகள் நிறைந்திருந்த காரணத் தால் அதன் முன்பகுதி எது, பின்பகுதி எது என்று அறிய முடியவில்லை. நாங்கள் உனக்குக் கேடு தான். நீ யார்? என்று கேட்டோம். அது நான்தான் ஜஸ்ஸாஸா என்று சொன்னது. ஜஸ்ஸாஸா என்றால் என்ன? என்று கேட்டோம். அதற்கு அது, இந்த மண்டபத்தி லுள்ள இந்த மனிதரை நோக்கிச் செல்லுங் கள். அவர் உங்களைப் பற்றிய செய்தியை அறிய பெரும் ஆவலுடன் இருக்கிறார்| என்று கூறியது. ஆகவேதான், நாங்கள் உன்னை நோக்கி விரைந்து வந்தோம். அது ஷைத்தானாக இருக்கலாம் என்பதால் எங்களால் அச்சம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை என்று சொன்னோம்.
அப்போது அவன், பைசான் பேரீச்சம் தோட்டத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள் என்றான். ஷஅந்தத் தோட்டத்தில் நீ எதைப் பற்றிக் கேட்கிறாய்? என்று கேட்டோம்.


அதற்கு அவன், அந்தப் பேரீச்சம் தோட்டத்தின் மரங்கள், கனிகள் தருகின்றனவா என்பதைப் பற்றியே நான் கேட்கிறேன்  என்றான். நாங்கள் ஆம் என்று பதிலளித் தோம். அவன், அறிந்து கொள்ளுங்கள். அது கனியே தராத காலம் நெருங்கிக் கொண்டி ருக்கிறது என்று கூறினான்.
பிறகு தபரிய்யா நீர் நிலை பற்றி எனக்குச் சொல்லுங்கள் என்று கேட்டான். அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவன், அதில் தண்ணீர் இருக்கிறதா? என்று கேட்டான். நாங்கள் அதில் தண்ணீர் அதிகமாக இருக்கிறது| என்று பதிலளித்தோம். அவன், அறிந்து கொள்ளுங்கள். அதிலுள்ள நீர் வற்றும் காலம் நெருங்கிவிட்டது| என்று சொன்னான்.


பிறகு (ஷாம் நாட்டிலுள்ள) ஸுகர் நீரூற்றைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள் என்று கேட்டான். நாங்கள், அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய்? என்றோம். அதற்கு அவன், அந்த ஊற்றில் தண்ணீர் உள்ளதா? அந்த ஊற்றுத் தண்ணீ ரால் மக்கள் பயிர் செய்கிறார்களா? என்று கேட்டான். நாங்கள் ஆம், அதில் தண்ணீர் அதிகமாக உள்ளது. அங்குள்ளவர்கள் அந்தத் தண்ணீரால் விவசாயம் செய் கிறார்கள் என்று சொன்னோம்.
பிறகு அவன், எழுத்தறிவற்ற மக்களின் இறைத்தூதர் பற்றி எனக்குச் சொல்லுங்கள். அவர் (இப்போது) என்ன செய்கிறார்? என்று கேட்டான். நாங்கள், அவர் மக்கா விலிருந்து புறப்பட்டுச் சென்று யஸ்ரிபில் (மதீனாவில்) தங்கியிருக்கிறான் என்று பதிலளித் தோம்.


அவன், அவருக்கும் அறபியருக்குமிடையே போர் நடந்ததா? என்று கேட்டான். நாங்கள், ஆம்| என்றோம். அவன், அவர்களை அவர் என்ன செய்தார்? என்று கேட்டார்;. நாங்கள், அவர், தம் அருகிலுள்ள அறபி யரை வெற்றி கொண்டுவிட்டார். அறபியர் அவருக் குக் கட்டுப்பட்டு விட்டனர் என்று சொன்னோம். அதற்கு அவன், அப்படித் தான் நடந்ததா? என்று கேட்டான். நாங்கள் ஆம்| என் றோம்.


அவன், அறிந்து கொள்ளுங்கள். அவருக்குக் கட்டுப் பட்டு நடப்பதே அவர்களுக்கு நல்லதாகும். (இனி) நான் என்னைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன். நான்தான் மஸீஹ் (அத்தஜ்ஜால்) ஆவேன். நான் (இங்கிருந்து) புறப்பட அனுமதிக்கப்படும் நாள் நெருங்கிக் கொண்டிருக் கிறது. நான் புறப்பட்டு வந்து, நாற்பது நாட்களில் பூமியில் எந்த ஓர் ஊரையும் விட்டு வைக்காமல் பூமி யெங்கும் பயணம் செய்வேன். மக்காவையும் தைபா வையும் (மதீனாவையும்) தவிர! அவ்விரண்டிற் குள் ளேயும் நுழைவது எனக்குத் தடை விதிக்கப்பட் டுள்ளது. அவ்விரு நகரங்களில் ஏதேனும் ஒன்றில் நுழைய நான் நாடும் போதெல்லாம் என்னை நோக்கி வானவர் ஒருவர் வருவார். அவரது கையில் உரு விய வாள் இருக்கும். (அதை வைத்து) அதற்குள் நுழைய விடாமல் அவர் என்னைத் தடுத்துவிடுவார். அதன் ஒவ்வொரு நுழை வாயிலிலும் வானவர் ஒருவர் இருந்து, அதைக் காவல் காத்துக் கொண் டிருப்பார்| என்று கூறினான்.


