بَابُ اَلْوُضُوءِ
உளூ பற்றிய பாடம்
عَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - عَنْ رَسُولِ اَللَّهِ - صلى
الله عليه وسلم - قَالَ: - لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ
بِالسِّوَاكِ مَعَ كُلِّ وُضُوءٍ - أَخْرَجَهُ مَالِكٌ, وأَحْمَدُ, وَالنَّسَائِيُّ,
وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَة
صحيح. علقه البخاري (458/فتح) بصيغة الجزم، وعنده لفظ
"عند" بدل "مع". ورواه أحمد (2 /460 و 517) ، والنسائي في
"الكبرى" (298) ، وابن خزيمة (140)
36 ''என்னுடைய சமுதாயத்திற்கு கஷ்டம் தந்து விடுவேன் என்று நான் அஞ்சாவிட்டால் ஒவ்வொரு உளுவுடனும் (மிஸ்வாக்) பல் துலக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டிருப்பேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.
மாலிக், அஹ்மத், நஸயீ மற்றும் இப்னு குஸைமா. இது ஸஹீஹ் எனும் தரத்தில் இப்னு குஸைமாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது புகாரியில் 'முஅல்லக்' தரத்திலுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
وَعَنْ حُمْرَانَ; - أَنَّ عُثْمَانَ - رضي الله عنه - دَعَا
بِوَضُوءٍ, فَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثَ مَرَّاتٍ, ثُمَّ مَضْمَضَ, وَاسْتَنْشَقَ,
وَاسْتَنْثَرَ, ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثَ مَرَّاتٍ, ثُمَّ غَسَلَ يَدَهُ
اَلْيُمْنَى إِلَى اَلْمِرْفَقِِ ثَلَاثَ مَرَّاتٍ, ثُمَّ اَلْيُسْرَى مِثْلَ
ذَلِكَ, ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ, ثُمَّ غَسَلَ رِجْلَهُ اَلْيُمْنَى إِلَى
اَلْكَعْبَيْنِ ثَلَاثَ مَرَّاتٍ, ثُمَّ اَلْيُسْرَى مِثْلَ ذَلِكَ, ثُمَّ قَالَ:
رَأَيْتُ رَسُولَ اَللَّهِ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي
هَذَا. - مُتَّفَقٌ عَلَيْه ِ
صحيح. رواه البخاري (159) ، ومسلم (226)
37 உஸ்மான்(ரலி) அவர்கள் உளுவிற்காகத் தண்ணீர் கேட்டார்கள். (தண்ணீர் கொடுக்கப்பட்டதும்) மூன்று முறை தம் கைகளைக் கழுவினார்கள் பின்னர் வாய் கொப்பளித்தார்கள், இன்னும் மூக்கில் தண்ணீர் செலுத்திச் சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தம்முடைய வலக்கரத்தை முழங்கை வரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தம்முடைய இடக் கரத்தை அதே போன்று கழுவினார்கள். பின்னர் தம்முடைய தலைக்கு மஸஹ் செய்தார்கள். (தலையை ஈரக் கையால் தடவினார்கள்). பின்னர் தமது வலக் காலை கணுக்கால்கள் வரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தமது இடக் காலை அதே போன்று கழுவினார்கள். பின்னர், ''நபி(ஸல்) அவர்கள் உளு செய்வதை நான் பார்த்திருக்கின்றேன். அவர்களுடைய உளு (நான் செய்து காட்டிய) என்னுடைய இந்த உளுவைப் போன்று தான் அமைந்திருந்தது'' என்று கூறினார்கள் என ஹும்ரான் அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
وَعَنْ عَلِيٍّ - رضي الله عنه -فِي صِفَةِ وُضُوءِ اَلنَّبِيِّ
صَلَّى اَللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- قَالَ: - وَمَسَحَ بِرَأْسِهِ وَاحِدَةً. - أَخْرَجَهُ أَبُو
دَاوُد
صحيح. رواه أبو داود (111)
38 அலீ(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களது உளுவை வர்ணிக்கையி, ''அவர்கள் தலைக்கு ஒருமுறை மஸஹ் செய்தார்கள்'' என்று கூறினார்கள்.
அபூதாவூத். திர்மிதீ மற்றும் நஸயீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. திர்மிதீ மஸஹ் தொடர்பான ஹதீஸ்களில் இது மிகவும் ஸஹீஹானது என்று குறிப்பிட்டுள்ளார்.
