Saturday, December 16, 2017

உணவு ஒரு இஸ்லாமியப் பார்வை ( தொடர் கட்டுரை - பாகம் 3 )


உணவு ஒரு இஸ்லாமியப் பார்வை ( தொடர் கட்டுரை - பாகம் 3 )




பிஸ்மி சொல்லாத உண்னவில் ஷைத்தான் :

தனது வீட்டில் நுழையும் ஒருவர் உள்ளே நுழையும் போதும் , தனது ( உணவை ) உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஷைத்தான் ( தன் சகாக்களிடம் இன்று இரவு ) உங்களுக்கு உணவும் இல்லை, தங்குமிடமும் இல்லை எனக் கூறுவான்.

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ فَذَكَرَ اللَّهَ عِنْدَ دُخُولِهِ وَعِنْدَ طَعَامِهِ قَالَ الشَّيْطَانُ لاَ مَبِيتَ لَكُمْ وَلاَ عَشَاءَ ‏.‏ وَإِذَا دَخَلَ فَلَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ دُخُولِهِ قَالَ الشَّيْطَانُ أَدْرَكْتُمُ الْمَبِيتَ ‏.‏ وَإِذَا لَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ طَعَامِهِ قَالَ أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَالْعَشَاءَ ‏"‏ ‏.‏

ஒருவர் தன் வீட்டில் நுழையும் போதும் உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு கூறவில்லையென்றால் ( இன்று இரவு ) உங்களுக்கு உணவும் தங்குமிடமும் கிடைத்து விட்டது எனக் கூறுவான் . என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் ( ரழி ) 

நூல்கள் : முஸ்லிம் ( 3762 ) அபூதாவூத் ( 3273 ) இப்னு மாஜா ( 3877 ) அஹ்மத் ( 14202,15576 )

அல்லாஹ்வின் பெயர் கூறாமல் உண்ணும் போது அந்த உணவின் முழு பயனையும் நம்மால் அடைந்து கொள்ள முடியாது . ஏனெனில் அந்த உணவை நாம் மட்டும் உண்ணவில்லை அதில் ஷைத்தானும் நம்மோடு பங்கு போடுக் கொள்கிறான். மேலும் நம்மைக் கெடுக்கும் ஷைத்தானுக்கு நாமே உணவளிக்கும் மோசமான நிலையும் எற்பட்டு விடுகிறது.

பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் :


سنن الترمذي ت شاكر (4 / 288):

عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا فَلْيَقُلْ: بِسْمِ اللَّهِ، فَإِنْ نَسِيَ فِي أَوَّلِهِ فَلْيَقُلْ: بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ "
__________

[حكم الألباني] : صحيح


உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது பிஸ்மில்லாஹ் என்று சொல்லட்டும் , ஆரம்பத்தில் ( சொல்ல ) மறந்து விட்டால் “ பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி “ என்று கூறட்டும் என நபி ஸல் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா ( ரழி ) 

நூல்கள் : திர்மிதீ ( 1781 ) அபூதாவூத் ( 3275) இப்னு மாஜா ( 3255 ) அஹ்மத் ( 23954,24551,24895,25089 )

வலது கரத்தால் சாப்பிடுதல் :

صحيح مسلم (3 / 1598):

 عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ جَدِّهِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ، وَإِذَا شَرِبَ فَلْيَشْرَبْ بِيَمِينِهِ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ، وَيَشْرَبُ بِشِمَالِهِ»


உங்களில் ஒருவர் உண்ணும் போது தனது வலக்கரத்தால் உண்ணட்டும் . குடிக்கும் போது வலக்கரத்தால் குடிக்கட்டும் , ஏனெனில் ஷைத்தான் தனது இடது கரத்தால் சாப்பிடுகிறான் இடது கரத்தாலே குடிக்கிறான் என அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் ( ரழி )
நூல்கள் : முஸ்லிம் ( 3764 , 3765 ) திர்மிதீ ( 1721,1722 ) அபூதாவூத் ( 3283 ) அஹ்மத் ( 4309,4654,5257,5583,5843,5908,6050)

No comments:

Post a Comment