كتاب الجمعة
அத்தியாயம் : 11
ஜுமுஆத் தொழுகை
(11)باب الْجُمُعَةِ فِي الْقُرَى وَالْمُدْنِ
பாடம் : 11
நகரங்களிலும் கிராமங்களிலும் ஜுமுஆ நடத்துவது.
٨٩٢حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ
حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ
طَهْمَانَ، عَنْ أَبِي جَمْرَةَ الضُّبَعِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ
إِنَّ أَوَّلَ جُمُعَةٍ جُمِّعَتْ بَعْدَ جُمُعَةٍ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ
صلى الله عليه وسلم فِي مَسْجِدِ عَبْدِ الْقَيْسِ بِجُوَاثَى مِنَ
الْبَحْرَيْنِ.
892 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பள்ளிவாசலில் (வெள்ளிக்கிழமை) தொழுவிக்கப்பட்ட
ஜுமுஆத் தொழுகைக்குப் பிறகு (இஸ்லாமிய வரலாற்றில்) முதன் முதலாக தொழுவிக்கப்பட்ட ஜுமுஆத்
தொழுகை, ஜுவாஸா எனுமிடத்தில் அதாவது பஹ்ரைன்
நாட்டிலிருந்த (ஒரு கிராமத்தில்) அப்துல் கைஸ் குலத்தாரின் பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையே
ஆகும்.
٨٩٣حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ أَخْبَرَنَا
عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنَا
سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " كُلُّكُمْ رَاعٍ ". وَزَادَ
اللَّيْثُ قَالَ يُونُسُ كَتَبَ رُزَيْقُ بْنُ حُكَيْمٍ إِلَى ابْنِ شِهَابٍ ـ
وَأَنَا مَعَهُ يَوْمَئِذٍ بِوَادِي الْقُرَى ـ هَلْ تَرَى أَنْ أُجَمِّعَ.
وَرُزَيْقٌ عَامِلٌ عَلَى أَرْضٍ يَعْمَلُهَا، وَفِيهَا جَمَاعَةٌ مِنَ
السُّودَانِ وَغَيْرِهِمْ، وَرُزَيْقٌ يَوْمَئِذٍ عَلَى أَيْلَةَ، فَكَتَبَ ابْنُ
شِهَابٍ ـ وَأَنَا أَسْمَعُ ـ يَأْمُرُهُ أَنْ يُجَمِّعَ، يُخْبِرُهُ أَنَّ
سَالِمًا حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " كُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ
مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، الإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ،
وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهْوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالْمَرْأَةُ
رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالْخَادِمُ
رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ـ قَالَ وَحَسِبْتُ أَنْ
قَدْ قَالَ ـ وَالرَّجُلُ رَاعٍ فِي مَالِ أَبِيهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ
وَكُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ ".
893 யூனுஸ் பின் யஸீத் அல்அய்னீ (ரஹ்)
அவர்கள் கூறியதாவது:
ருஸைக் பின் ஹுகைம் அவர்கள் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களுக்கு
கடிதம் எழுதினார்கள். அப்போது ருஸைக் அவர்களுடன் நானும் வாதில்குரா எனும் இடத்தில்
இருந்து கொண்டிருந்தேன். அக்கடிதத்தில் ருஸைக் அவர்கள், (என்னுடன் இங்கு இருப்போருக்கு) நான்
ஜுமுஆ நடத்துவது பற்றி தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டு எழுதியிருந்தார்கள்.-
(அன்றைய நாளில்) ருஸைக் அவர்கள் விளைநில அதிகாரியாக இருந்தார். அந்நிலத்தில் சூடான்
நாட்டு மக்கள் சிலரும் இன்னும் பிறரும் இருந்தனர். ருஸைக் அவர்கள்தாம் அப்போது அய்லா
நகரின் ஆளுநராகவும் இருந்தார்.- ஆகவே இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் ருஸைக் அவர்களுக்கு
ஜுமுஆ நடத்துமாறு கட்டளை பிறப்பித்து பதில் எழுதினார்கள். (அவர்கள் சொல்லச் சொல்ல எழுதப்பட்டது.)