وَعَنْ عَبْدِ اَللَّهِ بْنِ يَزِيدَ بْنِ عَاصِمٍ - رضي الله عنه
-فِي صِفَةِ اَلْوُضُوءِ- قَالَ: - وَمَسَحَ - صلى الله عليه وسلم - بِرَأْسِهِ,
فَأَقْبَلَ بِيَدَيْهِ وَأَدْبَرَ. - مُتَّفَقٌ عَلَيْه ِ
صحيح. رواه البخاري (186) ، ومسلم (235)
39 நபி(ஸல்) அவர்களது உளுவைப் பற்றிக் கூறுகையில், ''நபி(ஸல்) அவர்கள் தலைக்கு மஸஹ் செய்தார்கள். அப்போது தம் இரு கைகளையும் முன்னே கொண்டு வந்து, பின்னால் கொண்டு சென்றார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு ஜைத் இப்னு ஆஸிம்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
وَفِي لَفْظٍ: - بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ, حَتَّى ذَهَبَ بِهِمَا
إِلَى قَفَاهُ, ثُمَّ رَدَّهُمَا إِلَى اَلْمَكَانِ اَلَّذِي بَدَأَ مِنْهُ
البخاري (185) ، ومسلم (235)
40 புகாரி, முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், தலையின் முன் பகுதியில் இருந்து (மஸஹை) ஆரம்பம் செய்து, தம்முடைய பிடாரிவரை கொண்டு சென்று, பின்னர் (மஸஹை) ஆரம்பித்த இடத்திற்குத் தமது கரங்களைக் கொண்டு வந்தார்கள் என்று இடம் பெற்றுள்ளது.
وَعَنْ عَبْدِ اَللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اَللَّهُ عَنْهُمَا -فِي
صِفَةِ اَلْوُضُوءِ- قَالَ: - ثُمَّ مَسَحَ - صلى الله عليه وسلم - بِرَأْسِهِ,
وَأَدْخَلَ إِصْبَعَيْهِ اَلسَّبَّاحَتَيْنِ فِي أُذُنَيْهِ, وَمَسَحَ
بِإِبْهَامَيْهِ ظَاهِرَ أُذُنَيْهِ. - أَخْرَجَهُ أَبُو دَاوُدَ,
وَالنَّسَائِيُّ, وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَة
صحيح. رواه أبو داود (135) ، والنسائي (1/88)
41 நபி(ஸல்) அவர்களின் உளுவைப் பற்றிக் கூறுகையில் ''அவர்கள் தமது தலைக்கு மஸஹ் செய்தார்கள். இன்னும் தமது இரு ஆட்காட்டி விரல்களையும் காதினுள் நுழைத்து, தமது கட்டை விரல்கள் இரண்டினாலும் காதுகளின் வெளிப்பகுதியில் வைத்து மஸஹ் செய்தார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்.
அபூ தாவூத், நஸாயீ மற்றும் இப்னு குஸைமா. இது ஸஹிஹ் எனும் தரத்தில் இப்னு குஸைமாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ
اَللَّهِ - صلى الله عليه وسلم - إِذَا اِسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ
فَلْيَسْتَنْثِرْ ثَلَاثًا, فَإِنَّ اَلشَّيْطَانَ يَبِيتُ عَلَى خَيْشُومِهِ -
مُتَّفَقٌ عَلَيْه ِ
صحيح. رواه البخاري (3295) ، ومسلم (238)
42 ''உங்களில் எவரேனும் தூக்கத்திலிருந்து எழுந்து விட்டால், அவர் தன்னுடைய மூக்கை மூன்று முறை சிந்தட்டும். ஏனெனில், அவாரின் மூக்குத் தண்டில் ஷைத்தான் இரவைக் கழிக்கின்றான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
وَعَنْهُ: - إِذَا اِسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلَا
يَغْمِسُ يَدَهُ فِي اَلْإِنَاءِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا فَإِنَّهُ لَا
يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدَهُ - مُتَّفَقٌ عَلَيْهِ. وَهَذَا لَفْظُ مُسْلِم ٍ
صحيح. رواه البخاري (162) ، ومسلم (278)