இதைக் கூறிய பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம்மிடமிருந்த கைத்தடியால் சொற் பொழிவு மேடைமீது குத்திய வாறு இது -அதாவது மதீனா நகரம்-தான் தைபாளூ இதுதான் தைபாள இதுதான் தைபா என்று கூறிவிட்டு, இதைப் பற்றி நான் உங்களுக்கு (முன்பே) அறிவித்துள்ளேன் அல்லவா? என்று கேட்டார்கள். மக்கள், ஆம் (அறி வித்தீர்கள்) என்று பதிலளித்தனர். தமீமுத் தாரீ சொன்ன இந்தச் செய்தி, தஜ்ஜாலைப் பற்றி யும் மதீனா மற்றும் மக்கா பற்றியும் நான் ஏற்கனவே உங்களிடம் நான் கூயிருந்ததற்கு ஒப்பவே அமைந் திருக் கிறது  என்று கூறினார்கள்.


பிறகு அறிந்து கொள்ளுங்கள்: அ(ந்தத் தீவான)து, ஷாம் நாட்டுக் கடலில் அல்லது யமன் நாட்டுக் கடலில் உள்ளது. இல்லைள அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது. அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது. அது கிழக்குப் பகுதி கடலில் உள்ளது என்று (அறுதியிட்டுச்) சொன்னார்கள்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கூறும் போது கிழக்குத் திசையை நோக்கி தமது கரத்தால் சைகை செய்தார்கள். பாத்திமா பின்த் கைஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்தே மனன மிட்டேன். (முஸ்லிம்.)


இவ்ஹதீஸ் பிரகாரம் தஜ்ஜால் வெளிவரும் காலம் நெருங்கிவிட்டது. அவன் வருகின்ற நேரத்தில் பைஸான் எனும்  ஈத்தப்பழத்தோட்டம் கனிதரா ததாகவும் தப்ரியா மற்றும் ஸூகர் எனும் நீர் ஊற்று வற்றிவிடும் என்பதும் முக்கிய அடையாளமாகும் என கூறப்பட்டுள்ளது.


மேலும் அவன் ஒரு பொய்யன். மக்களை தப்பாக வழிநடாத்துபவன் என்பது அவன்  மூலமாகவே வெளிப்படுகிறது.

தஜ்ஜால் வெளியாகும்  திசை:

தஜ்ஜால் எங்கு தங்கியிருக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை;. ஆனால் வெளிப்படும் திசையை குறிப்பிட்டார்கள்.மேலே யுள்ள ஹதீஸூம் பின்வரும் ஹதீஸ்களும் இதனை குறிப்பிடுகின்றன.


إِنَّهُ خَارِجٌ خَلَّةً بَيْنَ الشَّأْمِ وَالْعِرَاقِ، فَعَاثَ يَمِينًا وَعَاثَ شِمَالًا، يَا عِبَادَ اللهِ فَاثْبُتُوا


... தஜ்ஜால் சிரியாவுக்கும் ஈராக்கிற்கும் இடையே உள்ள ஒரு பகுதியிலிருந்து புறப்பட்டு வந்து வலப் பக்கத்திலும் இடப்பக்கத்திலும் அக்கிரமங்களைக் கட்டவிழ்த்து விடு வான். அல்லாஹ்வின் அடியார்களே! அப்போது நீங்கள் உறுதியோடு இருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்-5629)


عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ قَالَ: حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ' الدَّجَّالُ يَخْرُجُ مِنْ أَرْضٍ بِالمَشْرِقِ يُقَالُ لَهَا: خُرَاسَانُ، 
يَتْبَعُهُ أَقْوَامٌ كَأَنَّ وُجُوهَهُمُ المَجَانُّ المُطْرَقَةُ ':

தஜ்ஜால் (மதீனாவின்) கிழக்குப் பகுதியில் குராஸான் எனும் இடத்திலிருந்து வெளியாகுவான். கேடயம் போன்ற (தட்டையான) முகமுடைய கூட்டத்தினர்கள் அவனை பின்தொடரந்து செல்வார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்; அபூபக்கர் ஸித்தீக்(ரலி) நூல்: திரிமதி

தஜ்ஜால் சந்ததியற்றவன்.

أَلَسْتَ سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّهُ لَا يُولَدُ لَهُ» قَالَ: قُلْتُ: بَلَى

தஜ்ஜால் குழந்தை பாக்கியமற்ற மலடன் என நபி(ஸல்) அவர்கள் கூறவில்லையா என கேட்ட போது ஆம் கூறினார்கள் என அபூஸயீதுல்குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (நூல்:முஸ்லிம்)

தஜ்ஜால் நுழைய முடியாத இடங்கள்:

உலகம் பூராவும் சுற்றித்திரியும் தஜ்ஜாலுக்கு மக்கா மதீனாவிற்குள் நுழையமுடியாத படி மலக்குகளால் பாதுக்கப்படும்.

عَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لاَ يَدْخُلُ المَدِينَةَ رُعْبُ المَسِيحِ الدَّجَّالِ، لَهَا يَوْمَئِذٍ سَبْعَةُ أَبْوَابٍ، عَلَى كُلِّ بَابٍ مَلَكَانِ»

மஸீஹுத் தஜ்ஜால் குறித்து அச்சம் மதீனாவிற்குள் நுழையாது. அந்த நாளில் மதீனாவுக்கு ஏழு நுழை வாயில்கள் இருக்கும். ஒவ்வொரு நுழைவாயிலின் மீதும் இரண்டு வானவர்கள் (காவலர்கள்) காப்பதற் காக நியமிக்கப்பட்டு) இருப்பார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்ப வர்: அபூபக்ரா (ரழி), நூல்: புகாரி-7125)

قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَدْخُلُ الْمَدِينَةَ وَلَا مَكَّةَ

தஜ்ஜால் மக்கா மதீனாவிற்குள் நுழைய மாட்டான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (நூல்:முஸ்லிம்)

مسند أحمد ط الرسالة (3990)
، وَلَا يَقْرَبُ أَرْبَعَةَ مَسَاجِدَ مَسْجِدَ الْحَرَامِ، وَمَسْجِدَ الْمَدِينَةِ، وَمَسْجِدَ الطُّورِ، وَمَسْجِدَ الْأَقْصَى، وَمَا يُشَبَّهُ عَلَيْكُمْ، فَإِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَعْوَرَ

அஹ்மதில் வரக்கூடிய ரிவாயத்தில் மக்கா  . மஸ்ஜி துன் நபவி மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் மஸ்ஜதுத் தூர் ஆகிய பள்ளவாசல்களுக்கும் நுழைய மாட்டான் என குறிப்பிடப்பட்டுள்ளது.
صحيح البخاري (322)

 حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَيْسَ مِنْ بَلَدٍ إِلَّا سَيَطَؤُهُ الدَّجَّالُ، إِلَّا مَكَّةَ، وَالمَدِينَةَ، لَيْسَ لَهُ مِنْ نِقَابِهَا نَقْبٌ، إِلَّا عَلَيْهِ المَلاَئِكَةُ صَافِّينَ يَحْرُسُونَهَا، ثُمَّ تَرْجُفُ المَدِينَةُ بِأَهْلِهَا ثَلاَثَ رَجَفَاتٍ، فَيُخْرِجُ اللَّهُ كُلَّ كَافِرٍ وَمُنَافِقٍ»

மக்காவையும் மதீனாவையும் தவிர தஜ்ஜாலின் கால்படாத எந்த ஊரும் இராது. மதீனாவின் ஒவ் வொரு நுழைவாயிலிலும் வானவர்கள் அணிவகுத்து நின்று மதீனா வைப் பாதுகாப்பார்கள். ஆகவே தஜ்ஜால் (மதீனாவுக்கு வெளியிலுள்ள) உவர் நிலத்தில் இறங்கி தங்குவான். அப்போது மதீனா மூன்று முறை குலுங்கும். உடனே மதீனாவிலி ருந்து ஒவ்வொரு இறை மறுப்பாளனும் நயவஞ் சகனும் அவனை நோக்கிப் புறப்படு வார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரழி), நூல்: முஸ்லிம்-5642, புகாரி-7124)

இன்னுமொரு ரிவாயத்தில்,                           
صحيح مسلم (42266)

عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَذَكَرَ نَحْوَهُ، غَيْرَ أَنَّهُ قَالَ: «فَيَأْتِي سِبْخَةَ الْجُرُفِ فَيَضْرِبُ رِوَاقَهُ» وَقَالَ: «فَيَخْرُجُ إِلَيْهِ كُلُّ مُنَافِقٍ وَمُنَافِقَةٍ»

 தஜ்ஜால் அல் ஜுருஃப் எனும் இடத்திலுள்ள உவர் நிலத்திற்குச் சென்று தனது கூடாரத்தை அமைப் பான். அப்போது ஒவ்வொரு நயவஞ்சகனும் நயவஞ் சகியும் அவனை நோக்கி (மதீனா விற்குள்ளிலிருந்து புறப்படு வார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரழி), நூல்: முஸ்லிம்-5642).

தஜ்ஜாலும் சிறுபான்மை அறேபியரும்:

அரபு சமுதாயத்தவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் போது தஜ்ஜாலின் வருகை நிகழும்.
صحيح مسلم (42266)
أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، يَقُولُ: أَخْبَرَتْنِي أُمُّ شَرِيكٍ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَيَفِرَّنَّ النَّاسُ مِنَ الدَّجَّالِ فِي الْجِبَالِ»، قَالَتْ أُمُّ شَرِيكٍ: يَا رَسُولَ اللهِ فَأَيْنَ الْعَرَبُ يَوْمَئِذٍ؟ قَالَ: «هُمْ قَلِيلٌ»،

மக்கள் தஜ்ஜாலிடமிருந்து வெருண்டோடி மலை களுக்குச் சென்று விடுவார்கள் என நபி (ஸல்) அவர் கள் கூறக் கேட்டேன். அப்போது நான், அல்லாஹ் வின் தூதரே! அறேபியர் அப்போது எங்கே இருப்பார் கள் என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர் கள் அப்போது அவர்கள் மிகக் குறைவான எண்ணிக் கையிலேயே இருப்பார்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஷரீக் (ரழி), நூல்: முஸ்லிம்-5644)

பூமியில் தங்கும் நாட்கள்

தஜ்ஜாலின் குழப்பங்கள் நாற்பது நாற்களுக்கு நிகழும். ஆனால் அந்த நாட்கள் சாதாரண நாட் களைப்போன்று இராது.
صحيح مسلم (42252)

 قُلْنَا: يَا رَسُولَ اللهِ وَمَا لَبْثُهُ فِي الْأَرْضِ؟ قَالَ: «أَرْبَعُونَ يَوْمًا، يَوْمٌ كَسَنَةٍ، وَيَوْمٌ كَشَهْرٍ، وَيَوْمٌ كَجُمُعَةٍ، وَسَائِرُ أَيَّامِهِ كَأَيَّامِكُمْ» قُلْنَا: يَا رَسُولَ اللهِ فَذَلِكَ الْيَوْمُ الَّذِي كَسَنَةٍ، أَتَكْفِينَا فِيهِ صَلَاةُ يَوْمٍ؟ قَالَ: «لَا، اقْدُرُوا لَهُ قَدْرَهُ»


அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் பூமியில் எத்தனை நாட்கள் தங்கியிருப்பான்? என்று கேட்டோம். அதற்கு நாற்பது நாட்கள் என்று பதிலளித்த நபியவர்கள் ஷஅன்றைய ஒரு நாள் ஓர் ஆண்டைப் போன்றும் மறுநாள் ஒரு மாதத்தைப் போன்றும் அதற்கு அடுத்த நாள் ஒரு வாரத்தைப் போன்றும் மற்ற நாட்கள் உங்களின் (சாதாரண) நாட்களைப் போன் றும் இருக்கும் என்று குறிப்பிட்டார்கள்.

நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! ஓர் ஆண்டிற்குச் சமமாக இருக்கும் அந்த நாளில் வழக்கமாகத் தொழும் (ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதால் போதுமா? என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள் இல்லை (போதாது) அந்த (நீண்ட) நாளை அதற்கேற்ப மதிப்பிட்டுத் (தொழுது) கொள் ளுங்கள் என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம் -5629)

உலகை சுற்றி வரும் வேகம்:

குறுகிய காலம் பூமியில் இருந்தாலும் வேகமாக உலகை சுற்றிவருவான். மக்களை வழிகெடுப்பான்.
صحيح مسلم (42252)

قُلْنَا: يَا رَسُولَ اللهِ وَمَا إِسْرَاعُهُ فِي الْأَرْضِ؟ قَالَ: ' كَالْغَيْثِ اسْتَدْبَرَتْهُ الرِّيحُ، فَيَأْتِي عَلَى الْقَوْمِ فَيَدْعُوهُمْ


நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! பூமியில் தஜ்ஜால் (சுற்றித் திரியும்) வேகம் எப்படி இருக்கும்? என்று கேட்டோம். அதற்கு நபியவர்கள் பின்னாலிருந்து காற்று விரட்டிச் செல்லும் வேகம் போன்று அவன் வேகமாக பூமியைச் சுற்றி வருவான்) என்றார்கள். (அறிவிப்பவர்: நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரழி), நூல்: முஸ்லிம்-5629)


தஜ்ஜால் காட்டும் அற்புதங்களும் தன்னை இறைவன் எனக் கூறிக் கொள்வதும்-

தஜ்ஜால் மக்களை வழிகெடுப்பதற்காக பல அற்புதங் களை காண்பிப்பான். அவை மனித சக்திக்கு அப்பாற் பட்டது. எனினும் அந்த அற்புதங்களை அவனால் சுயமாக செய்யமுடியாது.

தன்னை கடவுள் என்பதற்காக ஒருவரை கொலை செய்து உயிர்பித்துகாட்டுவான். இரண்டாம் முறை அவனால் அப்படி செய்ய முடியாமல் இருக்கும். கட வுள் பலஹீனமானவனாக இருக்க முடியுமா?

. அவன் காட்டும் அற்புதங்களை கண்டு மயங்கி அவனை கடவுள் என்று நம்பி ஈமானை பலி கொடுத்து விடக் கூடாது என்பதற்காக அவன் செய்யப்போகும் அற் புதங்கள் குறித்து நபி(ஸல்) அவர்கள் விவரிக்கிறார்கள்.

தஜ்ஜாலை கடவுள் என்று ஏற்காதவர்களும் அவனை பின்தொடராதவர்களும் கடுமையான சோதனை களுக்கு ஆளாக்கப்படுவார்கள்.  தஜ்ஜாலுக்குப் பின் னால் அவனை ஏற்றுக் கொண்ட மக்களில் ஆயுதம் ஏந்திய படைபிரிவும் இருக்கும். தஜ்ஜாலை கடவு ளாக ஏற்காதவர்களை தண்டிப்பார்கள்.

                                                      صحيح مسلم (4

عَنْ حُذَيْفَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَأَنَا أَعْلَمُ بِمَا مَعَ الدَّجَّالِ مِنْهُ، مَعَهُ نَهْرَانِ يَجْرِيَانِ، أَحَدُهُمَا رَأْيَ الْعَيْنِ، مَاءٌ أَبْيَضُ، وَالْآخَرُ رَأْيَ الْعَيْنِ، نَارٌ تَأَجَّجُ، فَإِمَّا أَدْرَكَنَّ أَحَدٌ، فَلْيَأْتِ النَّهْرَ الَّذِي يَرَاهُ نَارًا وَلْيُغَمِّضْ، ثُمَّ لْيُطَأْطِئْ رَأْسَهُ فَيَشْرَبَ مِنْهُ، فَإِنَّهُ مَاءٌ بَارِدٌ،

தஜ்ஜாலுடன் என்ன இருக்கும் என்பதை அவனை விட நான் நன்கறிவேன். ஓடுகின்ற இரு நதிகள் அவனிடம் இருக்கும். அவற்றில் ஒன்று வெளிப் பார் வைக்கு வென்மையான நீராகக் காட்சி தரும். மற்றொன்று வெளிப்பார்வைக்கு கொழுந்து விட்டெறி யும் நெருப்பாகக் காட்சி தரும்.

