باب
ما جاء في ترجل رسول الله صلى الله عليه وسلم
பாடம் : 4 தலைவாருதல்
32-حدثنا إسحاق بن موسى الأنصاري، حدثنا مَعْن بن عيسى، حدثنا مالك
بن أنس، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:
كُنْتُ
أُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا حَائِضٌ.
32. ஆயிஷா ( ரழி ) அவர்கள் கூறியதாவது :
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நபிகளாருக்கு தலைவாரிவிடுவேன்.
குறிப்பு : இச்செய்தி புஹாரி ( 295 ) முஸ்லிம் ( 500 ) ஆகிய
நூல்களில் இடம்பெற்றுள்ளது
33-حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ:
حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ صَبِيحٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبَانَ هُوَ الرَّقَاشِيُّ،
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُكْثِرُ
دَهْنَ رَأْسِهِ وَتَسْرِيحَ لِحْيَتِهِ، وَيُكْثِرُ الْقِنَاعَ حَتَّى كَأَنَّ ثَوْبَهُ،
ثَوْبُ زَيَّاتٍ.
33. அனஸ் பின்
மாலிக் ( ரழி ) கூறியதாவது :
நபி ஸல் அவர்கள்
அதிகம் எண்ணெய் தேய்ப்பவர்களாகவும் தாடியைச் சீப்பிடுபவர்களாகவும் இருந்தார்கள். தலையில்
அதிகம் துணியை போட்டிருப்பவர்களாக இருந்தார்கள் . அதனால் அந்த ஆடை எண்ணெயில் நனைந்து
ஆடைப் போன்றிருக்கும்.
குறிப்பு : இச்செய்தியில் இரண்டாவது அறிவிப்பாளர் “ யஸீத்
பின் அர்ரிகாஷி “ என்பவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.இவரை பற்றி இமாம் அஹ்மத்,தஹபீ,
நஸயீ,தாரகுத்தீனி ஆகியோர் பலவீனமானவர் என்று சொல்லி உள்ளார்கள்.
34-حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ،
قَالَ: حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنِ الأَشْعَثِ بْنِ أَبِي الشَّعْثَاءِ،
عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: إِنْ كَانَ رَسُولُ
اللهِ صلى الله عليه وسلم لَيُحِبُّ التَّيَمُّنَ فِي طُهُورِهِ إِذَا تَطَهَّرَ،
وَفِي تَرَجُّلِهِ إِذَا تَرَجَّلَ، وَفِي انْتِعَالِهِ إِذَا انْتَعَلَ.
34. ஆயிஷா ( ரழி ) அவர்கள்
கூறியதாவது :
நபி ஸல் அவர்கள் ( உளூ மற்றும் குளியல் மூலம் ) தம்மைத் தூய்மைப்படுத்திக்கொள்ளும்
போதும் , தலைவாரிக்கொள்ளும் போதும் அவர்கள் காலணி அணியும் போதும் வலப் பக்கத்திலிருந்து
தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.
குறிப்பு : இச்செய்தி புஹாரி ( 5380 ) முஸ்லிம் ( 446) திர்மிதீ
( 553 ) ஆகிய நூல்களில் பதிவாகி உள்ளது.
35-حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ،
قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنِ
الْحَسَنِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ: نَهَى رَسُولُ اللهِ صلى
الله عليه وسلم عنِ التَّرَجُّلِ، إِلا غِبًّا.
35. அப்துல்லாஹ் பின்
முகஃப்ஃபல் ( ரழி ) கூறியதாவது :
எப்போதாவதே ( சில நேரங்களில் ) தவிர தலைவாருவதை நபி ஸல் அவர்கள்
தடைசெய்தார்கள்.
குறிப்பு : இச்செய்தி அபூதாவூத் ( 3628 ) நஸயீ ( 4970
) திர்மிதீ ( 1678 ) அஹ்மத் ( 16191 ) ஆகிய
நூல்களில் பதிவாகி உள்ளது.
36-حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ،
قَالَ: حَدَّثَنَا عَبْدُ السَّلامِ بْنُ حَرْبٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي
خَالِدٍ، عَنْ أَبِي الْعَلاءِ الأَوْدِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ،
عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم: أَنَّ النَّبِيَّ
صلى الله عليه وسلم، كَانَ يَتَرَجَّلُ غِبًّا.
36. ஹுமைத் பின் அப்துர்ரஹ்மான்
கூறியதாவது :
நபி ஸல் அவர்கள் எப்போதாவது தலைவாருபவர்களாக இருந்தார்கள்
என்று நபித்தோழரில் ஒருவர் குறிப்பிட்டார்.
குறிப்பு : இச்செய்தியில்
வரும் அறிவிப்பாளரில் ஒருவரான “ யஜீத் பின் அபீ காலித் “ என்பவர் ஹதீஸ்களில் அதிகம்
தவறு இழைக்க கூடியவர் ஆவார்[صدوق يخطئ كثيرا ] ஆகவே இந்த செய்தி பலவீனமான செய்தி ஆகும்.
No comments:
Post a Comment