அதை நானும் செவியேற்றுக் கொண்டிருந்தேன். அந்தக் கடிதத்தில் இப்னு உமர் (ரலி) அவர்கள்
வழியாக (அவர்களுடைய புதல்வர்) சாலிம் (ரஹ்) அவர்கள், தமக்கு அறிவித்த பின்வரும் நபிமொழியை
(தம் கட்டளைக்கு ஆதாரமாக)க் குறிப்பிட்டார்கள் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர்
பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே
தம் குடிமக்கள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மக(னான குடும்பத் தலைவ)னும்
தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியே. அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான்.
பெண் (மனைவி), தன் கணவரது வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளுடைய பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து
அவள் விசாரிக்கப்படுவாள். பணியாளர் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான்.
அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் மேலும் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள், ஓர் ஆண்மகன் தன் தந்தையின் செல்வத்திற்குப்
பொறுப்பாளியாவான். அவனுடைய பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவனும் விசாரிக்கப்படுவான்.
ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே.
நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள் என்றும் கூறியதாக
நான் எண்ணுகிறேன்.
(12)باب هَلْ عَلَى مَنْ لَمْ يَشْهَدِ الْجُمُعَةَ غُسْلٌ
مِنَ النِّسَاءِ وَالصِّبْيَانِ وَغَيْرِهِمْ
பாடம் : 12
ஜுமுஆவுக்கு வராத பெண்கள் சிறுவர்கள் போன்றோர் மீது குளியல்
கடமையா?
وَقَالَ ابْنُ عُمَرَ إِنَّمَا الْغُسْلُ عَلَى مَنْ
تَجِبُ عَلَيْهِ الْجُمُعَةُ
யாருக்கு ஜுமுஆத் தொழுகை கடமையோ அவர் மீதே குளியலும் கடமை என்று
இப்னு உமர் (ரலி) குறிப்பிட்டுள்ளார்கள்.
٨٩٤حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا
شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ،
أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ سَمِعْتُ
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ جَاءَ مِنْكُمُ
الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ ".
894 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஜுமுஆத் தொழுகைக்கு வருபவர் குளித்துக் கொள்ளட்டும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
٨٩٥حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ
مَالِكٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي
سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم
قَالَ " غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ
".
895 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜுமுஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒள்வொருவர் மீது கடமையாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
٨٩٦حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ:
حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي
هُرَيْرَةَ، قَالَ: قَالَ [ص: 6] رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ: " نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ القِيَامَةِ، أُوتُوا
الكِتَابَ مِنْ قَبْلِنَا وَأُوتِينَاهُ مِنْ بَعْدِهِمْ، فَهَذَا اليَوْمُ
الَّذِي اخْتَلَفُوا فِيهِ، فَهَدَانَا اللَّهُ فَغَدًا لِلْيَهُودِ، وَبَعْدَ
غَدٍ لِلنَّصَارَى فَسَكَتَ
896 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாம் (காலத்தால்) பிந்தியவர்களாவோம். மறுமை நாளில் (அந்தஸ்தால்)
முந்தியவர்களாவோம். (எனினும் யூத கிறிஸ்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர்.
அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப் பெற்றோம். இந்த (ஜுமுஆ) நாள் விஷயத்தில்தான்
அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டனர். ஆகவே, (அந்த நாளை) அல்லாஹ் நமக்கு அறிவித்துத்
தந்தான். (வார வழிபாட்டுதினம் விஷயத்தில் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே அவர்கள் உள்ளனர்.
வெள்ளிக்கிழமை நமது வழிபாட்டு தினம் எனில்) நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரிய (வழிபாட்டு)
தினமாகும். மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறிஸ்தவர்களுக்குரிய (வழிபாட்டு) தினமாகும்.