அந்த இடத்தை அடைபவர் நெருப்பாகக் காட்சி யளிக்கும் நதிக்குச் சென்று கண்ணை மூடிக் கொண்டு தலையைத் தாழ்த்தி அதிலிருந்து சிறிது அருந்தட்டும். ஏனெனில், அது குளிர்ந்த நீராகும்.... என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹுதைபா (ரழி), நூல்: முஸ்லிம்-5624)

صحيح مسلم (42248)

عَنْ حُذَيْفَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الدَّجَّالُ أَعْوَرُ الْعَيْنِ الْيُسْرَى، جُفَالُ الشَّعَرِ، مَعَهُ جَنَّةٌ وَنَارٌ، فَنَارُهُ جَنَّةٌ وَجَنَّتُهُ نَارٌ

தஜ்ஜாலுடன் சொர்க்கமொன்றும் நரகமொன்றும் இருக்கும். அவனிடம் உள்ள நரகம் சொர்க்கமாகும். அவனிடமுள்ள சொர்க்கம் நரகமாகும் என நபி (ஸல்) அவர் கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உதைபா (ரழி), நூல்: முஸ்லிம்-5623, 5628)12.5
صحيح مسلم (42257)

عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: مَا سَأَلَ أَحَدٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدَّجَّالِ أَكْثَرَ مِمَّا سَأَلْتُ، قَالَ: «وَمَا يُنْصِبُكَ مِنْهُ؟ إِنَّهُ لَا يَضُرُّكَ» قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ إِنَّهُمْ يَقُولُونَ: إِنَّ مَعَهُ الطَّعَامَ وَالْأَنْهَارَ، قَالَ: «هُوَ أَهْوَنُ عَلَى اللهِ مِنْ ذَلِكَ»


நபி (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலைக் குறித்து நான் வினவியதை விட அதிகமாக வேறெவரும் வினவி யதில்லை. நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) உமது கேள்வி என்ன? என்று கேட்டார்கள்.தஜ்ஜாலுடன் மலையளவு ரொட்டியும் இறைச்சியும் நதியளவு நீரும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள் என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (இது என்ன பிரமாதம்?|) அவன் மூலம் அல்லாஹ் எதை யெல்லாம் காட்ட விருக்கிறானோ) அவற்றை விட இவை அல்லாஹ்வுக்கு மிகவும் சாதாரணமான வையே என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: முகீரா (ரழி), நூல்: முஸ்லிம் - 5634, புகாரி-7122)


صحيح مسلم (42252)


 فَيَأْتِي عَلَى الْقَوْمِ فَيَدْعُوهُمْ، فَيُؤْمِنُونَ بِهِ وَيَسْتَجِيبُونَ لَهُ، فَيَأْمُرُ السَّمَاءَ فَتُمْطِرُ، وَالْأَرْضَ فَتُنْبِتُ، فَتَرُوحُ عَلَيْهِمْ سَارِحَتُهُمْ، أَطْوَلَ مَا كَانَتْ ذُرًا، وَأَسْبَغَهُ ضُرُوعًا، وَأَمَدَّهُ خَوَاصِرَ، ثُمَّ يَأْتِي الْقَوْمَ، فَيَدْعُوهُمْ فَيَرُدُّونَ عَلَيْهِ قَوْلَهُ، فَيَنْصَرِفُ عَنْهُمْ، فَيُصْبِحُونَ مُمْحِلِينَ لَيْسَ بِأَيْدِيهِمْ شَيْءٌ مِنْ أَمْوَالِهِمْ، وَيَمُرُّ بِالْخَرِبَةِ، فَيَقُولُ لَهَا: أَخْرِجِي كُنُوزَكِ، فَتَتْبَعُهُ كُنُوزُهَا كَيَعَاسِيبِ النَّحْلِ، ثُمَّ يَدْعُو رَجُلًا مُمْتَلِئًا شَبَابًا، فَيَضْرِبُهُ بِالسَّيْفِ فَيَقْطَعُهُ جَزْلَتَيْنِ رَمْيَةَ الْغَرَضِ، ثُمَّ يَدْعُوهُ فَيُقْبِلُ وَيَتَهَلَّلُ وَجْهُهُ، يَضْحَكُ، فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ بَعَثَ اللهُ الْمَسِيحَ ابْنَ مَرْيَمَ،


.... தஜ்ஜால் ஒரு சமுதாயத்தாரிடம் வந்து (தன்னை இறைவன் என்று கூறி ஏற்றுக் கொள்ளுமாறு) அவர்களுக்கு அழைப்பு விடுப்பான். அவர்களும் அவன் மீது நம்பிக்கை கொண்டு அவனது அழைப்புக்குப் பதில ளிப்பார்கள். உடனே வானத் திற்கு (மழை பொழியுமாறு) கட்டளையி டுவான். மழை பொழியும். பூமிக்கு(த் தாவரங்களை முளைக்கச் செய்யுமாறு) கட்டளையி டுவான். பூமி தாவரங்களை முளைய வைக்கும்.
(அவற்றை மேய்ந்து) அவர்களின் கால் நடைகள் ஏற்கனவே இருந்ததை விடநீண்ட திமில்களைக் கொண்டவையாகவும் மடி கனத்தவையாகவும் வயிறு நிரம்பியதாகவும் மாலையில் (வீடு) திரும்பும்.
பின்னர் மற்றொரு சமுதாயத்தாரிடம் வந்து (தன் னை இறைவனாக ஏற்றுக் கொள்ளுமாறு) அவர் களுக்கு அழைப்பு விடுப்பான். ஆனால் அவனது அழைப்பை அவர்கள் நிராகரித்து விடுவார்கள். அவர் களிடமிருந்து அவன் திரும்பிச் சென்று விடுவான். அதனால் அவர்கள் பஞ்சத்தாலும் வறட்சியாலும் பாதிக்கப்பட்டவர்களாகக் காலைப் பொழுதை அடை வார்கள். அவர் களின் கைகளில் அவர்களின் செல்வம் ஏதும் (மிஞ்சி) இருக்காது.