43 ''உங்களில் எவரேனும் தூக்கத்திலிருந்து எழுந்தால், தமது கரத்தை மூன்று முறை கழுவாத வரையில், தண்ணீருள்ள பாத்திரத்தினுள் தனது கையை நுழைக்க வேண்டாம். ஏனெனில், அவரது கை இரவை எங்கு கழித்ததென அவர் அறியமாட்டார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம். இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
وَعَنْ لَقِيطِ بْنُ صَبْرَةَ, - رضي الله عنه - قَالَ: قَالَ
رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم - أَسْبِغْ اَلْوُضُوءَ, وَخَلِّلْ بَيْنَ
اَلْأَصَابِعِ, وَبَالِغْ فِي اَلِاسْتِنْشَاقِ, إِلَّا أَنْ تَكُونَ صَائِمًا -
أَخْرَجَهُ اَلْأَرْبَعَةُ, وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَة َ
صحيح. رواه أبو داود (142 و 143) ، والنسائي (1 /66 و 69) ،
والترمذي، (38) ، وابن ماجه (448) ، وابن خزيمة (150 و 168)
44 ''நிறைவாக உளுச் செய்யுங்கள். இன்னும் விரல்களைக் கோதிக் கழுவுங்கள். இன்னும் நோன்பாளியாக இல்லாதிருந்தால் நாசிக்கு நன்றாக நீர் செலுத்துங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என லகீத் இப்னு ஸபிரா(ரலி) அறிவிக்கிறார்.
அபூதாவூத், நஸாயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா. இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
وَلِأَبِي دَاوُدَ فِي رِوَايَةٍ: - إِذَا تَوَضَّأْتَ فَمَضْمِضْ
صحيح. سنن أبي داود (144)
45 ''உளுச் செய்தால் நீ வாய்கொப்பளி'' எனும் வாசகம் அபூதாவூதின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
وَعَنْ عُثْمَانَ - رضي الله عنه - أَنَّ اَلنَّبِيَّ - صلى الله
عليه وسلم - كَانَ يُخَلِّلُ لِحْيَتَهُ فِي اَلْوُضُوءِ - أَخْرَجَهُ
اَلتِّرْمِذِيُّ, وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَة
صحيح. رواه الترمذي (31) ، وابن خزيمة (1 /78-79) وقال الترمذي: حسن
صحيح
46 ''நபி(ஸல்) அவர்கள் உளுச் செய்யும் போது, தமது தாடியைக் கோதிக் கழுவினார்கள்'' என உஸ்மான்(ரலி) அறிவிக்கிறார்.
திர்மிதீ, இப்னு குஸைமா. இது ஸஹீஹ் எனும் தரத்தில் இப்னு குஸைமாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
وَعَنْ عَبْدِ اَللَّهِ بْنِ زَيْدٍ - رضي الله عنه - أَنَّ
اَلنَّبِيَّ - صلى الله عليه وسلم - أَتَى بِثُلُثَيْ مُدٍّ, فَجَعَلَ يَدْلُكُ
ذِرَاعَيْهِ - أَخْرَجَهُ أَحْمَدُ, وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَة َ
صحيح. رواه أحمد (4/39) ، وابن خزيمة (118)
47 நபி(ஸல்) அவர்களிடம் ஒரு முத்து அளவு தண்ணீரில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் கொண்டு வந்து தரப்பட்டது. அவர்கள் (கழுவும் போது) தம் முழங்கைகளைத் தேய்க்கலானார்கள்!'' என அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவிக்கிறார்.
அஹமத், இப்னு குஸைமா. இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
وَعَنْهُ, -
أَنَّهُ رَأَى اَلنَّبِيَّ - صلى الله عليه وسلم - يَأْخُذُ لِأُذُنَيْهِ مَاءً
خِلَافَ اَلْمَاءِ اَلَّذِي أَخَذَ لِرَأْسِهِ. - أَخْرَجَهُ اَلْبَيْهَقِيّ ُ
وَهُوَ عِنْدَ "مُسْلِمٍ" مِنْ هَذَا اَلْوَجْهِ بِلَفْظٍ:
وَمَسَحَ بِرَأْسِهِ بِمَاءٍ غَيْرَ فَضْلِ يَدَيْهِ, وَهُوَ اَلْمَحْفُوظ
البيهقي (1 /65) وقال:
"هذا إسناد صحيح".
صحيح. رواه مسلم (236) ، وقال البيهقي: "وهذا أصح من الذي
قبله".