இதைக் கூறிய பின் சிறிது நேரம் நபி (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.
ثُمَّ قَالَ: «حَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ، أَنْ
يَغْتَسِلَ فِي كُلِّ سَبْعَةِ أَيَّامٍ يَوْمًا يَغْسِلُ فِيهِ رَأْسَهُ
وَجَسَدَهُ»٨٩٧
897 பிறகு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஏழு நாட்களுக்கு ஒரு தடவை தம் தலையையும் மேனியையும் கழுவிக்
குளிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
٨٩٨رَوَاهُ أَبَانُ بْنُ صَالِحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ
طَاوُسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ: «لِلَّهِ تَعَالَى عَلَى كُلِّ مُسْلِمٍ حَقٌّ، أَنْ يَغْتَسِلَ فِي
كُلِّ سَبْعَةِ أَيَّامٍ يَوْمًا»
898 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஏழு நாட்களுக்கு ஒரு முறை குளிப்பது அல்லாஹ்வுக்காக (பருவமடைந்த)
ஒவ்வொரு முஸ்லிமும் செய்யவேண்டிய கடமையாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(13)باب
பாடம் : 13
٨٩٩حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا
شَبَابَةُ، حَدَّثَنَا وَرْقَاءُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ مُجَاهِدٍ،
عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " ائْذَنُوا
لِلنِّسَاءِ بِاللَّيْلِ إِلَى الْمَسَاجِدِ ".
899 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதி அளியுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
٩٠٠حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو
أُسَامَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ
عُمَرَ، قَالَ كَانَتِ امْرَأَةٌ لِعُمَرَ تَشْهَدُ صَلاَةَ الصُّبْحِ
وَالْعِشَاءِ فِي الْجَمَاعَةِ فِي الْمَسْجِدِ، فَقِيلَ لَهَا لِمَ تَخْرُجِينَ
وَقَدْ تَعْلَمِينَ أَنَّ عُمَرَ يَكْرَهُ ذَلِكَ وَيَغَارُ قَالَتْ وَمَا
يَمْنَعُهُ أَنْ يَنْهَانِي قَالَ يَمْنَعُهُ قَوْلُ رَسُولِ اللَّهِ صلى الله
عليه وسلم " لاَ تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ ".
900 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்களின் மனைவியரில் (ஆத்திகா எனும்) ஒருவர் சுப்ஹு, இஷா ஆகியத் தொழுகையைப் பள்ளியில் ஜமாஅத்தில்
தொழச் செல்வார். அவரிடம், (உங்கள் கணவர்) உமர் (ரலி) அவர்கள் இ(வ்வாறு செல்வ)தை வெறுக்கிறார்கள்; ரோஷப்படுகிறார்கள் என்று தாங்கள் அறிந்திருந்தும்
நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், (என்னைப் பள்ளிக்குச் செல்ல வேண்டாமென்று
கூறவிடாமல்) அவரை எது தடுக்கிறது? என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள்
என்று கூறியதே உமர் (ரலி) அவர்களைத் தடுக்கிறது என்று பதில் வந்தது.
(14)باب الرُّخْصَةِ إِنْ لَمْ يَحْضُرِ الْجُمُعَةَ فِي
الْمَطَرِ
பாடம் : 14
மழையின் போது ஜுமுஆத் தொழுகைக்குச் செல்லாமலிருக்க அனுமதி.