அவன் பாழடைந்த இடமொன்றைக் கடந்து செல்வான். அதைப் பார்த்து உன்னிடம் இருக் கின்ற புதையல்களை வெளிப் படுத்து என்று கூறு வான். அப்போது (வெளிப் படும்) அந்தப் புதையல்கள் இராணித் தேனீக்களை (பின்பற்றிச் செல்லும் தேனீக் களை)ப் போன்று அவனைப் பின்தொடர்ந்து செல்லும்.

பின்னர் அவன் வாட்டசாட்டமான இளைஞர் ஒரு வரை அழைத்து அவரை வாளால் வெட்டி இரு துண்டுகளாக்கி அப்பெய்யும் தூரத்திற்கு இடைவெளி விட்டு (அவ்விரண் டையும்) போடுவான். பின்னர் அந்தச் சடலத்தை அழைப்பான். உடனே அந்த இளைஞர் முகம் பிரகாசிக்க சிரித்துக் கொண்டே எழுந்து வருவார்... என நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள். (அறிவிப்பவர்: நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரழி), நூல்: முஸ்லிம்-5629)

தஜ்ஜாலை எதிர்த்து நிற்கும் இறை விசுவாசி:


நபி(ஸல்) அவர்கள் தஜ்ஜால் குறித்து கூறிய முன்னறி விப்புக்கேற்ப அவனையும் அவனது குழப்பங்களையும் அடையாளம் கண்டு கொள்ளும் முஃமின்கள் அவனை எதிர்த்து நிற்பார்கள்.

صحيح مسلم (42251)

نْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنِ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ، قَالَ: ذَكَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الدَّجَّالَ ذَاتَ غَدَاةٍ، فَخَفَّضَ فِيهِ وَرَفَّعَ، حَتَّى ظَنَنَّاهُ فِي طَائِفَةِ النَّخْلِ، فَلَمَّا رُحْنَا إِلَيْهِ عَرَفَ ذَلِكَ فِينَا، فَقَالَ: «مَا شَأْنُكُمْ؟» قُلْنَا: يَا رَسُولَ اللهِ ذَكَرْتَ الدَّجَّالَ غَدَاةً، فَخَفَّضْتَ فِيهِ وَرَفَّعْتَ، حَتَّى ظَنَنَّاهُ فِي طَائِفَةِ النَّخْلِ، فَقَالَ: «غَيْرُ الدَّجَّالِ أَخْوَفُنِي عَلَيْكُمْ، إِنْ يَخْرُجْ وَأَنَا فِيكُمْ، فَأَنَا حَجِيجُهُ دُونَكُمْ، وَإِنْ يَخْرُجْ وَلَسْتُ فِيكُمْ، فَامْرُؤٌ حَجِيجُ نَفْسِهِ وَاللهُ خَلِيفَتِي عَلَى كُلِّ مُسْلِمٍ

ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அவன் தொடர்பாக(ப் பேசிய போது) அவர்கள் (சில சமயம் குரலைத்) தாழ்த்தவும் (சில சமயம் குரலை) உயர்த்த வும் செய்தார்கள். கடைசியில் அவன் (அருகி லுள்ள) பேரீச்சமரத் தோப்புகளுக்கிடையே இருக்கிறானோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்குப் பேசினார்கள்.

பின்னர் நாங்கள் (மறுபடியும்) மாலைப் பொழுதில் நபியவர்களிடம் வந்தோம். அப்போது தஜ்ஜாலைக் குறித்த அச்சம் எங்கள் முகங்களில் இருப்பதை அவர்கள் அறிந்து கொண்டு உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நாங்கள் அல்லாஹ் வின் தூதரே! தாங்கள் (இன்று) காலையில் தஜ்ஜா லைப் பற்றிக் குறிப்பிட்டீர் கள். (அப்போது) அவனைப் பற்றி (குரலை) தாழ்த்தியும் உயர்த்தியும் பேசினீர்கள். இறுதியில் அவன் (அருகி லுள்ள) பேரீச்ச மரத் தோப்புகளுக்கிடையே இருக்கிறானோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்குப் பேசி னீர்கள். அதுதான் எங்கள் அச்சத்திற் குக் காரணம் என்று கூறினோம்.

அப்போது நபியவர்கள், நான் உங்கள் விஷயத்தில் பெரிதும் அஞ்சுவது தஜ்ஜாலைக் குறித்து அல்ல. நான் உங்களிடையே (உயிருடன்) இருக்கும்போது அவன் தோன்றி னால் அவனிடமிருந்து உங்களைக் காக்க நானே வாதாடுவேன். நான் உங்களிடையே இல்லாத போது அவன் வெளிப்பட்டால் அப் போது ஒவ்வொரு (முஸ்லிமான) மனிதரும் தமக்காக வாதாடிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் எனது சார்பில் பொறுப்பாளனாக இருப்பான் எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரழி), நூல்: முஸ்லிம் 5629)
صحيح مسلم (42256)

حَدَّثَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا حَدِيثًا طَوِيلًا عَنِ الدَّجَّالِ، فَكَانَ فِيمَا حَدَّثَنَا، قَالَ: ' يَأْتِي، وَهُوَ مُحَرَّمٌ عَلَيْهِ أَنْ يَدْخُلَ نِقَابَ الْمَدِينَةِ، فَيَنْتَهِي إِلَى بَعْضِ السِّبَاخِ الَّتِي تَلِي الْمَدِينَةَ، فَيَخْرُجُ إِلَيْهِ يَوْمَئِذٍ رَجُلٌ هُوَ خَيْرُ النَّاسِ - أَوْ مِنْ خَيْرِ النَّاسِ - فَيَقُولُ لَهُ: أَشْهَدُ أَنَّكَ الدَّجَّالُ الَّذِي حَدَّثَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثَهُ، فَيَقُولُ الدَّجَّالُ: أَرَأَيْتُمْ إِنْ قَتَلْتُ هَذَا، ثُمَّ أَحْيَيْتُهُ، أَتَشُكُّونَ فِي الْأَمْرِ؟ فَيَقُولُونَ: لَا، قَالَ فَيَقْتُلُهُ ثُمَّ يُحْيِيهِ، فَيَقُولُ حِينَ يُحْيِيهِ: وَاللهِ مَا كُنْتُ فِيكَ قَطُّ أَشَدَّ بَصِيرَةً مِنِّي الْآنَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் தஜ்ஜா லைக் குறித்து நீண்ட ஹதீஸ் ஒன்றை அறிவித்தார்கள். அவனைப் பற்றி எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அறி வித்தவற்றில் இவையும் அடங்கும்.

மதீனாவின் தெருக்களில் நுழைவது தடை செய்யப் பட்டிருக்கும் நிலையில் தஜ்ஜால் வருவான். மதீனா வையடுத்து (ஷாம் நாட்டுத் திசையில்) உள்ள உவர் நிலம் ஒன்றில் அவன் தங்குவான்.

அந்த நாளிலே மக்களிலேயே சிறந்தவர் களில் ஒரு மனிதர் அவனிடம் புறப்பட்டுச் சென்று, ஷஎவனது செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு முன் னறிவிப்புச் செய்தார்களோ அந்த தஜ்ஜால் நீதான் என்று நான் உறுதி கூறுகிறேன்| என்று கூறுவார்.

அப்போது தஜ்ஜால் நான் இவரைக் கொன்று பிறகு உயிராக்கி விட்டால் அப்போதுமா (நான் இறைவன்தான் எனும்) விஷயத்தில் சந்தேகம் கொள் வீர்கள் என்று (தம்முடன் உள்ளவர்களிடம்) கேட் பான். மக்கள் இல்லை என்று பதிலளிப்பார்கள். உடனே அவன் அந்த மனிதரைக் கொன்று பிறகு உயிராக்குவான். உடனே அந்த மனிதர் அல்லாஹ் வின் மீதாணையாக! நான் இன்று உன்னை அறிந்து கொண்டதை விட நன்றாக வேறு எப்போதும் அறிந்து கொண்ட தில்லை என்று சொல்வார். உடனே தஜ்ஜால் அம்மனிதரை கொல்ல விரும்பு வான். ஆனால் அவர் மீது அவனுக்கு ஆதிக்கம் (அதிகாரம்) வழங்கப்பட மாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரி (ரழி), நூல்: புகாரி 7132, 1882)
صحيح مسلم (42256)

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ' يَخْرُجُ الدَّجَّالُ فَيَتَوَجَّهُ قِبَلَهُ رَجُلٌ مِنَ الْمُؤْمِنِينَ، فَتَلْقَاهُ الْمَسَالِحُ - مَسَالِحُ الدَّجَّالِ - فَيَقُولُونَ لَهُ: أَيْنَ تَعْمِدُ؟ فَيَقُولُ: أَعْمِدُ إِلَى هَذَا الَّذِي خَرَجَ، قَالَ: فَيَقُولُونَ لَهُ: أَوَ مَا تُؤْمِنُ بِرَبِّنَا؟ فَيَقُولُ: مَا بِرَبِّنَا خَفَاءٌ، فَيَقُولُونَ: اقْتُلُوهُ، فَيَقُولُ بَعْضُهُمْ لِبَعْضٍ: أَلَيْسَ قَدْ نَهَاكُمْ رَبُّكُمْ أَنْ تَقْتُلُوا أَحَدًا دُونَهُ، قَالَ: فَيَنْطَلِقُونَ بِهِ إِلَى الدَّجَّالِ، فَإِذَا رَآهُ الْمُؤْمِنُ، قَالَ: يَا أَيُّهَا النَّاسُ هَذَا الدَّجَّالُ الَّذِي ذَكَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَيَأْمُرُ الدَّجَّالُ بِهِ فَيُشَبَّحُ، فَيَقُولُ: خُذُوهُ وَشُجُّوهُ، فَيُوسَعُ ظَهْرُهُ وَبَطْنُهُ ضَرْبًا، قَالَ: فَيَقُولُ: أَوَ مَا تُؤْمِنُ بِي؟ قَالَ: فَيَقُولُ: أَنْتَ الْمَسِيحُ الْكَذَّابُ، قَالَ: فَيُؤْمَرُ بِهِ فَيُؤْشَرُ بِالْمِئْشَارِ مِنْ مَفْرِقِهِ حَتَّى يُفَرَّقَ بَيْنَ رِجْلَيْهِ، قَالَ: ثُمَّ يَمْشِي الدَّجَّالُ بَيْنَ الْقِطْعَتَيْنِ، ثُمَّ يَقُولُ لَهُ: قُمْ، فَيَسْتَوِي قَائِمًا، قَالَ: ثُمَّ يَقُولُ لَهُ: أَتُؤْمِنُ بِي؟ فَيَقُولُ: مَا ازْدَدْتُ فِيكَ إِلَّا بَصِيرَةً، قَالَ: ثُمَّ يَقُولُ: يَا أَيُّهَا النَّاسُ إِنَّهُ لَا يَفْعَلُ بَعْدِي بِأَحَدٍ مِنَ النَّاسِ، قَالَ: فَيَأْخُذُهُ الدَّجَّالُ لِيَذْبَحَهُ، فَيُجْعَلَ مَا بَيْنَ رَقَبَتِهِ إِلَى تَرْقُوَتِهِ نُحَاسًا، فَلَا يَسْتَطِيعُ إِلَيْهِ سَبِيلًا، قَالَ: فَيَأْخُذُ بِيَدَيْهِ وَرِجْلَيْهِ فَيَقْذِفُ بِهِ، فَيَحْسِبُ النَّاسُ أَنَّمَا قَذَفَهُ إِلَى النَّارِ، وَإِنَّمَا أُلْقِيَ فِي الْجَنَّةِ ' فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا أَعْظَمُ النَّاسِ شَهَادَةً عِنْدَ رَبِّ الْعَالَمِينَ

