Monday, February 19, 2018

நம்பிக்கை கொண்டோர் அனைவரும் சகோதர்களே !!



நம்பிக்கை கொண்டோர் அனைவரும் சகோதர்களே !!







إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ

நம்பிக்கை கொண்டோர் ( அனைவரும் ) சகோதரர்கள் தாம் .

فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ

எனவே உங்கள் சகோதர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள் !

وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

அல்லாஹ்வை அஞ்சுங்கள் அருள் செய்யப்படுவீர்கள்(49:10 )

ஆனால் இப்போதோ ஒர் சிலர் நினைப்பது உண்டு இவர் எம்மை விட்டு சென்று விட்டார்

ஆகவே இவர் கொள்கை சகோதரன் கிடையாது

இவர் ஒர் பித் அத் வாதி இப்படி எல்லாம் பேசுவதை நாம் காண்கிறோம்

ஆனால் அல்லாஹ் தன்னுடைய திருமறையில் பல இடங்களில் சகோதரத்துவத்தை பற்றி பேசுகிறேன்

فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ ۗ وَنُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ (11)

அவர்கள் திருந்தி , தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்தால் அவர்கள் மார்க்கத்தில் உங்கள் சகோதரர்கள் அறிகின்ற சமுதாயத்திற்குச் சான்றுகளைத் தெளிவாக்குகிறோம் ( 9:11)

இந்த வசனம் மக்கத் காஃபிர்கள் சமந்தமாக பேசபட்டாலும் அதில் அவர்கள் ஏகத்துவக கலிமாவை ஏற்றுகொண்டு [ فَإِن تَابُوا ] இறைவனிடம் மன்னிப்பு கேட்டால் அவர்கள் கொள்கை சகோதர்கள் ஆவார்கள் என்று இறைவன் சொல்லுகிறேன்

قَالَتِ الْأَعْرَابُ آمَنَّا ۖ قُل لَّمْ تُؤْمِنُوا وَلَٰكِن قُولُوا أَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ الْإِيمَانُ فِي قُلُوبِكُمْ ۖ

நம்பிக்கை கொண்டோம் என்று கிராமவாசிகள் கூறுகின்றனர். “ நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை மாறாக “ கட்டுப்பட்டோம் “ என்று கூறுங்கள் என கூறுவீராக !

وَإِن تُطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ لَا يَلِتْكُم مِّنْ أَعْمَالِكُمْ شَيْئًا ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ (14)

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப்பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்திட மாட்டான் அல்லாஹ் மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையோன் ( 49:14)

அதை போல் ஒருவருடைய உள்ளத்தில் ஈமான் இருக்கிறதா இல்லையா என்பது இறைவன் மட்டுமே அறிவான்

ஆகவே முஸ்லிம் என்பவன் கலிமாவை மொழிந்தவனிடத்தில் கண்ணியமாகவும் , அவன் செய்யும் தவறை அழகிய முறையில் சுட்டிகாட்டி அவனை அந்த பிழையில் இருந்து மீட்டு எடுக்க கூடியவர்களாக இருக்கவேண்டுமே இன்றி அவரை விட்டு ஓடகூடியவர்களாக இருக்க கூடாது

إِنَّ شَرَّ النَّاسِ مَنْ تَرَكَهُ النَّاسُ ـ أَوْ وَدَعَهُ النَّاسُ ـ اتِّقَاءَ فُحْشِهِ

..மக்கள் எவரின் அவருவருப்பான பேச்சுகளிலிருந்து (தங்களைத்) தற்காத்துக் கொள்ள அவரைவிட்டு ஒதுங்கிறார்களோ அவரே மக்களில் தீயவராவார்.( புஹாரி 6054 , முஸ்லிம் 2591 , திர்மிதீ 1996 )

No comments:

Post a Comment