٩٠١حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ،
قَالَ أَخْبَرَنِي عَبْدُ الْحَمِيدِ، صَاحِبُ الزِّيَادِيِّ قَالَ حَدَّثَنَا
عَبْدُ اللَّهِ بْنُ الْحَارِثِ ابْنُ عَمِّ، مُحَمَّدِ بْنِ سِيرِينَ قَالَ ابْنُ
عَبَّاسٍ لِمُؤَذِّنِهِ فِي يَوْمٍ مَطِيرٍ إِذَا قُلْتَ أَشْهَدُ أَنَّ
مُحَمَّدًا رَسُولُ اللَّهِ. فَلاَ تَقُلْ حَىَّ عَلَى الصَّلاَةِ. قُلْ
صَلُّوا فِي بُيُوتِكُمْ. فَكَأَنَّ النَّاسَ اسْتَنْكَرُوا، قَالَ فَعَلَهُ
مَنْ هُوَ خَيْرٌ مِنِّي، إِنَّ الْجُمُعَةَ عَزْمَةٌ، وَإِنِّي كَرِهْتُ أَنْ
أُخْرِجَكُمْ، فَتَمْشُونَ فِي الطِّينِ وَالدَّحْضِ.
901 அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்)
அவர்கள் கூறியதாவது:
ஒரு மழை நாளில் இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்கள், தம் தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்)
இடம், (பாங்கில்) அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்
என்று கூறியதும் ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்) என்று கூறாமல், ஸல்லூ ஃபீ புயூத்திக்கும் (உங்கள் இல்லங்களிலேயே
தொழுது கொள்ளுங்கள்) என்று கூறுவீராக! என்று சொன்னார்கள். (இவ்வாறு அவர்கள் கூறியதை)
மக்கள் ஆட்சேபிப்பது போன்றிருந்தது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், என்னைவிட மிகவும் சிறந்தவ(ரான நபி
(ஸல்) அவர்)கள் ஜுமுஆ கட்டாயமானதாக இருந்தும்கூட இவ்வாறுதான் செய்தார்கள். களிமண்ணிலும்
(வழுக்கும்) சகதியிலும் உங்களை நடக்கவிட்டு உங்களுக்கு சிரமம் கொடுக்க நான் விரும்பவில்லை
(எனவேதான் வீடுகளிலேயே தொழுது கொள்ளச் சொன்னேன்) என்று கூறினார்கள்
(15)بَابُ مِنْ أَيْنَ تُؤْتَى الْجُمُعَةُ وَعَلَى مَنْ
تَجِبُ
பாடம் : 15
எவ்வளவு தொலைவிலிருந்தால் ஜுமுஆத் தொழுகைக்கு வரவேண்டும்? யார்மீது (ஜுமுஆத் தொழுகை) கடமையாகும்?
لِقَوْلِ اللَّهِ جَلَّ وَعَزَّ: {إِذَا نُودِيَ
لِلصَّلاَةِ مِنْ يَوْمِ الجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ} [الجمعة: 9]
وَقَالَ عَطَاءٌ: «إِذَا كُنْتَ فِي قَرْيَةٍ جَامِعَةٍ فَنُودِيَ بِالصَّلاَةِ
مِنْ يَوْمِ الجُمُعَةِ، فَحَقٌّ عَلَيْكَ أَنْ تَشْهَدَهَا سَمِعْتَ النِّدَاءَ
أَوْ لَمْ تَسْمَعْهُ» وَكَانَ أَنَسٌ رَضِيَ اللَّهُ عَنْهُ، «فِي قَصْرِهِ
أَحْيَانًا يُجَمِّعُ وَأَحْيَانًا لاَ يُجَمِّعُ وَهُوَ بِالزَّاوِيَةِ عَلَى
فَرْسَخَيْنِ»
ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்:
(இறை நம்பிக்கை கொண்டவர்களே!) ஜுமுஆவுடைய
நாளில் தொழுகைக்காக (நீங்கள்) அழைக் கப்பட்டால், வியாபாரத்தை விட்டு அல்லாஹ்வைத்
தியானிக்க (பள்ளிகளுக்கு) விரைந்து செல்லுங்கள். (63:9)
ஜுமுஆத் தொழுகை நடைபெறும் ஊரில் நீ இருந்து அந்த ஜுமுஆ நாளில்
தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் அதில் கட்டாயம் நீ கலந்து கொள்ள வேண்டும். பாங்கு
சப்தத்தை நீ கேட்டாலும் சரி, அதை நீ கேட்காவிட்டாலும் சரி என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள்
கூறியுள்ளார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் சில நாட்களில் தமது மாளிகையில் (தங்கி) இருக்கும்
போது (தம்முடன் இருப்பவர்களுக்கு) ஜுமுஆத் தொழுவிப்பார்கள். சில நாட்களில் ஜுமுஆத்
தொழுவிக்க மாட்டார்கள். அனஸ்(ரலி) அவர்களது அந்த மாளிகை (பஸ்ரா நகரிலிருந்து) இரண்டு பர்ஸக்
(சுமார் ஆறு மைல்) தொலைவிலிருந்த ஸாவியா எனும் இடத்தில் இருந்தது.