தஜ்ஜால் புறப்பட்டு வரும் போது இறை நம்பிக்கை யாளர்களில் ஒருவர் அவனை நோக்கிச் செல்வாhர். அப்போது அவரை ஆயுதம் ஏந்திய தஜ்ஜாலின் பாகாப்புப் படையினர் எதிர் கொண்டு எங்கே செல் கிறாய் என்று கேட்பார்கள். அந்த மனிதர் இப்போது புறப்பட்டு இருக்கும் இந்த மனிதனை நோக்கிச் செல்கிறேன் என்று பதிலளிப்பார். அதற்கவர்கள் நம் இறைவனை(தஜ்ஜாலை) நீ நம்ப வில்லையா என்று கேட்பார்கள். அந்த மனிதர் நம் இறைவன் யார் என்பது தெரியாதது அல்ல என்று கூறுவார். அதற் கவர்கள் இவனை கொல்லுங்கள் என்று கூறுவார்கள். அப்போது அவர்களில் சிலர் சிலரிடம் உங்கள் இறைவன் (தஜ்ஜால்) யாரையும் தானின்றி கொல் லக்கூடாது என உங்களுக்கு தடை விதிக்க வில்லையா? என்று கூறுவார். ஆகவே அவர்கள் அந்த மனிதரை தஜ்ஜாலிடம் கொண்டு செல்வார்கள். அந்த இறை நம்பிக்கை யாளர் தஜ்ஜாலை காணும் போது மக்களே இவன் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட தஜ்ஜால் ஆவான்.என்று சொல்வார்.

உடனே தஜ்ஜாலின் உத்தரவின் போரில் அவர் பிடித்து கொண்டுவரப்பட்டு தூண்களுக்கிடையே நிறுத்தப்படுவார். இவனைப்பிடித்து இவனது தலை யை பிளந்து விடுங்கள். என்று அவன் கட்டளை யிடுவான் அப்போது அவர் முதுகும் வயிறும் வீங்கும் அளவுக்கு அடிக்கப்படுவார். பிறகு தஜ்ஜால் என்மீது நீ நம்பிக்கை கொள்ள வில்லையா என்று கேட்பான் அதற்கு அந்த மனிதர் நீபெரும் பொய்யன் மஸீஹ் ஆவாய் என்று கூறுவார். பிறகு அவரது உச்சந்தலையில் ரம்பத்தை வைத்து அறுத்து அவருடைய இரு கால்கள் வரை தனித்தனியே பிளக்கும் படி கட்டளையிடப்படும்.

அவ்வாறே செய்து அவரது உடலை இருதுண்டு களாக்கியதும் அவ்விரு துண்டுகளுக்கிடையில் தஜ்ஜால் நடநது வருவான். பிறகு அந்த உடலைப் பார்த்து எழு என்பான் உடனே அந்த மனிதர் உயிர் பெற்று நேராக எழுந்து நிற்பார். பிறகு அவரிடம் என்மீது நம்பிக் கொள்கிறாயா? என்று தஜ்ஜால் கேட்பான் அமதற்கு அந்த மனிதர் உன்னைப்பற்றி இன்னும் கூடுதலாகவே நான் அறிந்து கொண்டேன் என்று சொல்வார்.

பிறகு அந்த மனிதர் மக்களே! (இவன் இவ்வா றெல்லாம் செய்வதால் இவனை இறைவன் என்று நம்பிவிடாதீர்கள் இவன் எனக்குப்பிறகு மக்களில் வேறெவரையும் எதுவும் செய்யமுடியாது என்று கூறுவார்.

உடனே தஜ்ஜதல் அவரை அறுப்பதற்காகப்பிடிப்பான் ஆனால் அப்போது அவரது பிடரியிலிருந்து காறை எழும்பு வரையிலுள்ள பகுதி செம்பாக மாறிவிடும். ஆகவே அவனால் அவரை ஒன்றும் செய்யமுடியாது. பிறகு தஜ்ஜால் அந்த மனிதரின் கைகளையும் கால்களையம் பிடித்து தூக்கி எறிவான். அந்த மனிதரை தஜ்ஜால் நெருப்பில் விட்டான் என மக்கள் எண்ணிக் கொள்வார்கள். ஆனால் அவர் சுவர்க் கத்தில் தான் வீசப்பட்டிருப்பார். இந்த மனிதர் தான் அகிலத்தின் அதிபதியான அல்லாஹ்விடம் மக்களி லேயே மகத்தான உயிர் தியாகம் செய்தவராவார என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அபூஸயிதுல் குத்ரி(ரலி) (நூல் :முஸ்லிம்

இன்ஷா அல்லாஹ் தொடரும்..,

No comments:

Post a Comment