Wednesday, May 2, 2018

அத்தியாயம் -01 தூய்மை ( 1 முதல் 5 ஹதீஸ் வரை )





அத்தியாயம் -01
1 - كِتَابُ الطَّهَارَةِ

பாடம் : 1 தூய்மை பற்றியது

تَأْوِيلُ قَوْلِهِ عَزَّ وَجَلَّ: {إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ} [المائدة: 6]

நீங்கள் தொழுகைக்காக தயாராகும் போது உங்கள் முகங்களையும் கைகளையும் கழுகிக் கொள்ளுங்கள்.    (அல் குர்ஆன் அல்மாயிதா : 6)


1-أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُمَّ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ، فَلَا يَغْمِسْ يَدَهُ فِي وَضُوئِهِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا، فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ»

حكم الحديث : صحيع

1.“உங்களில் எவரேனும் உறங்கி எழுந்தால் மூன்று முறை கைகளை கழுகும்முன், ஒளூச் செய்யும் நீரில் கையைவிட வேண்டும்! ஏனெனில் இரவு நேரத்தில் அவனது கை எங்கெங்கே பட்டது என்பதை அவன் அறியமுடியாது என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் புஹாரி ( 162 )முஸ்லிம் ( 278) அபூதாவூத் ( 103,105) திர்மிதீ ( 24) இப்னுமாஜா (393) அஹ்மத் (7282,7438,7517,7600,7674)

بَابُ السِّوَاكِ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ(2)
பாடம் :02

இரவில் எழும்போது பல்துலக்குதல்

2-أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ جَرِيرٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ»

حكم الحديث : صحيع



2. நபி(ஸல்) இரவில் எழும்போது பல் துலக்கும் பொருளால் தம் வாயை (பற்களை) துலக்குவார்கள் என ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் புஹாரி (245,889,1136 ) முஸ்லிம் ( 255 ) அபூதாவூத் ( 55) அஹ்மத் ( 23242,23313,23366)

بَابُ كَيْفَ يَسْتَاكُ (3)

பாடம் : 03

எவ்வாறு பல் துலக்க வேண்டும்


3-أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ قَالَ: أَخْبَرَنَا غَيْلَانُ بْنُ جَرِيرٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ: " دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَسْتَنُّ وَطَرَفُ السِّوَاكِ عَلَى لِسَانِهِ وَهُوَ يَقُولُ: عَأْ عَأْ "

حكم الحديث : صحيع

3.நபி(ஸல்) அவர்கள் பல் துலக்கையில் நான் அவர்களிடம் சென்றேன். பல் துலக்கும் பொருளின் ஒரு பகுதி அவர்களின் நாவு மீது இருக்க ”அவ் அவ்” என்று சப்தம் செய்தார்கள் என அபூ மூஸா (ரலி) கூறுகிறார்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து  அடங்கின ஹதீஸ் புஹார்  (244) முஸ்லிம் ( 254 ) அபூதாவூத் ( 49 ) அஹ்மத் ( 19737 )

بَابُ هَلْ يَسْتَاكُ الْإِمَامُ بِحَضْرَةِ رَعِيَّتِهِ؟(4)
பாடம் :04

தலைவர், குடிமக்கள் முன்னிலையில் பல் துலக்கலாமா ?

4-أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى وَهُوَ ابْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ هِلَالٍ قَالَ: حَدَّثَنِي أَبُو بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ: أَقْبَلْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعِي رَجُلَانِ مِنَ الْأَشْعَرِيِّينَ: أَحَدُهُمَا عَنْ يَمِينِي، وَالْآخَرُ عَنْ يَسَارِي. وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَاكُ فَكِلَاهُمَا سَأَلَ الْعَمَلَ. قُلْتُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ نَبِيًّا مَا أَطْلَعَانِي عَلَى مَا فِي أَنْفُسِهِمَا، وَمَا شَعَرْتُ أَنَّهُمَا يَطْلُبَانِ الْعَمَلَ، فَكَأَنِّي أَنْظُرُ إِلَى سِوَاكِهِ تَحْتَ شَفَتِهِ قَلَصَتْ. فَقَالَ: «إِنَّا لَا - أَوْ لنْ - نَسْتَعِينَ عَلَى الْعَمَلِ مَنْ أَرَادَهُ، وَلَكِنِ اذْهَبْ أَنْتَ». فَبَعَثَهُ عَلَى الْيَمَنِ، ثُمَّ أَرْدَفَهُ مُعَاذُ بْنُ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

حكم الحديث : صحيع

4.நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது ”அஷ் அரி” கூட்டத்தினால் இருவரும் என்னுடன் வந்தனர் ஒருவர் என் வலப்புறமாகவும் இன்னொருவர் இடப்புறமாகவம் இருந்தனர் .ரஸுல்(ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருந்தனர். (என்னுடன் வந்த) அவ்விருவரும் பொறுப்பான பதவியைய் கோரினார்கள். ”உங்களை நபியாக அனுப்பிவைத்தவன் மீது ஆனையாக (என்னுடன் வந்த) அவ்விருவரும் தங்கள் உள்ளக்கிடக்கையை என்னிடம் திறந்து காட்டவில்லை , இவர்கள் பதவி நாடித்தான் வந்துள்ளனர் என்பதை நான் உணரவில்லை ” என்று நபி (ஸல்) அவர்களை நோக்கி நான் கூறினேன். (பதவி நாடி) இவ்விருவரும் உங்களைச் சந்திக்க வருவதை நான் அறிந்திருக்கமாட்டேன் என்ற கருத்தில் இதைக் கூறுகிறார்.)

  (பல் துலக்கும் பொருளை கீழ் உதட்டுக்கு உட்பறமாக நபி (ஸல்) அவர்கள் வைத்திருந்த தால் அவர்களின் (கீழ்) உதடு கொஞ்சம் மேடாகி விட்டது போல் இருந்தது பின்பு என்னை நோக்கி) ”நீர் செல்வீராக“ என்று கூறி எமன் நாட்டுக்கு அதிகாரியாக அனுப்பிவைத்தனர். பின்பு அவர்களை முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் தன் வாகனத்தின் பின்னால் ஏற்றிக் கொண்டனர் என “அபூ மூஸல் அஷ்அரி“ குறிப்பிடுகிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் புஹாரி ( 2261,6923,7149,7156) முஸ்லிம் ( 1733,1824) அபூதாவூத் ( 2930,3579,4354 ) அஹ்மத் ( 195508,19666,19687,19741 )

بَابُ التَّرْغِيبِ فِي السِّوَاكِ(5)
பாடம் : 5

பல் துலக்குவதில் ஆர்வமூட்டுதல்


5-أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، عَنْ يَزِيدَ وَهُوَ ابْنُ زُرَيْعٍ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي عَتِيقٍ قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: سَمِعْتُ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ»

حكم الحديث : صحيع

5.பல் துலக்குதல் என்பது வாயைச்சுத்தம் செய்வது, இறைவனின் பொருத்த திற்கு உறியதுமாகும் என நபி (ஸல்) கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

தரம் : ஸஹீஹ்

இதே கருத்து அடங்கின ஹதீஸ் தாரமீ ( 711 ) அஹ்மத் ( 24203,24332,24925,25133,26014 )

No comments:

Post a Comment