٩٠٢حَدَّثَنَا أَحْمَدُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ
بْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ
أَبِي جَعْفَرٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، حَدَّثَهُ عَنْ
عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم
قَالَتْ كَانَ النَّاسُ يَنْتَابُونَ يَوْمَ الْجُمُعَةِ مِنْ مَنَازِلِهِمْ
وَالْعَوَالِي، فَيَأْتُونَ فِي الْغُبَارِ، يُصِيبُهُمُ الْغُبَارُ وَالْعَرَقُ،
فَيَخْرُجُ مِنْهُمُ الْعَرَقُ، فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم
إِنْسَانٌ مِنْهُمْ وَهْوَ عِنْدِي، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم
" لَوْ أَنَّكُمْ تَطَهَّرْتُمْ لِيَوْمِكُمْ هَذَا ".
902 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா
(ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் ஜுமுஆ நாளில் (மதீனா அருகிலுள்ள) தங்கள் குடியிருப்புகளிலிருந்தும்
(சுமார் 3-8 மைல் தொலைவிலுள்ள) மேட்டுப்புற கிராமங்களிலிருந்தும் முறைவைத்து (ஜுமுஆத்
தொழுகைக்கு) வந்து கொண்டிருந்தனர். புழுதிகளில் அவர்கள் நடந்துவருவதால் அவர்கள் மீதும்
புழுதியும் வியர்வையும் காணப்படும். அவர்களி(ன் உடல்)லிருந்து வியர்வை வழியும். (இந்த
நிலையில்) என் அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்து கொண்டிருக்கும் போது
அவர்களில் ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், இந்த தினத்துக்காக நீங்கள் தூய்மையுடன்
இருக்கக்கூடாதா? என்று கேட்டார்கள்.
(16)باب وَقْتُ الْجُمُعَةِ إِذَا زَالَتِ الشَّمْسُ
பாடம் : 16
ஜுமுஆத் தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததும்
(ஆரம்பிக்கிறது).
وَكَذَلِكَ يُرْوَى عَنْ عُمَرَ، وَعَلِيٍّ،
وَالنُّعْمَانِ بْنِ بَشِيرٍ، وَعَمْرِو بْنِ حُرَيْثٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ
இவ்வாறுதான் உமர் பின் அல்கத்தாப் (ரலி), அலீ (ரலி), நுஅமான் பின் பஷீர் (ரலி), அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) ஆகியோரிடமிருந்து
அறிவிக்கப்படுகிறது.
٩٠٣حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ
اللَّهِ، قَالَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، أَنَّهُ سَأَلَ عَمْرَةَ عَنِ
الْغُسْلِ، يَوْمَ الْجُمُعَةِ فَقَالَتْ قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ
كَانَ النَّاسُ مَهَنَةَ أَنْفُسِهِمْ، وَكَانُوا إِذَا رَاحُوا إِلَى الْجُمُعَةِ
رَاحُوا فِي هَيْئَتِهِمْ فَقِيلَ لَهُمْ لَوِ اغْتَسَلْتُمْ.
