இறை அச்சம் உடையவர்கள் யார் ?
(حسن لغيره)
عن أبي علي رجل من بني كاهل قال:
خطبنا أبو موسى الأشعري فقال:
يا أيها الناس اتقوا هذا الشرك فإنه أخفى من دبيب النمل فقام إليه عبد الله بن حزن وقيس بن المضارب فقال: والله لتخرجن مما قلت أو لنأتين عمر مأذونا لنا أو غير مأذون فقال: بل أخرج مما قلت خطبنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فقال:
يا أيها الناس اتقوا هذا الشرك فإنه أخفى من دبيب النمل
فقال له من شاء الله أن يقول وكيف نتقيه وهو أخفى من دبيب النمل يا رسول الله قال قولوا اللهم إنا نعوذ بك من أن نشرك بك شيئا نعلمه ونستغفرك لما لا نعلمه
رواه أحمد والطبراني ورواته إلى أبي علي محتج بهم في الصحيح
وأبو علي وثقه ابن حبان ولم أر أحدا جرحه
மனிதர்களே எறும்பு ஊர்வதைவிடவும் இரகசியமான இணைவைத்தலை பயந்து கொள்ளுங்கள் என்று அபூ மூஸா அல் அஷ் அரீ ( ரலி ) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தும் போது கூறினார்கள்.அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு ஹஸ்ன் ,கைஸ் இப்னுல் முழாரிப் ஆகியோர் எழுந்து “ அல்லாஹ்வின் மீது சத்தியமாக ! நீங்கள் கூறியதை நிரூபிக்க வேண்டும் அல்லது உமர் ( ரலி ) யிடம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்கள் வந்தாக வேண்டும் என்றனர்.அதற்கவர் நான் கூறியதை நிரூபிக்கிறேன் எனக்கூறிவிட்டு ; எங்களிடம் ஒரு நாள் உரையாற்றும்போது நபி ஸல் அவர்கள் “ மனிதர்களே ! எறும்பு ஊர்வதை விட இரகசியமான இணைவைத்தலை அஞ்சுங்கள் என்று கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே ! எறும்பு ஊர்வதைவிட இரகசியமான ஒன்றை எப்படி அஞ்சமுடியும் ? என்று ஒருவர் கேட்டார்.” இறைவா ! எதையும் நாங்கள் அறிந்து உனக்கு இணைவைப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம் “ நாங்கள் அறியாது உள்ளதை செய்வது பற்றி உன்னிடம் மன்னிப்புக் கோருகிறோம் என்று பிரார்த்தனை செய்யுங்கள் என்று நபி ஸல் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ அலி , நூல்கள் : அஹ்மத் (19108) தப்ரானீ
நம்மை பரிசுத்தபடுத்துவதும் அவனே
اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ يُزَكُّوْنَ اَنْفُسَهُمْ ؕ بَلِ اللّٰهُ يُزَكِّىْ مَنْ يَّشَآءُ وَلَا يُظْلَمُوْنَ فَتِيْلًا
தம்மைத் தாமே பரிசுத்தவான்கள் எனக் கருதிக் கொள்வோரை நீர் அறியவில்லையா? மாறாக, தான் நாடியோரை அல்லாஹ்வே பரிசுத்தமாக்குகிறான். (அவர்கள்) அணுவளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.(4:49 )
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ ؕ وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ فَاِنَّهٗ يَاْمُرُ بِالْـفَحْشَآءِ وَالْمُنْكَرِ ؕ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ مَا زَكٰى مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا وَّلٰـكِنَّ اللّٰهَ يُزَكِّىْ مَنْ يَّشَآءُ ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ
நம்பிக்கை கொண்டோரே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாரோ (அவர் வழிகெடுவார்). ஏனெனில் அவன் வெட்கக்கேடானவற்றையும், தீமையையும் தூண்டுகிறான். அல்லாஹ்வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாதிருந்தால் ஒருபோதும் உங்களில் எவரையும் அவன் பரிசுத்தமாக்கியிருக்க மாட்டான். எனினும் தான் நாடியோரை அல்லாஹ் பரிசுத்தமாக்குகிறான். அல்லாஹ் செவியுறுபவன்;488 அறிந்தவன்.(24:21)
اِنَّمَا يُرِيْدُ اللّٰهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيْرًا ۚ
(நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.(33:33)
நம்மை நாமே பரிசுத்தமானவன் என்று சொல்ல கூடாது :
فَلَا تُزَكُّوْۤا اَنْفُسَكُمْ...
நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள்(53:32 )
இறை அச்சம் உடையவரை இறைவன் மட்டுமே அறிவான் :
.... ؕ هُوَ اَعْلَمُ بِمَنِ اتَّقٰى
(இறை) அச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.( 53:52 )
இவ்அறிவுரை யாருக்கு பயன் தரும்
...مَنْ كَانَ مِنْكُمْ يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِؕ ذٰ لِكُمْ اَزْکٰى لَـكُمْ وَاَطْهَرُؕ
உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது.
وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ
அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.(2:232)
No comments:
Post a Comment