48 நபி(ஸல்) அவர்கள் உளுச் செய்யும் போது காதுகள் மற்றும் தலைக்கு (மஸஹ் செய்ய) தனித்தனியாகத் தண்ணீர் எடுத்ததை தான் பார்த்ததாக அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவிக்கிறார். பைஹகீ
முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில், ''நபி(ஸல்) அவர்கள் தம் கையில் மீதமிருந்த தண்ணீரை விட்டுவிட்டு வேறொரு தண்ணீரால் தம் தலைக்கு மஸஹ் செய்தார்கள்'' என்றுள்ளது.
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: سَمِعْتَ رَسُولَ
اَللَّهِ - صلى الله عليه وسلم - يَقُولُ: - "إِنَّ أُمَّتِي يَأْتُونَ
يَوْمَ اَلْقِيَامَةِ غُرًّا مُحَجَّلِينَ, مِنْ أَثَرِ اَلْوُضُوءِ, فَمَنْ
اِسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ. - مُتَّفَقٌ عَلَيْهِ,
وَاللَّفْظُ لِمُسْلِم
صحيح. رواه البخاري (136) ، ومسلم (246) (35)
49 ''நிச்சயமாக என்னுடைய சமுதாயம், மறுமை நாளில் உளுவின் அடையாளத்தால் கரங்கள் ஒளிர்ந்த வண்ணம் வருவார்கள். எவரால், தமது கரத்தின் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ள முடியுமோ அவர் அவ்வாறே செய்து கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا قَالَتْ: - كَانَ
اَلنَّبِيُّ - صلى الله عليه وسلم - يُعْجِبُهُ اَلتَّيَمُّنُ فِي تَنَعُّلِهِ,
وَتَرَجُّلِهِ, وَطُهُورِهُ, وَفِي شَأْنِهِ كُلِّهِ. - مُتَّفَقٌ عَلَيْه
صحيح. رواه البخاري (168) ، ومسلم (268) (67)
50 ''நபி(ஸல்) அவர்கள் செருப்பு அணியும் போதும், தலை வாரும் போதும், உளுச் செய்யும் போது, தமது காரியங்கள் அனைத்திலும் வலப் பக்கத்திலிருந்து ஆரம்பம் செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.
ஸஹீஹ் எனும் தரத்தில் புஹாரி மற்றும் முஸ்லிம்யில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ
اَللَّهِ - صلى الله عليه وسلم - إِذَا تَوَضَّأْتُمْ فابدأوا بِمَيَامِنِكُمْ -
أَخْرَجَهُ اَلْأَرْبَعَةُ, وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَة َ
صحيح. رواه أبو داود (4141) ، والترمذي (1766) ، والنسائي في
"الكبرى" (5 /482) ، وابن ماجه (402) ، وابن خزيمة (178)
51.” நீங்கள் உளூ செய்யும் போது, உங்கள் வலப்பக்கத்திலிருந்து ( ஒவ்வொரு உறுப்பையும் ) ஆரம்பம் செய்யுங்கள் “ என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்
இந்த செய்தி ஸஹீஹ்
தரத்தில் அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா மற்றும் இப்னு குஸைமா வில் பதிவாகி
உள்ளது
وَعَنْ اَلْمُغِيرَةِ بْنِ شُعْبَةٍ - رضي الله عنه - أَنَّ
اَلنَّبِيَّ - صلى الله عليه وسلم - تَوَضَّأَ, فَمَسَحَ بِنَاصِيَتِهِ, وَعَلَى
اَلْعِمَامَةِ وَالْخُفَّيْنِ. - أَخْرَجَهُ مُسْلِم
صحيح. رواه مسلم (274) (83)
52 ''நபி(ஸல்) அவர்கள் உளுச் செய்யும் போது தமது நெற்றி ரோமம், தலைப்பாகை மற்றும் இரண்டு காலணிகளுக்கும் மஸஹ் செய்தார்கள்'' என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்.
وَعَنْ جَابِرٍ
بْنِ عَبْدِ اَللَّهِ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا -فِي صِفَةِ حَجِّ اَلنَّبِيِّ
صَلَّى اَللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- قَالَ - صلى الله عليه وسلم - اِبْدَؤُوا
بِمَا بَدَأَ اَللَّهُ بِهِ - أَخْرَجَهُ النَّسَائِيُّ, هَكَذَا بِلَفْظِ
اَلْأَمْر ِ وَهُوَ عِنْدَ مُسْلِمٍ
بِلَفْظِ اَلْخَبَر
صحيح. النسائي (536) .