903 யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அம்ரா பின்த் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் ஜுமுஆ நாள்
குளியல் பற்றிக் கேட்டேன். அப்போது அம்ரா (ரஹ்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக
(பின்வருமாறு) கூறினார்கள்:
(நபி ஸல் காலத்து) மக்கள் உழைப்பாளி
களாக இருந்தனர். அவர்கள் (வேலை வெட்டி களில் ஈடுபட்டுவிட்டு) உச்சி சாயும் போது ஜுமுஆத்
தொழுகைக்காக வரும் போது அதே கோலத்துடனே வந்து விடுவார்கள். இதனால்தான் அவர்களிடம் நீங்கள்
குளித்திருக்கலாமே! என்று கூறப்பட்டது.
٩٠٤حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، قَالَ
حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ
بْنِ عُثْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رضى الله عنه أَنَّ
النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي الْجُمُعَةَ حِينَ تَمِيلُ
الشَّمْسُ.
904 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சூரியன் உச்சி சாயும் போது ஜுமுஆத் தொழுகை
தொழுவிப்பார்கள்.
حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ
اللَّهِ، قَالَ أَخْبَرَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، قَالَ كُنَّا نُبَكِّرُ
بِالْجُمُعَةِ، وَنَقِيلُ بَعْدَ الْجُمُعَةِ. ٩٠٥
905 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஜுமுஆத் தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவோம்.
ஜுமுஆத் தொழுகைக்குப் பிறகுதான் மதிய ஓய்வு மேற்கொள்வோம்.
(17)باب إِذَا
اشْتَدَّ الْحَرُّ يَوْمَ الْجُمُعَةِ
பாடம் 17
ஜுமுஆ நாளில் வெப்பம் கடுமையாக இருந்தால் (என்ன செய்ய
வேண்டும்?)
٩٠٦حَدَّثَنَا
مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، قَالَ حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ
عُمَارَةَ، قَالَ حَدَّثَنَا أَبُو خَلْدَةَ ـ هُوَ خَالِدُ بْنُ دِينَارٍ ـ قَالَ
سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا
اشْتَدَّ الْبَرْدُ بَكَّرَ بِالصَّلاَةِ، وَإِذَا اشْتَدَّ الْحَرُّ أَبْرَدَ بِالصَّلاَةِ،
يَعْنِي الْجُمُعَةَ. قَالَ يُونُسُ بْنُ بُكَيْرٍ أَخْبَرَنَا أَبُو خَلْدَةَ
فَقَالَ بِالصَّلاَةِ، وَلَمْ يَذْكُرِ الْجُمُعَةَ. وَقَالَ بِشْرُ بْنُ
ثَابِتٍ حَدَّثَنَا أَبُو خَلْدَةَ قَالَ صَلَّى بِنَا أَمِيرٌ الْجُمُعَةَ ثُمَّ
قَالَ لأَنَسٍ ـ رضى الله عنه ـ كَيْفَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم
يُصَلِّي الظُّهْرَ
906 அனஸ் பின் மாலிக் (ரலி)
அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் குளிர்
கடுமையாக இருக்கும் போது தொழுகையை அதாவது ஜுமுஆத் தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே
தொழுவார்கள். வெப்பம் கடுமையாக இருக்கும் போது தொழுகையை அதாவது ஜுமுஆத் தொழுகையை வெப்பம்
தணிந்தபின் தொழுவார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில்
ஒருவரான அபூ கல்தா (ரஹ்) அவர்களிடமிருந்து யூனுஸ் பின் புகைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும்
அறிவிப்பில் (ஜுமுஆத் தொழுகை என்ற குறிப்பு இல்லாமல் பொதுவாக) தொழுகை என்றே இடம்பெற்றுள்ளது.
அபூகல்தா (ரஹ்) அவர்களிடமிருந்து
பிஷ்ர் பின் ஸாபித் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் எங்களுக்கு ஜுமுஆவின் அமீர்
ஜுமுஆத் தொழுவித்தார். (வழக்கம் போல நீண்ட சொற்பொழிவும் நெடு நேரத் தொழுகையும் நடந்தது.)
பிறகு அவர் அனஸ் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு
லுஹ்ர் தொழுகை தொழுவார்கள்?
என்று கேட்டார் அதற்குதான் மேற்கண்டவாறு அனஸ் (ரலி) அவர்கள்
பதிலளித்தார்கள் என இடம்பெற்றுள்ளது.
(18)باب
الْمَشْىِ إِلَى الْجُمُعَةِ
பாடம் : 18
ஜுமுஆத் தொழுகைக்காக நடந்துவருவது
وَقَوْلِ اللَّهِ جَلَّ ذِكْرُهُ: {فَاسْعَوْا إِلَى
ذِكْرِ اللَّهِ} [الجمعة: 9] وَمَنْ قَالَ: السَّعْيُ العَمَلُ وَالذَّهَابُ،
لِقَوْلِهِ تَعَالَى: {وَسَعَى لَهَا سَعْيَهَا} [الإسراء: 19] وَقَالَ ابْنُ
عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «يَحْرُمُ البَيْعُ حِينَئِذٍ» وَقَالَ
عَطَاءٌ: «تَحْرُمُ الصِّنَاعَاتُ كُلُّهَا» وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ
عَنِ الزُّهْرِيِّ: «إِذَا أَذَّنَ المُؤَذِّنُ يَوْمَ الجُمُعَةِ وَهُوَ
مُسَافِرٌ فَعَلَيْهِ أَنْ يَشْهَدَ»
ஜுமுஆவுடைய நாளில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் நீங்கள்
விரைந்து செல்லுங்கள் எனும் (63:9ஆவது) இறை வசனமும்.
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) விரைவு (அஸ்ஸஃயு) எனும் சொல்லுக்கு ஜுமுஆவுக்காக
தயாராகிச் செல்வது என்று பொருள் என சிலர் (விளக்கம்) கூறுகின்றனர். (இதே கருத்தில்தான்)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அந்த நேரத்தில் (தொழுகைக்காகத் தயாராகிச் செல்லாமல்) வியாபாரத்தில்
ஈடுபட்டுக் கொண்டிருப்பது விலக்கப்பட்டதாகும் (ஹராம்) என்று கூறினார்கள்.
அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் (அந்த நேரத்தில்) எல்லாவிதமான
தொழில்களும் தடைசெய்யப்பட்டதாகும் என்று கூறியுள்ளார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
ஜுமுஆவுடைய நாளில் ஒருவர் பயணம் செய்து கொண்டிருக்கும்
போது தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொன்னால் ஜுமுஆவில் கலந்து கொள்வது (அதைச்
செவியுற்ற) அந்தப் பயணியின் மீது அவசியமாகும்.
٩٠٧حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ
حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي
مَرْيَمَ، قَالَ حَدَّثَنَا عَبَايَةُ بْنُ رِفَاعَةَ، قَالَ أَدْرَكَنِي أَبُو
عَبْسٍ وَأَنَا أَذْهَبُ، إِلَى الْجُمُعَةِ فَقَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله
عليه وسلم يَقُولُ " مَنِ اغْبَرَّتْ قَدَمَاهُ فِي سَبِيلِ اللَّهِ
حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ ".
907 அபாயா பின் ரிஃபாஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜுமுஆத் தொழுகைக்காகச் சென்று கொண்டிருந்த போது அபூஅப்ஸ்
(அப்துர் ரஹ்மான் பின் ஜப்ர்-ரலி) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் பாதையில் எவரது பாதங்களில் புழுதி படிகின்றதோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைத்
தடை செய்து விடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று சொன்னார்கள்.
٩٠٨حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ،
قَالَ الزُّهْرِيُّ عَنْ سَعِيدٍ، وَأَبِي، سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى
الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَحَدَّثَنَا أَبُو الْيَمَانِ،
قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ
بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ
صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ
تَأْتُوهَا تَسْعَوْنَ، وَأْتُوهَا تَمْشُونَ عَلَيْكُمُ السَّكِينَةُ، فَمَا
أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا ".
908 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் ஓடிவராதீர்கள்.
நடந்தேவாருங்கள். நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த
(ரக்அத்)தைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப்போனதை
(பிறகு எழுந்து) பூர்த்தி செய்யுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
٩٠٩حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنِي
أَبُو قُتَيْبَةَ، قَالَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ
أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ ـ لاَ أَعْلَمُهُ إِلاَّ
عَنْ أَبِيهِ ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَقُومُوا
حَتَّى تَرَوْنِي، وَعَلَيْكُمُ السَّكِينَةُ ".
909 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால்
அவசரப்படாதீர்கள்.) என்னை நீங்கள் காணும் வரை எழாதீர்கள். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(19)باب لاَ يُفَرَّقُ بَيْنَ اثْنَيْنِ يَوْمَ الْجُمُعَةِ
பாடம் : 19
ஜுமுஆ நாளில் (பள்ளிக்குள்
நுழையும் போது சேர்ந்துஅமர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்கக் கூடாது.
٩١٠حَدَّثَنَا
عَبْدَانُ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا ابْنُ أَبِي
ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ وَدِيعَةَ، عَنْ
سَلْمَانَ الْفَارِسِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
" مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ، وَتَطَهَّرَ بِمَا اسْتَطَاعَ مِنْ
طُهْرٍ، ثُمَّ ادَّهَنَ أَوْ مَسَّ مِنْ طِيبٍ، ثُمَّ رَاحَ فَلَمْ يُفَرِّقْ
بَيْنَ اثْنَيْنِ، فَصَلَّى مَا كُتِبَ لَهُ، ثُمَّ إِذَا خَرَجَ الإِمَامُ
أَنْصَتَ، غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الأُخْرَى ".
910 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜுமுஆ நாளில் ஒருவர் குளிக்கிறார்.
தம்மால் இயன்ற தூய்மைகள் மேற்கொள்கிறார். பிறகு எண்ணெயோ நறுமணமோ பூசிக் கொள்கிறார்.
பிறகு அவர் புறப்பட்டு (சேர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்காமல் (பள்ளிக்குள் சென்று)
தமக்கு விதியாக்கப்பட்டுள்ளதைத் தொழுகிறார். பின்னர் இமாம் வந்ததும் (அவர் ஆற்றும்
உரையைச் செவியேற்க) மௌனம் காக்கிறார் எனில், அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையிலேற்பட்ட
பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
இதை சல்மான் அல்ஃபார்சீ
(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(20)باب لاَ يُقِيمُ الرَّجُلُ أَخَاهُ يَوْمَ
الْجُمُعَةِ وَيَقْعُدُ فِي مَكَانِهِ
பாடம் : 20
ஜுமுஆ நாளில் ஒருவர்
தம் சகோதரரை எழுப்பிவிட்டு அந்த இடத்தில் தாம் அமரக் கூடாது.
٩١١حَدَّثَنَا
مُحَمَّدٌ، قَالَ أَخْبَرَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ، قَالَ أَخْبَرَنَا ابْنُ
جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ نَافِعًا، يَقُولُ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله
عنهما ـ يَقُولُ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُقِيمَ الرَّجُلُ
أَخَاهُ مِنْ مَقْعَدِهِ وَيَجْلِسَ فِيهِ. قُلْتُ لِنَافِعٍ الْجُمُعَةَ قَالَ
الْجُمُعَةَ وَغَيْرَهَا.
911 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் தம் சகோதரரை
அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிட்டு அந்த இடத்தில் தாம் அமர்வதை நபி
(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள்
அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம், ஜுமுஆவின்போதா (இப்படிச் செய்யக்கூடாது)? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஜுமுஆவிலும், ஜுமுஆ அல்லாத மற்ற நேரங்களிலும் (அப்படித்)தான் என்று கூறினார்கள்.
No comments:
Post a Comment