Saturday, December 23, 2017

பாடம் : 05 நபி ஸல் அவர்களுக்கு இருந்த நரைமுடிகள்








باب ما جاء في شيب رسول الله صلى الله عليه وسلم

பாடம் : 05  நபி ஸல் அவர்களுக்கு இருந்த நரைமுடிகள்

37-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، قَالَ‏:‏ أَخْبَرَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ‏:‏ قُلْتُ لأَنَسِ بْنِ مَالِكٍ‏:‏ هَلْ خَضَبَ رَسُولُ اللهِ صلى الله 
عليه وسلم‏؟‏ قَالَ‏:‏ لَمْ يَبْلُغْ ذَلِكَ، إِنَّمَا كَانَ شَيْبًا فِي صُدْغَيْهِ وَلَكِنْ أَبُو بَكْرٍ، خَضَبَ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ‏.‏

37.கதாதா அவர்கள் கூறியதாவது :

நான் அனஸ் பின் மாலிக் ரழி அவர்களிடம் ,” அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் ( தலைமுடிக்குச்) சாயம் பூசுயிருந்தார்களா ?” என்று கேட்டேன் .அதற்கு அவர்கள் ,”சாயம் பூசுகின்ற அளவுக்கு ( நரை முடிகள் ) அவர்களுக்கு இல்லை.அவர்களது இரு நெற்றி பொட்டுகளில் ( சில முடிகள் ) நரைத்திருந்தன என்று கூறினார்கள்.

எனினும் “ அபூபக்ர் ( ரழி ) அவர்கள் மருதாணி இலையாலும் “கத்தம் “ செடியின் இலையாலும் சாயம் பூசியிருந்தார்கள் என்று கூறினார்கள்.

குறிப்பு : இந்த செய்தி முஸ்லிம்யில் ( 4673) பதிவாகி உள்ளது

38-حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، وَيَحْيَى بْنُ مُوسَى، قَالا‏:‏ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ‏:‏ مَا عَدَدْتُ فِي رَأْسِ 
رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَلِحْيَتِهِ، إِلا أَرْبَعَ عَشْرَةَ شَعَرَةً بَيْضَاءَ‏.‏

38. அனஸ் ரழி கூறியதாவது :

நபி ஸல் அவர்களின் தலையிலும் தாடியிலும் பதிநான்கு வெள்ளை முடிகளுக்கு மேல் அதிகமாக நான் எண்ணமுடியவில்லை.

குறிப்பு : இச்செய்தி அஹ்மத் ( 12279) இப்னு ஹிப்பான் ( 6293) பதிவாகி உள்ளது

39-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ، قَالَ : أَخْبَرَنَا أَبُو دَاوُدَ ، قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ ، قَالَ : سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ ، وَقَدْ سُئِلَ عَنْ شَيْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم ، فَقَالَ : " كَانَ إِذَا دَهَنَ رَأْسَهُ لَمْ يُرَ مِنْهُ شَيْبٌ ، وَإِذَا لَمْ يَدْهِنْ رُئِيَ مِنْهُ
  "
39. சிமாக் பின் ஹர்ப் அவர்கள் கூறியதாவது :

ஜாபிர் பின் சமுரா ரழி அவர்களிடம் நபி ஸல் அவர்களின் நரைமுடி பற்றிக் கேட்கப்பட்ட்து அதற்கு அவர்கள் நபியவர்கள் தமது தலையில் எண்ணெய் தேய்த்திருந்தால் அவர்களது தலையிலிருந்து ஒரு சில நரைமுடிகூட்த் தென்படாது;அவர்கள் எண்ணெய் தேய்த் திருக்காவிட்டால் சில நரைமுடி தென்படும் என்று சொன்னார்கள்.

குறிப்பு : இச்செய்தி முஸ்லிம் ( 4680 ) நஸயீ ( 5025 ) பதிவாகி உள்ளது

40-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ الْوَلِيدِ الْكِنْدِيُّ الْكُوفِيُّ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ شَرِيكٍ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، قَالَ‏:‏ إِنَّمَا كَانَ شَيْبُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم نَحْوًا مِنْ عِشْرِينَ شَعَرَةً بَيْضَاءَ‏.‏

40.அப்துல்லாஹ் பின் உமர் ரழி அவர்கள் கூறியதாவது :
நபி அவர்களுக்கு சுமார் இருபது வெள்ளை முடிகளே இருந்தன.

41-حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاءِ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ شَيْبَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ‏:‏ قَالَ أَبُو بَكْرٍ‏:‏ يَا رَسُولَ اللهِ، قَدْ شِبْتَ، قَالَ‏:‏ شَيَّبَتْنِي هُودٌ، وَالْوَاقِعَةُ، وَالْمُرْسَلاتُ، وَعَمَّ يَتَسَاءَلُونَ، وَإِذَا الشَّمْسُ كُوِّرَتْ‏.‏

41.இப்னு அப்பாஸ் ரழி கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதரே ! உங்களுக்கு நரை ஏற்பட்டுவிட்டதே! என்று கேட்ட போது ஹுத் ,அல்வாகி ஆ , அல்முர்ஸலாத்,அம்ம யதஸாலூன் , இதஸ் ஸம்சு குவ்விரத் ஆகிய அத்தியாயங்கள் எனக்கு நரையை ஏற்படுத்திவிட்டன என்று பதிலளித்தார்கள்.

குறிப்பு : இச்செய்தி திர்மிதீ ( 3219) ஹாகிம் ( 3314 ) தப்ரானீ ( 5672) நூல்களில் இடம்பெற்று உள்ளது.

42-حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنْ عَلِيِّ بْنِ صَالِحٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ‏:‏ قَالُوا‏:‏ يَا رَسُولَ اللهِ، نَرَاكَ قَدْ شِبْتَ، قَالَ‏:‏ قَدْ شَيَّبَتْنِي هُودٌ وَأَخَوَاتُهَا‏.‏

42.அபூ ஜுஹைஃபா ரழி அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதரே ! உங்களுக்கு நரைத்துவிட்டதை நாங்கள் பார்க்கிறோமே ! என்று கேட்ட போது ஹுதும் அதன் சகோதர அத்தியாயங்களும் என்னை நரைக்கச் செய்துவிட்டன என்று கூறினார்கள்.

குறிப்பு : இச்செய்தி முஸ்னத் அபீயஃலா ( 880 ) தப்ரானீ ( 318 ) பதிவாகி உள்ளது

43-حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعَيْبُ بْنُ صَفْوَانَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنِ إِيَادِ بْنِ لَقِيطٍ الْعِجْلِيِّ، عَنْ أَبِي رِمْثَةَ التَّيْمِيِّ، تَيْمِ الرَّبَابِ، قَالَ‏:‏ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم، وَمَعِي ابْنٌ لِي، قَالَ‏:‏ فَأَرَيْتُهُ، فَقُلْتُ لَمَّا رَأَيْتُهُ‏:‏ هَذَا نَبِيُّ اللهِ صلى الله عليه وسلم وَعَلَيْهِ ثَوْبَانِ أَخْضَرَانِ، وَلَهُ شَعَرٌ قَدْ عَلاهُ الشَّيْبُ، وَشَيْبُهُ أَحْمَرُ‏
 .
43.அபூ ரம்ஸா ரழி அவர்கள் கூறியதாவது :

நான் நபி ஸல் அவர்களிடம் சென்றேன் .அப்போது எனது மகன் என்னுடன் இருந்தான்.( அங்கிருந்தவர்கள் நபி ஸல் அவர்களை ) எனக்கு காட்டினார்கள்.அப்போது நான் இவர்தான் அல்லாஹ்வின் தூதர் என்று சொன்னேன் அந்த நேரத்தில் அவர்கள் பச்சை நிற ஆடைகளை அணிந்திருந்தார்கள் அவர்களின் சில முடிகளின் நரை பேலோங்கியிருந்த்து அவை சிவப்பு நிறமாக இருந்தன.

குறிப்பு : இச்செய்தி திர்மிதீ ( 2812 ) அபூதாவூத் ( 4206 ) நஸயீ ( 1572) பதிவாகி உள்ளது

44-حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ‏:‏ قِيلَ لِجَابِرِ بْنِ سَمُرَةَ‏:‏ أَكَانَ فِي رَأْسِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم شَيْبٌ‏؟‏ قَالَ‏:‏ لَمْ يَكُنْ فِي رَأْسِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، شَيْبٌ إِلا شَعَرَاتٌ فِي مَفْرِقِ رَأْسِهِ، إِذَا ادَّهَنَ وَارَاهُنَّ الدُّهْنُ‏.‏

44. ஸிமாக் பின் ஹர்ப் கூறியதாவது :

நபி ஸல் அவர்களின் தலையில் நரைமுடிகள் இருந்தனவா ?என்று ஜாபிர் பின் ஸமுரா ரழி அவர்களிடம் வினவினேன் அதற்கவர்கள் அவர்கள் வகிடு எடுக்கும் பகுதியில் சில முடிகளைத் தவிர வேறு எங்கும் நரைமுடிகள் இருக்கவில்லை ( அது கூட ) எண்ணெய் தேய்த்திருந்தால் அவற்றை எண்ணெய் மறைத்துவிடும் என்று பதிலளித்தார்கள்.


No comments:

Post a Comment