صحيح. النسائي (536) .
مسلم (2/888)
53 நபி(ஸல்) அவர்களின் ஹஜ்ஜைப் பற்றி ஜாபிர்(ரலி) கூறுகையில், ''அல்லாஹ் எதைக் கொண்டு ஆரம்பம் செய்தானோ, அதைக் கொண்டே நீங்களும் ஆரம்பம் செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள் என அறிவிக்கிறார். நஸாயீ, முஸ்லிம்
وَعَنْهُ قَالَ: - كَانَ اَلنَّبِيَّ - صلى الله عليه وسلم - إِذَا
تَوَضَّأَ أَدَارَ اَلْمَاءَ عَلَى مُرْفَقَيْهِ. - أَخْرَجَهُ اَلدَّارَقُطْنِيُّ
بِإِسْنَادِ ضَعِيف
ضعيف جدا. رواه الدارقطني (1/15/83)
54 ''நபி(ஸல்) அவர்கள் உளுச் செய்யும்போது தம்முடைய முழங்கைகளில் தண்ணீர் ஊற்றினார்கள்'' என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். இது தாரகுத்னீயில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ
اَللَّهِ - صلى الله عليه وسلم - لَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اِسْمَ
اَللَّهِ عَلَيْهِ - أَخْرَجَهُ أَحْمَدُ, وَأَبُو دَاوُدَ, وَابْنُ مَاجَهْ, بِإِسْنَادٍ
ضَعِيف
حسن بشواهده. رواه أحمد (2/418) ، وأبو داود (101) ، وابن ماجه (399)
55 ''(உளு செய்ய ஆரம்பிக்கும் போது) எவர் 'பிஸ்மில்லாஹ் சொல்லவில்லையோ, அவாரின் உளு செல்லாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.
அஹ்மத், அபூ தாவூத் இப்னுமாஜா. இது இப்னு மாஜாவில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
وَلِلترْمِذِيِّ: عَنْ سَعِيدِ بْنِ زَيْد ٍ وَأَبِي سَعِيدٍ نَحْوُه
ُ قَالَ أَحْمَدُ: لَا يَثْبُتُ فِيهِ شَيْء
سنن الترمذي (25) .
"العلل الكبير" (112-113)
كما في "مسائل ابن هانيء" (1/16/3)
56 ஸயீது பின் ஸைத் ( ரலி ) மற்றும் அபூ ஸயீது அல் குத்ரீ( ரலி ) வாயிலாக திர்மிதீயிலும் மேற்கண்ட ஹதீஸ் இடம் பெற்றுள்ளது இது சமந்தமாக வரும் ஹதீஸ்கள் எதுவும் ஆதாரமாக்க் கொள்ளத்தக்கவை அன்று என இமாம் அஹ்மத் கூறியுள்ளார்.
وَعَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ, عَنْ أَبِيهِ, عَنْ جَدِّهِ قَالَ:
- رَأَيْتُ رَسُولَ اَللَّهِ - صلى الله عليه وسلم - يَفْصِلُ بَيْنَ
اَلْمَضْمَضَةِ وَالِاسْتِنْشَاقِ. - أَخْرَجَهُ أَبُو دَاوُدَ بِإِسْنَادِ ضَعِيف
ضعيف. رواه أبو داود (139)
57 நபி(ஸல்) அவர்கள் தண்ணீரை, வாய் கொப்பாளிப்பதற்கும், நாசிக்கும் தனித்தனியாக எடுத்தார்களென தல்ஹா இப்னு முஸர்ரிஸப் தம்முடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். இது அபூ தாவூதில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
وَعَنْ عَلِيٍّ - رضي الله عنه -فِي صِفَةِ اَلْوُضُوءِ- ثُمَّ
تَمَضْمَضَ - صلى الله عليه وسلم - وَاسْتَنْثَرَ ثَلَاثًا, يُمَضْمِضُ وَيَنْثِرُ
مِنْ اَلْكَفِّ اَلَّذِي يَأْخُذُ مِنْهُ اَلْمَاءَ - أَخْرَجَهُ أَبُو دَاوُدَ
وَالنَّسَائِيّ ُ
صحيح. وهو جزء من الحديث المتقدم برقم (34)
58 நபி(ஸல்) அவர்களின் உளுவைப் பற்றி அலி(ரலி) கூறுகையில், ''நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை (வாய் கொப்பளிக்க எடுத்த) அதே தண்ணீரைக் கொண்டே நாசியையும் சுத்தம் செய்தார்கள்'' என கூறினார். அபூதாவூத், நஸாயீ.
وَعَنْ عَبْدِ اَللَّهِ بْنِ زَيْدٍ - رضي الله عنه -فِي صِفَةِ
اَلْوُضُوءِ- ثُمَّ أَدْخَلَ - صلى الله عليه وسلم - يَدَهُ, فَمَضْمَضَ
وَاسْتَنْشَقَ مِنْ كَفٍّ وَاحِدَةٍ, يَفْعَلُ ذَلِكَ ثَلَاثًا - مُتَّفَقٌ
عَلَيْه ِ
صحيح. وهو جزء من الحديث المتقدم برقم (35)
59 நபி(ஸல்) அவர்களின் உளுவைப் பற்றி அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) கூறுகையில், ''நபி(ஸல்) அவர்கள் உளுவுக்காகப் பாத்திரத்தினுள் தமது கையை நுழைத்தார்கள். பின்னர் ஒரு கை தண்ணீரைக் கொண்டு வாய் கொப்பளித்து, நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள்'' என்று கூறினார். புகாரி, முஸ்லிம்
وَعَنْ أَنَسٍ - رضي الله عنه - قَالَ: - رَأَى اَلنَّبِيُّ - صلى
الله عليه وسلم - رَجُلًا, وَفِي قَدَمِهِ مِثْلُ اَلظُّفْرِ لَمْ يُصِبْهُ
اَلْمَاءُ. فَقَالَ: "اِرْجِعْ فَأَحْسِنْ وُضُوءَكَ" - أَخْرَجَهُ
أَبُو دَاوُدَ, وَالنَّسَائِيّ
صحيح. رواه أبو داود (173)
60 தம் குதிங்காலில் நகத்தளவு மட்டும் தண்ணீர்படாத (வாறு உளு செய்த) ஒரு நபரைப் பார்த்து, ''திரும்பச் செல்! உன்னுடைய உளுவை நல்ல முறையில் செய்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத், நஸாயீ
وَعَنْهُ قَالَ: - كَانَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -
يَتَوَضَّأُ بِالْمُدِّ, وَيَغْتَسِلُ بِالصَّاعِ إِلَى خَمْسَةِ أَمْدَادٍ -
مُتَّفَقٌ عَلَيْه ِ
صحيح. رواه البخاري (201) ، ومسلم (325) (51)
61 நபி(ஸல்) அவர்கள் ஒரு 'முத்' அளவு தண்ணீரில் உளு செய்வார்கள். இன்னும் ஒரு 'ஸாவு' அளவிலிருந்து ஐந்து 'முத்' அளவு தண்ணீரில் குளிப்பார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
وَعَنْ عُمَرَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى
الله عليه وسلم - مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ, فَيُسْبِغُ اَلْوُضُوءَ,
ثُمَّ يَقُولُ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اَللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ
لَهُ, وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ, إِلَّا فُتِحَتْ لَهُ
أَبْوَابُ اَلْجَنَّةِ" - أَخْرَجَهُ مُسْلِم وَاَلتِّرْمِذِيُّ, وَزَادَ: -
اَللَّهُمَّ اِجْعَلْنِي مِنْ اَلتَّوَّابِينَ, وَاجْعَلْنِي مِنْ
اَلْمُتَطَهِّرِينَ
صحيح. رواه مسلم (234)
سنن الترمذي (55)
62 உங்களில் எவர் நிறைவாக உளு செய்த பின்னர், ''நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். இன்னும் முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனது நல்லடியாராகவும், உண்மைத் தூதரும் ஆவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்'' என்று கூறுகிறாரோ? அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் விரும்பிய வாயிலில் அவர் நுழைந்து கொள்ளலாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உமர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
''யா அல்லாஹ்! பாவமன்னிப்புக் கோருபவர்களின் , குழுவிலும், தூய்மையானவர்களின் குழுவிலும் என்னைச் சேர்ப்பாயாக!'' எனும் வாசகம் திர்மிதீயில் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment